பரிணாமமும் தமிழும் -2

   பகுதி-1ல் பிரபஞ்சத்தின் ஆரம்ப நிலை தத்துவம்(பரபிரம்மம்) எவ்வாறு 3 தன்மையுள்ள (குணங்கள்) தத்துவங்களாக உருமாற்றம் அடைந்தன என்று விளக்கப்பட்டது. இப்பகுதியில் மாயை, விஷ்ணு, பிரம்மா, ருத்ரன், மனிதர்கள், பஞ்ச பூதங்கள் மற்றும் முக்தி எனும் தத்துவங்கள் எவ்வாறு குணங்களால் பகுக்க படுகின்றன என்பது விளக்கப்பெறும்.

இந்த அகண்ட பரிபூரண சச்சிதாநந்தப் பிரமத்தினிடத்திலே (புருடனிடத்துச் சாமர்த்திய ரூபசக்தி போலப் பிரமதின்கண் அனாதிசித்தமாயிருக்கிற மூலப்பிரகிருதியென்னுஞ் சத்திக்குச் சுத்திரஜிதத்தை உபமானமாகச் சொன்னது அநிர்வசனியத் தன்மையென்னும் பொருள் தோன்ற என்க). சுத்தியில் ரஜிதம்போல் மூலப்பிரகிருதியுயென்னும் ஒரு சத்தி உண்டு. அந்த மூலப்பிரகிருதியும் விகிர்த குணமாகிய முக்குணத்தோடு கூடியுருக்கும் அந்தப் பிரகிருதியின் சத்துவ குணத்தை மாயையென்றும், சர்வக்ஞவுபாதியென்றும், ஈசுரகாரண சரீரமென்றுஞ் சொல்லப்படும். இந்த மாயையினிடத்திலே நிர்மல சலப்பிரதிபிம்பம் போலப் பிரமம் சுலட்சணமாகப் பிரதிபிம்பிக்கும். இந்தப் பிரதிபிம்ப சைதன்னியத்தைச் சர்வக்ஞனாகிய ஈசுரனென்று சொல்லப்படும்.

   ப்ரம்மம் சத் சித் ஆனந்தம் என பரிபூரணமாக நிறைந்து இருந்தது.  இத்தத்துவத்திற்கு மூல பிரகிருதி எனும் சக்தி உண்டு. மூலபிரகிருதி முக்குணங்களை கொண்டு உள்ளதால், ப்ரகிருதியின் சத்துவகுணம் மாயை [6] (சர்வக்ஞவுபாதி, ஈசுரகாரண சரீரம்) என்று அழைக்கபடும். மாயையில் மறைபொருளாக பிரம்மம் பிரதிபளிக்கும். இத்தத்துவம் ஈசுவரன் (கடவுள்) என்று அறியபடும்.

 

இந்தச் சத்துவகுண மாயையினிடத்திலே சத்துவத்தில் சத்துவம், சத்துவத்தில் ரஜஸு, சத்துவத்தில் தமஸு என மூன்று குணங்கள் உண்டு. இவைகளில் சத்துவத்தில் சத்துவம் பிரதானமாகும்போது அதில் பிரதிபிம்பித்த ஈசுரன் ஜகத்தை இரக்ஷிக்கையினால் விஷ்ணு வென்றும், சத்துவத்தில் ரஜஸு பிரதானமாகும்போது அதில் பிரதிபிம்பித்த ஈசுரன் ஜகத்தை சிருஷ்டிக்கையினால் பிரமாவென்றும், சத்துவத்தில் தமஸு பிரதானமாகும்போது அதில் பிரதிபிம்பித்த ஈசுரன் ஜகத்தை உபசம்மாரம் பண்ணுகையினால் உருத்திரனென்றும் சொல்லப்படுவன். இப்படி மூலப் பிரகிருதியின் சத்துவகுண கற்பனை சொல்லப்பட்டது.

மாயை என்பது சத்துவ குணம் கொண்டது. இச்சத்துவ குணத்தில் மூன்று விதமான படி நிலைகள் உள்ளன.

  1. மாயையின் பிரபஞ்சத்தை நிலை பெற செய்யும் தன்மை விஷ்ணு (சத்துவத்தில் சத்துவம் ) என்றும் [6.1],
  2. படைக்கும் தன்மை (சத்துவத்தில் ரஜஸு) பிரமா என்றும் [6.2], 
  3. மறு உருவாக்கும் தன்மை (சத்துவத்தில் தமஸு)  ருத்ரன்[6.3] என்றும் பெயர் பெறும்.

 

இனி மூலப்பிரகிருதியின் இரஜோகுணம் அநேகரூபமாய்ப்பிரிந்து அவித்தைகளென்றும், ஜீவகாரண சரீரங்களென்றும் ஒன்றற்கொன்று தாரதம்மியமாகச் சொல்லப்படும். இந்த அவஸ்தைகளிடத்திலும் மலின சலப் பிரதி பிம்பம் போலப் பிரமசைதன்னியம் பிரதிபிம்பிக்கும். இந்தப் பிரதிபிம்ப சைதன்னியங்களை கிஞ்சிக்ஞரென்றும், சீவ சிதாபாசரென்றும், பிராக்ஞரென்றும் சொல்லப்படும். இந்த அவித்தைகளிடத்திலேயும் ரஜஸில் சத்துவம், ரஜசில் ரஜசு, ரஜசில் தமசு என மூன்று குணங்கள் உண்டு. இரஜஸில் சத்துவம் பிரதானமாகும்போது அதில் பிரதிபிம்பித்த சிதாபாசன் தத்துவக்ஞான நிஷ்டனாவன். இரஜஸில் ரஜசு பிரதானமாகும்போது அதில் பிரதிபிம்பித்த சிதாபாசன் காமக்குரோதபரனாய்க் கர்மநிஷ்டனாவன் இரஜஸில் தமசு பிரதானமாகும்போது அதில் பிரதிபிம்பித்த சிதாபாசன் சோம்பல் நித்திரை மயக்கம் ஆகிய இவைகளை யடைவன். இப்படி மூலப் பிரகிருதியின் இரஜோகுண கற்பனை சொல்லப்பட்டது.

   மூலப்பிரகிருதியின் இரஜோகுணம் பல்வேறு தத்துவங்களாக பிரிந்து அவித்தை, ஜீவ காரண சரீரம் [7] என்றும் பிரிக்க படுகின்றன. இத்தத்துவத்தின் பிம்பமான சைதன்யம்(படைப்புகள்) கிஞ்சிக்ஞர், சீவ சிதாபாசர், பிராக்ஞர் என்று பெயர் பெரும். இந்த ரஜோ குணத்தில் மூன்று விதமான படி நிலைகள் உள்ளன.

  1. ”ரஜஸில் சத்துவம்” குணம் கொண்ட படைப்புகள் தத்துவம், ஞான நிஷ்டம் போன்ற தன்மைகள் பெறும் [7.1].
  2. ”இரஜஸில் ரஜசு” குணம் கொண்ட படைப்புகள் காமம், குரோதம், கர்மம்  போன்ற தன்மைகள் பெறும் [7.2].
  3. ”ரஜஸில் தமசு” குணம் கொண்ட படைப்புகள் சோம்பல், நித்திரை, மயக்கம் போன்ற தன்மைகள் பெறும் [7.3].

 

இனி மூலப்பிரகிருதியின் தமோ குணத்திற்கு ஆவரணம், விக்ஷேபம் என இரண்டு சத்திகள் உண்டு. இவ்விரண்டில் ஆவரணசத்தியானது தத்துவ ஞானியையும் ஈசுரனையுந் தவிர மற்றைச் சீவருக்கெல்லாம் சரீரத்திரயம், சிதாபாசன், சாக்ஷி சைதன்னியம் என்னு மிவைகளின் ஒன்றற்கொன்றுள்ள பேதம் தெரியவொட்டாமல் மறைக்கும். இதனால் மறைக்கப்பட்ட சீவர் இருபத்தொன்பது தத்துவங்களையும் ஒருமைப்பாடாக நானென்று அபிமானிப்பர். இந்த அபிமானத்தை அகங்காரக் கிரந்தியென்றும், சம்சாரபந்தமென்று சொல்லப்படும். சற்குரு கடாக்ஷத்தினாலே இந்த ஆவரணம் நீங்கி இருபத்தொன்பது தத்துவங்களின் ஒன்றற்கொன்றுள்ள பேதந் தெரிகின்றதே முத்தி. இப்படி ஆவரண சத்தியின் காரியஞ் சொல்லப்பட்டது.

இனி விக்ஷேபசத்தியினின்றும் சத்தகன் மாத்திரையான ஆகாசம் தோன்றிற்று. ஆகாசத்தினின்றும் பரிசதன் மாத்திரையான வாயு தோன்றிற்று. வாயுவினின்றும் ரூபதன்மாத்திரையான அக்கினி தோன்றிற்று, அக்கினியினின்றும் ரஸதன் மாத்திரையான அப்பு தோன்றிற்று, அப்புவினின்றும் கந்தகன் மாத்திரையான பிருதிவி தோன்றிற்று. இந்த சூக்ஷும பஞ்சபூதத்திற்குக் காரணமாயிருக்கின்ற விக்ஷேப சத்தியினிடத்திலே தமஸில் சத்துவம், தமஸில் ரஜஸு, தமஸில் தமஸு என்னுமிவை அற்பங் கருவாக விருந்தபடியால் அதன் காரியமாகிய இந்தத் தன்மாத்திரைகளான பஞ்சபூதங்களும் முக்குணங்களுடனே பிறந்தன. இந்தப் பஞ்சபூதங்கட்குத் தன் மாத்திரைகளென்றும், அபஞ்சீகிருத பூதங்களென்றும், சூக்ஷுமபூதங்களென்றும், முக்குண பூதங்களென்றும் சாஸ்திரங்களில் நாமஞ் சொல்லப்படும்.

 

மூலப்பிரகிருதியின் தமோ குணத்திற்கு ஆவரணம், விக்ஷேபம் என இரண்டு சத்திகள் உண்டு.

1. ஆவரணம் [8]

   ஆவரண சக்தியானது எல்லா சீவர்களுக்கும் (கடவுளையும், முக்தியடைந்தவர்களையும் தவிர) தன்மையாக உள்ளது. இத்தன்மை மூலபொருள், சாட்சி, விளைவு இவற்றிற்கிடையேயான வித்தியாசம் தெரிய விடாமல் மறைக்கும். இதனால் மறைக்கப்பட்ட மனிதர்கள் இருபத்தொன்பது தத்துவங்களையும் ஒருமைப்பாடாக “நான்” என்று கற்பனை செய்து கொள்வர். இதற்கு அகங்கார கிரந்தி என்றும் சம்சார பந்தம் என்றும் சொல்ல படும்.

   முக்தி என்பது இந்த 29 தத்துவங்களுக்கு இடையேயான வித்தியாசம் தெரிவது.

 

2. விக்ஷேபம் [9]

   அடிப்படை இயற்கையான பஞ்ச பூதங்களின் பரிணாம வளர்ச்சி விளக்க பெறும். ஆகாயம் => வாயு => அக்னி => அப்பு => நிலம். பஞ்ச பூதங்கள் விக்ஷேபம்(முல பிரகிருதியின் தமோ குணம்- தமஸில் சத்துவம், தமஸில் ரஜஸு, தமஸில் தமஸு) இருந்து பிறந்ததால், பஞ்ச பூதங்களும் முக்குணங்களுடன் உள்ளன.  பஞ்ச பூதங்களுக்கு தன் மாத்திரைகள், அபஞ்சீகிருத பூதங்கள், சூக்ஷுமபூதங்கள், முக்குண பூதங்கள் என்று வேறு பெயர்களும் உள்ளன.

 

[தொடரும்]

2 கருத்துகள்:

எல்லோரும் இரசிக்கும் வகையி்ல் பார்த்து பதமா ;-)