கூடங்குளம்

மின்சார உற்பத்தி முக்கியமான இக்கால கட்டத்தில் கூடங்குளம் அணு மின் நிலையம் பற்றிய ஜெயமோகனின் கட்டுரைகள் முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் சில பகுதிகளுடன் இணையத்தில் உள்ள சில் ஆதாரங்களையும் இதனுடன் இணைத்துள்ளேன்

நன்றி


இன்றைய சூழலில் அணுமின்நிலையம் அன்றி வேறு என்ன வழி இருக்கிறது?

நாம் பயன்படுத்தும் மின்சாரத்தை ஒப்பிட இழக்கும் மின்சாரம் அதிகம். இவ்விரண்டையும் சமாளித்தாலே இந்தியாவின் மின்தட்டுப்பாடு பெருமளவுக்கு நீங்கிவிடும் என்பதே நடைமுறை உண்மை.
இந்தியாவின் மின்சாரத்துறையில் மிகப்பெரிய சிக்கலே மின்கடத்தும்போது ஏற்படும் இழப்புதான். உலகிலேயே மின்கடத்தல் இழப்பு மிக அதிகமாக உள்ள தேசம் இந்தியாதான் என உலக ஆற்றல் கழகம் [World Resources Institute] கூறுகிறது. உலக அளவில் அதிகசராசரி என்பது 7 சதவீதம். இந்தியாவில் இது 30 முதல் 40 சதவீதம் வரை. பல இடங்களில் 60 சதவீதம் வரை

இன்னொன்று இந்தியாவில் மின் திருட்டு விகிதம் உலகிலேயே மிக அதிகம். இந்திய அரசு அறிக்கையின்படி அது 42 சதவீதம் வரை.

ஆதாரங்கள்
http://news.bbc.co.uk/2/hi/business/4802248.stm
http://news.bbc.co.uk/2/hi/business/4802248.stm
http://www.thehindubusinessline.in/2005/12/03/stories/2005120303300900.htm
http://industrytracker.wordpress.com/2010/08/26/td-losses-in-india-aggravate-the-power-problem/
http://cleantechindia.wordpress.com/2008/07/16/indias-electricity-transmission-and-distribution-losses/

 அணு உலைகளால் ஏற்படும் செலவீனங்கள்

அணு உலைகளை அமைப்பது நாட்டின் ராணுவ ரகசியங்களுடன் கலந்துள்ளது என்பதனால் அதன் கணக்குகள் எப்போதுமே ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. ஆகவே அவற்றில் உள்ள ஊழல்கள் வெளியே வருவதில்லை.

இந்தியாவின் எந்த அணு உலையும் அதன் முழுத் திறனுடன் தொடர்ந்து செயல்பட்டதில்லை. அவை உருவாக்கிய மின்சாரத்துக்கு அவற்றுக்கான செலவினங்களை வட்டியுடன் சேர்த்து கணக்கிட்டு விலை போட்டால் இந்தியாவில் உற்பத்தியாகும் நீர் மின்சாரத்தின் ஐம்பது  மடங்கு விலை ஆகும் என சொல்கிறார்கள்.


இந்தத் தொகை [ கூடங்குளம்] இருந்தால் போதும் இந்தியாவில் கால்வாசி மின்கடத்திகளை நவீனப்படுத்திவிடமுடியும். கூடங்குளம் நமக்கு அளிக்கும் மின்சாரத்தை விட இருபது மடங்கு மின்சாரத்தை சேமிக்கமுடியும். அதை நம் அரசுகள் செய்வதில்லை.



கூடங்குளம் அணுஉலையின் மோசமான நிலை
புக்குஷிமா அணுஉலை கூடங்குளம் அணுஉலையை விடப் பலமடங்கு ’பாதுகாப்பா’னது. மக்கள் இல்லாத இடத்தில் அமைக்கப்பட்டது. ஆனால் கூடங்குளம் மக்கள் நெருக்கம் மிக்க கடற்கரையில் உள்ளது. அதே அளவுக்கு அபாய வாய்ப்புள்ள நிலநடுக்கப்பாதையில் உள்ளது.

1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் நாள் அன்றைய சோவியத் ஒன்றியத்தின் உக்ரேனிலுள்ள செர்னோபில் நகரத்தில் இருந்த அணு உலை விபத்துக்குப்பின்னர் அந்த சூத்திரம் கொண்ட எல்லா அணு உலைகளையும் மூட ருஷ்யா முடிவெடுத்தபோது அதில் ஒன்றை இந்தியாவுக்கு பலகோடி ரூபாய் விலைக்கு விற்றது.

2004ல் நடந்த சுனாமியின்போது கூடங்குளத்தில் பெரும்பாலான கட்டுமானங்கள் பாதிப்படைந்தன. ஆகவேதான் இந்த அணுஉலையின் கட்டுமானங்கள் இவ்வளவு தாமதமாயின. பலபகுதிகளை மீண்டும் கட்டினார்கள் என்பது செயல்பாட்டாளர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆகவே அணு உலைகள் என்பவை இந்தியா போன்ற நாட்டுக்குத் தேவை இல்லை. அவை இந்நாட்டின் செல்வத்தை வளர்ந்த நாடுகள் கொள்ளையடிக்கும் வழிகள் மட்டுமே. அவற்றின் ஆபத்து மட்டுமே நமக்கு எஞ்சுகிறது.


இந்திய அரசின் மோசமான அணு உலை கொள்கைகள் 

இந்திய அரசின் அணு உலை கொள்கைகள் மோசமாக இருப்பதாக அணு மின்சாரத்தை ஆதரிக்கும் இணைய தளமே கருத்து கூறி இருக்கிறது. http://world-nuclear.org/info/inf53.html
On 10 September 2008 the government assured the USA that India "shall take all steps necessary to adhere to the Convention on Supplementary Compensation (CSC)". Under existing Indian legislation, foreign suppliers may face unlimited liability, which prevents them from taking insurance cover, though contracts for Kudankulam 1&2 exclude this supplier liability.

However, after compensation has been paid by the operator (or its insurers), the bill allows the operator to have legal recourse to the supplier for up to 80 years after the plant starts up if the "nuclear incident has resulted as a consequence of an act of supplier or his employee, which includes supply of equipment or material with patent or latent defects of (or?) sub-standard services." This clause giving recourse to the supplier for an operational plant is contrary to international conventions.