காதலர்களுக்கான பாடல் – உசிரே போகுதே

ஆரோமளே பாடலுக்கு பின் திரு ஏஆர் ரகுமான் இசையில் காதலுக்கு இவ்வாண்டில் தரப்பட்டுள்ள மிகச்சிறந்த பாடல் இது. இப்பாடல் பொருந்தா காதலுக்கு உண்டான கருத்தை அளிக்க வல்லது எனினும் இயல்பான காதலர்களின் களவொழுக்கத்தையும் சிலேடையாக குறிக்க வல்லது.

இப்பாடலின் அருமையை உணர பேஸ் நன்றாக ஒலிக்க இயலவல்ல இயர்போன் மட்டும் உபயோகிக்கவும். அப்போது தான் இப்பாடலில் முதலில் வரும் பௌத்த மணியோசையை ஒத்த மனதை மயக்கும் இசையின் ஜீவனை உணர முடியும். இம்மணியோசையின் ரிதம் தான் பாடல் முழுக்க ஒரு சீர்மையை உண்டு செய்கிறது.

பாடியவர்கள் : கார்த்திக், முகமது இர்ஃபான்

படம் : ராவணன்

இசை : ஏ.ஆர்.ரஹ்மான்

பாடல்: வைரமுத்து

[பாடல் இசை கீழே]

 

 

இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த

என் புத்திக்குள்ள தீப்பொறிய நீ வெதச்ச

அடி தேக்கு மர காடு பெருசுதான்

சின்ன தீக்குச்சி உசரம் சிறுசு தான்

அடி தேக்கு மர காடு பெருசுதான்

சின்ன தீக்குச்சி உசரம் சிறுசு தான்

ஒரு தீக்குச்சி விழுந்து துடிக்குதடி

கருந்தேக்கு மரக்காடு வெடிக்குதடி

 

உசுரே போகுதே உசுரே போகுதே

உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கையில

ஓ.. மாமன் தவிக்குறேன்

மடிப்பிச்சை கேக்குறேன்

மனசத் தாடி என் மணிக்குயிலே

அக்கரைச் சீமையில் நீ இருந்தும்

ஐவிரல் தீண்டிட நினைக்குதடி

அக்கினிப் பழமின்னு தெரிஞ்சிருந்தும்

அடிக்கடி நாக்கு துடிக்குதடி

 

 

உடம்பும் மனசும் தூரம் தூரம்

ஒட்ட நினைக்கேன் ஆகல

மனசு சொல்லும் நல்ல சொல்ல

மாய உடம்பு கேக்கல

தவியா தவிச்சு

உசிர் தடம் கெட்டுத் திரியுதடி

தைலாங்குருவி

என்ன தள்ளி நின்னு சிரிக்குதடி

இந்த மம்முதக் கிறுக்கு தீருமா

அடி மந்திரிச்சு விட்ட கோழி மாறுமா

என் மயக்கத்த தீத்து வச்சு மன்னிச்சிருமா

 

சந்திரனும் சூரியனும்

சுத்தி ஒரு கோட்டில் வருகுதே

சத்தியமும் பத்தியமும்

இப்ப தலை சுத்தி கெடக்குதே

 

[உசுரே போகுதே உசுரே போகுதே…]

 

இந்த உலகத்தில் இது ஒண்ணும் புதுசில்ல

ஒண்ணு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கத்தில

விதி சொல்லி வழி போட்டான் மனுசப்புள்ள

விதிவிலக்கில்லாத விதியுமில்ல

எட்டயிருக்கும் சூரியன் பாத்து

மொட்டு விரிக்குது தாமரை

தொட்டு விடாத தூரம் இருந்தும்

சொந்த பந்தமோ போகல

பாம்பா விழுதா ஒரு பாகுபாடு தெரியலையே

பாம்பா இருந்தும் நெஞ்சு பயப்பட நினைக்கலயே

என் கட்டையும் ஒரு நாள் சாயலாம்

என் கண்ணுல உன் முகம் போகுமா

நான் மண்ணுக்குள்ள

உன் நெனப்பு மனசுக்குள்ள

 

சந்திரனும் சூரியனும்

சுத்தி ஒரு கோட்டில் வருகுதே

சத்தியமும் பத்தியமும்

இப்ப தலை சுத்தி கெடக்குதே

 

[உசுரே போகுதே உசுரே போகுதே…]

[உசுரே போகுதே உசுரே போகுதே…]

8 கருத்துகள்:

  1. நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. @மதுரை சரவணன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  3. //இப்பாடலின் அருமையை உணர பேஸ் நன்றாக ஒலிக்க இயலவல்ல இயர்போன் மட்டும் உபயோகிக்கவும்.//
    'நன்றாக ஒலிக்க இயலவல்ல இயர்போன்' ஒன்னு பார்ர்சல்....!

    பதிலளிநீக்கு
  4. //ஆரோமளே பாடலுக்கு பின்//
    அப்பப்போ ரொமாண்டிக் பாட்ட வெச்சு பதிவு. ம்ம்ம்...!

    பதிலளிநீக்கு
  5. //இப்பாடல் பொருந்தா காதலுக்கு உண்டான கருத்தை அளிக்க வல்லது எனினும் இயல்பான காதலர்களின் களவொழுக்கத்தையும் சிலேடையாக குறிக்க வல்லது.//
    பாட்டு வரி வைரமுத்து அவர்களுடையதுதான். ஆனா காதலர்களின் களவொழுக்கத்துக்கும், நண்பருக்கும் எந்த சம்பதமும் கிடையாது.

    பதிலளிநீக்கு
  6. //மனதை மயக்கும் இசையின் ஜீவனை உணர முடியும்//
    போ போ.. போய்கிட்டே இரு. கூட்டம் போடாதே....!

    பதிலளிநீக்கு
  7. //இம்மணியோசையின் ரிதம்//
    நடக்கட்டும் நடக்கட்டும்...

    பதிலளிநீக்கு
  8. @பாலமுருகன்
    //
    அப்பப்போ ரொமாண்டிக் பாட்ட வெச்சு பதிவு. ம்ம்ம்...!//
    வாழ்க்கையில கிளுகிளுப்பு இல்லைனா நல்லா இருக்காதுங்களே

    //'நன்றாக ஒலிக்க இயலவல்ல இயர்போன்' ஒன்னு பார்ர்சல்....!//
    பதிவு உபயோகமா இருந்துருக்கும்னு நினைக்கிறேன். :)

    //நடக்கட்டும் நடக்கட்டும்...//
    நடக்காதுங்க கேட்கும்

    //நண்பருக்கும் எந்த சம்பதமும் கிடையாது.//
    பல நண்பர்களுக்கு உதவி செய்த விதத்தில் சம்பந்தம் இருக்குங்க. ;)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு

எல்லோரும் இரசிக்கும் வகையி்ல் பார்த்து பதமா ;-)