வாழ்க்கையின் நாடோடி பயணம்

சகீராவின் டென்னீஸ் வீரர் ரபேல் நடாலுடனான ஒரு புகழ்பெற்ற பாடல்

 

பாதையில் மனதுடைத்தேன் நான்

மனசில்லுகளை ஒன்றிணைப்பதில்

வார இறுதிகளை கழித்தேன்

 

 

நண்பர்களும் நினைவுகளும் கடந்து செல்கிறேன்

பறக்க கற்று கொள்ளும் போது

நடப்பதும் சலிப்பானதுதான்

 

 

’வீடு’ திரும்புதல் நினைவில்லையே

சிகரங்களே நோக்கமல்லவா

என்ன கிடைக்குமென யாருக்கு தெரியும் ?

 

எல்லா தவறுகளை நான் ஒப்பு கொள்ள போவதில்லை

நான் முயற்சிப்பேனென நீ பந்தயமிடலாம்

ஆனால் நான் எல்லா நேரமும் வெற்றியடைவதில்லை

 

 

ஏனெனில் நான் ஒரு நாடோடி நீ என் வழிதுணையா?

எனக்கு பொருந்தும் போது

உன்னுடைய ஆடைகளை திருடும் வாய்ப்பிருக்கிறது

நான் ஒப்பந்தமிடுவதேயில்லை ஒரு நாடோடியை போல

நான் பின்னடைவதில்லை ஏனெனில் வாழ்க்கை என்னை ஸ்வீகரித்து விட்டது

 

நீ என்னை விலகினும்

நான் கதற போவதில்லை

மரணிக்கும் வயதில்லை எனக்கு

ஏனெனில் நான் ஒரு நாடோடி

ஏனெனில் நான் ஒரு நாடோடி

 

 

மறைக்க முடிவதில்லை நான் செய்தவைகளை

தழும்புகள் நினைவிக்கின்றன கடந்த பாதையின் தூரத்தை

யாருக்கு தேவையாயிருப்பினும்

காயம்பட விரும்பும் போது மட்டுமே

ஆயுதத்துடன் ஓட விரும்புங்கள்

 

 

ஹாய் என அழைக்கும் போதும்

மறுதலித்தால் மட்டுமே நீ

முட்டாளாக மாட்டாய்

இம்முறையில் தானே வாழ்க்கை செல்கிறது.

மக்கள் அறியாமைகளை பார்த்தே பயப்படுகிறார்கள்

வழிதுணையாக என்னுடன் வா ஆம்

வழிதுணையாக என்னுடன் வா

2 கருத்துகள்:

  1. 'நீங்களும் பயணத்தை பற்றிய இடுகையா' என்று கேட்டதன் அர்த்தம் இப்போது தான் புரிகிறது.
    :)

    பதிலளிநீக்கு
  2. @பாலமுருகன்,

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு

எல்லோரும் இரசிக்கும் வகையி்ல் பார்த்து பதமா ;-)