பதிவுலகிற்கு ஒரு வேண்டுகோள்

 

யாரை ஆதரிப்பது / எதிர்ப்பது ?

தமிழ் பதிவுலகில் மனதிற்கு வருத்தமளிக்கும் நிகழ்வு நடைபெற்றதாக அறிகிறேன். எப்போதெல்லாம் பதிவின்/பின்னூட்டத்தின் கருத்துக்களை விட்டுவிட்டு பதிவரின் மேல் சொற்கணைகள் வீசப்படுகிறதோ அப்போதெல்லாம் இது போன்ற மோசமான விளைவுகள் ஏற்படுவதை என் வாசிப்பு அனுபவத்தில் உணர்கிறேன். இரு தனிப்பட்ட நண்பர்களுக்கு இடைப்பட்ட வேறுபாடு இப்போது ஆண்/பெண், மேல்சாதி/கீழ்சாதி பிரச்சிணை போன்ற பல்வேறு வடிவங்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

நான் விரும்பும் ஒரு பதிவர் மனதால் காயமுற்று இருக்கிறார். மற்றொரு நண்பரோ பதிவுலகில் இருந்து தற்காலிகமாகவேனும் வெளியேறுவதாக சொல்லி இருக்கிறார். இது ஒரு loss & loss  நிலைமை. அதாவது இருதரப்பினருமே காயம் பட்டு இருக்கின்றனர்.

நர்சிம் அவருடைய இடுகையை நீக்கி விட்ட நிலையில் இருவரின் மனப்புண்ணையும் நோண்டி நோண்டி பெரிதாக்குவதை விட்டு விட்டு இது அவர்களுக்கு இடையேயான தனிப்பட்ட விடயமாக கருதி அனைவரும் விலகி நிற்பதே நல்லது என தோன்றுகிறது. (மற்றவர்களின் பதிவை படித்தே பிரச்சிணையை பெரும்பாலானோர் தெரிந்து கொண்டதாக உணர்கிறேன்)

 

 

வேண்டுகோள்

 

விளையாட்டாக ஆரம்பிக்கும் விசயங்கள் தான் எப்போதும் மிகமோசமான நிலைமைக்கு கொண்டு செல்வதாக உணர்கிறேன். நமக்கு நகைச்சுவையாக இருக்கும் கருத்து அடுத்தவர் மனதை புண்படுத்தி விடுமா என்பதை எழுதும் முன் சீர் தூக்கி பாருங்கள்.

எப்போதும் கோபத்தில் பதிவு எழுதாதீர்கள். அதிலும் அடுத்தவர்களை பற்றியது எனில் பதிவு செய்து ஒரு நாள் பொறுமையாக இருந்து விசயங்களை மனதில் ஆராய்ந்து மனதிற்கு உகந்ததாக இருந்தால் மட்டும் பதியுங்கள். பின்பு அதை நீக்க வேண்டிய தேவை இருக்காது.

இந்த நிகழ்விலும் நடந்தது அதுவே. எனவே எப்போதும் கருத்துக்களுக்கு மட்டுமே எதிர்வினை செய்யுங்கள். தனிப்பட்ட பதிவர்களின் சொந்த விசயங்களுக்கு அல்ல.

 

எது நம்மை இணைக்கிறது ?

நண்பர்களே உலகமெல்லாம் இருக்கும் நம் உள்ளங்களை இணைக்கும் ஒரே சொல் அது “தமிழ்”. அது நம்மை இணைக்கவே செய்கிறது. நாமே நம்முள் பிரிந்து கொள்கிறோம். அதற்கு அவசியம் இல்லை என்பதே என் கருத்து. ஒருவருக்கொருவரின் முகம் தெரியாமல் மனம் அறியாமல் தமிழன் என்ற ஒரே உணர்வே நம்மை இணைக்கிறது.

நரசிம்மின் இராமாயண விளக்கங்களை விரும்பும் நான், சந்தணமுல்லையின் கம்யூனிச கருத்துக்களையும் விரும்பி படிக்கிறேன். இது இரண்டும் முரணாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இவை இரண்டுமே தமிழிற்கு அழகு சேர்ப்பவையே. இவற்றில் எதை இழந்தாலும் தமிழ் வலைப்பதிவுகளில் ஒரு பகுதியை இழப்பது தான்.

 

[பி.கு. நண்பர்கள் இருவரையும் நான் சந்தித்தது கூட இல்லை. இதில் இருக்கும் கருத்து, நன்மையை எதிர் நோக்கியே எழுதப் பட்டது.]

காதலர்களுக்கான பாடல் – உசிரே போகுதே

ஆரோமளே பாடலுக்கு பின் திரு ஏஆர் ரகுமான் இசையில் காதலுக்கு இவ்வாண்டில் தரப்பட்டுள்ள மிகச்சிறந்த பாடல் இது. இப்பாடல் பொருந்தா காதலுக்கு உண்டான கருத்தை அளிக்க வல்லது எனினும் இயல்பான காதலர்களின் களவொழுக்கத்தையும் சிலேடையாக குறிக்க வல்லது.

இப்பாடலின் அருமையை உணர பேஸ் நன்றாக ஒலிக்க இயலவல்ல இயர்போன் மட்டும் உபயோகிக்கவும். அப்போது தான் இப்பாடலில் முதலில் வரும் பௌத்த மணியோசையை ஒத்த மனதை மயக்கும் இசையின் ஜீவனை உணர முடியும். இம்மணியோசையின் ரிதம் தான் பாடல் முழுக்க ஒரு சீர்மையை உண்டு செய்கிறது.

பாடியவர்கள் : கார்த்திக், முகமது இர்ஃபான்

படம் : ராவணன்

இசை : ஏ.ஆர்.ரஹ்மான்

பாடல்: வைரமுத்து

[பாடல் இசை கீழே]

 

 

இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த

என் புத்திக்குள்ள தீப்பொறிய நீ வெதச்ச

அடி தேக்கு மர காடு பெருசுதான்

சின்ன தீக்குச்சி உசரம் சிறுசு தான்

அடி தேக்கு மர காடு பெருசுதான்

சின்ன தீக்குச்சி உசரம் சிறுசு தான்

ஒரு தீக்குச்சி விழுந்து துடிக்குதடி

கருந்தேக்கு மரக்காடு வெடிக்குதடி

 

உசுரே போகுதே உசுரே போகுதே

உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கையில

ஓ.. மாமன் தவிக்குறேன்

மடிப்பிச்சை கேக்குறேன்

மனசத் தாடி என் மணிக்குயிலே

அக்கரைச் சீமையில் நீ இருந்தும்

ஐவிரல் தீண்டிட நினைக்குதடி

அக்கினிப் பழமின்னு தெரிஞ்சிருந்தும்

அடிக்கடி நாக்கு துடிக்குதடி

 

 

உடம்பும் மனசும் தூரம் தூரம்

ஒட்ட நினைக்கேன் ஆகல

மனசு சொல்லும் நல்ல சொல்ல

மாய உடம்பு கேக்கல

தவியா தவிச்சு

உசிர் தடம் கெட்டுத் திரியுதடி

தைலாங்குருவி

என்ன தள்ளி நின்னு சிரிக்குதடி

இந்த மம்முதக் கிறுக்கு தீருமா

அடி மந்திரிச்சு விட்ட கோழி மாறுமா

என் மயக்கத்த தீத்து வச்சு மன்னிச்சிருமா

 

சந்திரனும் சூரியனும்

சுத்தி ஒரு கோட்டில் வருகுதே

சத்தியமும் பத்தியமும்

இப்ப தலை சுத்தி கெடக்குதே

 

[உசுரே போகுதே உசுரே போகுதே…]

 

இந்த உலகத்தில் இது ஒண்ணும் புதுசில்ல

ஒண்ணு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கத்தில

விதி சொல்லி வழி போட்டான் மனுசப்புள்ள

விதிவிலக்கில்லாத விதியுமில்ல

எட்டயிருக்கும் சூரியன் பாத்து

மொட்டு விரிக்குது தாமரை

தொட்டு விடாத தூரம் இருந்தும்

சொந்த பந்தமோ போகல

பாம்பா விழுதா ஒரு பாகுபாடு தெரியலையே

பாம்பா இருந்தும் நெஞ்சு பயப்பட நினைக்கலயே

என் கட்டையும் ஒரு நாள் சாயலாம்

என் கண்ணுல உன் முகம் போகுமா

நான் மண்ணுக்குள்ள

உன் நெனப்பு மனசுக்குள்ள

 

சந்திரனும் சூரியனும்

சுத்தி ஒரு கோட்டில் வருகுதே

சத்தியமும் பத்தியமும்

இப்ப தலை சுத்தி கெடக்குதே

 

[உசுரே போகுதே உசுரே போகுதே…]

[உசுரே போகுதே உசுரே போகுதே…]

மங்களூர் விபத்து: நாம் (இந்தியர்கள்) என்று துயில் களைவோம் ?

 

இன்று காலை மங்களூரில் விமான விபத்து. பயணம் செய்த (தோராயமாக) 170 பேரில் இதுவரை  காப்பாற்ற பட வாய்ப்பு உள்ளவர்கள் 6 பேர் .

மங்களூர் – வாணூர்தி சாலையில் பறக்கும் அவசர ஊர்திகள், காவல் வாகனங்கள், உறவினர் வாகனங்கள், தொலைகாட்சியில் அடிபட்ட குழந்தையை தூக்கி கொண்டு ஓடும் காவலர் போன்றவை ஒன்று தான் ஞாபகப்படுத்துகிறது மரணபயம்.இறந்தவர்களுக்கு அஞ்சலிகள் உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

g-cvr-100521-indiaCrash-802p.hmedium

இந்த சம்பவம்  ஒரு விபத்து மட்டுமா ?

1. பெங்களூர் விமான நிலையம் மற்ற நிலையங்களை விட குறைவான நீளம் உள்ளதாக கூறப்படுகிறது.

2. போயிங் 737-800 அதிக விபத்து நடக்கும் விமான வகைகளில் ஒன்று. கீழுள்ள பக்கங்களை பாருங்கள் 

Check this out  Boeing 737-600/700/800/900 Crash rate of 0.13 per million one of the highest among many.

Fatal Plane Crash Rates for Selected Airliner Models http://www.airsafe.com/events/models/rate_mod.htm 

Airlines with No Fatal Plane Crashes Since 1970 http://www.airsafe.com/events/nofatals.htm

 

கடும் கண்டனங்கள்

அரசாங்கம் கொடுக்கும் சில இலட்சங்கள் உயிரின் மதிப்பை பெறுமா ? சில லட்சங்கள் கொடுத்தால் இந்த அடிமைகளின் உயிரை வேண்டுமானாலும் எடுக்கலாம் அதுவரை கோடிகளில் சம்பாரிக்கலாம் எனும் அரசாங்கம் & கனவாண்களின் எண்ணம் ஒடுக்க பட வேண்டியது.

இந்த அரசில் உயர்குடி மக்களாக பொற்றபடும் பணக்காரர்களுக்கே இந்த கதி எனில் இந்நாட்டின் அன்றாடம் காய்ச்சிகளை பற்றிய அரசாங்கத்தின் அலட்சியம் அருவெறுக்க தக்கது.

அரசாங்கத்திலுள்ள முட்டாள்களினாலும் சுயநலமிகளாலும் எத்தணை உயிர்களை இழக்க போகிறோம் ?

 

[கடும் மன நெருக்கடியினால் அதிகம் எழுத இயலவில்லை.]

சோதிடம்-4 கிரகங்கள் தேவர்களா ?

பூமிக்கு அருகிலுள்ள & பெரிய கிரகங்கள் வெறும் கண்களாலேயே பார்க்க பட கூடியவை. செவ்வாய், புதன், வியாழன் மற்றும் சனி. கடந்த ஏப்ரல் மாதங்களில் இவை வானில் காட்சி அளித்தன. இவற்றை கூர்மையாக கவனித்தே பலன்கள் கணிக்க பட்டிருக்க வேண்டும்.

மனிதர்களுக்கு சக்திக்கு மீறிய பொருள்கள் “தேவர்” என்ற வார்த்தையாக குறிப்பது பழங்கால மரபு. எனவே தான் தேவன் என்ற சொல் பயன்பட்டிருக்க வேண்டும். அதை கொண்டு விஞ்ஞானத்திற்கு சற்றும் சம்பந்தமில்லாத புராணங்கள் கூறுவது முற்றிலும் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். புராணங்களே சமீப காலத்தில் தோன்றிய கதைகள் தான் என்பது இலக்கிய ரீதியாக ஆராயப்பட்டு வரும் கருத்தாகும்.

 

கிரகணம் போன்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் தேவன் வந்து நேரடியாக சோதிடர்களுக்கு உபதேசம் செய்து விட்டு போனதில்லை. அவை வானியலை ஆராய்வதாலேயெ கண்டு பிடிக்க பட்டன. சோதிடம் கற்று கொள்ளும் ஒவ்வொருவரும், விமர்சிப்பவர்களும் உண்மைகளை அறிய அதன் அடிப்படை அறிவியல் மூலாதாரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் சொல்லும் விடயங்கள் மூட நம்பிக்கைகளை தவிர வேறெதயும் தரப்போவது இல்லை.

இந்திய அறிவியலின் உலக கொடை -http://sabaritamil.blogspot.com/2009/10/blog-post_31.html

 

Watch 5 planets in the sky
Another amazing feet can be seen in the sky for one week. Generally, we see Sun, Moon and stars in the sky with our naked eye. It is very rare to see the other planets. Only with the use of telescope we can see the other planets. But we can have the chance of seeing five planets without the aid of any telescope. Reason for it is, all of them are coming closer to the earth. From 4th April to 10th April, these five planets can be seen every night.

Visible planets:
The planets visible are Venus, Mercury, Mars, Saturn and Jupiter

- http://www.bloggerspoint.com/watch-venus-mercury-mars-saturn-and-jupiter-with-naked-eye-how-to-recognize-the-planets-in-sky/

 

Mars Venus Jupiter stars Pollux Castor together in night sky 20020522 over Norbiton London England 02 BRM.jpg

planets-Mars-Venus-Jupiter-stars-Pollux-Castor-together-in-night-sky-20020522-over-Norbiton-London-England-02-BRM

 

இன்னும் வானியலை அறிவியலுக்காக ஆராய்பவர்கள் இருக்கிறார்கள். சில இணைய தள முகவரிகள் கீழே ஆர்வமுள்ளவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்

    1. http://www.thenightskyguy.com/
    2. http://www.bloggerspoint.com/watch-venus-mercury-mars-saturn-and-jupiter-with-naked-eye-how-to-recognize-the-planets-in-sky/
    3. http://mirror-us-ga1.gallery.hd.org/_c/natural-science/_more2002/_more05/planets-Mars-Venus-Jupiter-stars-Pollux-Castor-together-in-night-sky-20020522-over-Norbiton-London-England-02-BRM.jpg.html

 

ST__LUCIA_T20_CRICK_115662e

 

 

 

உதயம், மறைவு

எந்த ஒரு வானியல் பொருளும், ஒரு கிரகத்தின் வானின் பார்வை பரப்பிலிருந்து தோன்ற ஆரம்பிக்கும் நேரம் உதயம் எனப்படும். வானின் பார்வை பரப்பிலிருந்து மறையும் தருணம் அஸ்தமணம் எனப்படும்.

சூரியோதயம், சந்திரோதயம் மட்டுமள்ள செவ்வாய் உதயம் முதலான பல்வேறு உதயங்கள் ஏற்கனவே வழக்கில் உள்ளது. உதயம் எனும் வார்த்தை புவிக்கு மட்டும் பொருந்தாது மற்ற எல்லா கிரகங்களிலும் கூட ஏற்படும்

 

சூரியோதயம், சந்திரோதயம்,… பூமியோதயம்

Looking back on Earth from Mars from Mars, the planet in the red sky higher, the earth and the moon hanging in the air. October 3, 2007, the Mars orbiter random survey carried by high-resolution HiRISE camera on Mars in the operation, the 142 million kilometers from Mars took place this picture.

- http://fenyu.org/the-best-photos-of-mars-sky/

 

பூமியும், புவியின் சந்திரனும் ! செவ்வாயிலிருந்து ;)

The_best_photos_of_Mars_sky_17 

[தொடரும்]

சோதிடம் – 3 அடிப்படைகள்

சோதிடம் என்பதன் வரலாறு என்ன? (இது இந்தியாவில் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது ?)
சோதிடம் என்பது கிமு 2000 வருடங்களுக்கு முன்பிலிருந்தே உலகின் வெவ்வேறு பகுதிகளில் (இந்தியா, சீனா, கிரேக்கம், தென் அமெரிக்க மாயன்) உருவாகி வந்த தத்துவம்.
சோதிட வளர்ச்சிக்கு அலெக்சாண்டரின் உலக படையெடுப்பு மிக முக்கியமானது. இவர் பாபிலோன், கிரேக்கம், இந்தியா போன்ற பகுதிகள் வரை தன் ஆட்சியை விரிவாக்கியதன் விளைவாக கலாசார பரிவர்தணையும், சோதிடமும் பரவின. பாபிலோனியர்களின் சோதிட முறையானது ஏற்கனவே இந்நாடுகளில் இருந்த முறைகளில் கலந்து சோதிட வளர்ச்சிக்கு வித்திட்டது.
440px-Map-alexander-empire
இது இந்தியாவில் மட்டும்  கடைபிடிக்க படுகிறது
தவறு.  இது பல்வேறு நாடுகளில் பல்வேறு கலாசார முறைகளில், கிரகங்களை கொண்டு பயன்படுத்த பட்டது.
Listed below are some significant traditions of astrology. They include, but are not limited to, the following:
  • Babylonian astrology பாபிலேன்
  • Horoscopic astrology and its specific subsets:
    • Hellenistic astrology 
    • Jyotish or Vedic astrology இந்திய முறை
    • Persian-Arabic astrology பெர்சிய முறை
    • Medieval & Renaissance horoscopic astrology மறுமலர்ச்சி
    • Modern Western astrology with its specific subsets: நவீன சோதிடம் 
      • Modern Tropical and sidereal horoscopic astrology
      • Hamburg School of Astrology
        • Uranian astrology, subset of the Hamburg School
          • Cosmobiology
          • Psychological astrology or astropsychology
  • Chinese astrology சீனம்
  • Kabbalistic astrology 
  • Mesoamerican astrology
    • Nahuatl astrology
    • Maya astrology  மாயா
  • Tibetan astrology திபெத்
  • Celtic astrology

தற்போது கடைபிடிக்க படும் முறைகள் Current traditions

Traditions still practiced in modern times include:

சோதிடம் என்பது பழமை மட்டும் தான், வளர்ச்சி நின்று விட்டது.
தவறு. சோதிடம் வானவியலில் கண்டுபிடிக்கபடும் புது விடயங்களை கொண்டு அதன் விளைவுகளை புள்ளிவிவர அடிப்படையில் கணித்து கொண்டு உள்ளது.

புதிய சோதிட முறைகள் Recent Western developments (நன்றி விகிபேடியா)

Traditions which have arisen relatively recently in the West:


சூரியனும், சந்திரனும் கிரகமா ?
சோதிடத்தில் குறிப்பிடபடும் கிரகம் என்ற சொல்லின் அர்த்தமும், தற்போது அறிவியலில் பயன்படுத்தபடும் கிரகம் (planet) என்பதும் வேறு வேறானவை.
1. பழங்காலத்தில் தமிழில் கிரகம் எனும் வார்த்தை ஜீவர்களை பாதிக்கும் வானியல் பொருட்கள்/நிகழ்வுகளை குறிக்கும் பொருளில் பயன்பட்டு வந்தது. எனவே தான் சூரியன், சந்திரன் அனைத்தும் கிரகம் என்றனர்.
2. ஆங்கிலேயர்களின் வருகைக்கு பின் அறிவியலில் planet எனும் பொருட்களை என்பதை தமிழ் படுத்த முயன்ற போது புதிய வார்த்தை கண்டு பிடிக்காமல் ஏற்கனவே இருந்த கிரகம் என்ற வார்த்தையை பயன்படுத்தினர்.
மேலும் உதாரணங்கள் http://sabaritamil.blogspot.com/2009/10/blog-post_30.html

கிரகம் என்ற வார்த்தையின் அறிவியல் விளக்கங்களும் மாறிக் கொண்டே இருக்கின்றன. நவீன விளக்கம்
Technically, there has never been a scientific definition of the term Planet before 2006. When the Greeks observed the sky thousands of years ago, they discovered objects that acted differently then stars. These points of light seemed to wander around the sky throughout the year. We get the term "planet" from the Greek word "Planetes" - meaning wanderer. - http://missionscience.nasa.gov/nasascience/what_is_a_planet.html
 wiap_maincontent_img03
ஒரு துறை தன் விதிகளை சரி செய்து கொள்வது பித்தலாட்டம் என்பது முட்டாள்தனம். அறிவியல் ஆயிரக்கணக்கான முறை இத்தவறை செய்துள்ளது ;)


சூரியன் எனும் நட்சத்திரம் ஏன் சிறப்பு வாய்ந்தது?
நாம் ஏற்கனவே சோதிடம் என்பது புவிக்கு மற்ற பொருள்களால் ஏற்படும் விளைவுகளை கணிக்க பயன்படுவது என பார்த்தோம். தாவரங்களின் ஸ்டார்ச் சேகரிப்பு பற்றி படித்துள்ளோம் அல்லவா ? அதாவது உயிரனங்களின் வாழ்க்கைக்கு சூரியனின் சக்தியானது இன்றியமையாதது. மற்ற நட்சத்திரங்கலால் இது நம் பூமியில் நிகழுமா ? சூரியனும் மற்ற நட்சத்திரங்களும் பூமிக்கு தரும் பலன்கள் ஒன்றா ? சூரியன் இல்லாமல் மற்ற நட்சத்திரங்களால் புவியில் தாவரங்களும் மற்ற உயிரினங்களும் உயிர் வாழ முடியுமா ? புவிக்கு தரும் பலன்களை வைத்து தான் சொற்களின் வித்தியாசம் இருக்கிறது.
சூரியன் என்பதும் மற்ற நட்சத்திரங்களும் பூமிக்கு ஏற்படுத்தும் விளைவுகள் வேறு வேறு என்பதை ஒப்பு கொள்கிறீர்கள் அல்லவா? எனவே தான் சிறப்பு பலன்கள் கூறப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் பிறந்த நாயும், மனிதனும் ஒண்ணா? இல்லையென்றால் ஏன் ?
கிரங்களால் மனிதனும் நாயும் பிறப்பதில்லை. மனிதனும் நாயும் பிறக்கும் போது கிரக நிலைகள் ஒரே மாதிரியாக இருக்கலாம். கிரக பலன்கள் உயிரினங்களை பொருத்து மாறுபடும்.

ஆணுக்கும், பெண்ணுக்கும், திருநங்கைக்கும் கூட பலன்கள் வேறுபடுமா?
ஆண், பெண் இருவருக்கும் உடல் உறுப்புகள் ஒரே மாதிரியாகவா இருக்கிறது ? பெண்களுக்கு உள்ள சிறப்பு உருப்புக்களை & தன்மைகளை பொருத்து பலன்கள் மாறும்.

1. கர்ப்ப பை.
2. மாதவிலக்கு.
3. மெனோபாஸ்.
4. தாய்மை அடையும் நிலை.
5. பாலூட்டும் நிலை.

திருநங்கைகளாக மாறுபவர்களை பற்றிய குறிப்புகளும் சோதிடத்தில் உண்டு. ஹார்மோன்களில் ஏற்படும் உடலியல் ரீதியான மாற்றம் ஜீன்களை பொறுத்தது எனில் பிறக்கும் போதே கண்டு பிடிக்க முடியுமா முடியாதா ? (இது சோதிடத்திற்கு நேரடியாக சம்பந்தமில்லை எனினும் பிரச்சிணையின் வேறு கோணத்தை உணர்த்த பயன் படுத்தி கொண்டேன்)
இயற்கை பேரழிவு போன்ற நிகழ்வில் (சுனாமி..)  இறந்தவர்கள் அனைவருக்கும் ஒரே ஜாதகமா ?
புவியில் ஏற்படும் நிகழ்வு அனைவரையும் பாதிக்கும். அதன் பிறகு நாடு, மாநிலம் இவை போன்று. இவற்றின் பலன் செயல்படும் போது தனிப்பட்ட மனிதர்களின் சாதகம் பயனற்றவை ஆகிவிடும்.
பூமிக்கு ஏற்படும் பலன், நாட்டிற்கு ஏற்படும் பலன் முதலியவை ஆராய்ச்சி செய்யபடுகிறது. பிறகு தனிப்பட்ட மனிதர்களுக்கான பலன்கள் பார்க்க பட வேண்டும்.  உதா: சுனாமி, இந்தியா பற்றிய இடுகைகளை பார்த்து விடுங்கள்.
[தொடரும்]

சோதிடம் – 2 அடிப்படைகள்

சோதிடம் ஒரு வானவியல் பிரிவில் ஒன்றா ?

வானவியல் என்பது வானில் பல்வேறு பொருள்கள் இருக்கும் பௌதீகமான தன்மைகளை கண்டறிய்வும், குறிப்பிடவும் பயன்படுகிறது. சோதிடம் என்பது வானவியல் மாற்றங்கள் எவ்வாறு ஜீவராசிகளை அல்லது கிரகங்களை பாதிக்கின்றன என்பது பற்றியது. சோதிடம் கணக்கில் எடுத்து கொள்வது கிரக நிலைகளால் ஏற்படும் பலன்கள் மட்டும் தான்.  இங்கே தான் வானியலும் சோதிடமும் ஒரே விசயத்தை அணுகும் முறையில் வேறு படுகின்றன.

Astronomy deals with the study of the location, motion, and nature of objects in space. Astrology is the interpretation of the influence of the heavenly bodies on human affairs.

சோதிடம் என்பதும் வானியல் என்பதும் வேறு வேறு. சோதிடம் என்பது வானியலின் மாற்று அல்ல. உண்மையில் சோதிடம் வானியலை அடிப்படையாக கொண்டது.  வானவியல் இல்லாமல் சோதிடம் இல்லை. 

வானவியலில் ஏற்பட்டுள்ள புதிய கண்டுபிடிப்புகளை சோதிடம் தன்னகத்தில் ஏற்று கொண்டு வருகிறது. சோதிட விதிகளை ஏற்படுத்திய முன்னோர்கள் வானியலில் அனைத்தும் அறிந்தவர்கள் அல்லர். அவர்கள் அறிந்தவற்றில் உள்ள சரியானவற்றை மட்டும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அவ்விதிகளை மெருகேற்றி கொள்ள வேண்டும். இப்போதைய சோதிடத்தில் யுரெனெஸ் நெப்டியூன் கொண்டும் பலன்கள் கூறப்படுகின்றன.

 

சோதிடத்தின் அறிவியல் பூர்வமான விளக்கம் என்ன ?

சோதிடத்தின் செயல்பாட்டை கிளஸ்டர் அனலைசிஸ் (Cluster analysis) முறைமை மூலம் விளக்கலாம். அதாவது மனிதர்கள் பிறந்த காலகட்டத்தில் இருந்த கிரக நிலைகளை கொண்டு அவர்களுக்கு ஏற்படும் பலன்களை பதிவு செய்வது(observation).  பிறகு ஸ்டேட்டிஸ்டிக்ஸ் புள்ளி விவர அடிப்படையில் மனிதர்களின் கிரக நிலைகள் மற்றும் அதன் மூலம் அவர்களுக்கு ஏற்பட்ட பலன்களை ஒப்பீடு செய்து (analysis) கிரகங்களின் பலன்கள் நிர்ணயம் செய்யபடுகிறது. இப்பலன்கள் மற்றவர்களுக்கு நிகழ கூடிய வாய்ப்பு சதவிகிதம் (output) தரப்படுகிறது.

சிலர் சோதிடம் முடிவான முடிவுகளை தருவதில்லை என குறைபடுகின்றனர். சிலர் சோதிடர் சொல்வதையே முடிவு எனவும் கருதுகின்றனர். நன்றாக கற்றறிந்த சோதிடர் எதையும் முடிவாக சொல்ல கூடாது என்பது தான் சோதிடத்தின் அடிப்படையே. நிகழ்தகவு காசை சுண்டிவிட்டால் நிகழ கூடிய வாப்பு சதவிகிதம் என்பதை  சரியான பூவா தலையா கணிதத்தை தருவதில்லை 50 சதவிகிதம் தலை 50 சதவிகிதம் பூ விழுவதற்கான வாய்ப்பு என்று சொல்கிறதே என்பது போன்றது. சோதிடம் என்பதும் ஒரு வகையான ப்ரோபபிளிட்டி தான் தருகிறது.

இப்போது ஜீன்களை வைத்து மனிதர்களின் உடல் ரீதியான எதிர்கால பலன்களை கூற முடியும் என அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். எதிர்கால உடல் குறைபாடுகளை, நோய்களை கண்டறிய முடியும் என அறிவிக்கிறார்கள்.
இதுவும் ஒரு வகையான சோதிடம் தான். அவர்களும் ஒரு சில இடங்களில் probability தான் உபயோகிக்கிறார்கள். (நோய் வருவதற்கான வாய்ப்பு சதவிகிதம்). ஏனெனில் மனிதர்களின் வாழ்க்கை முறைகளும் நோய் வருவதற்கான வாய்ப்பை தீர்மானிக்கிறது.

 

 

சோதிடம் புவியை மையமாக கொண்டு கிரகங்களின் பாகைகளை கணக்கிடுவது ஏன் ?


சோதிடம் உயிரினங்கள் குறித்து சொல்ல படுவது. மனிதர்கள் இருப்பது பூமியில். எனவே தான் பூமியை சுற்றி பிற கிரகங்கள் உள்ள பாகையை வைத்து சோதிடம் சொல்கிறார்கள். சோதிடம் கணக்கிடப்படும் உயிரினம் எந்த கிரகத்தில் இருக்கிறதோ அந்த கிரகத்தை மையமாக கொண்டு பலன்கள் சொல்ல வேண்டும். உதாரணமாக செவ்வாயில் இருக்கும் மனிதனுக்கு செவ்வாயை வைத்து சோதிடம் சொல்ல வேண்டும்.

ஏன் இன்னும் சூரிய மையக் கொள்கைக்கே வரவில்லை ?

சூரிய மையக் கொள்கைக்கும் சோதிடத்திற்கும் சம்பந்தப் படுத்தி குழப்பி கொள்ள தேவையில்லை. புவிக்கு ஏற்படும் மாற்றங்களை காண புவியை பொருத்து மற்ற கிரகங்களின் நிலையை காண வேண்டும் என்பது எளிதில் புரிந்து கொள்ள கூடியதே. சூரிய மைய கோட்பாடு சமீபமாக கண்டுபிடிக்க பட்டது & ஏற்றுக் கொள்ள பட்டு விட்டது.

 

27 நட்சத்திரம் என்பது பொய் தானே ?

வானில் இருக்கும் நட்சத்திரங்களை எண்ணுவது என்பது முட்டாள் தனமானது என்பதும் பெரியோர் வாக்கு தானே ? பிறகு எப்படி 27 நட்சத்திரங்கள் என்றனர் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

அப்போதைய நட்சத்திரம் எனும் சொல்லுக்கு இருந்த விஞ்ஞான அடிப்படை என்ன ?

அப்போதைய நட்சத்திரம் எனும் சொல்லே புவியின் வெவ்வேறு பாகைகளில் உள்ள நட்சத்திர தொகுதிகளை தான் குறிக்கிறது. தனித்த நட்சத்திரங்களை அல்ல.

 

 zodiac-sky-200X200zodiac-signs-1

 

சோதிடத்தில் நட்சத்திரம் என்பது 360டிகிரியை 27ஆக பிரித்து அவற்றை சுட்டும் இடங்களுக்கான பெயர்கள் அவ்வளவுதான்.
டிகிரி என்னும் முறை கண்டு பிடிக்க படாத அக்காலத்தில் வெவ்வேரு இடங்களில் இருந்த நட்சத்திர தொகுதிகளை வைத்து 360 டிகிரியை வகைப்படுத்தினர் அவ்வளவு தான். அவை நாம் வானத்தில் காணும் நட்சத்திரங்களில் 27 மட்டுமே அல்ல. நட்சத்திர தொகுதிகள் வெவ்வேறு பகுதியில் இருக்கும் இடத்தை வைத்து மற்ற கிரகங்கள் வானில் இருக்கும் பாகையை அடையாளம் கண்டு கொண்டனர்.

logo1

நட்சத்திர பாதம் எனும் விளக்கத்தை அறிந்தால் ”சோதிட நட்சத்திரம்” தற்போது நடைமுறையிலான “நட்சத்திரம்” அல்ல டிகிரியை குறிக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு சிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. நட்சத்திர பகுதிக்கு பாதங்கள் என்று பெயர்.

360 டிகிரி = 27 நட்சத்திரங்கள்  = 108 பாதங்கள் (27 *4)

சோதிடத்தில்(பாகை) டிகிரியையும் சிறு பகுதிகளாக கணக்கிடும் நுண்கணிதம் இருக்கிறது.  இச்சிறுபகுதி கலை எனப்படும்.

1 பாகை = 60 கலை

இதன் மூலம்
1 நட்சத்திர பாதம் = 3 பாகை 20 கலை
30 டிகிரி (1 இராசி) = 9 பாதங்கள என அறியலாம்.

 

CircularAstrologicalPosters-2

 

http://en.wikipedia.org/wiki/Zodiac

http://www.ehow.com/how_2136263_zodiac-sky.html

[தொடரும்]

சோதிடம் -1

சோதிடம்

அவரவர் முற்பிறவியில் செய்த நல் தீவினைகளால் அவரவர்க்கு ஏற்படும்  நன்மை, தீமைகளை அறிந்து நன்மையால் மகிழ்ச்சியும், தீமை என்றால் பரிகாரங்கள் செய்தும் பிரயோசனம் அடைதல் பொருட்டு  உருவானதே சோதிடம் ஆகும்

 

சோதிடம் பார்பதன் பலன் என்ன ?

எல்லாமும் ஏற்கனவே நிர்ணயிக்க பட்டு இருந்தால் (விதி) சோதிடம் பார்ப்பதனால் மட்டும் என்ன பயன் ? எனும் கேள்வி எழும் போது மதி (பகுத்தறியும் திறன்) பற்றிய தெளிவை ஔவையார் நமக்கு அளிக்கிறார்.

 

சிவாய நமவென்று சிந்தித்து இருப்பார்க்கு

அபாயம் ஒருநாளும் இல்லை – உபாயம்

இதுவே மதியாகும் அல்லாத எல்லாம்

விதியே மதியாய் விடும்.

- ஔவையார்

”சிவாய நமவென்று சிந்தித்து இருப்பார்க்கு” என்ற பதத்தை “அன்பே சிவம்” எனும் பதத்தின் மூலம் பொருள் விளங்கி கொள்ளலாம். அதாவது மனித வாழ்வின் அடிப்படையான அன்பை மனதில் இருத்தி தூய வழியில் செல்வோர்க்கும், தூய அறிவின் மூலம் தம்மை பாதுகாத்து கொள்வோர்க்கும் விதி என்பதை அவர்களின் மதி(பகுத்தறியும் திறன்) வென்று விடும் என்பதாகும்.

அதாவது இறைவன் மனிதர்களுக்கு அளித்த கொடை மதி (பகுத்தறியும் திறன்) என்பதாகும். இது விதிக்கு கட்டு படாதது. இதை கொண்டு தன்னுடைய மதியை மாற்றி கொள்ள இயலும் என்று தெளிவிக்கிறார். இங்கு பகுத்தறியும் திறன் என்பது அறிவுத்திறனை மட்டும் குறிக்கவில்லை. அதை கொண்டு எது வாழ்க்கைக்கு சரியான பாதை என்று அறிதல் ஆகும்.

சோதிடத்தின் முதல் நூல் ஆசிரியர்கள்

சோதிடம் என்பது பழைய வானவியல் அறிஞர்களால் வானவியல் நிகழ்வுகளால், புவியில் இருக்கும் மனிதர்களுக்கு ஏற்படும் பலன்களை அறிவதற்கு பயன்படுத்த பட்ட முறை ஆகும். இதனை தனி சாஸ்திரமாக அறிவித்தனர். இதன் மூல நூல் ஆசிரியர்களாக பின்வருவோர் குறிக்க படுகின்றனர்.

 

1. சூரியன்

2. பிரமன்

3. சேதவியாசர்

4. பராசரர்

5. அத்திரி

6. உரோமர்

7. வசிட்டர்

8, மரிசி

9. பௌலகர்

10. யவனர்

11. சௌனகர்

12. மநு

13. பிருகு

14. ஜனகர்

15. அங்கீரசர்

16. காசிபர்

17. கார்த்திபர்

18. நாரதன்

 

நூல்கள்

கீழ்காணும் நூல்கள் மூல நூல்களாக அறிய படுகின்றன.

1. ஹோராசாரம்

2. சாராவளி

3. பாராசாரியம்

4. சந்தான தீபிகை

5. பிருகத் ஜாதகம்

6. சர்வார்த்த சிந்தாமணி

7. கேரளம்

8. சம்பு

மொத்தம் 4,50,000 ஸ்லோகங்கள் உள்ளதாக இந்நூல்கள் அறிவிக்கின்றன.

 

சொல்லப்பட்டவை

இந்நூல்களில் பாலாரிஷ்டம், நன்மை & தீமை, இராஜயோகம், நவாம்ச சக்கரம், நட்பு, ஆட்சி, உச்சம், நீசம், பகைகள், திரைக்காண சக்கரம் ஆகியவற்றுடன் மூலத்திரிகோணம் தாமத, சாத்வீக, இராஜத முக்குணவேளை, ஹோரா சக்கரம், மகாதிசை, கால சக்கர திசை, துவாத, சாமிச, திரிமிசாமிச சக்கரங்களையும் இலக்கினம் முதலான பன்னிரண்டு பாவங்கள் சொல்லும் உப பாவங்களின் பலன் போன்றவை பொதுவாக குறிப்பிட பட்டுள்ளன.

 

[தொடரும்]

சோதிடத்தில் கிரகங்களின் தன்மைகள் – கேது

கிரகங்கள் மனிதர்களுக்கு தரும் தன்மைகளாகவும், மனிதர்கள் கடைபிடிக்க வேண்டிய பலன்களாகவும் வெவ்வேறு சோதிட புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விசயங்களை சோதிடம் கற்று கொள்பவர்கள் ஒரே இடத்தில் அறிந்து பயனடையும் பொருட்டு இங்கு பதிவேற்றம் செய்திருக்கிறேன்.

இப்பகுதியில் கேது பற்றி பார்ப்போம்.

rahuketu_thumb4

வ.எண்

கிரகங்களின் தன்மைகள்

கேது

தன்மைகள் - 1

01

வேறு பெயர்கள்

செம்பாம்பு, சாயாகிரகம்

02

எண் கணிதம்

7

03

உபகிரகங்கள்

தூமகேது

04

நட்சத்திரங்கள்

மகம், மூலம், அசுவினி

05

குணங்கள்

பூர்வ பஷம் – பாபி

அமர பஷம் – சுபன்

தன்மைகள் - 2

06

அதிதேவதைகள்

விநாயகர், இந்திரன், சித்ரகுப்தன்

07

ஷேத்திரம்

காளாஸ்திரி

08

பூஜித்தல்

செந்தூரம், செம்மசம்

09

கிரக ப்ரீதி

கணபதி தோத்ரம், துர்க்கா தோத்ரம்

தன்மைகள் - 3

10

ஒரு ராசியில் சஞ்சார கால அளவு

1½ ஆண்டுகள்

11

சுற்றும் முறை (இராசி சக்கரத்தில்)

எதிர்

12

கிரக திசையின் கால அளவு

7 வருடம்

13

திசையில்

பலன் தரும் காலம்

பிற்பகுதி

14

அடுத்த ராசி பார்வை (கோசாரம்)

3 மாதம்

15

இராசி சக்கரத்தில் பார்வை

3,7,11

10 இடம் கால், 5,9 இடம் அரை, 4,8 இடம் முக்கால், 7 இடம் முழு பார்வையும் பார்க்கும்.

தன்மைகள் - 4

16

நட்பு கிரகங்கள்

சனி, சுக்ரன்

17

சம கிரகங்கள்

புதன், குரு

18

பகை கிரகங்கள்

சூரியன்,சந்திரன்,செவ்வாய்

தன்மைகள் - 5

19

உச்ச வீடு

விருச்சிகம்

20

அதி உச்ச பாகங்கள்

---

21

மூலத்திரிகோண வீடு, பாகை

விருச்சிகம்

22

நட்பு வீடுகள்

மிதுனம், மீனம், கும்பம் தனுசு,மகரம்,கன்னி,துலாம்

23

ஆட்சி வீடு

மீனம், விருச்சிகம்

24

பகை வீடுகள்

மேஷம், கும்பம், .கடகம், சிம்மம்

25

நீச வீடு

ரிஷபம்

26

அதி நீச பாகங்கள்

---

தன்மைகள் - 6

27

இலக்கினத்திற்கு மறைவு இடங்கள்

8,12

28

திக்பலம் (கேந்திரம்)

7

29

அஸ்தங்கம்

---

30

கிரகணங்கள்

---

31

கண்ட வலிமை

பாட்டில்

தன்மைகள் - 7

32

பறவை

இராஜாளி

33

விலங்கு

ஆண் குதிரை

34

நாற்கால் பிராணி

---

35

வாகனம்

சிங்கம்

36

தானியங்கள்

மொச்சை, கொள்ளு

37

தாவரம்

---

38

மர வகை

புதர்

39

சமித்துகள் (மரம், செடி)

தர்பை புல், தர்பை

40

மலர்கள்

செவ்வல்லி,வெண்தாமரை

தன்மைகள் - 8

41

உலோகங்கள்

துருக்கல்(உலோகமில்லை)

42

இரத்தினங்கள்

வைடூரியம்

43

பொருள்கள்

---

44

நிறங்கள்

புகைசாம்பல், சிவப்பு, பலகலர்

45

வஸ்திரம்

பலவித புள்ளி, விசித்திர முள்ள துணி

46

சுவைகள்

உறைப்பு, புளிப்பு

தன்மைகள் - 9

47

தேசம்

மலைபிரதேசம்

48

பாஷைகள்

மேலை நாட்டு பாஷைகள்

49

ருது

---

50

அயனாதி காலங்கள்

---

51

திக்குகளில்

வடமேற்கு

52

அதிபதி திசைகள்

வடமேற்கு

53

நன்மை செய்யும் திசை

---

54

பஞ்சபூதத்தில்

ஆகாயம், நெருப்பு

55

வடிவம்

நீண்ட வட்டம்

56

ஆசனம்

முச்சில்

57

உடல் உறுப்பில் அவயங்கள்

கை, தோள்

58

நாடி

பித்தம்

59

பிணி

நகச்சுற்று,பித்தம்,உஷ்ணம்

60

உறவு முறை (நாடி முறை)

தாய்வழி பாட்டன்

தன்மைகள் - 10

61

கிரக பொறுப்புகள்

ஏவலாள்

62

கிரக வயது

---

63

தத்துவம் (கிரக லிங்கம்)

அலி (ஆண்)

64

கிரக ஓட்டம்

சரம்

65

உயரம்

உயரம்

66

குணம்

தமோ (குரூரம்)

67

பிரிவு

கிருஸ்தவர், தொழிலாளர், மேலை நாட்டவர்

 

[தொடரும்]

 

[பிகு: சில சொற்களும் கருத்துக்களும் இக்காலத்திற்கு ஏற்ப மாறுதல் செய்யப்பட வேண்டும் எனினும், பழைய நூல்களின் அடிப்படையில் தகவல்களை மாற்றமில்லாமல் அளித்து இருக்கிறேன்.]

சோதிடத்தில் கிரகங்களின் தன்மைகள் – இராகு

கிரகங்கள் மனிதர்களுக்கு தரும் தன்மைகளாகவும், மனிதர்கள் கடைபிடிக்க வேண்டிய பலன்களாகவும் வெவ்வேறு சோதிட புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விசயங்களை சோதிடம் கற்று கொள்பவர்கள் ஒரே இடத்தில் அறிந்து பயனடையும் பொருட்டு இங்கு பதிவேற்றம் செய்திருக்கிறேன்.

இப்பகுதியில் இராகு பற்றி பார்ப்போம்.

rahuketu

 

வ.எண்

கிரகங்களின் தன்மைகள்

இராகு

தன்மைகள் - 1

01

வேறு பெயர்கள்

கருநாகம், சாயாகிரகம்

02

எண் கணிதம்

4

03

உபகிரகங்கள்

வியாதீபாதன்

04

நட்சத்திரங்கள்

திருவாதிரை,சுவாதி,சதயம்

05

குணங்கள்

பூர்வ பஷம் – பாபி

அமர பஷம் – சுபன்

தன்மைகள் - 2

06

அதிதேவதைகள்

காளி, துர்க்கை

07

ஷேத்திரம்

திருநாகேஸ்வரம்

08

பூஜித்தல்

கடுகு

09

கிரக ப்ரீதி

துர்கா பூஜை

தன்மைகள் - 3

10

ஒரு ராசியில் சஞ்சார கால அளவு

1½ ஆண்டுகள்

11

சுற்றும் முறை (இராசி சக்கரத்தில்)

எதிர்

12

கிரக திசையின் கால அளவு

18 வருடம்

13

திசையில்

பலன் தரும் காலம்

பிற்பகுதி

14

அடுத்த ராசி பார்வை (கோசாரம்)

3 மாதம்

15

இராசி சக்கரத்தில் பார்வை

7 முழு பார்வை,3,7,11 கீழ்

3, 10 இடம் கால், 5,9 இடம் அரை, 4,8 இடம் முக்கால், 7 இடம் முழு பார்வையும் பார்க்கும்.

தன்மைகள் - 4

16

நட்பு கிரகங்கள்

சனி, சுக்ரன்

17

சம கிரகங்கள்

புதன், குரு

18

பகை கிரகங்கள்

சூரியன்,சந்திரன்,செவ்வாய்

தன்மைகள் - 5

19

உச்ச வீடு

ரிஷபம்

20

அதி உச்ச பாகங்கள்

----

21

மூலத்திரிகோண வீடு, பாகை

ரிஷபம்

22

நட்பு வீடுகள்

மிதுனம், மீனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம்

23

ஆட்சி வீடு

கன்னி, கும்பம்

24

பகை வீடுகள்

மேஷம், கும்பம், கடகம், சிம்மம்

25

நீச வீடு

விருச்சிகம்

26

அதி நீச பாகங்கள்

----

தன்மைகள் - 6

27

இலக்கினத்திற்கு மறைவு இடங்கள்

8,12

28

திக்பலம் (கேந்திரம்)

7

29

அஸ்தங்கம்

---

30

கிரகணங்கள்

---

31

கண்ட வலிமை

பாட்டில்

தன்மைகள் - 7

32

பறவை

அன்றில்

33

விலங்கு

பெண் நாய்

34

நாற்கால் பிராணி

----

35

வாகனம்

ஆடு

36

தானியங்கள்

கொள்ளு, உளுந்து

37

தாவரம்

---

38

மர வகை

புதர்

39

சமித்துகள் (மரம், செடி)

அருகு மரம், அருகம்புல்

40

மலர்கள்

மந்தாரை, செவ்வல்லி

தன்மைகள் - 8

41

உலோகங்கள்

கருங்கல்(உலோகமில்லை)

42

இரத்தினங்கள்

கோமேதகம்

43

பொருள்கள்

---

44

நிறங்கள்

கருமை

45

வஸ்திரம்

கருப்புடன் சித்திரங்கள்

46

சுவைகள்

கைப்பு, புளிப்பு

தன்மைகள் - 9

47

தேசம்

அம்பரம்

48

பாஷைகள்

துலுக்கு, அந்நியபாஷை

49

ருது

---

50

அயனாதி காலங்கள்

---

51

திக்குகளில்

தென்மேற்கு

52

அதிபதி திசைகள்

தென்மேற்கு

53

நன்மை செய்யும் திசை

---

54

பஞ்சபூதத்தில்

வானம், ஆகாயம், காற்று, நெருப்பு

55

வடிவம்

நீண்ட வட்டம்

56

ஆசனம்

கொடி

57

உடல் உறுப்பில் அவயங்கள்

தொடை,பாதம்,கனுக்கால்

58

நாடி

பித்தம்

59

பிணி

தலைவழுக்கை, பித்தம் (வாயுக்கோளாறு)

60

உறவு முறை (நாடி முறை)

தந்தை வழி பாட்டன்

தன்மைகள் - 10

61

கிரக பொறுப்புகள்

ஏவலாள்

62

கிரக வயது

100

63

தத்துவம் (கிரக லிங்கம்)

அலி (பெண்)

64

கிரக ஓட்டம்

சரம்

65

உயரம்

உயரம்

66

குணம்

தமோ

67

பிரிவு

இஸ்லாமியர், தொழிலாளர்

 

 

[தொடரும்]

 

[பிகு: சில சொற்களும் கருத்துக்களும் இக்காலத்திற்கு ஏற்ப மாறுதல் செய்யப்பட வேண்டும் எனினும், பழைய நூல்களின் அடிப்படையில் தகவல்களை மாற்றமில்லாமல் அளித்து இருக்கிறேன்.]

சோதிடத்தில் கிரகங்களின் தன்மைகள் – சனி

n07f-solar-saturn-systn

கிரகங்கள் மனிதர்களுக்கு தரும் தன்மைகளாகவும், மனிதர்கள் கடைபிடிக்க வேண்டிய பலன்களாகவும் வெவ்வேறு சோதிட புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விசயங்களை சோதிடம் கற்று கொள்பவர்கள் ஒரே இடத்தில் அறிந்து பயனடையும் பொருட்டு இங்கு பதிவேற்றம் செய்திருக்கிறேன்.

இப்பகுதியில் சனி பற்றி பார்ப்போம்.

வ.எண்

கிரகங்களின் தன்மைகள்

சனி

தன்மைகள் - 1

01

வேறு பெயர்கள்

மந்தன்,மகேசன்,நொண்டி, முடம்,ஜபிதரன்,ரவிபுத்ரன்

02

எண் கணிதம்

8

03

உபகிரகங்கள்

குளிகன்

04

நட்சத்திரங்கள்

பூசம், அனுஷம், உத்திரட்டாதி

05

குணங்கள்

பூர்வ பஷம் – பாபி

அமர பஷம் – சுபன்

தன்மைகள் - 2

06

அதிதேவதைகள்

எமன், ஸ்ரீ ஐயப்பன், முனிஸ்வரர்

07

ஷேத்திரம்

திருநள்ளாறு

08

பூஜித்தல்

கருங்காலி

09

கிரக ப்ரீதி

சனி தோத்திரம், நவக்கிரக சன்னிதியில் அர்ச்சனை

தன்மைகள் - 3

10

ஒரு ராசியில் சஞ்சார கால அளவு

2 ½ ஆண்டுகள்

11

சுற்றும் முறை (இராசி சக்கரத்தில்)

கடிகாரம்

12

கிரக திசையின் கால அளவு

19 வருடம்

13

திசையில்

பலன் தரும் காலம்

பிற்பகுதி

14

அடுத்த ராசி பார்வை (கோசாரம்)

3 மாதம்

15

இராசி சக்கரத்தில் பார்வை

3,7,10

5,9 இடம் அரை, 4,8 இடம் முக்கால் பார்வையும் பார்க்கும்.

தன்மைகள் - 4

16

நட்பு கிரகங்கள்

புதன்,சுக்ரன்,ராகு,கேது

17

சம கிரகங்கள்

குரு

18

பகை கிரகங்கள்

சூரியன்,சந்திரன்,செவ்வாய்

தன்மைகள் - 5

19

உச்ச வீடு

துலாம்

20

அதி உச்ச பாகங்கள்

துலாம் – 20

21

மூலத்திரிகோண வீடு, பாகை

கும்பம் – 4

22

நட்பு வீடுகள்

ரிஷபம்,மீனம்,கன்னி தனுசு,மிதுனம்

23

ஆட்சி வீடு

கும்பம், மகரம்

24

பகை வீடுகள்

கடகம்,சிம்மம்,விருச்சிகம்

25

நீச வீடு

மேஷம்

26

அதி நீச பாகங்கள்

மேஷம் – 20

தன்மைகள் - 6

27

இலக்கினத்திற்கு மறைவு இடங்கள்

8,12

28

திக்பலம் (கேந்திரம்)

7

29

அஸ்தங்கம்

17

30

கிரகணங்கள்

4

31

கண்ட வலிமை

பாட்டில்

தன்மைகள் - 7

32

பறவை

நீர் கோழி

33

விலங்கு

ஆண் ஆடு

34

நாற்கால் பிராணி

காளை, பசு, யானை, மான், நாய்

35

வாகனம்

காக்கை, எருமை

36

தானியங்கள்

எள்ளு, பச்சை பயிறு

37

தாவரம்

காட்டுப்பூ, புல் ,பேரிச்சை, ஈச்சமரம், எள், உளுந்து, கருங்குறுவை, நெல்,பனை

38

மர வகை

பலமற்ற முள் மரம்

39

சமித்துகள் (மரம், செடி)

வன்னி

40

மலர்கள்

கருங்குவளை, வெண் காந்தல்

தன்மைகள் - 8

41

உலோகங்கள்

இரும்பு

42

இரத்தினங்கள்

நீலம் (நீலக்கல்)

43

பொருள்கள்

இரும்பு,ஈயம், நீலபொருள்

44

நிறங்கள்

கருமை

45

வஸ்திரம்

கிழிந்த பழைய வஸ்திரம்

46

சுவைகள்

துவர்ப்பு, காரம்

தன்மைகள் - 9

47

தேசம்

சௌராஷ்ட்ரம்

48

பாஷைகள்

துலுக்கு, அந்நிய பாஷை

49

ருது

சிசிர ருது

50

அயனாதி காலங்கள்

வருஷம்

51

திக்குகளில்

மேற்கு

52

அதிபதி திசைகள்

மேற்கு

53

நன்மை செய்யும் திசை

---

54

பஞ்சபூதத்தில்

வாயு (ஆகாயம்)

55

வடிவம்

பிறை

56

ஆசனம்

வில்

57

உடல் உறுப்பில் அவயங்கள்

நரம்பு,தொடை,கனுக்கால்

58

நாடி

வாதம்

59

பிணி

நரம்பு தளர்ச்சி, வாதம், (வாயு கோளாறு)

60

உறவு முறை (நாடி முறை)

பகைவர், தொழிலாளி, தந்தைவழி மூத்தசகோதரர்

தன்மைகள் - 10

61

கிரக பொறுப்புகள்

வேலையாள்

62

கிரக வயது

100 (70 – 91)

63

தத்துவம் (கிரக லிங்கம்)

அலி

64

கிரக ஓட்டம்

உபயம்

65

உயரம்

குள்ளம்

66

குணம்

தமோ (குரூரம்)

67

பிரிவு

சூத்ரர்

 

[தொடரும்]

 

[பிகு: சில சொற்களும் கருத்துக்களும் இக்காலத்திற்கு ஏற்ப மாறுதல் செய்யப்பட வேண்டும் எனினும், பழைய நூல்களின் அடிப்படையில் தகவல்களை மாற்றமில்லாமல் அளித்து இருக்கிறேன்.]