பாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பிரிவு துயரம் – பத்மஸ்ரீ வாலியின் வைரவரிகள்

காதலன் தன் பிரிவு துயரை தன் கண்மணிக்கு தெரியப்படுத்தும் ஒரு அருமையான பாடல், சமீபத்தில் இசை வெளியீடு நடைபெற்ற ‘சிக்கு புக்கு’ படத்தில் கேட்க நேர்ந்தது.

 

பத்மஸ்ரீ வாலி அவர்கள் முதல் வரியின் கவித்துவ உவமையிலிருந்தே மனம் கவர்கிறார். சூபி இசையில் அமைந்த தமிழ் காதல் பாடல் ஒரு வித்தியாசமான அனுபவம் அளிக்கிறது. இசையமைப்பாளர் பாடகர்களின் மொழி உச்சரிப்பை மெருகூட்டி இருந்தால் இன்னும் கூட சிறப்பாக இருந்திருக்கும்.

 

பாடல்: தூரல் நின்றாலும்

பாடல் வரிகள்: பத்மஸ்ரீ வாலி

பாடகர்கள்: ஹரிஹரன், வடாலி சகோதரர்கள்

இசை: ஹரிஹரன் & லெஸ்லி

 

உன்னை, உன்னிடம் தந்து விட்டேன்

நீ, என்னை என்னிடம் தந்து விடு

போதும், போதும், எனை போக விடு

கண்மணி எனை போக விடு

கண்மணி கண்மணி

தூரல் நின்றாலும், சாரல் நின்றாலும் ஈரம் மண்ணிலே!

    தூர சென்றாலும், தொலைவில் நின்றாலும் எண்ணம் உன்னிலே!

இரவில் தூங்காத இமைகள் ஓரம் நீயே நிற்கிறாய்!

    எனது தூக்கத்தை நீதான் வாங்கி எங்கே விற்கிறாய் ?!

தூரல் நின்றாலும், சாரல் நின்றாலும் ஈரம் மண்ணிலே!

    தூர சென்றாலும், தொலைவில் நின்றாலும் எண்ணம் உன்னிலே!

உயிரே உயிரே

 

உன்னை கேட்காமல் என்னை கேட்காமல் காதல் உண்டானதே! [ எனை போக விடு கண்மணி]

    விழிகள் என்கின்ற வாசல் வழியாக காதல் உள் சென்றதே !!

இனியும் உன் பெயரை என் நெஞ்சோடு ஒட்டி வைப்பதா ?

    எனது பொருள் அல்ல நீதான் என்று எட்டி வைப்பதா ?!

 

விடைகள் இல்ல வினாக்கள் தானடி

 

தூரல் நின்றாலும், சாரல் நின்றாலும் ஈரம் மண்ணிலே!

    தூர சென்றாலும், தொலைவில் நின்றாலும் எண்ணம் உன்னிலே!

இரவில் தூங்காத இமைகள் ஓரம் நீயே நிற்கிறாய்!

    எனது தூக்கத்தை நீதான் வாங்கி எங்கே விற்கிறாய் ?!

தூரல் நின்றாலும், சாரல் நின்றாலும் ஈரம் மண்ணிலே!

 

Thanks: http://tamilyrics.wordpress.com/2010/09/11/thooral-nindralum-chikku-bukku-lyrics/

Unnai unnidam thanthu vitten
nee ennai ennidam thanthu vidu
podhum podhum enai poga vidu

kanmani enai poga vidu
kanmani kanmani

thooral nindralum saaral nindraalum eeram mannile
dhoora sendralum tholaivil nindralum ennam unnile

iravil thoongatha imaigal oram neeye nirkiraai
enadhu thookkathai neethaan vaangi engey virkiraai

thooral nindralum saaral nindraalum eeram mannile
dhoora sendralum tholaivil nindralum ennam unnile

uyire uyire

unnai ketkamal ennai ketkamal kadhal undanathey

enai poga vidu kanmani

vizhigal engindra vaasal vazhiyaga kadhal ulsendrathey

iniyum un perai en nenjodu otti vaipadhaa

enadhu porul alla neethaan endru etti vaippadha

vidaigal illa vinakkal thaanadi

thooral nindralum saaral nindraalum eeram mannile
dhoora sendralum tholaivil nindralum ennam unnile

iravil thoongatha imaigal oram neeye nirkiraai
enadhu thookkathai neethaan vaangi engey virkiraai

thooral nindralum saaral nindraalum eeram mannile

 

Thanks http://blog.mp3hava.com/download-mp3-sogns-chikku-bukku-chikku-bukku-songs-wallpapers-photos-images-posters-gallery-trailer-blog-mp3hava-com/2010

Cast : Arya, Shriya, Preetika Rao (Sister of Bollywood Actress Amrita Rao)
Camera : R.B. Gurudev
Dialogues written by : S. Ramakrishnan
Lyrics : Padmashree Valee, Pa. Vijay
Music : Hariharan and Leslie
Choreographers : Rekha Chinni Prakash and Dinesh
Director: Manikandan
Producer: Metro Films

நான் ஒரு சுதந்திர பிறவி – மாயா (MIA) [18+]

MIA மாயா (M.I.A.) எனும் ஆங்கில பாடகியை தெரியுமா ? மாதங்கி 'மாயா' அருள்ப்ரகாசம் http://en.wikipedia.org/wiki/M.I.A._%28artist%29. முக்கியமானது இவர் தமிழினத்திற்காக தொடர்ந்து பாடும் ஒரே பாடகி என்பது தான். பாரதிக்கு பிறகு புரட்சி பாடும் ஒரே தமிழர் இவர் தான் [ஆனால் ஆங்கிலத்தில்] இவரின் Sunshowers வீடியோ மிகவும் பிரச்சித்தமானது.

 

சமீபத்தில் மாயாவின்(MIA) வின் “Born Free” வீடியோவை பார்க்க நேர்ந்தது. அதில் அரச வன்முறை இன பாகுபாட்டுடன் இளைஞர்களின் மேல் செயல்படும் விவரத்தை தோலுரித்து காட்டி இருந்தார். இப்படத்தில் மனிதர்களின் தனிப்பட்ட அந்தரங்கங்கள் மோசமான முறையில் மீறப்படுவதும், மனிதர்கள் மிருகங்கள் போல் நடத்தப்படுவதும் சித்தரிக்கப்படுகிறது.  இவ்வீடியோவை யுஸ் அரசாங்கம் தடை செய்துள்ளது. YouTube இருந்தும் நீக்கபட்டுள்ளது. ஏனெனில் சித்தரிக்க பட்டுள்ளது, யுஸ் வீரர்கள் அந்நாட்டின் சிறுபான்மையினரை துன்புறுத்துவது போல.

”இம்மலத்தை நின்முகத்தில் வீசுவேன், உனை காணும்போது

ஏனெனில் நான்மொழிய சிலஉண்டு.

நான் சுதந்திரமானவனாகவே பிறந்தேன்

நான் சுதந்திரமானவனாகவே பிறந்தேன்”

 

”தலைவனே நீ யாரேனும், எங்கிருப்பினும் வெளியாகி
இவர்களிடம் சொல்

சுதந்திரமானவனாகவே பிறந்தேன்

நான் சுதந்திரமானவனாகவே பிறந்தேன்”

 

சிலருக்கு வீடியோவின் சில காட்சிகள் ஆபாசமாகவும், வன்முறையாக தோன்றலாம். [குழந்தைகள் பார்க்க வேண்டாம். அலுவலகத்தில் பார்க்க வேண்டாம்] ஆனால் நாமெல்லாம் சக இனத்தவர்கள் தலையில் சுட்டதையும், பிணங்களை கற்பழித்ததையும், ஆனந்தர்களின் வீடியோக்களையும் கூசாமல் நடுவீட்டில் அமைதியாக பார்த்தவர்களாயிற்றே ?! சலன படத்தில் உள்ள கருத்தை முன்னிட்டு இதையும் பார்க்கலாம் தப்பில்லை.

M.I.A, Born Free from ROMAIN-GAVRAS on Vimeo.

 

என்ன நடந்தாலும் தங்களின் பண வருவாயை மட்டுமே குறியாக இருக்கும் தமிழக கலைஞர்கள் தங்களது சூடு சொரணையை சோதித்து கொள்ள செய்யும் அளவிற்கு இச்சலனப்படம் உள்ளது தான் சிறப்பு. இவ்வீடியோ வெளிவந்தது ஏப்ரல் மாதம்!!! இசை விமர்சகர்கள் என்று தம்பட்டம் அடிப்பவர்கள் கூட இதைப்பற்றி அதிகம் எழுதாதது வியப்பிற்குறியது. 

 

இப்பாடலை தனியாக கேட்கும் போது இசை மிகவும் ஏமாற்றம் அளித்தது போல இருந்தது. ஆனால் சலனப்படம் பாடலின் உயிரோட்டத்தை நமக்கு உணர்த்துகிறது.

 

ஆங்கில விமர்சனங்கள்

http://latimesblogs.latimes.com/music_blog/2010/04/mia-makes-her-stance-utterly-clear-with-born-free-video-1.html

"Born Free" is a heavy concentrating agent that fully shows M.I.A.'s intention to say radical and aligned with her own vision of what's real. Considering the strong track record of this still-young artist, that's not shocking.

 

http://www.refinedhype.com/hyped/entry/meaning-behind-m.i.a.-born-free-video/

However before I can discuss a meaning, I need to give a small background on MIA. ”One Man’s Freedom Fighter is Another Man’s Terrorist”

http://globalcomment.com/2010/m-i-a-s-born-free-a-statement-we-need-to-hear/

it’s awful to watching such terrible things happen to someone like you. Getting outraged is the whole point. Racial and ethnic distinctions are often as arbitrary as hair color, but it’s easy for people to ignore that fact when physical characteristics are our first test of otherness.


http://trueslant.com/leorgalil/2010/04/26/finding-meaning-in-m-i-a-s-born-free-video/

the great thing about the video is it really reflects one’s thoughts on pop music and culture. It can be as vapid and pointless as you want it to be, but if you really want to give it a chance, the second viewing can be so much more rewarding.

 

பாடல் Thanks http://www.metrolyrics.com/born-free-lyrics-mia.html

Whooo!
Yeah man made powers
Stood like a tower higher and higher hello
And the higher you go you feel lower, oh
I was close to the end staying undercover
Staying undercover


With a nose to the ground I found my sound
Got myself an interview tomorrow
I got myself a jacket for a dolla
And the car doesn't work so I'm stuck here
Yeah I don't wanna live for tomorrow
I push my life today
I throw this in your face when I see ya
I got something to say
I throw this shit in your face when I see ya
Cause I got something to say


I was born free (born free)
I was born free (born free)

bo-bo-born free


You could try to find ways to be happier
You might end up somewhere in Ethiopia
You can think big with your idea
You ain't never gonna find utopia
Take a bite out of life make it snappier yeah

Ordinary gon super trippyer
So I check shit cause I'm lippyer
And split a cheque like Slovakia
Yeah I don't wanna live for tomorrow
I push my life today
I throw this in your face when I see you
I got something to say
I throw this shit in your face when I see you
Cause I got something to say


I was born free (born free)
I was born free (born free)
I was born free (born free)
bo-bo-born free
Ooooh


I don't wanna talk about money, 'cause I got it
And I don't wanna talk about hoochies, 'cause I been it
And I don't wanna be that fake?, but you can do it
And imitators, yeah, speak it
Oh Lord? whoever you are, yeah come out wherever you are
Oh Lord? whoever you are, yeah come out wherever you are
And tell em!


Born free (born free)
I was born free (born free)
I was born free (born free)
bo-bo-born free

பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

பரஸ்பர மொழியறியாத இரு காதலர்கள் தங்கள் உணர்வுகளை பரிமாறி கொண்டு அன்பில் திளைக்கும் தருணம் இது. திரு. கண்ணதாசனுக்கு பிறகு கவிதைகளுக்காக அதிகம் விரும்பி கேட்கும் பாடல்களை எழுதும்  கவிஞர் சந்தேகமின்றி திரு. நா.முத்துக்குமார் தான்.

 

திரை படம் : மதராசபட்டிணம்
வரிகள் : நா.முத்துக்குமார்
இசை : G. V. பிரகாஷ்
பாடியவர்கள்: GV பிரகாஷ், ரூப்குமார், ஹரிணி, அண்ட்ரியா


 


[தான தொ தனன,தான தொ தனன]


Male: பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே,
பார்த்ததாரும் இல்லையே
Female: புலரும் காலை பொழுதை
முழுமதியும் பிரிந்து போவதில்லையே

Male: நேற்றுவரை நேரம் போக வில்லையே,
உனதருகே நேரம் போதவில்லையே

Female: எதுவும் பேசவில்லையே,இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே…இது எதுவோ?......!
Male: இரவும் விடியவில்லையே, அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே பூந்தளிரே......!
[தான தொ தனன,தான தொ தனன]

Male: வார்த்தை தேவையில்லை, வாழும் காலம் வரை,
பாவை பார்வை மொழி பேசுமே!
Female: நேற்று தேவையில்லை, நாளை தேவையில்லை,
இன்று இந்த நொடி போதுமே!
Male: வேரின்றி விதையின்றி விண்தூவும் மழையின்றி
இது என்ன இவன் தோட்டம் பூப்பூக்குதே?
Female: வாளின்றி, போரின்றி, வலியின்றி, யுத்தமின்றி
இது என்ன இவனுக்குள் என்னை வெல்லுதே?
Male: இதயம் முழுதும் இருக்கும் இந்த  தயக்கம்,
எங்கு கொண்டு நிறுத்தும்
Female: இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்,
அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்
Male: பூந்தளிரே ……


Female:
Oh where would I be without this joy inside of me?
It makes me want to come alive; it makes me want to fly into the sky!
Oh where would I be if I didn’t have you next to me?
Oh where would I be? Oh where, oh where?


Male: எந்த மேகம் இது? எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈர மழை தூவுதே!
Female: எந்த உறவு இது? எதுவும் புரியவில்லை
என்றபோதும் இது நீளுதே!
Male: யாரென்று அறியாமல், பேர்கூட தெரியாமல்,
இவளோடு ஒரு சொந்தம் உருவானாதே!
Female: ஏனென்று கேட்காமல்,தடுத்தாலும் நிற்காமல்
இவன் போகும் வழியெங்கும் மனம் போகுதே!
Male: பாதை முடிந்த பிறகும், இந்த உலகில்
பயணம் முடிவதில்லையே
Female: காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும்,
இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே!
Male/Female: இது எதுவோ!
[தான தொ தனன,தான தொ தனன]


Female: பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனே
பார்த்ததாரும் இல்லையே
Female: புலரும் காலை பொழுதை
முழுமதியும் பிரிந்து போவதில்லையே
Male: நேற்றுவரை நேரம் போக வில்லையே,
உனதருகே நேரம் போதவில்லையே
Female: எதுவும் பேசவில்லையே, இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே …என்ன புதுமை?

Female/Male: இரவும் விடியவில்லையே, அது விடிந்தால் பகலும் முடியவில்லையே
Male: இது எதுவோ!!
[தான தொ தனன,தான தொ தனன]

Mass
நான் என்ற சொல் இனி வேண்டாம் !
நீ என்பதே இனி நான்தான் !
இனிமேலும் வரம் கேட்க தேவையில்லை !
இதுபோல் வேறெங்கும் சொர்கமில்லை !

 

இப்பாடலை தாமதமாக கேட்க நேர்ந்ததை முன்னிட்டு அதிகம் கேட்கிறேன் போல. (தொடர்ந்து 10 வது முறையாக!!!)

 

Thanks

http://www.tamilthunder.com/forum/showthread.php?71483-%26%232986%3B%26%233010%3B%26%232965%3B%26%233021%3B%26%232965%3B%26%232995%3B%26%233021%3B-%26%232986%3B%26%233010%3B%26%232965%3B%26%233021%3B%26%232965%3B%26%233009%3B%26%232990%3B%26%233021%3B-%96-Madharasapattinam&p=711035

http://vimalaranjan.blogspot.com/2010/07/blog-post.html

என்ன என்ன என்ன ஆகிறேன் ?… என் காதலே ?… ;)

வெளியாக இருக்கும் ”காதல் சொல்ல வந்தேன்” படத்தில் உள்ள மிகவும் பிடித்த பாடல் “என்ன என்ன என்ன ஆகிறேன் ?”. தலைவியை பார்த்து தலைவன் பாடும் பாடல். யுவன் சங்கர் ராஜா, நா. முத்துக்குமார் எப்போதும் போல அழகு செய்துள்ளனர். விஜய் ஜேசுதாசின் குரலில் பாடல் அழுத்தம் திருத்தமாக உள்ளது மிகச்சிறப்பு.

 

 

என்ன என்ன என்ன ஆகிறேன் ?
மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்
தொட்டுப்பிடித்திடும் தூரத்தில்,
பறக்கிறேன், நிலவைப்பிடிக்கிறேன்…

காதல்சிலை ஒன்று, நெஞ்சம் செய்ததே
கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே
கத்தும் கடல் அலை அமைதி ஆனதே
வெட்ட வெளியினில் காயல் நீந்துதே…

என்ன என்ன என்ன ஆகிறேன் ?
மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்

 


பார்வையில் உந்தன் யோசனை, புரிந்து சேவை யாவும் செய்வேன்
உயிருக்குள் ஒரு நூலினை, கோர்த்து உன்னை அங்கு நெய்வேன்

மண்ணில் எது சுகம் ? பெண்ணே உந்தன் முகம்
உன்னிடத்தில் என்ன கேட்கிறேன் ?
உன் காதல் போதுமே, என் ஜென்மம் தீருமே…

காதல்சிலை ஒன்று, நெஞ்சம் செய்ததே
கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே
கத்தும் கடல் அலை அமைதி ஆனதே
வெட்ட வெளியினில் காயல் நீந்துதே…

என்ன என்ன என்ன ஆகிறேன் ?
மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்

 

விதை என அன்று விழுந்தது, வளர்ந்து விருட்சமாகும் நேரம்
கனவென கண்ணில் இருந்தது, கரைந்து காதலாக மாறும்
எதை விரும்பினேன் ? அதை அடைகிறேன்

உன்னிடத்தில் என்ன கேட்கிறேன் ? 
செத்தாலும், உன் மடி, தந்தாலே நிம்மதி…

காதல்சிலை ஒன்று, நெஞ்சம் செய்ததே
கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே
கத்தும் கடல் அலை அமைதி ஆனதே
வெட்ட வெளியினில் காயல் நீந்துதே

என்ன என்ன என்ன ஆகிறேன் ?
மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்…

தொட்டுப்பிடித்திடும் தூரத்தில்,
பறக்கிறேன், நிலவைப்பிடிக்கிறேன்.

பதிவுலகிற்கு(?) உடுக்கை அடிக்க :)

யாரு வச்ச கண்ணோ தெரியல பதிவுலகமே பத்திகிட்டு எரியுது. சம்பந்த படாதவங்களையெல்லாம் சம்பந்தப்படுத்துது. எனவே அன்பு வேண்டி காதல் தெய்வத்திற்கு உடுக்கை அடிக்க வேண்டிய நிலைமை நம்முடையது.

சமீபத்தில் யுவனின் காதல் சொல்ல வந்தேன் படப்பாடல்கள் கேட்டேன். மிக நன்றாக உள்ளது. காதலை பிழிந்து சாறே எடுத்து இருக்கிறார்கள். பாடல்கள் நா.முத்துகுமார். மனிதர் அருமையாக பாடல்கள் எழுதி இருக்கிறார். அதில் மிகவும் பிடித்த பாட்டு

என்ன என்ன என்ன ஆகிறேன்
மெல்ல மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்

எனும் இதமான பாடல்.

 

இப்படத்தில் வரும் ”சாமி வருகுது” பாடல் நம்முடைய பதிவர்களுக்கான பாட்டு. கிராமிய கலைஞர்களுடன் கிராமிய இசையில் அப்படியே நம்ம் ஊர்ப்பாட்டு. பாடல் நகைச்சுவையானது என்பதால் பஜனை வடிவில் இருக்கிறது.  இப்பாடலை பாட சிதம்பரம் சிவக்குமார் பூசாரி & குழுவினரையே யுவன் பய்ன்படுத்தியுள்ளார். உடுக்கை, உறுமி, நாதஸ்வர இசையும் கலக்கல். பழைய இளையராஜா பாடல்களின் மணம் இருக்கிறது.  பல பக்தி பாடல்கள் நினைவில் வரவும் வாய்ப்பு இருக்கிறது.

 

[இப்ப தேவையான பதிவர்கள் அவரவர் இருக்கும் இருப்பிடத்திலேயே சாமியாடி பாடி கொல்லவும் ;)]

Play - Saami Varuguthu Kaathal

சாமி வருகுது காதல் சாமி வருகுது 
நான் கேட்காத வரமெல்லாம்  கொடுக்க வருகுது

சாமி வருகுது காதல் சாமி வருகுது

நீ கேட்காத வரமெல்லாம்  கொடுக்க வருகுது

Saami Varuguthu Kaathal Saami Varuguthu
Naan Kaetkatha Varamellam Kodukka Varuguthu
Saami Varuguthu Kaathal Saami Varuguthu
Nee Kaetkatha Varamellam Kodukka Varuguthu

 

ஆடி வருகுது அழகா ஆடி வருகுது

ஆடி வருகுது அழகா ஆடி வருகுது

ஏன் நெஞ்சுக்குள் அலகு குத்த ஓடிவருகுது

Aadi Varuguthu Azhagha Aadi Varuguthu
Aadi Varuguthu Azhagha Aadi Varuguthu
Ae Nenjikkul Alaku Kutha Oadivaruguthu

[சாமி வருகுது]

 

மஞ்சள் நிற ஆடை கட்டி ஓடிவருகுது

லைட்டு மஞ்சள் நிற ஆடை கட்டி ஓடிவருகுது

லைட்டு மஞ்சள் நிற ஆடை கட்டி ஓடிவருகுது

Manjal Nira Aadaikatti Oadi Varuguthu
Light’tu Manjal Nira Aadaikatti Oadi Varuguthu
Light’tu Manjal Nira Aadaikatti Oadi Varuguthu

 

ஏய் மத்தவன விட்டு என்னை நாடி வருகுது

ஏய் மத்தவன விட்டு உன்னை நாடி வருகுது

Ae Mathavana Vittu Ennai Naadi Varuguthu
Ae Mathavana Vittu Unnai Naadi Varuguthu

 

கொஞ்சி கொஞ்சி என்னை இப்போ சுத்திவருகுது

கொஞ்சி கொஞ்சி உன்னை இப்போ சுத்திவருகுது

Konji Konji Ennai Ippo Suthi Varuguthu
Konji Konji Unnai Ippo Suthi Varuguthu

 

குங்குமத்த வைக்க ஒரு நெத்தி வருகுது

நான் குங்குமத்த வைக்க ஒரு நெத்தி வருகுது

Kungumatha Vaika Oru Nethi Varuguthu
Naan Kungumatha Vaika Oru Nethi Varuguthu

[சாமி வருகுது]

 

[நாதஸ்வர ஆவர்த்தனம்]

 

உள்நெஞ்சில் உண்டியலாய் ஆட வருகுது

உள்நெஞ்சில் உண்டியலாய் ஆட வருகுது

அட உன்நடைய சில்லரையாய் போட வருகுது

அட உன்நடைய சில்லரையாய் போட வருகுது

Ul Nenjil Undiyalai Aada Varuguthu
Ul Nenjil Undiyalai Aada Varuguthu

Ada Un Nadaiya Sillaraiyai Poada Varuguthu
Ada Un Nadaiya Sillaraiyai Poada Varuguthu

 

கண்ணு ரெண்டும் காவடியை தூக்கி வருகுது

கண்ணு ரெண்டும் காவடியை தூக்கி வருகுது

போன ஜென்ம புண்ணியத்தில் பாக்கி வருகுது

என் போன ஜென்ம புண்ணியத்தில் பாக்கி வருகுது

Kannu Rendum Kaavadiyai Thookivaruguthu
Kannu Rendum Kaavadiyai Thookivaruguthu

Pona Jenmama Puniyathil Bakki Varuguthu
En Pona Jenmama Puniyathil Bakki Varuguthu

[சாமி வருகுது]

 

காதலுக்கு கை கொடுக்க பாதம் வருகுது

காதலுக்கு கை கொடுக்க பாதம் வருகுது

நான் கூழு ஊத்தி கொண்டாட காலம் வருகுது

நீ கூழு ஊத்தி கொண்டாட காலம் வருகுது

Kaathalukku Kai Kodukka Paatham Varuguthu
Aam Kaathalukku Kai Kodukka Paatham Varuguthu

Naan Koozhu Oothik Kondaada Kaalam Varuguthu
Nee Koozhu Oothik Kondaada Kaalam Varuguthu

 

தேரு வருகுது தங்க தேரு வருகுது

தேரு வருகுது தங்க தேரு வருகுது

தேரு மேல தேவரெல்லாம் ஏறி வருகுது

அந்த தேரு மேல தேவரெல்லாம் ஏறி வருகுது

Thaeru Varuguthu Thangath Thaeru Varuguthu
Thaeru Varuguthu Thangath Thaeru Varuguthu
Thaeru Maela Thaevarellam Aeri Varuguthu
Antha Thaeru Maela Thaevarellam Aeri Varuguthu

 

ஜோதி வருகுது காதல் ஜோதி வருகுது
அவ என்னோட பாதியின்னு சேதி வருகுது.

ஜோதி வருகுது காதல் ஜோதி வருகுது
அவ என்னோட பாதியின்னு சேதி வருகுது.

Jothi Varuguthu Kaathal Jothi Varuguthu
Ava Ennoda Paathiyinu Saethi Varuguthu
Jothi Varuguthu Kaathal Jothi Varuguthu
Ava Ennoda Paathiyinu Saethi Varuguthu

 

சாமி வருகுது காதல் சாமி வருகுது 
நீ கேட்காத வரமெல்லாம்  கொடுக்க வருகுது

நான் கேட்காத வரமெல்லாம்  கொடுக்க வருகுது

நீ கேட்காத வரமெல்லாம்  கொடுக்க வருகுது

Saami Varuguthu Kaathal Saami Varuguthu
Nee Kaetkatha Varamellam Kodukka Varuguthu
Naa Kaetkatha Varamellam Kodukka Varuguthu
Nee Kaetkatha Varamellam Kodukka Varuguthu

நன்றி: http://www.paadalvarigal.com/641/saami-varuguthu-kaadhal-solla-vandhen

காதலர்களுக்கான பாடல் – உசிரே போகுதே

ஆரோமளே பாடலுக்கு பின் திரு ஏஆர் ரகுமான் இசையில் காதலுக்கு இவ்வாண்டில் தரப்பட்டுள்ள மிகச்சிறந்த பாடல் இது. இப்பாடல் பொருந்தா காதலுக்கு உண்டான கருத்தை அளிக்க வல்லது எனினும் இயல்பான காதலர்களின் களவொழுக்கத்தையும் சிலேடையாக குறிக்க வல்லது.

இப்பாடலின் அருமையை உணர பேஸ் நன்றாக ஒலிக்க இயலவல்ல இயர்போன் மட்டும் உபயோகிக்கவும். அப்போது தான் இப்பாடலில் முதலில் வரும் பௌத்த மணியோசையை ஒத்த மனதை மயக்கும் இசையின் ஜீவனை உணர முடியும். இம்மணியோசையின் ரிதம் தான் பாடல் முழுக்க ஒரு சீர்மையை உண்டு செய்கிறது.

பாடியவர்கள் : கார்த்திக், முகமது இர்ஃபான்

படம் : ராவணன்

இசை : ஏ.ஆர்.ரஹ்மான்

பாடல்: வைரமுத்து

[பாடல் இசை கீழே]

 

 

இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த

என் புத்திக்குள்ள தீப்பொறிய நீ வெதச்ச

அடி தேக்கு மர காடு பெருசுதான்

சின்ன தீக்குச்சி உசரம் சிறுசு தான்

அடி தேக்கு மர காடு பெருசுதான்

சின்ன தீக்குச்சி உசரம் சிறுசு தான்

ஒரு தீக்குச்சி விழுந்து துடிக்குதடி

கருந்தேக்கு மரக்காடு வெடிக்குதடி

 

உசுரே போகுதே உசுரே போகுதே

உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கையில

ஓ.. மாமன் தவிக்குறேன்

மடிப்பிச்சை கேக்குறேன்

மனசத் தாடி என் மணிக்குயிலே

அக்கரைச் சீமையில் நீ இருந்தும்

ஐவிரல் தீண்டிட நினைக்குதடி

அக்கினிப் பழமின்னு தெரிஞ்சிருந்தும்

அடிக்கடி நாக்கு துடிக்குதடி

 

 

உடம்பும் மனசும் தூரம் தூரம்

ஒட்ட நினைக்கேன் ஆகல

மனசு சொல்லும் நல்ல சொல்ல

மாய உடம்பு கேக்கல

தவியா தவிச்சு

உசிர் தடம் கெட்டுத் திரியுதடி

தைலாங்குருவி

என்ன தள்ளி நின்னு சிரிக்குதடி

இந்த மம்முதக் கிறுக்கு தீருமா

அடி மந்திரிச்சு விட்ட கோழி மாறுமா

என் மயக்கத்த தீத்து வச்சு மன்னிச்சிருமா

 

சந்திரனும் சூரியனும்

சுத்தி ஒரு கோட்டில் வருகுதே

சத்தியமும் பத்தியமும்

இப்ப தலை சுத்தி கெடக்குதே

 

[உசுரே போகுதே உசுரே போகுதே…]

 

இந்த உலகத்தில் இது ஒண்ணும் புதுசில்ல

ஒண்ணு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கத்தில

விதி சொல்லி வழி போட்டான் மனுசப்புள்ள

விதிவிலக்கில்லாத விதியுமில்ல

எட்டயிருக்கும் சூரியன் பாத்து

மொட்டு விரிக்குது தாமரை

தொட்டு விடாத தூரம் இருந்தும்

சொந்த பந்தமோ போகல

பாம்பா விழுதா ஒரு பாகுபாடு தெரியலையே

பாம்பா இருந்தும் நெஞ்சு பயப்பட நினைக்கலயே

என் கட்டையும் ஒரு நாள் சாயலாம்

என் கண்ணுல உன் முகம் போகுமா

நான் மண்ணுக்குள்ள

உன் நெனப்பு மனசுக்குள்ள

 

சந்திரனும் சூரியனும்

சுத்தி ஒரு கோட்டில் வருகுதே

சத்தியமும் பத்தியமும்

இப்ப தலை சுத்தி கெடக்குதே

 

[உசுரே போகுதே உசுரே போகுதே…]

[உசுரே போகுதே உசுரே போகுதே…]

வாழ்க்கையின் நாடோடி பயணம்

சகீராவின் டென்னீஸ் வீரர் ரபேல் நடாலுடனான ஒரு புகழ்பெற்ற பாடல்

 

பாதையில் மனதுடைத்தேன் நான்

மனசில்லுகளை ஒன்றிணைப்பதில்

வார இறுதிகளை கழித்தேன்

 

 

நண்பர்களும் நினைவுகளும் கடந்து செல்கிறேன்

பறக்க கற்று கொள்ளும் போது

நடப்பதும் சலிப்பானதுதான்

 

 

’வீடு’ திரும்புதல் நினைவில்லையே

சிகரங்களே நோக்கமல்லவா

என்ன கிடைக்குமென யாருக்கு தெரியும் ?

 

எல்லா தவறுகளை நான் ஒப்பு கொள்ள போவதில்லை

நான் முயற்சிப்பேனென நீ பந்தயமிடலாம்

ஆனால் நான் எல்லா நேரமும் வெற்றியடைவதில்லை

 

 

ஏனெனில் நான் ஒரு நாடோடி நீ என் வழிதுணையா?

எனக்கு பொருந்தும் போது

உன்னுடைய ஆடைகளை திருடும் வாய்ப்பிருக்கிறது

நான் ஒப்பந்தமிடுவதேயில்லை ஒரு நாடோடியை போல

நான் பின்னடைவதில்லை ஏனெனில் வாழ்க்கை என்னை ஸ்வீகரித்து விட்டது

 

நீ என்னை விலகினும்

நான் கதற போவதில்லை

மரணிக்கும் வயதில்லை எனக்கு

ஏனெனில் நான் ஒரு நாடோடி

ஏனெனில் நான் ஒரு நாடோடி

 

 

மறைக்க முடிவதில்லை நான் செய்தவைகளை

தழும்புகள் நினைவிக்கின்றன கடந்த பாதையின் தூரத்தை

யாருக்கு தேவையாயிருப்பினும்

காயம்பட விரும்பும் போது மட்டுமே

ஆயுதத்துடன் ஓட விரும்புங்கள்

 

 

ஹாய் என அழைக்கும் போதும்

மறுதலித்தால் மட்டுமே நீ

முட்டாளாக மாட்டாய்

இம்முறையில் தானே வாழ்க்கை செல்கிறது.

மக்கள் அறியாமைகளை பார்த்தே பயப்படுகிறார்கள்

வழிதுணையாக என்னுடன் வா ஆம்

வழிதுணையாக என்னுடன் வா

Aaromale (Malayalam) ஆருயுரே (தமிழில்)

 

மாமாலையேறி வரும் தென்றல்
புது மணவாளனின் தென்றல்
பள்ளி மேடையை தொட்டு தள்ளாடி பாதம் தொழுது வரும் போது
வரவேற்று மலையாளதமிழ் மனசம்மதம் சொரியும்

ஆருயுரே...ஆருயுரே...ஆருயுரே...ஆருயுரே...

 

 

சுகம் சுகம் தரும் சுபவேளை
சுமங்கலி ஆகிய மணமகளே (2)

மகிழ் இரவு தன் அந்தரத்தில்
விலகி சென்றிடும் தாரகையே

பனி கண்டிட்ட கதிரொளியாய்
அகற்றி நின்றிடும் பெண்மணமே

வளைந்து நிற்கும் கிளையில் நீ கூக்கூவெனும் பூங்குயிலோ ? 
அகல்விளக்கின் பரம்சோதியை தேடியதுவோ பூரணமே ?

சுகம் சுகம் தரும் சுபவேளை
சுமங்கலி ஆகிய மணமகளே

 

ஆருயுரே...ஆருயுரே...

கரையருகே கடலோடிணையும் நதிபோல் ஸ்நேகமுண்டோ ?
மெழுகதுருகுவதுபோல் கரையும் காதல் மனதில் உண்டோ ?

ஆருயுரே...ஆருயுரே...ஆருயுரே...
ஆருயுரே...

 

இக்கவிதை விண்ணை தாண்டி வருவாயா பட மலையாள பாடலின்(http://www.youtube.com/watch?v=GO6fQFjhcSk) மொழி பெயர்ப்பு / தழுவல். உங்களது கருத்துக்களையும், மொழிபெயர்ப்பில் உள்ள குறைகளையும் சுட்டி காட்டவும்.

ஒரு தலை காதல் கவிதை (Feel My Love - காதலை உணர்வாயா)

என் அன்பில் கோபம் காணே என் அன்பில் துவேஷம் காணே
என் அன்பில் சாபம் காணே அன்பே Feel My Love
என் அன்பின் அளவை காணே என் அன்பின் ஆழம்  காணே
என் அன்பின் வேகம் காணே அழகே Feel My Love
என் அன்பின் மௌனம் காணே என் அன்பின் அர்த்தம் காணே
என் அன்பின் சூன்யம் காணே மறுப்போ வெறுப்போ ஏதோ Feel My Love

[என் அன்பில்]

 

நான் அளிக்கும் கடிதமெல்லாம் கிழித்தெறிந்து Feel My Love
நான் வழங்கும் பூவையெல்லாம் கீழெறிந்து Feel My Love
நான் எழுதும் கவிதையெல்லாம் பரிகசித்து Feel My Love
நான் செய்யும் சேஷ்டையெல்லாம் சீ யென்று Feel My Love

நீ என்னை விரும்பவில்லை என் மீது அன்புமில்லை
நீ என்னை நினைப்பதில்லை  என் பேச்சோ பிடிப்பதில்லை 
நீ இல்லை இல்லை என்ற போதும் எந்தன் அன்பில் நிஜமுண்டு Feel My Love

 

வெறுப்பாக முறைத்தாலும் விழியாலே Feel My Love
சினமாகி சுட்டாலும் நாவார Feel My Love
கசடென கடந்தாலும் காலாலே Feel My Love
விட்டு விலகி செல்லும் தடங்களிலே Feel My Love

வெறுப்பதிலே சோர்வடைந்தால், முறைப்பதிலே தளர்வடைந்தால்,
தடங்களிலே முடிவிருந்தால், சுடுவதிலே வலு இழந்தால்,  
இதற்கும் மேலே இதயம் என்று உனக்கொன்றிருந்தால் Feel My Love

 

இக்கவிதை தெலுங்கு பாடல்(http://www.youtube.com/watch?v=udl5Q-RJl5U) ஒன்றின் மொழி பெயர்ப்பு / தழுவல். உங்களது கருத்துக்களையும், மொழிபெயர்ப்பில் உள்ள குறைகளையும் சுட்டி காட்டவும்.

ஹாலிவுட் இசையில் தமிழ் பாடல் (AR Rahman debuts)

 

இசையமைப்பாளர் AR ரஹ்மான் இசையமைப்பில் உருவாகி இருக்கும் முதல் ஹாலிவுட் படம் Couple’s Retreat. இதில் ஒரு தமிழ் பாடல் இடம் பெற்றுள்ளது.

இப்பாடலை கேட்க http://www.couplesretreatsoundtrack.com/ எனும் இணைய தளத்தில் Kuru Kuru Kan (Tamil) எனும் பாடலை தெரிவு செய்யவும். இப்பாடலின் மூலம் தமிழ் பாடலை Hollywood தரத்திலான இசையில் கேட்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

பாடல் வரிகள் (நண்பர் Murali பின்னூட்டத்திற்கு பிறகு)

Kuru Kuru | AR Rahman (Tamil Lyrics with English Translation) | Listen

Thanks to Tina & http://www.rahmanism.com/2009/09/couples-retreat-lyrics-translation.html

Kuru kuru kangalilele. .. (With her teasing eyes)
Enai aval vendraale... (she won me)
Kuru kuru kangalilele. .. (With her teasing eyes)
Enai aval vendraale.. (she won me)

Itho Itho aval enai patham parkiraal... (hmmmmhmmmm) (now now, she takes on me)
Itho Itho aval enai patham parkiraal... (hmmmmhmmmm) (now now, she takes on me)

Siru siru pennilave.. (Will the girl like a small moon become my partner?)
En thunai avaalo..
Siru siru pennilave.. (Will the girl like a small moon satisfy my hunger?)
En pasi theerpalo..

Itho itho aval enai patham parkiral ...(hmmmmhmmmm) (now now, she takes on me)
Itho itho aval enai patham parkiral ...(hmmmmhmmmm) (now now, she takes on me)

 

இப்படத்திற்கான பாடல்களை இலண்டனிலும் லாஸ் ஏஞ்சல்சிலும் மூன்று மாதங்கள் வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இப்படம் யோகா + காமெடி + காதல் பற்றிய கதையை சொல்கிறது.

இந்த ஆல்பத்திலுள்ள சஜ்னா (when you cry I cry with you.. ) எனும் பாடலும் நன்றாக உள்ளது.

Couple’s Retreat Tracklist

  1. Na Na
  2. Kuru Kuru Kan (Tamil)
  3. Jason & Synthia Suite
  4. Sajna
  5. Tour of the Villas
  6. Meeting Marcel
  7. Itinerary
  8. Undress
  9. Sharks
  10. Luau by John O Brien
  11. Salvadore
  12. Intervention
  13. The Waterfall
  14. Animal Spirits
  15. Jason & Synthia Piano Theme

நன்றி AR ரஹ்மான் 

AR-Rahman_oscar_performance.jpg

Thanks: http://www.extramirchi.com/hotcelebs/ar_rahman/ar-rahmans-hollywood-debut-movie-couples-retreat/

புதிய பொன்னுலகம் அழைத்தால்

[தலைவியின் காதல் சுற்றத்தாரால் புரிந்து கொள்ளப் படாத போது தலைவனுக்கான அழைப்பு. மூல ஒளிப்பதிவு காணவும்.]

 

நீயெனவும் நானெனவும் வேறுவெறி  ல்லையே

                   செப்பினாலும் கேட்பரோ ஒருவரேனும்

நானே உன் நிழலல்லவா நீயே என் நிஜமல்லவா

                   ஒப்பு கொள்வரோ எப்போ தேனும்

விழிகள் மறை க்கின்ற சொப்(ப)னம், இப்போ தெதிரான நிஜமாய் தெரிந்தால்

அடக்க முடியாத அன்பு புதிய பொன் உலகாக அழைத்தால்

 

 

தடையை தாண்டி இதயம் சேர்ந்து மனதை எழுப்பிய உதயமே

வயதை காட்டி வணக்கம் கூறி பழக்கமாகிய காதலே

இது உண்மையே மறு ஜென்மமே இது புரியுமா இனியும் உன் மாயமா ?

[நீயெனவே ...]

வார்த்தை எனது; லயம் உனது; பாடலாகி வா பிரி யமே

போர் எனது வீரம் உனது எனை வெல்ல வா என்வீரனே

நீயே முடி வல்லவா உனை சேரவா? எனை காண வா என்னை சேர வா

[நீயெனவே ...]

 

இக்கவிதை தெலுங்கு பாடல்(http://www.youtube.com/watch?v=6_JUt73Q8mY) ஒன்றின் மொழி பெயர்ப்பு / தழுவல். உங்களது கருத்துக்களையும், மொழிபெயர்ப்பில் உள்ள குறைகளையும் சுட்டி காட்டவும்.

நீ

காதலில் வெற்றியடைந்த காதலன் பாடும் பாடல்

 

நீயும் உன் சிரிப்பும் போதுமம்மா எந்நாளும்

          எவரும் என் நினைவில் வராரம்மா

நீயும் உன் அன்பும் போதுமம்மா என் கண்ணே

           இந்த ஜென்மம் வரமே ஆகுமம்மா

 

 

என்னுடைய உயிர் நீயே

நான் கண்ட கலை நீயே

என் பாடல் ஸ்ருதி நீயே

என் அன்பு கதை நீயே

என்நாளும் பெருகும் என் ஆனந்தமும் நீயேதான்

 

உன்னுடன் சொர்க்கமும் நிஜமே

உன்னுடன் ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம்

உன்னுடன் ஒவ்வொரு குரலும் திவ்ய சங்கீதம்

 

உன்னுடனே நான் முழுமை அடைவேன்

உன்னுடனே ஒவ்வொரு பொழுதும் சொர்க்கம்

உன்னுடனே  வாழ்வின் ஒவ்வொரு கணமும் சந்தோசம்

 

 

[இக்கவிதை தெலுங்கு பாடல் ஒன்றின் மொழி பெயர்ப்பு / தழுவல்.

மொழிபெயர்ப்பில் உள்ள குறைகள் என்னையே சாரும். சுட்டி காட்டவும்]