மூன்றாம் இந்திய விடுதலை போர்

யார் இந்த அன்னா ? anna

அன்னா ஒரு 71 வயது காந்தியவாதி இளைஞர். ஒரு முன்னாள் இராணுவ வீரர். தற்போது இலஞ்ச ஒழிப்பு சட்ட மசோதாவை நிறைவேற்ற கோரி சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கிறார்.

புதிதாக எங்கிருந்து வந்தார் ? இவரது சாதணைகள் என்ன ?

இவர் பல வருடங்களாகவே ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார். 2000ம் வருடம் மஹாராஷ்டிர அரசுக்கு எதிராக போராடி தகவல் அறியும் உரிமை சட்டத்தை மாநில அளவில் எற்படுத்தினார். அது பிறகு இந்தியா முழுவதும் அமுல் படுத்த பட்டது Right to Information Act 2005 (RTI).

மேலும் விவரங்களுக்கு :

http://www.annahazare.org/anticorruption-movement.html

http://en.wikipedia.org/wiki/Anna_Hazare

 

போராட்டத்தின் பின்புலம் என்ன?

அன்னா இலஞ்சத்தை கட்டுபடுத்த கூடிய சட்ட வடிவத்தை இந்தியாவில் அமுல் படுத்த முயற்சிக்கிறார். ஆனால் எப்போதும் போல இலஞ்சவாதிகள் அதை நீர்த்து போக செய்ய, அச்சட்டத்தில் ஓட்டைகளை திணிக்க முயற்சி செய்கின்றனர். 2010ல் சரத்பவார் போன்ற ஊழல் அரசியல்வாதிகள் சேர்ந்து ஒரு முடமான சட்டத்தை வடிவமாக்கினர். அவற்றின் வித்தியாசங்கள் பின்வருமாறு:

அன்னா கேட்பது ”மக்களிடம் இருந்து தாமாகவே புகாரை பதிவு சேய்து, அவற்றை விசாரித்து, தண்டனையும் அளிக்கும், தன்னிச்சையாக செயல்பட கூடிய அமைப்பு.  CBIன் இலஞ்ச ஒழிப்பு பிரிவு அரசியல் வாதிகளின் கைப்பிடியில் இல்லாமல் இவ்வமைப்பின் கீழ் இருக்கும்.

இலஞ்சவாதிகள் தர நிணைப்பது புகாரை ஏற்க முடியாத, விசாரணை செய்ய இயலாத, தன்னிச்சையாக செயல் பட இயலாத ஒரு முடமான அமைப்பு. இவ்வமைப்பு போலிசுக்கு கூட கட்டளை பிறப்பிக்க இயலாது.

 

Draft Lokpal Bill 2010 (ஊழல்வாதிகளின் தரப்பு)

Jan Lokpal Bill (அன்னாவின் தரப்பு)

Lokpal will have no power to initiate suo moto action or receive complaints of corruption from the general public. It can only probe complaints forwarded by LS Speaker or RS Chairman.

Lokpal will have powers to initiate suo moto action or receive complaints of corruption from the general public.

Lokpal will only be an Advisory Body. Its part is only limited to forwarding its report to the "Competent Authority"

Lokpal will be much more than an Advisory Body. It should be granted powers to initiate Prosecution against anyone found guilty.

Lokpal will not have any police powers. It can not register FIRs or proceed with criminal investigations.

Lokpal will have police powers. To say that it will be able to register FIRs.

CBI and Lokpal will have no connection with each other.

Lokpal and anti corruption wing of CBI will be one Independent body.

Punishment for corruption will be minimum 6 months and maximum up-to 7 years.

The punishment should be minimum 7 years and maximum up-to life imprisonment.

 

Lokpal will not be a monopoly for particular area

 

மூன்றாம் இந்திய விடுதலை போர்

கஞ்சிக்கு வழியில்லாதோர் பெரும்பாண்மையாக இருக்கும் நாட்டில் இலட்சம் கோடிகளில் ஊழல் நடைபெறுவது, இலஞ்சத்திற்கும், சுரண்டலுக்கும், அடக்குமுறைக்கும் எதிரான போராட்டங்களே இந்தியாவின் மூன்றாவது சுதந்திர போராக இருக்கப்போவதை உறுதி செய்கிறது.

 

கிரிக்கெட்டில் மட்டுமே தேசபக்தியா ?

மக்களாகிய நாம் அலட்சிய படுத்த இது ஒன்றும் 3 மணி நேர உண்ணாவிரத போராட்ட நாடகம் அல்ல. அவரது போராட்டம் இன்றுடன் 4வது நாளாக தொடர்கிறது. தன்னால் 10 நாட்கள் வரை தாக்கு பிடிக்க முடியும் என அறிவித்துள்ளார்.

அன்னாவின் இச்சட்டம் நடைமுறைபடுத்த பட்டால் இலஞ்சம் பெருமளவு குறையும் என்பது வெளிப்படையான உண்மை. இச்செய்தி அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டியது முக்கியம். குறைந்த பட்சம் ஒரு 71 வயது இளைஞர் நமக்காக தன் உயிரை பணயம் வைத்து போராட்டம் செய்கிறார் என்பதை தெரிந்து வைத்திருப்பதாவது நம் குறைந்த பட்ச கடமை ஆகும்.

கிரிக்கெட்டை பற்றி எங்கும் எப்போதும் விவாதிக்கும் நண்பர்கள், இலஞ்ச ஒழிப்பு மசோதா பற்றியும் அலுவலகம், வீடு முதலான அனைத்து தளங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி தன் தேசபக்தியை வெளிப்படுத்தலாம்.

 

காந்தியை கோட்சேவால் மட்டுமல்ல, நம் அலட்சியத்தாலேயே இழந்து விட நேரிடுகிறது !!

 

GpmIndia Against Corruption

We have designed a Jan Lokpal Bill which has strong measures to bring all corrupt people to book.Our fight is to force politicians to implement this powerful bill as an act in the parliament. Learn More