பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

பரஸ்பர மொழியறியாத இரு காதலர்கள் தங்கள் உணர்வுகளை பரிமாறி கொண்டு அன்பில் திளைக்கும் தருணம் இது. திரு. கண்ணதாசனுக்கு பிறகு கவிதைகளுக்காக அதிகம் விரும்பி கேட்கும் பாடல்களை எழுதும்  கவிஞர் சந்தேகமின்றி திரு. நா.முத்துக்குமார் தான்.

 

திரை படம் : மதராசபட்டிணம்
வரிகள் : நா.முத்துக்குமார்
இசை : G. V. பிரகாஷ்
பாடியவர்கள்: GV பிரகாஷ், ரூப்குமார், ஹரிணி, அண்ட்ரியா


 


[தான தொ தனன,தான தொ தனன]


Male: பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே,
பார்த்ததாரும் இல்லையே
Female: புலரும் காலை பொழுதை
முழுமதியும் பிரிந்து போவதில்லையே

Male: நேற்றுவரை நேரம் போக வில்லையே,
உனதருகே நேரம் போதவில்லையே

Female: எதுவும் பேசவில்லையே,இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே…இது எதுவோ?......!
Male: இரவும் விடியவில்லையே, அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே பூந்தளிரே......!
[தான தொ தனன,தான தொ தனன]

Male: வார்த்தை தேவையில்லை, வாழும் காலம் வரை,
பாவை பார்வை மொழி பேசுமே!
Female: நேற்று தேவையில்லை, நாளை தேவையில்லை,
இன்று இந்த நொடி போதுமே!
Male: வேரின்றி விதையின்றி விண்தூவும் மழையின்றி
இது என்ன இவன் தோட்டம் பூப்பூக்குதே?
Female: வாளின்றி, போரின்றி, வலியின்றி, யுத்தமின்றி
இது என்ன இவனுக்குள் என்னை வெல்லுதே?
Male: இதயம் முழுதும் இருக்கும் இந்த  தயக்கம்,
எங்கு கொண்டு நிறுத்தும்
Female: இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்,
அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்
Male: பூந்தளிரே ……


Female:
Oh where would I be without this joy inside of me?
It makes me want to come alive; it makes me want to fly into the sky!
Oh where would I be if I didn’t have you next to me?
Oh where would I be? Oh where, oh where?


Male: எந்த மேகம் இது? எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈர மழை தூவுதே!
Female: எந்த உறவு இது? எதுவும் புரியவில்லை
என்றபோதும் இது நீளுதே!
Male: யாரென்று அறியாமல், பேர்கூட தெரியாமல்,
இவளோடு ஒரு சொந்தம் உருவானாதே!
Female: ஏனென்று கேட்காமல்,தடுத்தாலும் நிற்காமல்
இவன் போகும் வழியெங்கும் மனம் போகுதே!
Male: பாதை முடிந்த பிறகும், இந்த உலகில்
பயணம் முடிவதில்லையே
Female: காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும்,
இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே!
Male/Female: இது எதுவோ!
[தான தொ தனன,தான தொ தனன]


Female: பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனே
பார்த்ததாரும் இல்லையே
Female: புலரும் காலை பொழுதை
முழுமதியும் பிரிந்து போவதில்லையே
Male: நேற்றுவரை நேரம் போக வில்லையே,
உனதருகே நேரம் போதவில்லையே
Female: எதுவும் பேசவில்லையே, இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே …என்ன புதுமை?

Female/Male: இரவும் விடியவில்லையே, அது விடிந்தால் பகலும் முடியவில்லையே
Male: இது எதுவோ!!
[தான தொ தனன,தான தொ தனன]

Mass
நான் என்ற சொல் இனி வேண்டாம் !
நீ என்பதே இனி நான்தான் !
இனிமேலும் வரம் கேட்க தேவையில்லை !
இதுபோல் வேறெங்கும் சொர்கமில்லை !

 

இப்பாடலை தாமதமாக கேட்க நேர்ந்ததை முன்னிட்டு அதிகம் கேட்கிறேன் போல. (தொடர்ந்து 10 வது முறையாக!!!)

 

Thanks

http://www.tamilthunder.com/forum/showthread.php?71483-%26%232986%3B%26%233010%3B%26%232965%3B%26%233021%3B%26%232965%3B%26%232995%3B%26%233021%3B-%26%232986%3B%26%233010%3B%26%232965%3B%26%233021%3B%26%232965%3B%26%233009%3B%26%232990%3B%26%233021%3B-%96-Madharasapattinam&p=711035

http://vimalaranjan.blogspot.com/2010/07/blog-post.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எல்லோரும் இரசிக்கும் வகையி்ல் பார்த்து பதமா ;-)