இந்தியாவின் வளமையான எதிர்காலம்

[குறிப்பு: இவ்விடுகை ஒரு தொடர்பதிவு ஆகும்; முந்தைய இடுகைகள்

 

எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது!

  நாட்டின் இப்போதைய சூழல் (09/2009 வரை) எப்படி இருக்கும் என்று பார்த்தோம்.

  1. வரும் பொது தேர்தலில் எந்த கூட்டணிக்கும் இறுதி பெரும்பான்மை கிடைக்காமல் இந்தியாவில் அரசியல் குழப்ப நிலை ஏற்படும்.
  2. உலக பொருளாதார குழப்ப சுமை இறுதியாக பட்ஜெட் வடிவில் ஏழை மக்களுக்கு வந்து சேரும்.
  3. மத தலைவர்களுக்கும், மத ஒற்றுமைக்கும் அச்சுருத்தல் ஏற்படும்.

ஆனால் அதிர்ஷ்ட வசமாக இத்தகைய நிலை தற்காலிகமானது தான்.

மாறுதலுக்கான காலகட்டங்கள் (09/2009 முதல் 09/2015 வரை)

  செப்டம்பரில் சூரிய திசை ஆரம்பிக்க போவதால் இது முதல் கடினமான காலம் அகன்று படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும். 2010 அண்டு முதல் கடுமையான ஆட்சியாளர் ஒருவர் ஆட்சிக்கு வருவார்.

  ஆனால் சுக்கிர திசை முடிய போவதால், கடந்த காலங்களில் இருந்த அளவிற்கு பொருளாதர வசதிகளும், கட்டுபாடற்ற சுதந்திரமும் இருக்காது.  அரசியல் வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், ஊடங்களுக்கும் மற்றும் மக்களுக்கும் உள்ள கட்டுபாடற்ற சுதந்திரத்தின் விளைவுகளை தான் அனுபவித்து கொண்டு இருக்கிறோமே ?! எனவே இதுவும் நல்லது தான்.

கவனிக்க பட வேண்டிய தருணம்: சூரிய திசை ராகு புத்தி (10/2010 முதல் 09/2011 வரை)

    ஒவ்வொரு ராகு திசை நடந்த போதும் இந்தியா சகிக்க முடியாத பல்வேறு கொடுமைகளுக்கும் போர்களுக்கும் உட்படுத்த பட்டதை எப்போதும் பார்த்து உள்ளோம். இக்காலகட்டத்திலும் இந்தியா மீது ஒரு நாடு படையெடுக்கும். ஆனால் எப்போதும் போல இறுதி வெற்றி இந்தியாவிற்கு தான் :-)).

இந்தியாவின் கடந்த கால வெற்றி பாதைகள்

  1. சனி திசை 08/1965 வரைnehru
    1. 1950 அனைத்து மக்களுக்குமான சம உரிமை குடியரசு: புதன் புத்தி
    2. 1956ல் மொழி வாரி மாகாணங்கள்: சுக்ர புத்தி
    3. 1964வரை நேருவின் சோஷலிஸ பொருளதார நிர்வாகம்
  2. புதன் திசை: திருமதி. இந்திரா காந்திindira
    1. பசுமை புரட்சி- உணவு உற்பத்தியில் தன்னிறைவு: (1965 புதன் புத்தி)
    2. பங்களாதேஷ் போர் வெற்றி: (16 December 1971 சூரிய புத்தி)
    3. 20 ஆண்டு கால ரஷ்ய கூட்டணி உடன்படிக்கை: (1974 செவ்வாய் புத்தி),
    4. இந்தியாவின் முதல் அணு குண்டு தயாரிப்பு 1974
  3. சுக்ர திசை vajpayee(குரு புத்தி, சனி புத்தி)
    1. திரு.வாஜ்பாய் அரசு(1998-2004)
      1. தகவல் தொழில் நுட்ப பலம்,
      2. தொலைதொடர்பு துறை வளர்ச்சி,
      3. அணுகுண்டு சோதணை வெற்றி May 11, 13, 1998
      4. கார்கில் போர் வெற்றி  June 1999
      5. உள் நாட்டு கட்டமைப்பு தங்க நாற்கர திட்டம்
    2. வானவியல் ஆராய்ச்சிkalam1
      1. செயற்கை கோள்கள்
      2. சந்திராயன் திட்டம்

சோதிட விதி: ஒரு ஜாதகருக்கு திரேகோனாதிபதிகள்(1,5,9) தங்களது திசையில் நல்ல பலன்கள் தருவார்கள் என்பது மிக சரியாக பொருந்துகிறது  அல்லவா? (இந்தியாவிற்கு சுக்ரன் -1, புதன் -5, சனி-9 அதிபதிகள்)

பொற்காலம்

   09/2015 முதல் 04/2022 வரை சந்திர திசை நடைபெறும் போது பொற்காலமாக திகழும். இது வரை நடைபெற்ற வளர்ச்சிகளை மிஞ்சும் வகையில் இக்காலகட்டத்திலிருந்து இந்தியாவிற்கு அருமையான காலம் துவங்கும். இந்தியா எல்லா துறைகளிலும் வேகமான வளர்ச்சி பெறும். 2020லிருந்து உலக வல்லரசுகளில் ஒன்றாக திகழும்.

இத்தொடர் இடுகைகள் உங்களுக்கு கிரகங்கள் எவ்வாறு ஒரு நாட்டின் நிலமையை கூட எவ்வாறு எடுத்துரைக்கும் என விளக்கி இருக்கும் என நம்புகிறேன். சோதிடம் பற்றி மேலும் பல விளக்கங்களுக்கு SP.VR. SUBBIAH போன்ற சோதிட அறிஞர்களின் பதிவுகளை படிப்பதும், அணுகுவதும் நலம்.

வாழ்க பாரதம்!

முடிவுற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எல்லோரும் இரசிக்கும் வகையி்ல் பார்த்து பதமா ;-)