சோதிடத்தில் கிரகங்களின் தன்மைகள் – செவ்வாய்

mars

கிரகங்கள் மனிதர்களுக்கு தரும் தன்மைகளாகவும், மனிதர்கள் கடைபிடிக்க வேண்டிய பலன்களாகவும் வெவ்வேறு சோதிட புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விசயங்களை சோதிடம் கற்று கொள்பவர்கள் ஒரே இடத்தில் அறிந்து பயனடையும் பொருட்டு இங்கு பதிவேற்றம் செய்திருக்கிறேன்.

இப்பகுதியில் செவ்வாய் பற்றி பார்ப்போம்.

 

வ.எண்

கிரகங்களின் தன்மைகள்

செவ்வாய்

தன்மைகள் - 1

01

வேறு பெயர்கள்

அங்காரகன், குகன்

02

எண் கணிதம்

9

03

உபகிரகங்கள்

தூமன்

04

நட்சத்திரங்கள்

சித்திரை, அவிட்டம், மிருகசீரிஷம்

05

குணங்கள்

பூர்வபஷம்-பாபன்

அமரபஷம்- ¾ சுபன்

தன்மைகள் - 2

06

அதிதேவதைகள்

முருகர், சுப்ரமணியர்

07

ஷேத்திரம்

திருச்செந்தூர், வைதீஸ்வரன்

08

பூஜித்தல்

குங்கிலியம், குங்குமம்

09

கிரக ப்ரீதி

சுப்ரமணியர் தோத்திரம், வைதீஸ்வரன் கோவில்

தன்மைகள் - 3

10

ஒரு ராசியில் சஞ்சார கால அளவு

49 நாட்கள்

11

சுற்றும் முறை (இராசி சக்கரத்தில்)

கடிகாரம்

12

கிரக திசையின் கால அளவு

7 வருடம்

13

திசையில்

பலன் தரும் காலம்

ஆரம்பம்

14

அடுத்த ராசி பார்வை (கோசாரம்)

8 நாட்கள்

15

இராசி சக்கரத்தில் பார்வை

4,7,8

3, 10 இடம் கால், 5,9 இடம் அரை, 4,8 இடம் முக்கால், 7 இடம் முழு பார்வையும் பார்க்கும்.

தன்மைகள் - 4

16

நட்பு கிரகங்கள்

சூரியன், சந்திரன், குரு

17

சம கிரகங்கள்

சுக்ரன், சனி (ராகு, கேது)

18

பகை கிரகங்கள்

புதன் (ராகு, கேது)

தன்மைகள் - 5

19

உச்ச வீடு

மகரம்

20

அதி உச்ச பாகங்கள்

மகரம் – 28

21

மூலத்திரிகோண வீடு, பாகை

மேஷம் – 12

22

நட்பு வீடுகள்

ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம்

23

ஆட்சி வீடு

மேஷம், விருச்சிகம்

24

பகை வீடுகள்

மீனம், கும்பம், சிம்மம், தனுசு

25

நீச வீடு

கடகம்

26

அதி நீச பாகங்கள்

கடகம் – 28

தன்மைகள் - 6

27

இலக்கினத்திற்கு மறைவு இடங்கள்

8,12

28

திக்பலம் (கேந்திரம்)

10 (தசமம்)

29

அஸ்தங்கம்

17

30

கிரகணங்கள்

7

31

கண்ட வலிமை

உச்சி

தன்மைகள் – 7

32

பறவை

கோழி

33

விலங்கு

பெண்சாரை

34

நாற்கால் பிராணி

வெண் ஆடு, மான், புலி, குதிரை

35

வாகனம்

அன்னம், செம்போத்து, சேவல்

36

தானியங்கள்

துவரை

37

தாவரம்

சிவப்பு பூ, வெள்ளை செடி, முள்செடி, வாழை, கோதுமை, கிளைமரம்

38

மர வகை

முள்மரம்

39

சமித்துகள் (மரம், செடி)

கருங்காலி

40

மலர்கள்

சண்பகம்

தன்மைகள் - 8

41

உலோகங்கள்

செம்பு

42

இரத்தினங்கள்

பவளம்

43

பொருள்கள்

செம்பு, பவளம், செங்கல், மண், சேறு, தூசி, கபாலம்

44

நிறங்கள்

இரத்த சிவப்பு

45

வஸ்திரம்

பவள சிவப்பு, தீப்பற்றியது

46

சுவைகள்

துவர்ப்பு, உறைப்பு, கசப்பு

தன்மைகள் - 9

47

தேசம்

அவந்தி

48

பாஷைகள்

தமிழ், தெலுங்கு, மஹாராட்டியம்

49

ருது

க்ரீஷ்மருது

50

அயனாதி காலங்கள்

தினம்

51

திக்குகளில்

தெற்கு

52

அதிபதி திசைகள்

தெற்கு

53

நன்மை செய்யும் திசை

தெற்கு

54

பஞ்சபூதத்தில்

பூமி (பிருதிவி)

55

வடிவம்

துடி, தமருகம், உடுக்கை

56

ஆசனம்

திரிகோணம்

57

உடல் உறுப்பில் அவயங்கள்

மூளை, கை, தோள்

58

நாடி

பித்தம்

59

பிணி

மூட்டுவலி, பித்தம்

60

உறவு முறை (நாடி முறை)

உடன் பிறப்பு(தந்தை வழி) கணவன்

தன்மைகள் - 10

61

கிரக பொறுப்புகள்

தளபதி

62

கிரக வயது

குழந்தை

63

தத்துவம் (கிரக லிங்கம்)

ஆண்

64

கிரக ஓட்டம்

சரம்

65

உயரம்

குள்ளம்

66

குணம்

தமோ (ரஜோ)

67

பிரிவு

ஷத்ரியர்

சோதிடத்தில் கிரகங்களின் தன்மைகள் – சந்திரன்

Moon in phases 

கிரகங்கள் மனிதர்களுக்கு தரும் தன்மைகளாகவும், மனிதர்கள் கடைபிடிக்க வேண்டிய பலன்களாகவும் வெவ்வேறு சோதிட புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விசயங்களை சோதிடம் கற்று கொள்பவர்கள் ஒரே இடத்தில் அறிந்து பயனடையும் பொருட்டு இங்கு பதிவேற்றம் செய்திருக்கிறேன்.

 

வ.எண்

கிரகங்களின் தன்மைகள்

சந்திரன்

தன்மைகள் - 1

01

வேறு பெயர்கள்

அம்புலி, மதி, பிறை, இந்து

02

எண் கணிதம்

2

03

உபகிரகங்கள்

பரிவேடன்

04

நட்சத்திரங்கள்

ரோகிணி, அஸ்தம், திருவோணம்

05

குணங்கள்

சுபன்

தன்மைகள் - 2

06

அதிதேவதைகள்

பார்வதி

07

ஷேத்திரம்

திருப்பூர், சக்தி/வினாயகர் ஸ்தலம்

08

பூஜித்தல்

சாம்பிராணி

09

கிரக ப்ரீதி

துர்கா பூஜை

தன்மைகள் - 3

10

ஒரு ராசியில் சஞ்சார கால அளவு

2 ½ நாள்

11

சுற்றும் முறை (இராசி சக்கரத்தில்)

கடிகாரம்

12

கிரக திசையின் கால அளவு

10 வருடம்

13

திசையில்

பலன் தரும் காலம்

முழுதும்

14

அடுத்த ராசி பார்வை (கோசாரம்)

72 நிமிடம்

15

இராசி சக்கரத்தில் பார்வை

7 மேல்

3, 10 இடம் கால், 5,9 இடம் அரை, 4,8 இடம் முக்கால், 7 இடம் முழு பார்வையும் பார்க்கும்.

தன்மைகள் - 4

16

நட்பு கிரகங்கள்

சூரியன், புதன்

17

சம கிரகங்கள்

செவ்வாய்,குரு,சனி,சுக்ரன்

18

பகை கிரகங்கள்

ராகு, கேது

தன்மைகள் - 5

19

உச்ச வீடு

ரிஷபம்

20

அதி உச்ச பாகங்கள்

ரிஷபம் – 3

21

மூலத்திரிகோண வீடு, பாகை

ரிஷபம் 27 உச்சமான 3 நீக்கி மேலுள்ள 27

22

நட்பு வீடுகள்

மீனம், தனுசு, கும்பம்

23

ஆட்சி வீடு

கடகம்

24

பகை வீடுகள்

மேஷம், கும்பம், சிம்மம், துலாம், மகரம்

25

நீச வீடு

விருச்சிகம்

26

அதி நீச பாகங்கள்

விருச்சிகம் – 3

தன்மைகள் - 6

27

இலக்கினத்திற்கு மறைவு இடங்கள்

3,6,8,12

28

திக்பலம் (கேந்திரம்)

4 (சதுர்த்தம்)

29

அஸ்தங்கம்

முன் பின் 12 பாகை

30

கிரகணங்கள்

21

31

கண்ட வலிமை

நீர் கீழ்

தன்மைகள் - 7

32

பறவை

ஆந்தை

33

விலங்கு

ஆண் நாகம்

34

நாற்கால் பிராணி

வெள்ளாடு, சிங்கம், நரி, குதிரை

35

வாகனம்

முத்து விமானம்

36

தானியங்கள்

நெல்

37

தாவரம்

நீரில் உள்ள பூ (அல்லி, தாமரை)

38

மர வகை

பாலும் புஷ்பமும்

உள்ள கொடி

39

சமித்துகள் (மரம், செடி)

எடுக்கன்கள்ளி,முருங்கை

40

மலர்கள்

வெள்ளல்லி

தன்மைகள் - 8

41

உலோகங்கள்

ஈயம்

42

இரத்தினங்கள்

முத்து

43

பொருள்கள்

தாமிரம், பெல் மெட்டல், உப்பு,கண்ணாடி,சந்திரக்கல்

44

நிறங்கள்

வெண்மை, ஸ்படிகம்

45

வஸ்திரம்

முத்து வெண்மை

46

சுவைகள்

உப்பு, இனிப்பு

தன்மைகள் - 9

47

தேசம்

யவனம்

48

பாஷைகள்

----

49

ருது

வர்ஷருது

50

அயனாதி காலங்கள்

க்ஷணம்

51

திக்குகளில்

தென்கிழக்கு

52

அதிபதி திசைகள்

வடமேற்கு, வாயவியம்

53

நன்மை செய்யும் திசை

வடக்கு

54

பஞ்சபூதத்தில்

நீர், அப்பு

55

வடிவம்

வட்டம் (உருளை)

56

ஆசனம்

சவுக்கம்

57

உடல் உறுப்பில் அவயங்கள்

இரத்தம்,முகம்,வயிறு

58

நாடி

சிலேத்துமம்

59

பிணி

நீர்க்கோவை (சேத்துமம்

60

உறவு முறை (நாடி முறை)

தாய், மாமியார்

தன்மைகள் - 10

61

கிரக பொறுப்புகள்

அரசி

62

கிரக வயது

70 (42 – 56)

63

தத்துவம் (கிரக லிங்கம்)

பெண்

64

கிரக ஓட்டம்

சரம்

65

உயரம்

குள்ளம்

66

குணம்

சத்துவம்

67

பிரிவு

வைசியர்


தொடரும்

கிரகங்களின் தன்மைகள் – சூரியன்

sun_euv19

கிரகங்கள் மனிதர்களுக்கு தரும் பல்வேறு தன்மைகளாக, மனிதர்கள் கடைபிடிக்க வேண்டிய பலன்களாகவும் வெவ்வேறு சோதிட புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விசயங்களை சோதிடம் கற்று கொள்பவர்கள் ஒரே இடத்தில் அறிந்து பயனடையும் பொருட்டு இங்கு பதிவேற்றம் செய்திருக்கிறேன்.

 

வ.எண்

கிரகங்களின் தன்மைகள்

சூரியன்

தன்மைகள் - 1

01

வேறு பெயர்கள்

அருக்கன், ஆதித்தன், ரவி, உதயன், தினகரன், ஞாயிறு, அனலி

02

எண் கணிதம்

1

03

உபகிரகங்கள்

காலன்

04

நட்சத்திரங்கள்

கிருத்திகை, உத்திரம், உத்திராடம்

05

குணங்கள்

பூர்வபஷத்தில் - பாபன்

அமரபஷத்தில் - முக்கால் சுபன்

தன்மைகள் - 2

06

அதிதேவதைகள்

சிவபெருமான்

07

ஷேத்திரம்

ஆடுதுறை, சூரியனார் கோவில்

08

பூஜித்தல்

சந்தனம்

09

கிரக ப்ரீதி

ஆதித்ய ஹிருதயம்

தன்மைகள் - 3

10

ஒரு ராசியில் சஞ்சார கால அளவு

1 மாதம்

11

சுற்றும் முறை (இராசி சக்கரத்தில்)

கடிகாரம்

12

கிரக திசையின் கால அளவு

6 வருடம்

13

திசையில்

பலன் தரும் காலம்

ஆரம்பம்

14

அடுத்த ராசி பார்வை (கோசாரம்)

5 நாள்

15

இராசி சக்கரத்தில் பார்வை

7 (எதிர்நோக்கு)

3, 10 இடம் கால், 5,9 இடம் அரை, 4,8 இடம் முக்கால், 7 இடம் முழு பார்வையும் பார்க்கும்.

தன்மைகள் - 4

16

நட்பு கிரகங்கள்

சந்திரன்,செவ்வாய்,குரு

17

சம கிரகங்கள்

புதன்

18

பகை கிரகங்கள்

சனி,சுக்ரன்,ராகு,கேது

தன்மைகள் - 5

19

உச்ச வீடு

மேஷம்

20

அதி உச்ச பாகங்கள்

மேஷம் – 10 பாகம்

21

மூலத்திரிகோண வீடு, பாகை

சிம்மம் – 20

22

நட்பு வீடுகள்

மீனம், தனுசு, கும்பம்

23

ஆட்சி வீடு

சிம்மம்

24

பகை வீடுகள்

ரிஷபம், கடகம், மிதுனம், கன்னி,விருச்சிகம், மகரம்

25

நீச வீடு

துலாம்

26

அதி நீச பாகங்கள்

துலாம் – 10 வரை

தன்மைகள் - 6

27

இலக்கினத்திற்கு மறைவு இடங்கள்

8,12

28

திக்பலம் (கேந்திரம்)

10 (தசமம்)

29

அஸ்தங்கம்

---

30

கிரகணங்கள்

5

31

கண்ட வலிமை

உச்சி

தன்மைகள் - 7

32

பறவை

மயில், தேர்

33

விலங்கு

பெண் ஆடு

34

நாற்கால் பிராணி

சிங்கம்,பெண்மான்,யானை

35

வாகனம்

தேர், மயில்

36

தானியங்கள்

கோதுமை

37

தாவரம்

தாமரை, பழ மரம், மலைமரம்

38

மர வகை

வலு, உயர்ந்த மரம்

39

சமித்துகள் (மரம், செடி)

எருக்கு

40

மலர்கள்

செந்தாமரை

தன்மைகள் - 8

41

உலோகங்கள்

தாமிரம், தம்பாக்கு

42

இரத்தினங்கள்

மாணிக்கம்

43

பொருள்கள்

கல், பாறை, வெண்கலம், ஈயம், புல், வைகோல், காட்டுப் பொருள்

44

நிறங்கள்

அக்னி, இரத்தம்

45

வஸ்திரம்

சிவந்த (அ) சிவப்பு

46

சுவைகள்

கார்ப்பு

தன்மைகள் - 9

47

தேசம்

கலிங்கம்

48

பாஷைகள்

ஹிந்தி, சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம்

49

ருது

க்ரீஷ்மருது

50

அயனாதி காலங்கள்

அயனம்

51

திக்குகளில்

நடுவில்

52

அதிபதி திசைகள்

கிழக்கு

53

நன்மை செய்யும் திசை

தெற்கு

54

பஞ்சபூதத்தில்

நெருப்பு, தேயு கிரகம்

55

வடிவம்

நாற்கோணம் (சதுரம்)

56

ஆசனம்

வட்டம்

57

உடல் உறுப்பில் அவயங்கள்

எலும்பு, தலை

58

நாடி

பித்தம்

59

பிணி

சுரம், பித்தம் (உஷ்ணம்)

60

உறவு முறை (நாடி முறை)

தந்தை, மகன்

தன்மைகள் - 10

61

கிரக பொறுப்புகள்

அரசன்

62

கிரக வயது

50 ( 56 – 70)

63

தத்துவம் (கிரக லிங்கம்)

ஆண்

64

கிரக ஓட்டம்

ஸ்திரம்

65

உயரம்

நடுத்தரம்

66

குணம்

சத்துவம்

67

பிரிவு

ஷத்ரியர்

தொடரும்

பரிணாமமும் தமிழும் -3

இப்பகுதியில் உள்ளம், மணம், புத்தி, சித்தம், அகங்காரம், சுரோத்திராதி ஞானேந்திரியம் மற்றும் பஞ்சவாயுக்கள் இவற்றிற்கான விளக்கமும், தன்மைகளும் அளிக்கப்படும்.

பகுதி–1

பகுதி-2

 

இந்தச் சூக்ஷும பூதங்களினின்றும் சூக்ஷும சரீரங்களும் ஸ்தூல பூதங்களும் தோன்றும். அஃதெங்ஙனமெனின் –

ஆகாச முதலான பஞ்சபூதங்களின் சத்துவாம்சத்திலே பூதத்திற்கு ஒவ்வொரு மாத்திரையெடுத்து ஒன்றாகக் கூட்டி வைத்தது அந்தக்கரணம். இந்த அந்தக்கரணத்தில் ஆகாசத்தின் அம்சங் கூடினதற்கு அடையாளம். இந்த அந்தக்கரணமும் ஆகாசத்தைப்போலச் சகலமான கேள்விக்குங் இடங்கொடுத்துத் தரிக்கின்றது. இப்படித் தரிக்கின்ற விருத்திக்கு (விருத்தி-பரிமாணம்) உள்ளம் என்று பெயர். இந்த அந்தக் கரணத்தில் வாயுவின் அம்சங் கூடினதற்கு அடையாளம். இந்த அந்தக்கரணமும் வாயுவைப் போல அலைகின்றது, இப்படி அலைகின்ற விருத்தி மனமென்று பெயர். இந்த அந்தக்கரணத்தில் அக்கினியன் அம்சங் கூடினதற்கு அடையாளம், இந்த அந்தக்கரணமும் அக்கினியைப்போல ஈது இன்னதென்று விளக்குவிக்கின்றது. இப்படி விளக்குவிக்கின்ற விருத்திக்குப் புத்தியென்று பெயர். இந்த அந்தக்கரணத்தில் அப்புவின் அம்சங் கூடிதனற்கு அடையாளம், இந்த அந்தக் கரணமும் அப்புவைப்போல விடயங்களில் பற்ற இழுக்கின்றது. இப்படி இழுக்கினற விருத்திக்குச் சித்தம் என்று பெயர். இந்த அந்தக்கரணத்தில் பிருதிவியின் அம்சங் கூடினதற்கு அடையாளம், இந்த அந்தக்கரணமும் பிருதிவியைப்போலக் கடினமாக நின்று நானென்று அபிமானிக்கின்றது. இந்தஅபிமான விருத்திக்கு அகங்காரம் என்று பெயர்.m

பஞ்சபூதங்களின் உயர்ந்த (சத்வ) தன்மையில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பங்கையும் கலந்தது அந்தகரணம். அந்தகரணம் பஞ்சபூதங்களின் தன்மையையும் கொண்டுள்ளது.

  • ஆகாயம் (வெளி) யின் அடையாளமாக அனைத்து கேள்விக்கும் இடமளிக்கிறது. இந்த பரிமாணத்திற்கு உள்ளம் என்று பெயர்.
  • வாயு (காற்று) அம்சத்தின் அடையாளமாக நகரும் தன்மையுடையதாய் இருக்கிறது. இந்த பரிமாணத்திற்கு மணம் என்று பெயர்.
  • அக்னி (நெருப்பு) அம்சத்தின் அடையாளமாக சந்தேகங்களை தெளிவிக்க கூடியதாய் இருக்கிறது. இந்த பரிமாணத்திற்கு புத்தி என்று பெயர்.
  • அப்பு(நீர்) அம்சத்தின் அடையாளமாக விசயங்களில் ஒட்டும் தன்மையுடையதாய் இருக்கிறது. இந்த பரிமாணத்திற்கு சித்தம் என்று பெயர்.
  • பிருதிவி(நிலம்) அம்சத்தின் அடையாளமாக நிலைத்த தன்மையுடன் அபிமானத்துடன் இருக்கிறது. இந்த பரிமாணத்திற்கு அகங்காரம் என்று பெயர்.

அதாவது அந்தகரணம் எனும் ஒரே தத்துவமே பல்வேறு வடிவுகளில் நிலைகளில் பல்வேறு செயல்களை செய்கிறது என விளக்க படுகிறது.

 

இன்னும் ஆகாச முதலான பஞ்ச பூதங்களினுடைய சத்துவாம்சத்திலே பூதத்திற்கு ஒவ்வொரு மாத்திரை எடுத்துத் தனித்தனியே வைத்தது சுரோத்திராதி ஞானேந்திரிய மென்று சொல்லப்படும். இவைகளில் சுரோத்திரம் ஆகாசத்தின் குணமான சத்த மாத்திரத்தை அன்றியும், துவக்கு வாயுவின் அம்சமானபடியால் வாயுவின் குணமான பரிச மாத்திரத்தை அறியும் சக்ஷு அக்கினியின் அம்சமானபடியால் அக்கினியின் குணமான ரூப மாத்திரத்தை அறியும். சிங்ஙுவை அப்புவின் அம்சமானபடியால் அப்புவின் குணமான ரசமந்திரத்தை அறியும் ஆக்கிராணம் பிருதிவியின் அம்சமானபடியால் பிருதிவியின் குணமான கந்த மாத்திரத்தை அறியும் இப்படி ஐந்தும் ஒன்றோடொன்று கூடாதபடியால் ஒன்று மற்றொன்றின் குணத்தை கிரகிக்க அறியாது அந்தக்கரணத்தில் ஐந்து மாத்திரையும் ஒன்றாய்க் கூடினதுகொண்டு ஐந்திந்திரியங்களினாலும் ஐந்து விடயங்களையும் அறியும். இந்தச் சத்துவ குணத்திலுண்டான அந்தக்கரணம் ஐந்தும், ஞானேந்திரியம் ஐந்தும் ஆகப் பத்தும் சத்துவாம்சமானபடியால் ஞான சாதனமாயின.

பஞ்சபூதங்களின் உயர்ந்த (சத்வ) தன்மையில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பங்கையும் தனி தனியே வைத்தது  சுரோத்திராதி ஞானேந்திரியம் எனப்படும்.

  • ஆகாயத்தின் அம்சம் சுரோத்திரம்- சத்தம் மாத்திரத்தை அறியும்
  • வாயுவின் அம்சம் துவக்கு- பரிசம் மாத்திரத்தை அறியும்
  • அக்கினியின் அம்சம் சக்ஷு- ரூபம் மாத்திரத்தை அறியும்
  • அப்புவின் அம்சம் சிங்ஙு- ரசம் மாத்திரத்தை அறியும்
  • பிருதிவியின் அம்சம் கந்தம்- ஆக்கிராணம் மாத்திரத்தை அறியும்

 

இன்னம் ஐந்து பூதங்களினுடைய இரஜசாம்சத்திலே பூதத்திற்கு ஒவ்வொரு மாத்திரை யெடுத்து ஒன்றாகக் கூட்டி வைத்தது வியானாதி பஞ்சவாயுக்கள். இவைகளில் வியான வாயு ஆகாசத்தின் அம்சமானபடியால் ஆகாசத்தைப் போலச் சர்வாங்கமும் வியாபித்திருக்கும். பிராண வாயு வாயுவின் அம்சமானபடியால் வாயுவைப்போல் இருதயத்திலிருந்து நாசியாதிபரியந்தம் அலையும். அபானவாயு அக்கினியின் அம்சமானபடியால் அக்கினியைப்போலச் சடராக்கினியாக உஷ்ணத்துக் கொண்டு குதத்தைப்பற்றி நின்று உண்ட அன்னபானாதிகளை சீரணப்பிக்கும். சமானவாயு அப்புவின் அம்சமானபடியால் சரீர நடுவான நாபித் தானத்தினின்று உண்ட அன்ன ரஸங்களை அப்புவைப்போல இழுக்கும், உதான வாயு பிருதிவியின் அம்சமானபடியால் கண்டத்தைப் பற்றி பிருதிவியைப் போலக் கடினமான நின்று உண்ட அன்னபானாதிகளைக் கடையும், இந்தப் பஞ்ச வாயுக்களையு மல்லாமல் வாந்தி பண்ணுவிக்கின்றது நாகனென்றும், இமைத்து விழிப்பிக்கின்றது கூர்மமென்றும், குறு குறுத்துச் தும்மச் செய்கின்றது கிரிகரனென்றும், கொட்டாவி கொள்ளச் செய்கின்றது தேவதத்தனென்றும், வீங்கச் செய்கின்றது தனஞ்செயனென்றும் வேறே ஐந்து வாயுக்களுண்டென்று சிலர் சொல்லுவார். இவ்வைந்தும் பிராணணுடைய தொழிலானபடியால் வேறல்ல இன்னம் ஆகாச முதலிய பஞ்ச பூதங்களினுடைய இரஜசாம்சத்திலே பூதத்திற்கு ஒவ்வொரு மாத்திரை யெடுத்துத் தனித்தனியே வைத்தது வாக்காதி கர்மேந்திரியமென்று சொல்லப்படும்.

பஞ்சபூதங்களின் மத்திம(ரஜோ) தன்மையில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பங்கையும் கலந்தது வியானாதி பஞ்சவாயுக்கள். 

  • ஆகாயத்தின் அம்சம் வியான வாயு- உடம்பின் அனைத்து பாகங்களையும் நிறைந்து இருக்கும்
  • வாயுவின் அம்சம் பிராண வாயு – இருதயத்திலிருந்து நாசி(மூக்கு) வரை செல்லும்
  • அக்கினியின் அம்சம் அபானவாயு – அக்னியை போல தகித்து குதபாகத்தில் சாப்பிட்ட உணவு பொருள்களை ஜீரணம் செய்யும்
  • அப்புவின் அம்சம் சமானவாயு – வயிற்று பகுதியிலிருந்து உணவு பொருள்களை சேகரம் செய்யும்.
  • பிருதிவியின் அம்சம் உதான வாயு – தொண்டையிலுருந்து உணவு பொருள்களை அரைக்கும்

 

இவ்வாயுக்கள் அல்லாமல் உடலில் வேறு 5 வாயுக்கள் உள்ளதாக சொல்லபடும்.

நாகன் – வாந்தியை உருவாக்குகிறது

கூர்மம் – இமைத்தல்

கிரிகரன் – தும்ம செய்தல்

தேவதத்தன் – கொட்டாவி விடுதல்

தனஞ்செயன் – வீங்க செய்தல்

 

இவை பிராணனின் செயல்கள் என வகை படுத்த பட்டுள்ளன.

 

பஞ்சபூதங்களின் ரஜோ அம்ச தன்மையில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பங்கையும் தனி தனியே வைத்தது  வாக்காதி ஞானேந்திரியம் எனப்படும்.

பரிணாமமும் தமிழும் -2

   பகுதி-1ல் பிரபஞ்சத்தின் ஆரம்ப நிலை தத்துவம்(பரபிரம்மம்) எவ்வாறு 3 தன்மையுள்ள (குணங்கள்) தத்துவங்களாக உருமாற்றம் அடைந்தன என்று விளக்கப்பட்டது. இப்பகுதியில் மாயை, விஷ்ணு, பிரம்மா, ருத்ரன், மனிதர்கள், பஞ்ச பூதங்கள் மற்றும் முக்தி எனும் தத்துவங்கள் எவ்வாறு குணங்களால் பகுக்க படுகின்றன என்பது விளக்கப்பெறும்.

இந்த அகண்ட பரிபூரண சச்சிதாநந்தப் பிரமத்தினிடத்திலே (புருடனிடத்துச் சாமர்த்திய ரூபசக்தி போலப் பிரமதின்கண் அனாதிசித்தமாயிருக்கிற மூலப்பிரகிருதியென்னுஞ் சத்திக்குச் சுத்திரஜிதத்தை உபமானமாகச் சொன்னது அநிர்வசனியத் தன்மையென்னும் பொருள் தோன்ற என்க). சுத்தியில் ரஜிதம்போல் மூலப்பிரகிருதியுயென்னும் ஒரு சத்தி உண்டு. அந்த மூலப்பிரகிருதியும் விகிர்த குணமாகிய முக்குணத்தோடு கூடியுருக்கும் அந்தப் பிரகிருதியின் சத்துவ குணத்தை மாயையென்றும், சர்வக்ஞவுபாதியென்றும், ஈசுரகாரண சரீரமென்றுஞ் சொல்லப்படும். இந்த மாயையினிடத்திலே நிர்மல சலப்பிரதிபிம்பம் போலப் பிரமம் சுலட்சணமாகப் பிரதிபிம்பிக்கும். இந்தப் பிரதிபிம்ப சைதன்னியத்தைச் சர்வக்ஞனாகிய ஈசுரனென்று சொல்லப்படும்.

   ப்ரம்மம் சத் சித் ஆனந்தம் என பரிபூரணமாக நிறைந்து இருந்தது.  இத்தத்துவத்திற்கு மூல பிரகிருதி எனும் சக்தி உண்டு. மூலபிரகிருதி முக்குணங்களை கொண்டு உள்ளதால், ப்ரகிருதியின் சத்துவகுணம் மாயை [6] (சர்வக்ஞவுபாதி, ஈசுரகாரண சரீரம்) என்று அழைக்கபடும். மாயையில் மறைபொருளாக பிரம்மம் பிரதிபளிக்கும். இத்தத்துவம் ஈசுவரன் (கடவுள்) என்று அறியபடும்.

 

இந்தச் சத்துவகுண மாயையினிடத்திலே சத்துவத்தில் சத்துவம், சத்துவத்தில் ரஜஸு, சத்துவத்தில் தமஸு என மூன்று குணங்கள் உண்டு. இவைகளில் சத்துவத்தில் சத்துவம் பிரதானமாகும்போது அதில் பிரதிபிம்பித்த ஈசுரன் ஜகத்தை இரக்ஷிக்கையினால் விஷ்ணு வென்றும், சத்துவத்தில் ரஜஸு பிரதானமாகும்போது அதில் பிரதிபிம்பித்த ஈசுரன் ஜகத்தை சிருஷ்டிக்கையினால் பிரமாவென்றும், சத்துவத்தில் தமஸு பிரதானமாகும்போது அதில் பிரதிபிம்பித்த ஈசுரன் ஜகத்தை உபசம்மாரம் பண்ணுகையினால் உருத்திரனென்றும் சொல்லப்படுவன். இப்படி மூலப் பிரகிருதியின் சத்துவகுண கற்பனை சொல்லப்பட்டது.

மாயை என்பது சத்துவ குணம் கொண்டது. இச்சத்துவ குணத்தில் மூன்று விதமான படி நிலைகள் உள்ளன.

  1. மாயையின் பிரபஞ்சத்தை நிலை பெற செய்யும் தன்மை விஷ்ணு (சத்துவத்தில் சத்துவம் ) என்றும் [6.1],
  2. படைக்கும் தன்மை (சத்துவத்தில் ரஜஸு) பிரமா என்றும் [6.2], 
  3. மறு உருவாக்கும் தன்மை (சத்துவத்தில் தமஸு)  ருத்ரன்[6.3] என்றும் பெயர் பெறும்.

 

இனி மூலப்பிரகிருதியின் இரஜோகுணம் அநேகரூபமாய்ப்பிரிந்து அவித்தைகளென்றும், ஜீவகாரண சரீரங்களென்றும் ஒன்றற்கொன்று தாரதம்மியமாகச் சொல்லப்படும். இந்த அவஸ்தைகளிடத்திலும் மலின சலப் பிரதி பிம்பம் போலப் பிரமசைதன்னியம் பிரதிபிம்பிக்கும். இந்தப் பிரதிபிம்ப சைதன்னியங்களை கிஞ்சிக்ஞரென்றும், சீவ சிதாபாசரென்றும், பிராக்ஞரென்றும் சொல்லப்படும். இந்த அவித்தைகளிடத்திலேயும் ரஜஸில் சத்துவம், ரஜசில் ரஜசு, ரஜசில் தமசு என மூன்று குணங்கள் உண்டு. இரஜஸில் சத்துவம் பிரதானமாகும்போது அதில் பிரதிபிம்பித்த சிதாபாசன் தத்துவக்ஞான நிஷ்டனாவன். இரஜஸில் ரஜசு பிரதானமாகும்போது அதில் பிரதிபிம்பித்த சிதாபாசன் காமக்குரோதபரனாய்க் கர்மநிஷ்டனாவன் இரஜஸில் தமசு பிரதானமாகும்போது அதில் பிரதிபிம்பித்த சிதாபாசன் சோம்பல் நித்திரை மயக்கம் ஆகிய இவைகளை யடைவன். இப்படி மூலப் பிரகிருதியின் இரஜோகுண கற்பனை சொல்லப்பட்டது.

   மூலப்பிரகிருதியின் இரஜோகுணம் பல்வேறு தத்துவங்களாக பிரிந்து அவித்தை, ஜீவ காரண சரீரம் [7] என்றும் பிரிக்க படுகின்றன. இத்தத்துவத்தின் பிம்பமான சைதன்யம்(படைப்புகள்) கிஞ்சிக்ஞர், சீவ சிதாபாசர், பிராக்ஞர் என்று பெயர் பெரும். இந்த ரஜோ குணத்தில் மூன்று விதமான படி நிலைகள் உள்ளன.

  1. ”ரஜஸில் சத்துவம்” குணம் கொண்ட படைப்புகள் தத்துவம், ஞான நிஷ்டம் போன்ற தன்மைகள் பெறும் [7.1].
  2. ”இரஜஸில் ரஜசு” குணம் கொண்ட படைப்புகள் காமம், குரோதம், கர்மம்  போன்ற தன்மைகள் பெறும் [7.2].
  3. ”ரஜஸில் தமசு” குணம் கொண்ட படைப்புகள் சோம்பல், நித்திரை, மயக்கம் போன்ற தன்மைகள் பெறும் [7.3].

 

இனி மூலப்பிரகிருதியின் தமோ குணத்திற்கு ஆவரணம், விக்ஷேபம் என இரண்டு சத்திகள் உண்டு. இவ்விரண்டில் ஆவரணசத்தியானது தத்துவ ஞானியையும் ஈசுரனையுந் தவிர மற்றைச் சீவருக்கெல்லாம் சரீரத்திரயம், சிதாபாசன், சாக்ஷி சைதன்னியம் என்னு மிவைகளின் ஒன்றற்கொன்றுள்ள பேதம் தெரியவொட்டாமல் மறைக்கும். இதனால் மறைக்கப்பட்ட சீவர் இருபத்தொன்பது தத்துவங்களையும் ஒருமைப்பாடாக நானென்று அபிமானிப்பர். இந்த அபிமானத்தை அகங்காரக் கிரந்தியென்றும், சம்சாரபந்தமென்று சொல்லப்படும். சற்குரு கடாக்ஷத்தினாலே இந்த ஆவரணம் நீங்கி இருபத்தொன்பது தத்துவங்களின் ஒன்றற்கொன்றுள்ள பேதந் தெரிகின்றதே முத்தி. இப்படி ஆவரண சத்தியின் காரியஞ் சொல்லப்பட்டது.

இனி விக்ஷேபசத்தியினின்றும் சத்தகன் மாத்திரையான ஆகாசம் தோன்றிற்று. ஆகாசத்தினின்றும் பரிசதன் மாத்திரையான வாயு தோன்றிற்று. வாயுவினின்றும் ரூபதன்மாத்திரையான அக்கினி தோன்றிற்று, அக்கினியினின்றும் ரஸதன் மாத்திரையான அப்பு தோன்றிற்று, அப்புவினின்றும் கந்தகன் மாத்திரையான பிருதிவி தோன்றிற்று. இந்த சூக்ஷும பஞ்சபூதத்திற்குக் காரணமாயிருக்கின்ற விக்ஷேப சத்தியினிடத்திலே தமஸில் சத்துவம், தமஸில் ரஜஸு, தமஸில் தமஸு என்னுமிவை அற்பங் கருவாக விருந்தபடியால் அதன் காரியமாகிய இந்தத் தன்மாத்திரைகளான பஞ்சபூதங்களும் முக்குணங்களுடனே பிறந்தன. இந்தப் பஞ்சபூதங்கட்குத் தன் மாத்திரைகளென்றும், அபஞ்சீகிருத பூதங்களென்றும், சூக்ஷுமபூதங்களென்றும், முக்குண பூதங்களென்றும் சாஸ்திரங்களில் நாமஞ் சொல்லப்படும்.

 

மூலப்பிரகிருதியின் தமோ குணத்திற்கு ஆவரணம், விக்ஷேபம் என இரண்டு சத்திகள் உண்டு.

1. ஆவரணம் [8]

   ஆவரண சக்தியானது எல்லா சீவர்களுக்கும் (கடவுளையும், முக்தியடைந்தவர்களையும் தவிர) தன்மையாக உள்ளது. இத்தன்மை மூலபொருள், சாட்சி, விளைவு இவற்றிற்கிடையேயான வித்தியாசம் தெரிய விடாமல் மறைக்கும். இதனால் மறைக்கப்பட்ட மனிதர்கள் இருபத்தொன்பது தத்துவங்களையும் ஒருமைப்பாடாக “நான்” என்று கற்பனை செய்து கொள்வர். இதற்கு அகங்கார கிரந்தி என்றும் சம்சார பந்தம் என்றும் சொல்ல படும்.

   முக்தி என்பது இந்த 29 தத்துவங்களுக்கு இடையேயான வித்தியாசம் தெரிவது.

 

2. விக்ஷேபம் [9]

   அடிப்படை இயற்கையான பஞ்ச பூதங்களின் பரிணாம வளர்ச்சி விளக்க பெறும். ஆகாயம் => வாயு => அக்னி => அப்பு => நிலம். பஞ்ச பூதங்கள் விக்ஷேபம்(முல பிரகிருதியின் தமோ குணம்- தமஸில் சத்துவம், தமஸில் ரஜஸு, தமஸில் தமஸு) இருந்து பிறந்ததால், பஞ்ச பூதங்களும் முக்குணங்களுடன் உள்ளன.  பஞ்ச பூதங்களுக்கு தன் மாத்திரைகள், அபஞ்சீகிருத பூதங்கள், சூக்ஷுமபூதங்கள், முக்குண பூதங்கள் என்று வேறு பெயர்களும் உள்ளன.

 

[தொடரும்]

பரிணாமமும், தமிழும்

இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளில் உயிரியல் தோற்றத்திற்கு பரிணாம வளர்ச்சி காரணமாக இருக்கலாம் என்ற கொள்கை வலுவடைந்து வருகிறது. பழைய சித்தர் பாடல்களை படிக்கும் போது  சேஷாத்திரி சிவனார் அருளிய நாநாசீவவாதக் கட்டளை எனும் நூலின்  “ஒரு பொருளில்/தத்துவத்தில் இருந்தே பிரபஞ்சம் தோன்றி இருக்க முடியும்” என்ற கருத்தொற்றுமையுடன் கூடிய ஒரு கட்டுரையை படித்தேன்.

இந்நூல் இறைவன் எனும் பொருள்/தத்துவம் மற்ற படைப்புகளை உருவாக்கியது எனும் மேலை தத்துவத்தை நிராகரிக்கிறது. மாறாக அனைத்து படைப்புகளும் ஒரே தத்துவத்தின் பரிணாம வளர்ச்சியே எனும் அத்வைத தத்துவத்தை முன் வைக்கின்றன.

 

இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளுடன் ஒப்பிட இக்கருத்துக்கள் ஆரம்ப நிலையில் உள்ளது என்பது எளிதில் உணர தக்கதே. இருந்த போதிலும் இந்நூலின் தொன்மையை பார்க்கும் போது இந்திய தத்துவங்களும் ஆன்மீக மரபும் மற்ற தத்துவங்களுடன் ஒப்பிட அக்காலத்தில் அடைந்திருந்த சிறப்பை அறிய முடியும்.

 

இந்நூலை அனைவரும் அறியும் பொருட்டு மின்னாக்கம் செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறேன். என்னுடைய விளக்கங்களையும் அருகே அளித்திருக்கிறேன். ஆக்கத்தில் உள்ள குறைகளை சுட்டி காட்டுமாறு கேட்டு கொள்கிறேன்.

 

 

சேஷாத்திரி சிவனார் அருளிய

நாநாசீவவாதக் கட்டளை

•••••••

சாற்றுக்கவி

இப்பியினிடையே யெழுமி சதம்போ

லென்றுமா யிலகியின்யாகி

யொப்பிபடவேது மின்றியபிரமத்

துற்றிடுங் பகுதிமுன்னாய்

வப்பிரபஞ்ச முறைமையைத்தூல

வருந்ததி நியாயமேயென்னச்

செப்பினன்யாருந் தெளிவுறச்சேஷாத்

திரிசிவ னென்னுமாதவனே.

காப்பு

ஆனைமுக னாறுமுக னம்பிகைபொன் னம்பலவன்

ஞானகுரு வாணிகையு ணாடு

 

சாற்று கவி விளக்கம் (ஆசிரியர் குறிப்பு)

இப் புவியினிடையே எழுமி சதம்போல் என்றுமாயிலகி இன்யாகி  ஒப்பிபடவேதும் இன்றிய பிரமத்து உற்றிடுங் பகுதி முன்னாய் அப்பிரபஞ்ச முறைமையை தூலவருந்த அதி நியாயமே என்ன செப்பினன் யாரும் தெளிவுறச் சேஷாத்திரி சிவன் என்னும் ஆதவனே.

 

நூல்

சுத்தப் பிரமமாயிருக்கின்ற சர்வசாக்ஷீயினிடத்திலே அக்கினியிற் சூடுபோல அபின்னமாக ஒரு சத்தி உண்டு; அந்தச் சத்தி அவ்வதீதப் பிரமத்தில் அடங்கியிருக்கும் போது அதற்குச் சுத்தப்பிரமமென்று பெயர். இந்தச் சத்தி விசிரிம்பித்துச் சுத்தப்பிரமத்தை வியாபிக்கும் போது அப்பிரமம் பரைவியாபகத்துள் இருந்தபடியினாலே அதற்குப் பரப்பிரமமென்று பெயராம்.

பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் ஒரே ஒரு தத்துவம் இருந்தது. அனைத்தையும் அறிந்த ஒரே சாட்சி அதுவே (ஒன்றே ஒன்று இருந்ததால் ).  இப்பிரமத்தின் உள்ளார்ந்த தன்மையாக சக்தி இருந்தது. (உவமை:நெருப்பினுடைய சூடு போல)  ஆரம்பத்தில் அதன் சக்தி வெளிப்படாமல் அடங்கி இருந்தது. அதன் பெயர் சுத்த பிரமம்.(1)

இரண்டாம் நிலையாக சக்தியானது ப்ரமத்தை முழுவதும் நிரம்பி இருக்கும் போது அப்பிரமத்தின் பெயர் பர பிரமம்.(2)

 

இலக்ஷண சூன்யமாயிருக்கின்ற இந்தச் சத்திக்குப் பிரயத்தினுடைய சந்நிதானத்தில் புருடசமுகத்திலே ஸ்திரீக்கு இன்பஞ் சனித்தாற் போல அவிகிர்த சத்துவ ரஜஸ் தமோ குணங்கள் உண்டாயின. அவற்றில் சுத்த சத்துவத்திற்கு ஆனந்தரூபசத்தி என்று பெயர். சுத்த ரஜஸிற்குச் சித்சொரூபசத்தி என்று பெயர். சுத்த தமஸிற்குச் சத்ரூப சத்தி என்று பெயர்.

ஆரம்பத்தில் இச்சக்தியின் இலட்சணம் (தன்மை) ஏதும் இல்லாமல் இருந்தது. பின்பு இச்சக்தியிலிருந்து இயல்பாகவே சத்வம், ரஜஸ், தமோ குணங்கள் உண்டாயின. (உவமை: ஆணினால் பெண்ணிற்கு சுகம் கிடைப்பது போல) சுத்தமான (கலப்பில்லாத) சத்துவம் ஆனந்தரூபசத்தி எனவும், சுத்த ரஜஸிற்குச் சித்சொரூபசத்தி எனவும், சுத்த தமஸிற்குச் சத்ரூபசத்தி எனவும் பெயர்

 

இவற்றில் காரணமான ஆனந்தரூப சத்தியுடனே பரப்பிரம்மம் கூடிச் சர்வானந்த மென்னும் சுழுத்தியவஸ்தையை யடைகின்றபோது பரப்பிரமமென்கின்ற பெயர்போய்ப் பரமானந்தரென்கிற பெயர்வந்தது. இந்தப் பரமானந்தர் சித்ரூப சக்தியுடனேகூடிச் சர்வப் பிரகாசமென்னுஞ் சொப்பனாவஸ்தையை யடைகின்ற போது பரமானந்தரென்னும் பெயர் போய்த் தேசோமயரென்னும் பெயர் வந்தது. இந்தத் தேசோமயர் சத்ரூப சத்தியுடனே கூடிச் சர்வ வியாபகமென்னுஞ் சாக்கிராவஸ்தையை யடைகின்றபோது தேசோமயமென்னுஞ் பெயர் போய்ப் பரிபூரணமென்னும் பெயர் வந்தது.

பரபிரமம் ஆனந்தரூபசத்தியுடன் (கலப்பில்லாத சத்துவம்) சேர்ந்து சர்வானந்தம் (சுழுத்தியவஸ்தை) நிலையை அடைகிறது. பரமானந்தர் எனும் பெயரால் அழைக்க படுகிறது.(3)

பரமானந்தர் சித்சொரூபசத்தியுடன் (கலப்பில்லாத ரஜஸ்) சேர்ந்து சர்வப் பிரகாசம் (சொப்பனாவஸ்தை) நிலையை அடைகிறது. தேசோமயர் எனும் பெயரால் அழைக்க படுகிறது. (4)

தேசோமயர் சத்சொரூபசத்தியுடன் (கலப்பில்லாத தமஸ்) சேர்ந்து வியாபகம் (சாக்கிராவஸ்தை) நிலையை அடைகிறது. பரிபூரணம் எனும் பெயரால் அழைக்க படுகிறது. (5)

 

[தொடரும்]

நண்பனும், கடவுளும்

 

நெடுநாளைய காத்திருப்பின் சந்திப்பிற்கு பிறகு ஆத்ம நண்பன் கேட்டான்

“கடவுளை தேடவோ நாம் பிறந்திருக்குறோம் ?”

 

நவின்றேன் நான்

“கடவுள் எப்படி கடவுளை தேட முடியும் ?”

 

நான் என்னிலும் நீ உன்னிலும் காண்பது மட்டுமல்ல கடவுள்

நான் உன்னிலும் நீ என்னிலும் காண்பதும் கடவுள்

 

நாம் நம்மிலும் நாம் பிறரிலும் காண்பதும் கடவுள்

நான் என்பது தன்னை தானே தேடும் பிம்பகடவுள்

 

தேடி தேடி ஓய்ந்த பின் தன்னை தான் உணர்ந்து

எங்கும் நீக்கமற நிறைந்து நிற்பதும் கடவுள்

 

 

--வால்பையனுடனான சந்திப்பு இனிமையாக இருந்தது. வால்பையனிற்கு நன்றிகள்.

வாங்க சாதியை ஒழிக்கலாம் [நகைச்சுவை பதிவு]

நேற்று நடந்த விவாதத்தின் கடுமையை குறைக்கும் பொருட்டு எழுதிய பதிவு. நகைச்சுவையாகவே நண்பர்கள் எடுத்து கொள்ள வேண்டுகிறேன்.

 

பதிவுலகின் ஒரு பகுதியில்

பதிவின் கருத்து: பார்பனீயம் என்றால் என்ன என்பதற்க்கு சரியான அர்த்தம் தெரியாமல் அல்லக்கைகள் நம்மிடமே சண்டைக்கு வருகின்றன!

 

உரையாடல் 1:

[2008]

நண்பர் 1-: பார்பனியம் எனும் சொல் சிறு வயதில் பிராமணர்களை குறிக்கும் என கேள்வி பட்டிருக்கிறேன்

[2010]

நண்பர் 1: பார்பனியம் என்ற சொல் பாமர மக்களுக்கு என்ன வென்றே தெரியாது

நண்பர் 2: சரி கூகிள் ஐயா என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்

[ Results 160,000 for பார்ப்பான். சில நிமிடங்களுக்கு பிறகு]

நண்பர் 1: பார்ப்பனியம் என்பது இப்போது திராவிடிஸ்டிகளால் தவறாக பயன்படுத்த படுகிறது

நண்பர் 2: பார்ப்பனியம் என்ற சொல்லே திராவிடர் கழகத்தினர் கண்டு பிடித்தது. பார்ப்பான் என்ற சாதி சொல்லில் இருந்து உருவானது. அது அப்போதய கால கட்டத்திற்கு தான் சரி.

 

உரையாடல் 2

நண்பர் 1: இப்போது பார்ப்பான் என்பது சாதியை குறிக்காது

நண்பர் 3: ஆனால் குடுமி வெளியே தெரியும்

நண்பர் 4: ஆம் துள்ளி வந்து குதிப்பான். அரிக்கும்

 

உரையாடல் 3

நண்பர் 2: நீங்கள் பார்ப்பனியம் என்று சொல்வதால் சாதி வெறியர்களுக்கு உறைப்பதில்லை. மதம் என்பது இப்போது பெரிய விசயமில்லை. பொருளாதார சுரண்டல்கள் அதிகமுள்ளன.

நண்பர் 5: சாதி, ஜாதிய அடுக்கு, வர்ணாசிரமம், வர்ண அடுக்கு, பார்பனியம்- அப்பாடா கோர்வையா வந்துருச்சு

நண்பர் 6: வர்ணாசிரமம் பார்ப்பனர்கள் தங்கள் மதம் மூலம் கண்டுபிடித்தது எனவே சாதி வெறியர்கள் பார்ப்பனர்கள்

நண்பர் 7: ஆம். வருணாசிரம கருமாந்திரத்தை ஒழிக்க மதம் மாறுவது தீர்வே இல்லை. வருண அடுக்கில் மேலே உள்ளவர்களாக பார்பனர்கள் தங்களை அறிவித்துக் கொண்டுள்ளனர்.

 

[மீண்டும் உரையாடல் 1ஐ படியுங்கள் :))]

 

சாதியை ஒழிச்சரலாமா பாஸ் ?!

உண்மை வாழ்க்கையின் ஒரு பகுதியில்

நண்பர் 1:  நமக்கு இருக்கிற வேலை பளுவிற்கு எதற்கு இந்த வெட்டி விவாதம் அதனால் என்ன பயன் ?

நண்பர் 2: நாம் எழுதுவது யாராவது ஒருத்தர் மனதையாது யோசிக்க வைச்சா நல்லது தானே பாஸ்  நாம் மட்டும் பதிவு போட்டு சாதியை ஒழிக்க முடியுமானால் எல்லோரையும் கெஞ்சி கேட்டாவது பதிவு எழுத வைப்பேன்.

நண்பர் 1: பதிவு போட்டு சாதி ஒழியும் என்றால் ”கழுத்தில் கத்தி வைத்தாவது ஒவ்வொருத்தனையும் பதிவு எழுத வைப்பேன்”

 

நண்பர்களின் சிரிப்போலியுடன் பதிவு முடிகிறது :))

 

பூனை கண்ணை மூடி கொண்டால் அதற்கு உலகம் இருண்டு விடும் என்ற பழமொழிக்கு நல்ல விளக்கம் கிடைத்தது. உண்மையில் மிகப்பெரிய தடுமாற்றங்களே நல்ல கருத்துக்களை வெளியிட தூண்டுகோலாக அமைகிறது. அர்சுனனின் தடுமாற்றத்தின் விளைவு கண்ணன் தந்த கீதை. நேர்மையான விவாதம் நடத்த முற்பட்டால் வால் பையன்களின் தடுமாற்றமும் நல்ல விளைவுகளை ஏற்படுத்தலாம் ...

காந்தியின் மீது கல்லெறிதல்

சமீபத்தில் படித்தவைகளில் காந்தி ஒரே விதமான கருத்து மத ரீதியாக முற்றிலும் எதிர் நிலைகளில் இருப்பவர்களால் பரப்ப பட்டது.

”காந்தி சாதியை ஆதரித்தார். அவர் ஒர் சாதி வெறியர்”

இதே விதமான குற்றசாட்டு பாரதியாரை நோக்கியும் வீசப்படுகிறது.

 

இவர்களின் மீது வீசப்படும் குற்றசாட்டுகளுக்கு ஆதாரமாக காட்டபடுவது இவர்கள் பயன்படுத்திய வர்ணாசிரமம் என்ற வார்த்தைகளின் அடிப்படையில். ஆனால் வர்ணாசிரமம் எனும் சொல் பழைய நூட்களில் முற்றிலும் வேறான நிலையில் பயன்படுத்த பட்டது. இப்போதைய சாதி எனும் பொருளில் அல்ல. கீதையை அதன் உண்மையான பொருளில் வாசிப்பவர்களுக்கு மனு நீதியில் சொல்லப்பட்ட திரிக்கபட்ட வர்ணாசிரமத்தில் உள்ள  முரண் வெளிப்படையாக தெரியும்.

 

    • கீதையில் விளக்கப்படும் வர்ணாசிரமம் வேறு இப்போதய சாதி வேறு . (மனு நீதி முதற் கொண்டு)
    • குலத்தொழிலும், பிறப்பின் அடிப்படையிலான சாதியும் ஒழிக்க பட வேண்டும்.
    • வேலையை வைத்து உயர்வு தாழ்வு கற்பித்தலும் ஒழிய வேண்டும்.

      http://sabaritamil.blogspot.com/2009/11/blog-post.html

 

ஆனால் சாதி என்பது குலத்தொழிலின் அடிப்படையில் சில சமூகத்தினரை இழிபொருளாக பார்க்கபடும் நிலை வந்ததுமே சமூகத்தை முழுமையாக கேடு கெட்ட நிலைக்கே கொண்டு சென்றது.


DSC02078//காந்தியின் ஆரம்பகால எண்ணங்கள் இவை. வருணப்பிரிவு என்பது சமூகத்தில் ஓர் ஒழுங்கை உருவாக்கும்பொருட்டு இயல்பாக பரிணாமம் அடைந்துவந்த ஒன்று.//

//1931ல் காந்தி எழுதினார் ” நான் நவீன அர்த்தத்தில் சாதி அமைப்பில் நம்பிக்கை கொள்ளவில்லை. அது ஒரு சமூகத்தீங்கு, முன்னேற்றத்துக்கு தடை. மனிதர்கள் நடுவே உள்ள எவ்வகையான ஏற்றதாழ்வுகளையும் நான் நம்பவில்லை. நாமெல்லாம் மூற்றிலும் சமம். சமத்துவம் என்பது ஆன்மாவிலே ஒழிய உடல்களில் அல்ல….புறவயமாக தெரியும் //


//சாதியை அழிப்பதற்கு மிகச்சிறந்த மிகவேகமான தடையற்ற வழி என்னவென்றால் சீர்திருத்தவாதிகள் அதை தங்களிடமிருந்தே தொடங்குவதுதான். தேவையென்றால் அதற்காக அவர்கள் சமூகத்தின் புறக்கணிப்பைக்கூட ஏற்றுக்கொள்ளவேண்டும் .மாற்றம் படிபப்டியாக ஆனால் உறுதியாக நிகழும்”
சொன்னதை தானே செய்வதற்கும் காந்தி தயாரானார். மார்க் லிண்ட்லே கோராவுக்கும் காந்திக்கும் இடையேயான உறவைச் சுட்டிக்காட்டுகிறார். பிறப்பால் பிராமணரான கோரா தன் சாதியை துறந்தார்.அதற்காக அவர் வேலையை விட்டு துரத்தப்பட்டார். தலித் மக்கள் நடுவே சேவைசெய்த கோராவை 1944 ல் காந்தி தன் ஆசிரமத்துக்கு அழைத்து தன்னுடன் வைத்துக்கொண்டார்.//


//1945 ல் காந்தி எழுதினார். ”பெண்ணுக்கு எந்த தகுதி இருந்தாலும் திருமணம் ஒரே சாதிக்குள் என்றால் என் ஆசீர்வாதத்தை தயவுசெய்து கோராதீர்கள். அவள் வேறு சாதி என்றால் மட்டுமே நான் என் ஆசீர்வாதத்தை அனுப்புவேன்”//


//இனிமேல் கவனியுங்கள், காந்தியை அவதூறுசெய்து வெளியிடப்படும் எந்த ஒரு ஆய்வேட்டுக்கு அல்லது நூலுக்குப் பின்னாலும் ஓர் அயல்நாட்டு பல்கலைக் கழகம் இருக்கும். அல்லது ஏதேனும் ஒரு கிறித்தவ மதப்பரப்பு நிறுவனத்தின் நிதியுதவி இருக்கும்.//

--http://www.jeyamohan.in/?p=4103

 

[படம்: பிப்ரவரி 23, 1946 அன்று தாழ்த்தப்பட்டவர்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டபோது, முதல்முறையாக காந்தி அக்கோவிலுக்குள் செல்லும்காட்சி.
http://jssekar.blogspot.com/2009/08/blog-post_23.html]

 

சாதியின் இன்றைய நிலை

    • மக்களிடையே உருவாக்க படும் பரம்பரை பெருமை எனும் மந்தை குணமே இன்றைய சாதி நிலமைக்கு முதற் காரணமாக இருக்கிறது.
      • பரம்பரை பரம்பரையாக சிறுமை படுத்த பட்ட மக்கள், தங்களுக்கு அடிமையாக இருப்பதையே விரும்பும் தன் முனைப்பு
      • தங்களுடைய  தன் இன மக்கள் ”நாடாண்ட வம்சம்”, “கட்டியாண்ட வம்சம்” என்று போலி பெருமிதங்களின் மூலம் ஏற்றி விடப்படும் சாதி வெறி
    • பொருளாதார தேவைகள்
      • சில மக்களை அறியாமையில் ஆழ்த்தி அடிமை பணிகளில் ஈடுபடுத்தி பொருளாதார ரீதியாக சுரண்டுவது
      • பொருளாதார ரீதியாக முன்னேறிய தன் சாதி மக்களிடம் கிடைக்கும் பொருளாதார பலன்கள் எனும் நம்பிக்கை
    • திரிக்கப்பட்ட மத நம்பிக்கைகள்

      http://sabaritamil.blogspot.com/2010/04/blog-post.html

 

21ம் நூற்றாண்டில் சங்கங்கள் இல்லாத சாதியே இல்லை எனும் நிலைமை உருவாகி விட்டது, சாதி ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்பட்ட மிகப்பெரும் பின்னடைவு. ஒரு திறந்த சவால் என்னிடமிருந்து இன்றைய சாதி சங்க தலைவர்களில்,

  1. எத்தணை பேர் மனு நீதியை கேள்வி பட்டிருக்கிறார்கள்? (மனு நீதியின் மக்களை வகைப்படுத்தல் திரிக்கபட்டது)
  2. எத்தணை பேர் அந்நூட்களை பார்த்து இருக்கிறார்கள் ?
  3. எத்தணை பேர் அதன் பொருள் உணர்ந்து இருக்கிறார்கள்?
  4. எத்தணை பேர் அதனை ஏற்று கொள்கிறார்கள் ? (ஏனெனில் அதில் தவறாக கூறப்பட்ட பிரிவு மக்கள் கூட சாதி வெறியில் முன்னணியில் இருக்கின்றனர் !!!)

 

திரிக்கப்பட்ட வர்ணாசிரமம் மட்டுமே சாதிக்கான காரணமாக இருப்பது 21ம் நூற்றாண்டில் காலாவதியாகி விட்டது. பொருளாதார ரீதியான காரணம் பூதாகரமாக இருக்கிறது.  நோய்க்கான காரணம் ஒன்றாக இருக்க நாம் தவறான சிகிச்சை செய்து வருகிறோம் என்பதே சாதி சங்கங்கள் பெருகி இருக்கிறது என்பதற்கான காரணங்கள்.

 

காந்தியும், பாரதியும் குறை சொல்லும் முன்னர் அவர்களின் வாழ்க்கை, வாழ்ந்த சூழலையாவது தெரிந்து கொள்வதே அடிப்படை நேர்மை. இல்லையெனில் நாம் கூறும் கருத்துக்கள் நம்மை கோமாளியாகவே காட்டும்.

வாழ்க்கையின் நாடோடி பயணம்

சகீராவின் டென்னீஸ் வீரர் ரபேல் நடாலுடனான ஒரு புகழ்பெற்ற பாடல்

 

பாதையில் மனதுடைத்தேன் நான்

மனசில்லுகளை ஒன்றிணைப்பதில்

வார இறுதிகளை கழித்தேன்

 

 

நண்பர்களும் நினைவுகளும் கடந்து செல்கிறேன்

பறக்க கற்று கொள்ளும் போது

நடப்பதும் சலிப்பானதுதான்

 

 

’வீடு’ திரும்புதல் நினைவில்லையே

சிகரங்களே நோக்கமல்லவா

என்ன கிடைக்குமென யாருக்கு தெரியும் ?

 

எல்லா தவறுகளை நான் ஒப்பு கொள்ள போவதில்லை

நான் முயற்சிப்பேனென நீ பந்தயமிடலாம்

ஆனால் நான் எல்லா நேரமும் வெற்றியடைவதில்லை

 

 

ஏனெனில் நான் ஒரு நாடோடி நீ என் வழிதுணையா?

எனக்கு பொருந்தும் போது

உன்னுடைய ஆடைகளை திருடும் வாய்ப்பிருக்கிறது

நான் ஒப்பந்தமிடுவதேயில்லை ஒரு நாடோடியை போல

நான் பின்னடைவதில்லை ஏனெனில் வாழ்க்கை என்னை ஸ்வீகரித்து விட்டது

 

நீ என்னை விலகினும்

நான் கதற போவதில்லை

மரணிக்கும் வயதில்லை எனக்கு

ஏனெனில் நான் ஒரு நாடோடி

ஏனெனில் நான் ஒரு நாடோடி

 

 

மறைக்க முடிவதில்லை நான் செய்தவைகளை

தழும்புகள் நினைவிக்கின்றன கடந்த பாதையின் தூரத்தை

யாருக்கு தேவையாயிருப்பினும்

காயம்பட விரும்பும் போது மட்டுமே

ஆயுதத்துடன் ஓட விரும்புங்கள்

 

 

ஹாய் என அழைக்கும் போதும்

மறுதலித்தால் மட்டுமே நீ

முட்டாளாக மாட்டாய்

இம்முறையில் தானே வாழ்க்கை செல்கிறது.

மக்கள் அறியாமைகளை பார்த்தே பயப்படுகிறார்கள்

வழிதுணையாக என்னுடன் வா ஆம்

வழிதுணையாக என்னுடன் வா

அங்காடி தெரு - அடித்தட்டு மக்களின் பிம்பம்

1227005292ஒரு திரைப்படத்தினுடைய வெற்றியின் அளவுகோல் ”தன்னையும் பார்வையாளனையும் ஒன்றிணைத்து எவ்வளவு தூரம் அவனது உணர்வுகளை பகிர்ந்து கொள்கிறது” எனில் அங்காடி தெரு என்பது மிகப்பெரிய வெற்றிபடம் என்பதில் ஐயமில்லை. படத்தின் அடுத்தடுத்த காட்சிகள் அடித்தட்டு, நடுத்தர மக்களின் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளின் அடிப்படையில் அமைந்திருப்பதால் எளிமையுடன் ஒன்றி விட முடிகிறது.

 

அங்காடி தெரு படம் பார்க்கும் போது எதிர்பாராத சில நேர்மறை சிந்தணைகளை உடைய மனிதர்களை உணர முடிந்தது, படமானது சில எதிர்மறை குணாதிசயங்களை காண்பிப்பதாக பல வலையுலக விமர்சனங்கள் மூலம் படித்திருந்த போதிலும். ஒரு வேளை அதிகமாக விமர்சனங்களை படித்ததன் காரணமாக அப்படிபட்ட காட்சிகளின் மேல் ஏற்பட்ட சுவாரஸ்ய குறைபாடு காரணமாக இருக்கலாம்.

 

 

 உண்மையான ஹீரோயிசம்

  • எளிய மனிதர்களின் இனிய காதல் உணர்வில் ஆரம்பிக்கிறது படம்.
  • தான் கட்டடம் கட்டும் தொழில் செய்தாலும் தன் மகனை பொறியியல் படிக்க வைக்க நினைக்கும் தந்தை.
  • ”பொறியியல் படிக்க வைத்தாலும் என்னை என்ன ஃபாரினிலா படிக்க வைத்தாய்” என்று கேட்கும் மேல்குடி இளைஞர்கள் நிறைந்த நாட்டில் நல்ல மதிப்பெண் எடுத்தாலும் குடும்ப சூழ்நிலை கருதி அடிமை தொழிலுக்கு சென்றாவது குடும்பத்தை காக்க நினைக்கும் பொருப்பு மிக்க இளைஞன் பாத்திரம்.
  • தன் நண்பனுக்காக அவனுடன் செல்லும் விடலை தனமான ஆனால் நம் இளம் வயதில் சந்தித்த நேர்மையான நண்பர்கள்.
  • எப்படிபட்ட சூழ்நிலையில் கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முன்னேற துடிக்கும் அங்காடி தெருவின் கடின உழைப்பாளிகள்
  • வேலை வெட்டி இல்லையெனிலும் அழகான பெண்ணை பார்த்தவுடன் மயங்கி விடுவதாக காட்டும் படங்கள் மத்தியில் “அவள் அப்படி ஒன்றும் அழகில்லை” என பழகி பார்த்து ஆன்மாவை காதலிக்கும் எதார்த்த நாயகன்/நாயகி
  • ”யானை வாழும் காட்டில் தான் எறும்பும் வாழ்கிறது” என சீறும் நாயகன்
  • தன் இரு கால்களையும் இழந்து தன் எதிர்காலத்தை முழுதும் தொலைத்த நாயகியிடம் “நாம் இப்பவே கல்யாணம் செய்துக்கலாம் கனி” என்னும் ஒற்றை வாக்கியத்தில் ஒரு முழு வாழ்வின் காதலையும் வெளிப்படுத்தும் காதலன்.
  • என்றாவது முன்னேறி விடுவோம் என்பதன் அடிப்படையில் உழைத்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான தமிழர்களின் எதிர்கால நம்பிக்கை படத்தின் முடிவு

 

எந்த ஒரு கடின சூழ்நிலையையும் தங்களால் முடிந்த அளவு நேர்மையாக எதிர்க்கும் சுய மரியாதை உணர்வு தான் படத்தின் அடி நாதம். காதல் தோல்வியில் தற்கொலை, பரிட்சை தோல்வி தற்கொலை,  பஞ்சு முட்டாய் தரவில்லை என தற்கொலை முதலிய நிரம்பிய சமூகத்தில் போராடும் உணர்வை வாழ்வின் அடி நாதமாக வெளிப்படுத்தும் இயக்குனர் & கதாசிரியருக்கு வாழ்த்துக்கள்.

சாதி இல்லாத தமிழினம் !! (சாதியமும், சுயவஞ்சகமும்)

சமீபத்தில் சாதியை தமிழினத்திலிருந்து முற்றிலுமாக நீக்கும் அதி முக்கிய கண்டு பிடிப்பு வலையுலகில் நடந்திருக்கிறது.  இக்கண்டுபிடிப்பின் படி தமிழர்களிடம் சாதி இல்லை என்பதை கீழ் காணும் வகையில் சுலபமாக  நிறுவ முடியும்.

 

      1. சாதி இந்து மதத்தில் உள்ளது
      2. சாதி ஜீன் வழி பரம்பரை பரம்பரையாக வருகிறது
      3. தமிழர்கள் இந்துக்கள் அல்ல & பார்ப்பனர்கள் தமிழர்கள் அல்ல
      4. எனவே ஜீன் வழி பார்பனர்கள் சாதி வெறி பிடித்தவர்கள். என் ஜீன் வழி நான் சாதி வெறி பிடித்தவன் இல்லை (கூடவே என் பரம்பரை மக்களும் சாதி வெறி பிடித்தவர்கள் இல்லை! எப்பூடி ??)

 

ஆகவே சாதி ஒழிப்பு செய்ய சுலபமான வழி நான் ஒரு இந்து இல்லை என உரக்க கூவி கொண்டே சரஸ்வதி மந்திரம் சொல்வது தான். நீங்கள் சைவம், வைணவ, இஸ்லாமிய அல்லது கிறிஸ்தவ மதங்களில் ஒருவர் ஆகிவிடுவீர்கள் உங்களுடைய பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குறிய ஜீன் தொடர்பு உடனடியாக அறுக்க பட்டு உடனடியாக சுய பாவ மன்னிப்பு வழங்கப்படும். உங்கள் முன்னோர்கள் செய்த சாதிய விசத்திற்குரிய குற்ற உணர்வை கூட நீங்கள் எளிமையாக விட்டு விடலாம்.

 

சாதியத்தின் நவீன முகங்கள்

மக்களிடம் மாட்டி கொண்ட திருடர்கள் ஒருவருக்கொருவர் குற்றம் கூறி தான் யோக்கியவான் என்று நிரூபிக்க முயல்வது போல், இன்றைய சூழ்நிலையில்  ”பார்ப்பனீயம்” & ”உயர் சாதியம்” என்பவர்கள் அடித்து கொள்வது கீழ் தரமானது. பார்பணியம் என்று கூவுபவர்களில் சிலர் மற்ற உயர் சாதியினராய் இருப்பதிலும் அவர்கள் தங்களை முற்போக்காளர்களாக காட்டி கொள்ள முனைவதிலும் உள்ள குரூரம் சாதாரணமானதல்ல.

இன்றைய தினத்தில் சாதியத்தை எதிர்க்க காரணம் ஒரு குறிப்பிட்ட சந்ததியினரை அறியாமையில் ஆழ்த்தி, உழைப்பை சுரண்டி கொழுக்கும் திருட்டு சமூகத்தின் காட்டு மிராண்டித்தனம் தானே ? இன்று சாக்கடை சுத்தம் செய்யும் நண்பரின் உழைப்பை வேண்டாத மத, சாதி அமைப்புகள் எவை ?

வேறு இன காரர்களுக்கு தனி பாத்திரங்களை தரும், அவர்கள் உணவருந்தியபின் இடத்தை சுத்தம் செய்யும் முட்டாள்கள் இருக்கும் நாட்டில் தான், தன் சொந்த கிராம மக்களை தன் வீட்டிற்கு உள்ளே வரக்கூட அனுமதிக்காத மேல்(?) இன ஈனப்பிறவிகளும் இருக்கின்றன.

எந்த மனிதனும் ஆரிய பவனிற்கு சென்று உணவருந்த முடிகிற இக்காலத்தில் தான், மக்கள் தன் சொந்த கிராமத்திலுள்ள உணவகத்தின் அருகில் கூட செல்ல இயல முடியாத நிலை உள்ளது.

காதலை பயன்படுத்தி தன் இனத்தை பெருக செய்யும் இனப்பெருக்க ஜந்துக்கள் இருக்கும் நாட்டில் தான், காதலர்கள் தேடி பிடித்து கொல்லும் காட்டு மிராண்டிகளும் இருக்கின்றனர்.

உட்பிரிவுடன் கூடிய இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்த கூடிய சூழ்நிலையில் தானே அடித்தட்டு மக்களிடையே கூட ஒற்றுமை உள்ளது ? 90 வயது பெரியவரும் 9 வயது சிறுவனின் முன் செருப்பை தூக்கி கொண்டு நடப்பதும் அச்சிறுவன் அம்முதியவரை “வாடா முனியா” என்று அழைப்பதும் எந்த இனம் ?

எனவே என் ஜீன் உயர்ந்தது என்று கூறும் யோக்கியம் எந்த வெங்காயத்திற்கும் கிடையாது.

 

சுயவஞ்சகம்

சாதியம் தவறானது அதை முன்னோர்கள் செய்தனர் என்பது சரி. அதனால் குற்ற உணர்வு கொள்வது வரை சரி தான். அக்குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட தாங்கள் யோக்கியவான்கள் என்பதை காண்பிக்க ”சாதி என்பது பார்ப்பனியம் மட்டும்” எனும் பிரச்சாரம் நடந்தால் அது தன்னை தானே ஏமாற்றி கொள்ளும் சுயவஞ்சகம் தான்  அது தமிழினத்தை மீண்டும் ஒரு சாதிய படுகுழியிலேயே தள்ளும்.

 

உங்களுக்கு உண்மையிலேயே குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட மனசாட்சியுடன் சிந்தித்தால்

  1. உங்கள் மனதிலிருந்து உம்முடைய பரம்பரையின் உயர்வு நவிர்ச்சி மனப்பான்மையை தூக்கி எறியுங்கள்
  2. மனிதர்களிடையே உயர்ந்தவன் என்பதும் தாழ்ந்தவன் என்பது பிறப்பின் வழி இல்லையென உங்களுடைய குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்கள்.
  3. முடிந்தவரை ஒடுக்கபட்டவர்களுக்கு உறுதுணையாயிருங்கள்

இவைதான் தமிழினத்திலிருந்து சாதியை ஒழிய செய்யும்; ”பார்ப்பனிய கொள்கை” பரப்புதல் அல்ல

 

இப்பதிவின் மூலம் சாதியை பார்ப்பணீயம் என்று பிரச்சாரம் செய்பவர்களும், நான் இந்த சாதியை சேர்ந்த மேலானவன் என்று அடையாளம் காட்டுபவர்களுக்கும் கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

 

இப்படிக்கு,

தனக்கு கீழே சிலரை வைத்து மிருக குணத்தையும், தனக்கு மேலே சிலரை உயர்த்தி அடிமை புத்தியையும் காட்டி கொண்டிருந்த கோடிக்கணக்கான தமிழர் பரம்பரையின் ஒரு ஜீன்

 

[குறிப்பு: இத்தகைய சிந்தணைகள் சில மாதங்களாகவே சிந்தையில் இருந்தது தான். சமீபத்திய வலையுலக நிகழ்வுகள் எரிச்சலை கிளப்பி பதிவை வெளியிட தூண்டியது]