தியானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தியானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சோதிடம் -1

சோதிடம்

அவரவர் முற்பிறவியில் செய்த நல் தீவினைகளால் அவரவர்க்கு ஏற்படும்  நன்மை, தீமைகளை அறிந்து நன்மையால் மகிழ்ச்சியும், தீமை என்றால் பரிகாரங்கள் செய்தும் பிரயோசனம் அடைதல் பொருட்டு  உருவானதே சோதிடம் ஆகும்

 

சோதிடம் பார்பதன் பலன் என்ன ?

எல்லாமும் ஏற்கனவே நிர்ணயிக்க பட்டு இருந்தால் (விதி) சோதிடம் பார்ப்பதனால் மட்டும் என்ன பயன் ? எனும் கேள்வி எழும் போது மதி (பகுத்தறியும் திறன்) பற்றிய தெளிவை ஔவையார் நமக்கு அளிக்கிறார்.

 

சிவாய நமவென்று சிந்தித்து இருப்பார்க்கு

அபாயம் ஒருநாளும் இல்லை – உபாயம்

இதுவே மதியாகும் அல்லாத எல்லாம்

விதியே மதியாய் விடும்.

- ஔவையார்

”சிவாய நமவென்று சிந்தித்து இருப்பார்க்கு” என்ற பதத்தை “அன்பே சிவம்” எனும் பதத்தின் மூலம் பொருள் விளங்கி கொள்ளலாம். அதாவது மனித வாழ்வின் அடிப்படையான அன்பை மனதில் இருத்தி தூய வழியில் செல்வோர்க்கும், தூய அறிவின் மூலம் தம்மை பாதுகாத்து கொள்வோர்க்கும் விதி என்பதை அவர்களின் மதி(பகுத்தறியும் திறன்) வென்று விடும் என்பதாகும்.

அதாவது இறைவன் மனிதர்களுக்கு அளித்த கொடை மதி (பகுத்தறியும் திறன்) என்பதாகும். இது விதிக்கு கட்டு படாதது. இதை கொண்டு தன்னுடைய மதியை மாற்றி கொள்ள இயலும் என்று தெளிவிக்கிறார். இங்கு பகுத்தறியும் திறன் என்பது அறிவுத்திறனை மட்டும் குறிக்கவில்லை. அதை கொண்டு எது வாழ்க்கைக்கு சரியான பாதை என்று அறிதல் ஆகும்.

சோதிடத்தின் முதல் நூல் ஆசிரியர்கள்

சோதிடம் என்பது பழைய வானவியல் அறிஞர்களால் வானவியல் நிகழ்வுகளால், புவியில் இருக்கும் மனிதர்களுக்கு ஏற்படும் பலன்களை அறிவதற்கு பயன்படுத்த பட்ட முறை ஆகும். இதனை தனி சாஸ்திரமாக அறிவித்தனர். இதன் மூல நூல் ஆசிரியர்களாக பின்வருவோர் குறிக்க படுகின்றனர்.

 

1. சூரியன்

2. பிரமன்

3. சேதவியாசர்

4. பராசரர்

5. அத்திரி

6. உரோமர்

7. வசிட்டர்

8, மரிசி

9. பௌலகர்

10. யவனர்

11. சௌனகர்

12. மநு

13. பிருகு

14. ஜனகர்

15. அங்கீரசர்

16. காசிபர்

17. கார்த்திபர்

18. நாரதன்

 

நூல்கள்

கீழ்காணும் நூல்கள் மூல நூல்களாக அறிய படுகின்றன.

1. ஹோராசாரம்

2. சாராவளி

3. பாராசாரியம்

4. சந்தான தீபிகை

5. பிருகத் ஜாதகம்

6. சர்வார்த்த சிந்தாமணி

7. கேரளம்

8. சம்பு

மொத்தம் 4,50,000 ஸ்லோகங்கள் உள்ளதாக இந்நூல்கள் அறிவிக்கின்றன.

 

சொல்லப்பட்டவை

இந்நூல்களில் பாலாரிஷ்டம், நன்மை & தீமை, இராஜயோகம், நவாம்ச சக்கரம், நட்பு, ஆட்சி, உச்சம், நீசம், பகைகள், திரைக்காண சக்கரம் ஆகியவற்றுடன் மூலத்திரிகோணம் தாமத, சாத்வீக, இராஜத முக்குணவேளை, ஹோரா சக்கரம், மகாதிசை, கால சக்கர திசை, துவாத, சாமிச, திரிமிசாமிச சக்கரங்களையும் இலக்கினம் முதலான பன்னிரண்டு பாவங்கள் சொல்லும் உப பாவங்களின் பலன் போன்றவை பொதுவாக குறிப்பிட பட்டுள்ளன.

 

[தொடரும்]

தாந்திரிகம், காந்தி, காமம்- விளக்கங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

 

தங்களுடைய காந்தியும் காமமும் பற்றிய கட்டுரைகள் படித்தேன். இந்த கட்டுரைகளுக்கு சில நண்பர்களின் எதிர் வினைகள் மிக மன வேதனையை ஏற்படுத்தியது.  தியானம், மனவலிமை, பிரம்மச்சரியம், புலனடக்கம் பற்றிய தவறான பரப்புரைகள் மூலம் விளக்கங்கள் குறைவான  இன்றைய காலகட்டத்தில் உள்ளோம் . அந்நண்பர்கள் புரிந்து கொண்டது இவ்வாறு தான் என எண்ணுகிறேன்.


1. தாந்திரீகம் உடலுறவை ஊக்க படுத்த கூடியது
2. காந்தி தனது பேத்தியுடன் உடலுறவு கொண்டார்
3. பிரேமானந்தாவை போன்ற போலி சாமியார்

 

எனக்கு தெரிந்த வகையில் விளக்க முற்படுகிறேன். உண்மை என்ன என்பதை மேலும் தாங்கள் விளக்க வேண்டுகிறேன்.

இந்நிகழ்ச்சியில் ஈடுபடும் போது காந்தி ஒரு பிரம்மச்சாரி என்பதையும், உடலுறவை முற்றிலும் தவிர்த்தவர் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன். தியானம் & தாந்திரிகம் பற்றிய புரிதல் இல்லாமல் இந்நிகழ்வை எதிர்க்கும் நண்பர்களுக்கு விளக்க வேண்டி ஒரு உதாரணம் தர விரும்புகிறேன்.

 

  • தாந்திரீகத்தில் ஒரு வழி எல்லா பெண்களையும் தாயாக காணுதல். அதன் மூலம் உடலிச்சையை அகற்றுதல். (தாந்திரிகத்தில் மேலும் பல வழிகள் உள்ளன. காந்தி கடைபிடித்தது அவை அல்ல. அவை இங்கே பொருந்தி வரக் கூடியவை அல்ல.)
  • ஒரு மனிதன் தன் தாயின் உடலை முழு நிர்வாணமாக காண நேர்ந்தால் அது உடலிச்சையை தூண்டுமா ? அல்லது தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துமா ? அல்லது பக்தியுடன் தொழ தோன்றுமா ?
  • காந்தியின் தாயார் உயிருடன் இருந்திருந்தால் தன் தாயுடனும் இதே வகையான சோதனையை மேற் கொண்டிருப்பார். உண்மையில் மற்ற பெண்களிலும் தாயையே கண்டார் என்பது தான் இங்கு அடிப்படையே

 

மேலும் மேற்கண்ட நிகழ்வை சரியான வகையில் புரிந்து கொண்டால், 

  1. தாந்திரிகம் எனபது ஒரு கருவி. அது உடலுறவை இயற்கையின் ஒரு பகுதி என தியானத்தின் கருவியாக உபயோக படுத்துகிறது. உடலுறவை வளர்ப்பதும் இல்லை. எதிர்ப்பதும் இல்லை. தாழ்வு மனப்பான்மை கொள்வதும் இல்லை. 
  2. காந்தி ஈடுபடுத்தி கொண்டது அக்னி பரிட்சை கூட இல்லை. நெருப்பாற்றில் நீந்துவது. தனது பேத்தியுடன் இவ்வாறு இருந்தது (ஆடையின்றி தாயின் அரவணைப்பில் இருந்தது போல) உடலுறவிற்காக இல்லை. காந்தி என்பதே ஒரு உடல் இல்லை. உடலை துறந்தவன் என்பதை உணர்த்துவதற்கு ஏற்படுத்திய வழி.
  3. காந்தி ஒரு மகாத்மா 

என்பது யாவரும் ஒப்பு கொள்வர்.

 

தாந்திரிகம் என்பது மேல் நிலை தியானம். அது தியானம் பற்றி அடிப்படை கூட அறியாத பொது மக்களுக்கு அறிவிக்க படுதல் இது போன்ற எதிர்மறையான எண்ணங்களையே ஏற்படுத்தும். எனவே தான் இந்நிகழ்வுகள் பெரும்பான்மை மக்களுக்கு அறிவிக்க படுவதில்லை. தாந்திரிகத்தில் விருப்பப்படுபவர்கள் மட்டுமே அறிந்து கொண்டுள்ளனர்.

காந்தியின் மேல் சுமத்தபடும் அரசியல் குற்றசாட்டு    இதில் ஈடுபடுத்த பட்ட பெண்கள் பாலியல் ரீதியாக சுரண்ட பட்டனர் என்பது. இவ்வகை குற்றசாட்டுகளுக்கு வரலாற்று அறிவு பெற்ற நீங்கள் விளக்குவதே சிறப்பானதாக இருக்கும்.

காந்தியின் ஆசிரமத்தில் பிரம்மச்சரியமும், தாந்திரிகமும் பயிற்றுவிக்க பட்டதா ? இதில் ஈடுபடுத்த பட்ட பெண்கள் தாந்திரிகம் பற்றிய அடிப்படை அறிவு பெற்றவர்களா ?

 

தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்.

நன்றி
சபரிநாதன் அர்த்தநாரி.

பழந்தமிழ் அறிவியல் (http://www.tamilscience.co.cc/)

உங்களை உணர 10 நிமிடங்கள் செலவளிக்க தயாரா - 2 ?

வால் பையனின் தியானம் பற்றிய கேள்விக்கான பதிலும் சிந்தணைகளின் விளக்கமும். மூல இடுகை. http://shanthru.blogspot.com/2009/08/blog-post_11.html

முதல் பகுதி: உங்களை உணர 10 நிமிடங்கள் செலவளிக்க தயாரா ?

”உங்களுக்கு தோன்றிய உணர்வுகளில் எவ்வித கேள்விகள் / சந்தேகம் இருந்தாலும் பகிர்ந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தாராளமாக தெரிய படுத்தலாம்.“ என வெளியிட்டு இருந்தேன்.

பதிவை பார்வையிட்ட 250 பேரில் ஒருவர் கூட தங்கள் அனுபவத்தை வெளியிட முன்வரவில்லை. ஆனால் இது நான் எதிர் பார்த்தது தான் எனவே தான் ”விருப்பமுள்ளவர்கள்” என்று கூறினேன். ஏனெனில் இது உங்கள் ஆழ்மனதிலுருந்த பல சிந்தணைகளை வெளி கொணர்ந்து இருக்கும். அவை பெரும்பாலும் மிக அந்தரங்கமானவையால் வெளியிடுவது சிரமமே.

உங்கள் சிந்தணைகளின் படி நிலைகள்

medi1

நிலை 1:  (முதன் முறையாக செய்பவர்களுக்கு மட்டும்)

இத்தியானம் ஒரு கேலிகூத்தை போல உணர்வீர்கள். இது ஒரு முட்டாள்தனம். 10 நிமிடங்களும் வீண் தான் இதற்கு பதிலாக ஒரு உருப்படியான வேலை செய்யலாம் என மனம் சொல்லும். நீங்கள் உங்களுக்குள் சொல்லி கொள்வீர்கள் ஒரு முறை செய்து தான் பார்க்கலாமே என்று.

நிலை 2: (நிகழ்காலத்தை சிந்தித்தல்)

நீங்கள் தியானத்தில் அமர்வதற்கு முன் 1 மணி நேரத்தில் நடைபெற்ற செயல்கள் உங்கள் ஞாபகத்திற்கு வரும். இது உங்களை பாதித்த செயல், அல்லது அறை, உடை, உடமைகள் பற்றியதாக இருக்கலாம்.

இப்படியாக சிந்தணைகள் பின்னோக்கி போய் கொண்டிருக்கும். அதாவது முன் தினம், கடந்த வாரம் என்று.

நிலை 3: ( அவமானங்கள், அபிலாசைகள், ஏக்கங்கள், திட்டங்கள்)

இப்படியாக கடந்த காலத்தை பற்றிய எண்னங்களுடன் ’நீ’ங்கள் போராடிய பிறகு, உங்கள் மனம், நீங்கள் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத ஒரு சம்பவத்தில் வந்து நிற்கும். இது உங்கள் மன நிலையை பொருத்து இனிமையானதாகவோ, துன்பமான சம்பவமாகவோ இருக்கலாம்.

அந்த சம்பவத்தை  எவ்வாறு நீடிக்க செய்யலாம் (அ) மாற்றி அமைக்கலாம் என மனம் திட்டம் தீட்ட ஆரம்பிக்கும். இந்த வகையான மனிதர்களை உபயோகிக்கலாம்; இந்த அளவு பணம், காலம் செலவு செய்யலாம் என்பது போல.

நிலை 4: (சிந்தணை நின்று போதல்)

medi3

(இந்த நிலை எல்லோரும் ஒரே முயற்சியில் அடைய முடியும் என சொல்ல இயலாது)

இப்போது நீங்கள் சிந்திக்க ஏதுமில்லை என்று ஒரு கால கட்டம் வரும். நீங்கள் மிகுந்த சோர்வாக உணர்வீர்கள். தூக்கம் உங்களை தழுவும். வாழ்வில் என்றும் நீங்கள் காணாத அளவிற்கு சுகம் தருவதாக இருக்கும்.

 

சரி இவற்றை செய்வதால் என்ன பயன் ?

இது தான் உங்களுக்கான கேள்வி என கொள்ளலாம். இத்தியானத்தை 2 / 3 நாட்கள் தொடர்ந்து செய்தவர்கள் தாராளமாக தம் அனுபவத்தை  மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் ;-) இதில் நீங்கள் கவனிக்க வேண்டிய குறிப்பு இது தான். ”உங்களது மனம் சூப்பர் கணினியின் வேகத்திலிருந்து இமயமலையின் ஆழ்ந்த அமைதிக்கு செல்வது”

நண்பர் Jawarlal

“சிந்தனையைத் தொடர்ந்து கொண்டே இருங்கள், நாளா வட்டத்தில் மனம் நிச்சலனமாகி விடும் என்றுதான் எல்லாரும் சொல்கிறார்கள். மணிக் கணக்கானாலும் மனசு ஓயாதிருப்பதுதான் பல வருஷங்களாக என் பிரச்சினை!”

என குறிப்பிட்டு இருந்தார். இது ஒரு பொதுவான பிரச்சிணை தான்.

நான் குறிப்பிட்டு இருந்தது போல உங்களது சிந்தணைகளை தாளில் குறிப்பிடுவது மிக மிக முக்கியமான விடயம். உங்களுக்கு தோன்றும் சிந்தணைகள் ஒரே விடயத்தை பற்றியதெனில் அதை சரி செய்ய / தீர்க்க வேண்டியது அவசியம் என தெரிகிறது.

உங்களை உணர 10 நிமிடங்கள் செலவளிக்க தயாரா ?

 

வால் பையனின் தியானம் பற்றிய கேள்விக்கான பதில். மூல இடுகை. http://shanthru.blogspot.com/2009/08/blog-post_11.html

கேள்வி :

//தியானம் என்பது இப்படி தான் செய்யனும் என்று சொல்வதை தான் ஏற்றுகொள்ள மாட்டேன் என்றேன்!
நான் செய்வதே தியானம் என்ற போதே தெரியவில்லையா!?//

பதில்:

தியானம் என்பது பற்றி விளக்கம் அளிக்க விரும்புகிறேன். தியானம் என்பது மன அறிவியல் ஆகும். இதை நம்மால் நிரூபிக்க முடியும். வால்பையனுக்கு நான் தியானத்தை நடைமுறையிலேயே உணர்த்த முடியும். உங்களை நீங்களே உணர 10 நிமிடங்கள் செலவளிக்க தயாரா ?

ஏனெனில் பிறவியிலுருந்தே கண்களை மூடி கொண்டு இருப்பவருக்கு முழு நிலவின் அருமையை விளக்குவது அவருக்கும், விளக்குபவருக்கும் துன்பம் தரும் செயல் அல்லவா?எளிமையான வழி: கண்களை திறவுங்கள். முழு நிலவு தாமாகவே தெரியும்.

அதுபோலவே தியானம் செய்யுங்கள். அந்நேரத்திற்கும், மற்ற நேரத்திற்குமான வித்தியாசம் தாமாகவே தெரியும்.

ramanar

இரமணர் சொல்கிறார். “ஒருவன் கடவுளை தேட வேண்டிய அவசியமே இல்லை. ‘நான்’ என்பது என்ன என்பது பற்றி அறிந்தாலே போதும். மற்ற ஆன்மீக / உண்மை தேடல்களுக்கான எல்லா பதில்களும் கிடைத்து விடும்”

நான் என்பது என்ன (உடலா / மனமா / உயிரா) ?

[பகுத்தறிவு வாதிகளுக்கு இப்போதே ஒரு கேள்வி உதயமாகி இருக்கும்? மனம், உயிர் என்பது பொய் என கீழ் கண்டவற்றை செய்யுங்கள் உங்களுக்கே உண்மை தெரியும்]

  1. ஒரு அலாரம் டைப் செட்டரில் 10 நிமிடங்கள் அமைப்பை ஏற்படுத்தவும்
  2. நீங்கள் ஒரு தனி அறையில் (அ) தனிமையில் தளர்வாக, வசதியாக (உடம்பை சிரமப்படுத்தாத அளவிற்கு) அமருங்கள் / படுத்து கொள்ளுங்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கும் அறை உங்களுடைய உடல், உடமைகள் பற்றி நீங்கள் பொருட்படுத்தாத அளவிற்கு இருக்க வேண்டும்.
  3. உங்கள் கண்களை மூடுங்கள்.
            இப்போது உங்கள் மனம் மிக மிக வேகமாக சூப்பர் கணினியை போல சிந்தணைகள் செய்யும்.
  4. இப்போது சில சிந்தணைகள் தோன்றும். அவற்றை பின் தொடருங்கள்.
  5. எந்த சிந்தணையையும் தடை செய்யாதீர்கள். (இதுவே மிக மிக முக்கியம்) எவ்வளவு தூய எண்ணங்களானுலும், தீய சிந்தணைகளானுலும் சரியே
  6. இவ்வாறு செய்யும் போது தூக்கம் வரும். தயவு செய்து தூங்க மட்டும் வேண்டாம் ;-)
  7. நடுவில் கண் விழிக்க நேர்ந்தால் கவலை பட வேண்டாம். இவ்வாறு எவ்வளவு நேரம் இருக்க முடிந்தது என்பதை  குறிப்பெடுத்து கொள்ளவும். மறுபடியும் முயற்சி செய்யவும்.
  8. கண்களை மூடிக்கொண்டு இருந்த போது  உங்களுக்கு தோன்றிய எண்ணங்களையும்,
    இத்தியானத்திற்கு பிறகு 15 நிமிடங்களுக்கு நீங்கள் செய்த செயல்களையும் வரிசை கிரமமாக ஒரு பேப்பரில் குறிப்பெடுத்து கொள்ளவும்.

இவ்வளவு தான் முதற் கட்ட தியானம். உங்களுக்கு தோன்றிய உணர்வுகளில் குறைந்த பட்சம் 3 படி நிலைகள் உள்ளன. அதை இத்தியானம் செய்பவர்களுக்கு தாமாகவே தெரியும்.

 

இம்முதற் கட்ட நிலையை செய்தவர்களுக்கு தாமாகவே பல சந்தேகங்கள் தீர்ந்து விடும்.    உங்களுக்கு தோன்றிய உணர்வுகளில் எவ்வித கேள்விகள் / சந்தேகம் இருந்தாலும் பகிர்ந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தாராளமாக தெரிய படுத்தலாம்.

வாழ்த்துக்கள்.