பதிவுலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதிவுலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பதிவுலகிற்கு(?) உடுக்கை அடிக்க :)

யாரு வச்ச கண்ணோ தெரியல பதிவுலகமே பத்திகிட்டு எரியுது. சம்பந்த படாதவங்களையெல்லாம் சம்பந்தப்படுத்துது. எனவே அன்பு வேண்டி காதல் தெய்வத்திற்கு உடுக்கை அடிக்க வேண்டிய நிலைமை நம்முடையது.

சமீபத்தில் யுவனின் காதல் சொல்ல வந்தேன் படப்பாடல்கள் கேட்டேன். மிக நன்றாக உள்ளது. காதலை பிழிந்து சாறே எடுத்து இருக்கிறார்கள். பாடல்கள் நா.முத்துகுமார். மனிதர் அருமையாக பாடல்கள் எழுதி இருக்கிறார். அதில் மிகவும் பிடித்த பாட்டு

என்ன என்ன என்ன ஆகிறேன்
மெல்ல மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்

எனும் இதமான பாடல்.

 

இப்படத்தில் வரும் ”சாமி வருகுது” பாடல் நம்முடைய பதிவர்களுக்கான பாட்டு. கிராமிய கலைஞர்களுடன் கிராமிய இசையில் அப்படியே நம்ம் ஊர்ப்பாட்டு. பாடல் நகைச்சுவையானது என்பதால் பஜனை வடிவில் இருக்கிறது.  இப்பாடலை பாட சிதம்பரம் சிவக்குமார் பூசாரி & குழுவினரையே யுவன் பய்ன்படுத்தியுள்ளார். உடுக்கை, உறுமி, நாதஸ்வர இசையும் கலக்கல். பழைய இளையராஜா பாடல்களின் மணம் இருக்கிறது.  பல பக்தி பாடல்கள் நினைவில் வரவும் வாய்ப்பு இருக்கிறது.

 

[இப்ப தேவையான பதிவர்கள் அவரவர் இருக்கும் இருப்பிடத்திலேயே சாமியாடி பாடி கொல்லவும் ;)]

Play - Saami Varuguthu Kaathal

சாமி வருகுது காதல் சாமி வருகுது 
நான் கேட்காத வரமெல்லாம்  கொடுக்க வருகுது

சாமி வருகுது காதல் சாமி வருகுது

நீ கேட்காத வரமெல்லாம்  கொடுக்க வருகுது

Saami Varuguthu Kaathal Saami Varuguthu
Naan Kaetkatha Varamellam Kodukka Varuguthu
Saami Varuguthu Kaathal Saami Varuguthu
Nee Kaetkatha Varamellam Kodukka Varuguthu

 

ஆடி வருகுது அழகா ஆடி வருகுது

ஆடி வருகுது அழகா ஆடி வருகுது

ஏன் நெஞ்சுக்குள் அலகு குத்த ஓடிவருகுது

Aadi Varuguthu Azhagha Aadi Varuguthu
Aadi Varuguthu Azhagha Aadi Varuguthu
Ae Nenjikkul Alaku Kutha Oadivaruguthu

[சாமி வருகுது]

 

மஞ்சள் நிற ஆடை கட்டி ஓடிவருகுது

லைட்டு மஞ்சள் நிற ஆடை கட்டி ஓடிவருகுது

லைட்டு மஞ்சள் நிற ஆடை கட்டி ஓடிவருகுது

Manjal Nira Aadaikatti Oadi Varuguthu
Light’tu Manjal Nira Aadaikatti Oadi Varuguthu
Light’tu Manjal Nira Aadaikatti Oadi Varuguthu

 

ஏய் மத்தவன விட்டு என்னை நாடி வருகுது

ஏய் மத்தவன விட்டு உன்னை நாடி வருகுது

Ae Mathavana Vittu Ennai Naadi Varuguthu
Ae Mathavana Vittu Unnai Naadi Varuguthu

 

கொஞ்சி கொஞ்சி என்னை இப்போ சுத்திவருகுது

கொஞ்சி கொஞ்சி உன்னை இப்போ சுத்திவருகுது

Konji Konji Ennai Ippo Suthi Varuguthu
Konji Konji Unnai Ippo Suthi Varuguthu

 

குங்குமத்த வைக்க ஒரு நெத்தி வருகுது

நான் குங்குமத்த வைக்க ஒரு நெத்தி வருகுது

Kungumatha Vaika Oru Nethi Varuguthu
Naan Kungumatha Vaika Oru Nethi Varuguthu

[சாமி வருகுது]

 

[நாதஸ்வர ஆவர்த்தனம்]

 

உள்நெஞ்சில் உண்டியலாய் ஆட வருகுது

உள்நெஞ்சில் உண்டியலாய் ஆட வருகுது

அட உன்நடைய சில்லரையாய் போட வருகுது

அட உன்நடைய சில்லரையாய் போட வருகுது

Ul Nenjil Undiyalai Aada Varuguthu
Ul Nenjil Undiyalai Aada Varuguthu

Ada Un Nadaiya Sillaraiyai Poada Varuguthu
Ada Un Nadaiya Sillaraiyai Poada Varuguthu

 

கண்ணு ரெண்டும் காவடியை தூக்கி வருகுது

கண்ணு ரெண்டும் காவடியை தூக்கி வருகுது

போன ஜென்ம புண்ணியத்தில் பாக்கி வருகுது

என் போன ஜென்ம புண்ணியத்தில் பாக்கி வருகுது

Kannu Rendum Kaavadiyai Thookivaruguthu
Kannu Rendum Kaavadiyai Thookivaruguthu

Pona Jenmama Puniyathil Bakki Varuguthu
En Pona Jenmama Puniyathil Bakki Varuguthu

[சாமி வருகுது]

 

காதலுக்கு கை கொடுக்க பாதம் வருகுது

காதலுக்கு கை கொடுக்க பாதம் வருகுது

நான் கூழு ஊத்தி கொண்டாட காலம் வருகுது

நீ கூழு ஊத்தி கொண்டாட காலம் வருகுது

Kaathalukku Kai Kodukka Paatham Varuguthu
Aam Kaathalukku Kai Kodukka Paatham Varuguthu

Naan Koozhu Oothik Kondaada Kaalam Varuguthu
Nee Koozhu Oothik Kondaada Kaalam Varuguthu

 

தேரு வருகுது தங்க தேரு வருகுது

தேரு வருகுது தங்க தேரு வருகுது

தேரு மேல தேவரெல்லாம் ஏறி வருகுது

அந்த தேரு மேல தேவரெல்லாம் ஏறி வருகுது

Thaeru Varuguthu Thangath Thaeru Varuguthu
Thaeru Varuguthu Thangath Thaeru Varuguthu
Thaeru Maela Thaevarellam Aeri Varuguthu
Antha Thaeru Maela Thaevarellam Aeri Varuguthu

 

ஜோதி வருகுது காதல் ஜோதி வருகுது
அவ என்னோட பாதியின்னு சேதி வருகுது.

ஜோதி வருகுது காதல் ஜோதி வருகுது
அவ என்னோட பாதியின்னு சேதி வருகுது.

Jothi Varuguthu Kaathal Jothi Varuguthu
Ava Ennoda Paathiyinu Saethi Varuguthu
Jothi Varuguthu Kaathal Jothi Varuguthu
Ava Ennoda Paathiyinu Saethi Varuguthu

 

சாமி வருகுது காதல் சாமி வருகுது 
நீ கேட்காத வரமெல்லாம்  கொடுக்க வருகுது

நான் கேட்காத வரமெல்லாம்  கொடுக்க வருகுது

நீ கேட்காத வரமெல்லாம்  கொடுக்க வருகுது

Saami Varuguthu Kaathal Saami Varuguthu
Nee Kaetkatha Varamellam Kodukka Varuguthu
Naa Kaetkatha Varamellam Kodukka Varuguthu
Nee Kaetkatha Varamellam Kodukka Varuguthu

நன்றி: http://www.paadalvarigal.com/641/saami-varuguthu-kaadhal-solla-vandhen

பதிவுலகிற்கு ஒரு வேண்டுகோள்

 

யாரை ஆதரிப்பது / எதிர்ப்பது ?

தமிழ் பதிவுலகில் மனதிற்கு வருத்தமளிக்கும் நிகழ்வு நடைபெற்றதாக அறிகிறேன். எப்போதெல்லாம் பதிவின்/பின்னூட்டத்தின் கருத்துக்களை விட்டுவிட்டு பதிவரின் மேல் சொற்கணைகள் வீசப்படுகிறதோ அப்போதெல்லாம் இது போன்ற மோசமான விளைவுகள் ஏற்படுவதை என் வாசிப்பு அனுபவத்தில் உணர்கிறேன். இரு தனிப்பட்ட நண்பர்களுக்கு இடைப்பட்ட வேறுபாடு இப்போது ஆண்/பெண், மேல்சாதி/கீழ்சாதி பிரச்சிணை போன்ற பல்வேறு வடிவங்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

நான் விரும்பும் ஒரு பதிவர் மனதால் காயமுற்று இருக்கிறார். மற்றொரு நண்பரோ பதிவுலகில் இருந்து தற்காலிகமாகவேனும் வெளியேறுவதாக சொல்லி இருக்கிறார். இது ஒரு loss & loss  நிலைமை. அதாவது இருதரப்பினருமே காயம் பட்டு இருக்கின்றனர்.

நர்சிம் அவருடைய இடுகையை நீக்கி விட்ட நிலையில் இருவரின் மனப்புண்ணையும் நோண்டி நோண்டி பெரிதாக்குவதை விட்டு விட்டு இது அவர்களுக்கு இடையேயான தனிப்பட்ட விடயமாக கருதி அனைவரும் விலகி நிற்பதே நல்லது என தோன்றுகிறது. (மற்றவர்களின் பதிவை படித்தே பிரச்சிணையை பெரும்பாலானோர் தெரிந்து கொண்டதாக உணர்கிறேன்)

 

 

வேண்டுகோள்

 

விளையாட்டாக ஆரம்பிக்கும் விசயங்கள் தான் எப்போதும் மிகமோசமான நிலைமைக்கு கொண்டு செல்வதாக உணர்கிறேன். நமக்கு நகைச்சுவையாக இருக்கும் கருத்து அடுத்தவர் மனதை புண்படுத்தி விடுமா என்பதை எழுதும் முன் சீர் தூக்கி பாருங்கள்.

எப்போதும் கோபத்தில் பதிவு எழுதாதீர்கள். அதிலும் அடுத்தவர்களை பற்றியது எனில் பதிவு செய்து ஒரு நாள் பொறுமையாக இருந்து விசயங்களை மனதில் ஆராய்ந்து மனதிற்கு உகந்ததாக இருந்தால் மட்டும் பதியுங்கள். பின்பு அதை நீக்க வேண்டிய தேவை இருக்காது.

இந்த நிகழ்விலும் நடந்தது அதுவே. எனவே எப்போதும் கருத்துக்களுக்கு மட்டுமே எதிர்வினை செய்யுங்கள். தனிப்பட்ட பதிவர்களின் சொந்த விசயங்களுக்கு அல்ல.

 

எது நம்மை இணைக்கிறது ?

நண்பர்களே உலகமெல்லாம் இருக்கும் நம் உள்ளங்களை இணைக்கும் ஒரே சொல் அது “தமிழ்”. அது நம்மை இணைக்கவே செய்கிறது. நாமே நம்முள் பிரிந்து கொள்கிறோம். அதற்கு அவசியம் இல்லை என்பதே என் கருத்து. ஒருவருக்கொருவரின் முகம் தெரியாமல் மனம் அறியாமல் தமிழன் என்ற ஒரே உணர்வே நம்மை இணைக்கிறது.

நரசிம்மின் இராமாயண விளக்கங்களை விரும்பும் நான், சந்தணமுல்லையின் கம்யூனிச கருத்துக்களையும் விரும்பி படிக்கிறேன். இது இரண்டும் முரணாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இவை இரண்டுமே தமிழிற்கு அழகு சேர்ப்பவையே. இவற்றில் எதை இழந்தாலும் தமிழ் வலைப்பதிவுகளில் ஒரு பகுதியை இழப்பது தான்.

 

[பி.கு. நண்பர்கள் இருவரையும் நான் சந்தித்தது கூட இல்லை. இதில் இருக்கும் கருத்து, நன்மையை எதிர் நோக்கியே எழுதப் பட்டது.]

நண்பனும், கடவுளும்

 

நெடுநாளைய காத்திருப்பின் சந்திப்பிற்கு பிறகு ஆத்ம நண்பன் கேட்டான்

“கடவுளை தேடவோ நாம் பிறந்திருக்குறோம் ?”

 

நவின்றேன் நான்

“கடவுள் எப்படி கடவுளை தேட முடியும் ?”

 

நான் என்னிலும் நீ உன்னிலும் காண்பது மட்டுமல்ல கடவுள்

நான் உன்னிலும் நீ என்னிலும் காண்பதும் கடவுள்

 

நாம் நம்மிலும் நாம் பிறரிலும் காண்பதும் கடவுள்

நான் என்பது தன்னை தானே தேடும் பிம்பகடவுள்

 

தேடி தேடி ஓய்ந்த பின் தன்னை தான் உணர்ந்து

எங்கும் நீக்கமற நிறைந்து நிற்பதும் கடவுள்

 

 

--வால்பையனுடனான சந்திப்பு இனிமையாக இருந்தது. வால்பையனிற்கு நன்றிகள்.

காந்தியின் மீது கல்லெறிதல்

சமீபத்தில் படித்தவைகளில் காந்தி ஒரே விதமான கருத்து மத ரீதியாக முற்றிலும் எதிர் நிலைகளில் இருப்பவர்களால் பரப்ப பட்டது.

”காந்தி சாதியை ஆதரித்தார். அவர் ஒர் சாதி வெறியர்”

இதே விதமான குற்றசாட்டு பாரதியாரை நோக்கியும் வீசப்படுகிறது.

 

இவர்களின் மீது வீசப்படும் குற்றசாட்டுகளுக்கு ஆதாரமாக காட்டபடுவது இவர்கள் பயன்படுத்திய வர்ணாசிரமம் என்ற வார்த்தைகளின் அடிப்படையில். ஆனால் வர்ணாசிரமம் எனும் சொல் பழைய நூட்களில் முற்றிலும் வேறான நிலையில் பயன்படுத்த பட்டது. இப்போதைய சாதி எனும் பொருளில் அல்ல. கீதையை அதன் உண்மையான பொருளில் வாசிப்பவர்களுக்கு மனு நீதியில் சொல்லப்பட்ட திரிக்கபட்ட வர்ணாசிரமத்தில் உள்ள  முரண் வெளிப்படையாக தெரியும்.

 

    • கீதையில் விளக்கப்படும் வர்ணாசிரமம் வேறு இப்போதய சாதி வேறு . (மனு நீதி முதற் கொண்டு)
    • குலத்தொழிலும், பிறப்பின் அடிப்படையிலான சாதியும் ஒழிக்க பட வேண்டும்.
    • வேலையை வைத்து உயர்வு தாழ்வு கற்பித்தலும் ஒழிய வேண்டும்.

      http://sabaritamil.blogspot.com/2009/11/blog-post.html

 

ஆனால் சாதி என்பது குலத்தொழிலின் அடிப்படையில் சில சமூகத்தினரை இழிபொருளாக பார்க்கபடும் நிலை வந்ததுமே சமூகத்தை முழுமையாக கேடு கெட்ட நிலைக்கே கொண்டு சென்றது.


DSC02078//காந்தியின் ஆரம்பகால எண்ணங்கள் இவை. வருணப்பிரிவு என்பது சமூகத்தில் ஓர் ஒழுங்கை உருவாக்கும்பொருட்டு இயல்பாக பரிணாமம் அடைந்துவந்த ஒன்று.//

//1931ல் காந்தி எழுதினார் ” நான் நவீன அர்த்தத்தில் சாதி அமைப்பில் நம்பிக்கை கொள்ளவில்லை. அது ஒரு சமூகத்தீங்கு, முன்னேற்றத்துக்கு தடை. மனிதர்கள் நடுவே உள்ள எவ்வகையான ஏற்றதாழ்வுகளையும் நான் நம்பவில்லை. நாமெல்லாம் மூற்றிலும் சமம். சமத்துவம் என்பது ஆன்மாவிலே ஒழிய உடல்களில் அல்ல….புறவயமாக தெரியும் //


//சாதியை அழிப்பதற்கு மிகச்சிறந்த மிகவேகமான தடையற்ற வழி என்னவென்றால் சீர்திருத்தவாதிகள் அதை தங்களிடமிருந்தே தொடங்குவதுதான். தேவையென்றால் அதற்காக அவர்கள் சமூகத்தின் புறக்கணிப்பைக்கூட ஏற்றுக்கொள்ளவேண்டும் .மாற்றம் படிபப்டியாக ஆனால் உறுதியாக நிகழும்”
சொன்னதை தானே செய்வதற்கும் காந்தி தயாரானார். மார்க் லிண்ட்லே கோராவுக்கும் காந்திக்கும் இடையேயான உறவைச் சுட்டிக்காட்டுகிறார். பிறப்பால் பிராமணரான கோரா தன் சாதியை துறந்தார்.அதற்காக அவர் வேலையை விட்டு துரத்தப்பட்டார். தலித் மக்கள் நடுவே சேவைசெய்த கோராவை 1944 ல் காந்தி தன் ஆசிரமத்துக்கு அழைத்து தன்னுடன் வைத்துக்கொண்டார்.//


//1945 ல் காந்தி எழுதினார். ”பெண்ணுக்கு எந்த தகுதி இருந்தாலும் திருமணம் ஒரே சாதிக்குள் என்றால் என் ஆசீர்வாதத்தை தயவுசெய்து கோராதீர்கள். அவள் வேறு சாதி என்றால் மட்டுமே நான் என் ஆசீர்வாதத்தை அனுப்புவேன்”//


//இனிமேல் கவனியுங்கள், காந்தியை அவதூறுசெய்து வெளியிடப்படும் எந்த ஒரு ஆய்வேட்டுக்கு அல்லது நூலுக்குப் பின்னாலும் ஓர் அயல்நாட்டு பல்கலைக் கழகம் இருக்கும். அல்லது ஏதேனும் ஒரு கிறித்தவ மதப்பரப்பு நிறுவனத்தின் நிதியுதவி இருக்கும்.//

--http://www.jeyamohan.in/?p=4103

 

[படம்: பிப்ரவரி 23, 1946 அன்று தாழ்த்தப்பட்டவர்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டபோது, முதல்முறையாக காந்தி அக்கோவிலுக்குள் செல்லும்காட்சி.
http://jssekar.blogspot.com/2009/08/blog-post_23.html]

 

சாதியின் இன்றைய நிலை

    • மக்களிடையே உருவாக்க படும் பரம்பரை பெருமை எனும் மந்தை குணமே இன்றைய சாதி நிலமைக்கு முதற் காரணமாக இருக்கிறது.
      • பரம்பரை பரம்பரையாக சிறுமை படுத்த பட்ட மக்கள், தங்களுக்கு அடிமையாக இருப்பதையே விரும்பும் தன் முனைப்பு
      • தங்களுடைய  தன் இன மக்கள் ”நாடாண்ட வம்சம்”, “கட்டியாண்ட வம்சம்” என்று போலி பெருமிதங்களின் மூலம் ஏற்றி விடப்படும் சாதி வெறி
    • பொருளாதார தேவைகள்
      • சில மக்களை அறியாமையில் ஆழ்த்தி அடிமை பணிகளில் ஈடுபடுத்தி பொருளாதார ரீதியாக சுரண்டுவது
      • பொருளாதார ரீதியாக முன்னேறிய தன் சாதி மக்களிடம் கிடைக்கும் பொருளாதார பலன்கள் எனும் நம்பிக்கை
    • திரிக்கப்பட்ட மத நம்பிக்கைகள்

      http://sabaritamil.blogspot.com/2010/04/blog-post.html

 

21ம் நூற்றாண்டில் சங்கங்கள் இல்லாத சாதியே இல்லை எனும் நிலைமை உருவாகி விட்டது, சாதி ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்பட்ட மிகப்பெரும் பின்னடைவு. ஒரு திறந்த சவால் என்னிடமிருந்து இன்றைய சாதி சங்க தலைவர்களில்,

  1. எத்தணை பேர் மனு நீதியை கேள்வி பட்டிருக்கிறார்கள்? (மனு நீதியின் மக்களை வகைப்படுத்தல் திரிக்கபட்டது)
  2. எத்தணை பேர் அந்நூட்களை பார்த்து இருக்கிறார்கள் ?
  3. எத்தணை பேர் அதன் பொருள் உணர்ந்து இருக்கிறார்கள்?
  4. எத்தணை பேர் அதனை ஏற்று கொள்கிறார்கள் ? (ஏனெனில் அதில் தவறாக கூறப்பட்ட பிரிவு மக்கள் கூட சாதி வெறியில் முன்னணியில் இருக்கின்றனர் !!!)

 

திரிக்கப்பட்ட வர்ணாசிரமம் மட்டுமே சாதிக்கான காரணமாக இருப்பது 21ம் நூற்றாண்டில் காலாவதியாகி விட்டது. பொருளாதார ரீதியான காரணம் பூதாகரமாக இருக்கிறது.  நோய்க்கான காரணம் ஒன்றாக இருக்க நாம் தவறான சிகிச்சை செய்து வருகிறோம் என்பதே சாதி சங்கங்கள் பெருகி இருக்கிறது என்பதற்கான காரணங்கள்.

 

காந்தியும், பாரதியும் குறை சொல்லும் முன்னர் அவர்களின் வாழ்க்கை, வாழ்ந்த சூழலையாவது தெரிந்து கொள்வதே அடிப்படை நேர்மை. இல்லையெனில் நாம் கூறும் கருத்துக்கள் நம்மை கோமாளியாகவே காட்டும்.

சாதி இல்லாத தமிழினம் !! (சாதியமும், சுயவஞ்சகமும்)

சமீபத்தில் சாதியை தமிழினத்திலிருந்து முற்றிலுமாக நீக்கும் அதி முக்கிய கண்டு பிடிப்பு வலையுலகில் நடந்திருக்கிறது.  இக்கண்டுபிடிப்பின் படி தமிழர்களிடம் சாதி இல்லை என்பதை கீழ் காணும் வகையில் சுலபமாக  நிறுவ முடியும்.

 

      1. சாதி இந்து மதத்தில் உள்ளது
      2. சாதி ஜீன் வழி பரம்பரை பரம்பரையாக வருகிறது
      3. தமிழர்கள் இந்துக்கள் அல்ல & பார்ப்பனர்கள் தமிழர்கள் அல்ல
      4. எனவே ஜீன் வழி பார்பனர்கள் சாதி வெறி பிடித்தவர்கள். என் ஜீன் வழி நான் சாதி வெறி பிடித்தவன் இல்லை (கூடவே என் பரம்பரை மக்களும் சாதி வெறி பிடித்தவர்கள் இல்லை! எப்பூடி ??)

 

ஆகவே சாதி ஒழிப்பு செய்ய சுலபமான வழி நான் ஒரு இந்து இல்லை என உரக்க கூவி கொண்டே சரஸ்வதி மந்திரம் சொல்வது தான். நீங்கள் சைவம், வைணவ, இஸ்லாமிய அல்லது கிறிஸ்தவ மதங்களில் ஒருவர் ஆகிவிடுவீர்கள் உங்களுடைய பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குறிய ஜீன் தொடர்பு உடனடியாக அறுக்க பட்டு உடனடியாக சுய பாவ மன்னிப்பு வழங்கப்படும். உங்கள் முன்னோர்கள் செய்த சாதிய விசத்திற்குரிய குற்ற உணர்வை கூட நீங்கள் எளிமையாக விட்டு விடலாம்.

 

சாதியத்தின் நவீன முகங்கள்

மக்களிடம் மாட்டி கொண்ட திருடர்கள் ஒருவருக்கொருவர் குற்றம் கூறி தான் யோக்கியவான் என்று நிரூபிக்க முயல்வது போல், இன்றைய சூழ்நிலையில்  ”பார்ப்பனீயம்” & ”உயர் சாதியம்” என்பவர்கள் அடித்து கொள்வது கீழ் தரமானது. பார்பணியம் என்று கூவுபவர்களில் சிலர் மற்ற உயர் சாதியினராய் இருப்பதிலும் அவர்கள் தங்களை முற்போக்காளர்களாக காட்டி கொள்ள முனைவதிலும் உள்ள குரூரம் சாதாரணமானதல்ல.

இன்றைய தினத்தில் சாதியத்தை எதிர்க்க காரணம் ஒரு குறிப்பிட்ட சந்ததியினரை அறியாமையில் ஆழ்த்தி, உழைப்பை சுரண்டி கொழுக்கும் திருட்டு சமூகத்தின் காட்டு மிராண்டித்தனம் தானே ? இன்று சாக்கடை சுத்தம் செய்யும் நண்பரின் உழைப்பை வேண்டாத மத, சாதி அமைப்புகள் எவை ?

வேறு இன காரர்களுக்கு தனி பாத்திரங்களை தரும், அவர்கள் உணவருந்தியபின் இடத்தை சுத்தம் செய்யும் முட்டாள்கள் இருக்கும் நாட்டில் தான், தன் சொந்த கிராம மக்களை தன் வீட்டிற்கு உள்ளே வரக்கூட அனுமதிக்காத மேல்(?) இன ஈனப்பிறவிகளும் இருக்கின்றன.

எந்த மனிதனும் ஆரிய பவனிற்கு சென்று உணவருந்த முடிகிற இக்காலத்தில் தான், மக்கள் தன் சொந்த கிராமத்திலுள்ள உணவகத்தின் அருகில் கூட செல்ல இயல முடியாத நிலை உள்ளது.

காதலை பயன்படுத்தி தன் இனத்தை பெருக செய்யும் இனப்பெருக்க ஜந்துக்கள் இருக்கும் நாட்டில் தான், காதலர்கள் தேடி பிடித்து கொல்லும் காட்டு மிராண்டிகளும் இருக்கின்றனர்.

உட்பிரிவுடன் கூடிய இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்த கூடிய சூழ்நிலையில் தானே அடித்தட்டு மக்களிடையே கூட ஒற்றுமை உள்ளது ? 90 வயது பெரியவரும் 9 வயது சிறுவனின் முன் செருப்பை தூக்கி கொண்டு நடப்பதும் அச்சிறுவன் அம்முதியவரை “வாடா முனியா” என்று அழைப்பதும் எந்த இனம் ?

எனவே என் ஜீன் உயர்ந்தது என்று கூறும் யோக்கியம் எந்த வெங்காயத்திற்கும் கிடையாது.

 

சுயவஞ்சகம்

சாதியம் தவறானது அதை முன்னோர்கள் செய்தனர் என்பது சரி. அதனால் குற்ற உணர்வு கொள்வது வரை சரி தான். அக்குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட தாங்கள் யோக்கியவான்கள் என்பதை காண்பிக்க ”சாதி என்பது பார்ப்பனியம் மட்டும்” எனும் பிரச்சாரம் நடந்தால் அது தன்னை தானே ஏமாற்றி கொள்ளும் சுயவஞ்சகம் தான்  அது தமிழினத்தை மீண்டும் ஒரு சாதிய படுகுழியிலேயே தள்ளும்.

 

உங்களுக்கு உண்மையிலேயே குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட மனசாட்சியுடன் சிந்தித்தால்

  1. உங்கள் மனதிலிருந்து உம்முடைய பரம்பரையின் உயர்வு நவிர்ச்சி மனப்பான்மையை தூக்கி எறியுங்கள்
  2. மனிதர்களிடையே உயர்ந்தவன் என்பதும் தாழ்ந்தவன் என்பது பிறப்பின் வழி இல்லையென உங்களுடைய குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்கள்.
  3. முடிந்தவரை ஒடுக்கபட்டவர்களுக்கு உறுதுணையாயிருங்கள்

இவைதான் தமிழினத்திலிருந்து சாதியை ஒழிய செய்யும்; ”பார்ப்பனிய கொள்கை” பரப்புதல் அல்ல

 

இப்பதிவின் மூலம் சாதியை பார்ப்பணீயம் என்று பிரச்சாரம் செய்பவர்களும், நான் இந்த சாதியை சேர்ந்த மேலானவன் என்று அடையாளம் காட்டுபவர்களுக்கும் கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

 

இப்படிக்கு,

தனக்கு கீழே சிலரை வைத்து மிருக குணத்தையும், தனக்கு மேலே சிலரை உயர்த்தி அடிமை புத்தியையும் காட்டி கொண்டிருந்த கோடிக்கணக்கான தமிழர் பரம்பரையின் ஒரு ஜீன்

 

[குறிப்பு: இத்தகைய சிந்தணைகள் சில மாதங்களாகவே சிந்தையில் இருந்தது தான். சமீபத்திய வலையுலக நிகழ்வுகள் எரிச்சலை கிளப்பி பதிவை வெளியிட தூண்டியது]

ஹூசைன் X நிர்வாணம் X வியாபாரம்

கலை என்பது கடவுளுக்கும் கலைஞனுக்குமான கூட்டு பணி, கலைஞன் குறைவாக  ஈடுபடும் அளவிற்கு நல்லது ~அன்ரே கிட்

Art is a collaboration between God and the artist, and the less the artist does the better.  ~André Gide

 

சமீபத்தில் எம் எப் ஹீசைனின் தனிப்பட்ட வாழ்க்கையினால் மறுபடியும்அவரது ஓவியங்கள் பதிவர்களிடம் விவாத பொருளாகி இருக்கிறது. வலைப்பதிவுகளில் மிகப்பிரபலமான கலைஞர்களான எழுத்தாளர் திரு. ஜெயமோகனும், மன நல மருத்துவர் திரு. ருத்ரனும் தங்களது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இருவரின் பதிவுகளையும் படித்து வரும் எனக்கு, எழுத்தாளரான திரு. ஜெயமோகன் ஒரு ஓவியரின் பார்வையில் சரஸ்வதியின் படத்தை கலை கண்ணோடத்தோடு பார்க்கும் படி வாசகர்களை அறிவுறுத்தியதும், ஓவியரான திரு ருத்ரன் ”ஸ்ரீமாதா” விளக்கமளித்து இது இந்திய மதங்களின் வழிகாட்டுதல் அல்ல என்று அறிவுறுத்தியதும் ஒரு மாற்று அனுபவமாக இருந்தது.

 

பொதுவாக வெவ்வேறு கருத்துக்களை கொண்டிருப்பவர்களாக இருந்தாலும் பதிவுகளின் சாராம்சம் கடை நிலை வாசகனான என்னை போன்றவர்களுக்கு கீழ் வரும் கருத்துக்களை அறிவுறுத்துவதாக கருதுகிறேன்.

  1. இந்து மதம் அல்லது இந்திய மதம் என்பது தன் தெய்வங்களை நிர்வாணமாக வரைய அனுமதி அளிக்கிறது.
  2. ஒரு ஓவியனுக்கு தன்னுடைய படைப்பை தான் விரும்பிய வகையில் படைக்க கருத்து சுதந்திரம் இருக்கிறது.

 

கீழ்வரும் படங்களை பாருங்கள் இவை இரண்டுமே அரை நிர்வாண படங்கள் தாம். இவ்விரண்டு படங்களும் ஒரே விதமான விளைவுகளையா பார்வையாளர்களுக்கு அளிக்கின்றன ?

 

bagavaty_967 fw7hg9

 

 

  1. தெய்வங்களின் நிர்வாண உருவகங்கள் பெண்களை உயர்வு படுத்துவதாகவும், வழிப்பாட்டுகுறியதாகவும் இருந்தன. அல்லது குறைந்த பட்சம் உடல் / உடலுறவின் அழகியலை வெளிப்படுத்தவதாக கூட இருந்தன. ஆனால் ஹூசைன் வரையும் படங்கள் அவர் வணங்க தக்கதாகவோ அழகியல் வெளிப்பாடாகவோ உள்ளனவா? நீரில் மூழ்கி கொண்டிருக்கும்; முகமும், கழுத்துமில்லாத சரஸ்வதியின் மூலம்  அவர் விமர்சனங்களை அல்லவா முன் வைக்கிறார் ? (அவரது மேலும் சில படங்கள் பற்றி என்ன சொல்வதென்று தெரியவில்லை ?! அவை என்னை பொருத்த அளவில் இப்போது இருக்கும் சூழலில் வெளியிடுவதற்கு தகுதியானவை அல்ல)
  2. மதங்களிலுள்ள ஓட்டைகளை அவர் விமர்சனம் செய்ய துணிந்ததை வரவேற்கிறேன். ஆனால் அவர் தன் மதத்தின் கருத்துக்களில் இருந்தல்லவா ஆரம்பித்து இருக்க வேண்டும்? இதை தானே சீர்திருத்த வாதிகளான காந்தி, அம்பேத்கார், ஈவேரா முதலானோர் முன்வைத்தனர் ?  பிற மதத்தினரை புண் படுத்தி தன் மதத்தை முன் நிறுத்தும் மனம் எந்த விதமான பகுத்தறிவினால் ஆனதென விளங்கி கொள்ள முடியவில்லை.

 

--- *** ---

ஒவ்வொரு கலைஞனும் தன் தூரிகைகளை தன்னுடைய ஆன்மாவில் நிரப்பி தன் சுய இயல்பை தன் படங்களில் வரைகிறான். -ஹென்றி வார்ட் பீச்சர்.

Every artist dips his brush in his own soul, and paints his own nature into his pictures.  ~Henry Ward Beecher

 

இப்பதிவு  மதங்கள் பற்றியது மட்டுமள்ள திரு. ஹுசைன் பற்றியது கூட தான். அப்படியே கீழே உள்ள படங்களையும் பாருங்கள். இப்பதிவிற்காக தேடிய போது அவரின் மேலும் சில ஓவியங்கள் கிடைத்தன. இவைகளை எப்படி கலை கண்ணோட்டத்தோடு பார்ப்பதென்று புரியவில்லை ?

 

husain_hw_exhibition_announcement_m hansuperman

 

  1. தன்னுடைய கண்காட்சிக்கு வரும்படி அழைக்க கடவுள் உருவத்தை பயன்படுத்திய வியாபார தந்திரம்? அஞ்சா நெஞ்சர்களின் தேர்தல் நேர கடவுள் உருவ போஸ்கள் ஞாபகத்திற்கு வந்தால் அவர் பொறுப்பல்ல :)
  2. சூப்பர் மேன் பனியன், ஜெட்டியுடன் அனுமன். கடவுள்களின் உருவ பொம்மை பொறித்த பொருள்களுக்கு அமெரிக்காவில் அமோக கிராக்கி.  அமெரிக்க சந்தையில் ஓவியங்கள் விலை போக வேண்டாமா என்ன ? (இப்போதெல்லாம் உள்ளாடையுடன் கூடிய கலைப்படைப்பு என்றாலே ஒரு எழுத்தாளரின் ஞாபகம் தான் வருகிறது ;)

 

எனக்கென்னவோ அவருடைய வாழ்க்கை குறிப்பு, தன்னுடைய வியாபார திறமையின் மூலமும்,எதிர் மறையான புகழின் மூலம் வளர்ச்சியடைந்த ஒரு மனிதர்; தன்னுடைய சுய லாபத்திற்காக சொந்த நாட்டு மக்களிடம் நீங்காத பிளவை ஏற்படுத்தி விட்டு; அவர்களையும் கைவிட்டு தான் விரும்பிய சொர்க்க புரியில் வாழ போவதை போன்ற அனுபவத்தை தான் ஏற்படுத்துகிறது.

குறிப்பு:

திரு ருத்ரன், திரு ஜெயமோகன் வலைப்பதிவுகளில் அவர்களுக்கு எதிராக நிகழ்ந்த தனிமனித தாக்குதல்களுக்கு என்னுடைய எதிர்ப்பை இங்கு பதிவு செய்கிறேன். மதம் குறித்த கருத்துக்களில் மிகவும் இறுக்கமான நிலை நிலவும் இப்போதைய தமிழ் வலைப்பதிவு சூழ்நிலை கருத்து பரிமாற்ற விவாதங்களில் பங்கேற்பது குறித்த நீண்ட மன போராட்டத்தை என்னுள் ஏற்படுத்தியது. இருந்த போதும் மாற்றங்களுக்கான ஆரம்ப விதையாக சிறு நிகழ்வு கூட இருக்கலாம் அல்லவா?

அவதாருக்கு ஆப்பு :)

[பின் நவீனத்துவ லாஜிக், பகுத்தறிவு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு பதிவுலக நண்பர்களிடம்  அவதார் கற்பனையாக படும் பாடு. தப்பிப்பு குறிப்பு: பதிவு முற்றிலும் கற்பனையானது. பதிவுலகின் சில குறிப்பிட்ட பதிவுகளை ஞாபகப்படுத்தினால் தற்செயலானதே ;) ]

 

பின் நவீனத்துவ லாஜிக் நண்பர்

    ஜேம்ஸ் கேமரூன் என்பவரின் வாந்தி தான் அவதார். தனியாக நாவிக்களின் உடலையே செயற்கை கருவறையில்  உருவாக்க முடியும் விஞ்ஞானிகளால் ஒரு மனிதருக்கு காலை செயல்படுத்த முடியாமல் போவதாக காட்டி இருப்பது எவ்வளவு பெரிய ஓட்டை. எனவே படம் ஆரம்பிக்கும் போதே நமக்கு தலை சுற்ற ஆரம்பித்து விடுகிறது.

    சில மணி நேரங்களிலேயே அனைத்து நாவிக்களையும் வானூர்தி மூலம் அழிக்க முடிந்த மனிதர்கள் ஆரம்ப காட்சிகளில் கவச உடை அணிந்து கனரக வாகனங்களில் செல்வதும் கோட்டை போன்ற அரண்களும் ஏற்படுத்தி கொள்வதும் ஏன்? (2 மணி நேரம் வேஸ்ட்)

    நாவிக்கள் ஆங்கிலம் பேசுவார்கள் என்று காட்டி இருப்பதை விட மிகப்பெரிய ஜோக் என்ன ? பெரிய கண்டாமிருகங்களும், சிறுத்தைகளும் உலவும் காட்டில் பெரிய சிங்கம் இல்லாதது இயக்குனரின் கற்பனை குறைபாட்டை தான் காட்டுகிறது. இப்படம் பார்த்த கருமத்தை தொலைக்க சில உயர்ந்த பதிவுகளை போட வேண்டியது தான்

    இப்படத்தில் வரும் வன்முறை காட்சிகளும், ஆடை இல்லாமல் வரும் பெண்களும் ஜேம்ஸ் ஒரு சைக்கோ என்பதை காட்டுகிறது. முழு ஆணாதிக்க படமாகிய இதை மெல்லிய பெண்கள் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். இதை போன்ற ஒரு படம் எடுப்பதற்கு பதில் Cannibal Holocaust, Caligula [நன்றி பாலா] போன்ற பின் நவீனத்துவ படங்கள் 100 எடுத்திருக்க முடியும். ஏனெனில் இப்படங்கள் மசாலா படங்கள் என்று சொல்லி விட்டே எடுக்க படுகின்றன.

[அப்பாடா இன்றைய தினத்தை ஒப்பேற்றியாகி விட்டது. நம் நண்பர்களுக்கு சேட் செய்து ஓட்டு போட சொல்ல வேண்டியது தான்]

 

பகுத்தறிவு நண்பர்

    இப்படம் நாவிக்களின் கடவுளாகிய புனித மரத்தை பற்றியது. மனிதர்களுக்கு மேலாக ஒரு சக்தி இருப்பதாகவும் அது தங்களை காப்பாற்றும் என்று நம்பும் நாவிக்கள் அழிவது பகுத்தறிவிற்கு பொருத்தமானதாக இருக்கிறது. ஆனால் கடைசியில் ஒரு மரத்தால் (கடவுளின் செயலால்) உயிர் காப்பாற்றபடும் என்று காட்டி இருப்பது எழுத்தாளரின் குடுமியை நமக்கு காட்டுகிறது.

 

    கூடுவிட்டு கூடு பாயும் செயலை காட்டி இருப்பதை விட இப்படம் என்ன பெரியதாக சாதித்து இருக்கிறது ? முழுக்க முழுக்க ஒரு இந்து பார்ப்பனிய கருத்துக்களை திணிக்கும் படமாகிய இவற்றை புறக்கணிக்க வேண்டுமென நம் தலைவர் 1935ம் வருடமே நம் புனித ஏட்டில் கூறி இருப்பதால், அவரின் 2010ம் வருடத்தில் பொருந்தி வரும் தீர்க்க தரிசனத்தை நாம் உணர வேண்டும். வாழ்க அவர் நாமம். [இதற்கு நாமே தமிழ் மணத்தில் 3 ஓட்டுகள் போட வேண்டியது தான்]

 

ஏகாதிபத்திய எதிர்ப்பு நண்பர்

    நாவிக்கள் எனும் பிற்போக்கு மக்கள் அறிவியல் அற்ற மலைகுடிகள் அறிவியலில் முன்னேறி இருக்கும் மனிதர்களுக்கு தேவையான மூலப்பொருள்களை தர மறுத்து போர் புரியும் படம் தான் இது. சிங்கூரிலும் இதை போலவே நடந்தது குறிப்பிட தக்கது. நிலம், பணம், மூல பொருள்கள் அனைத்தும் அரசுக்கு சொந்தம் எனும் மிகப்பெரிய தத்துவம் லெனின் எனும் தீர்க்க தரிசியால் உண்டாக்க பட்டது ஏன் என மக்கள் புரிந்து கொள்ளலாம்.

    நாவிக்கள் எனும் பெரும்பான்மை இன மக்கள் மனிதர்களாகிய சிறுபான்மை இன மக்களை அழித்து ஒழிப்பது தான் இந்த ஏகாதிபத்திய வாத படம். தேசிய வாதத்தினாலும், இன வாதத்தினாலும் தான் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்ல பட்டு இருப்பதை நாம் அறிவோம். மனிதர்களாகிய சிறுபான்மை மக்கள் எது செய்தாலும் அது நன்மையானது தான் எனும் நம் அறிய தத்துவம் மறந்த இயக்குனருக்கு கடும் கண்டனங்கள். (எப்போதும் போல நம் இயக்க தொண்டர்கள் திரட்டியில் பதிவு வரும் வரை ஓட்டு போட கேட்டு கொள்ள படுகிறார்கள்)

 

இப்படிக்கு,

எப்படத்திற்கும் லாஜிக் காண்போர் சங்கம்.

என்னாதிது சின்ன புள்ள தனமா கண்ணை துடை கண்ணை துடை

என்று ஆருயிர் நண்பன் கூறியும் கேட்காமல் திரும்ப அந்த கேள்வியை கேட்டான் நண்பன் X, “என்ன பார்த்து எதுக்கு மச்சான் அந்த கேள்வியை கேட்டான் ?”.

”மாப்ள, நீ செஞ்ச வேலைக்கு கேள்வி கேட்டுட்டு விட்டார்களே, இதே வேலையை உனக்கு செய்தால் நீ என்ன செய்திருப்பியோ தெரியாது”, என்றான் நண்பன்.

”மச்சான் நான் செஞ்சது தப்பா ? சொல்லு நான் செஞ்சது தப்பா ?, நம்ம்பி அவன் ஷோக்கு முன்னாடி நாளே போனேன். நான் எதிர்பார்த்த அளவிற்கு இல்லைன்னு சொல்றது தப்பா ? நாட்டுலே கருத்து சுதந்திரமே இல்லையா ? என்ன நாடு இது ? என்ன மக்கள் இவர்கள் ?”

5354_1

 

“மாப்ள நம்முடைய கருத்து சுதந்திரத்திற்கும், அடுத்தவன் கழுத்தை நெரிக்கறத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. முதல்ல நீ அதை புரிஞ்சுக்கணும்.

முதல்ல நீ செய்த விமர்சன முறை. மேலாண்மையில் ஒரு விதி இருக்கிறது. விமர்சனங்களை சாண்ட்விச் மாதிரி தரணும்னு.

அதாவது ஒன்றை பற்றி விமர்சிக்க ஆரம்பிக்கும் போது அதை பற்றிய நல்ல விசயங்கோளட ஆரம்பிக்கணும்.

நடுவில தவறு என்ன திருத்தி கொள்ளும் முறை என்ன என்பது பற்றி சொல்லணும்

கடைசியில் அவர் திருத்தி கொண்டால் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும் என்பது பற்றி.

 

    மாப்ள விடிய விடிய உட்கார்ந்து பார்த்தது சரி, அதுல பாராட்டுற அளவிற்கு ஒன்னுமே இல்லையா ? இருந்தது எனில் அதை பற்றி எங்காவது சொல்லி இருக்கிறாயா ? நீ உன்னையே கேட்டுக்க.  எல்லோரும் தான் விமர்சனம் செய்தாங்க அவன் பொதுவா கேட்ட கேள்வி உனக்கு மட்டும் உரைக்குதுண்ணா உன் மனசாட்சி உறுத்துதுண்ணு தான் அர்த்தம். இப்போதெல்லாம் வழி காட்ட வேண்டியவங்களே தனக்கு பிடிக்காத படைப்புக்களை பற்றி மூத்திரம் பெய்வேன், கிழித்து போடுவேன் என்று ஆரம்பிக்க போய் தான் நம்ப மாதிரி ஆட்கள் எல்லாம் ஆடுறோம்.

 

இரண்டாவது கருத்து சுதந்திரம்:

    நீ உன்னுடைய கடையில் உன் கருத்தை தாராளமா சொல்லு. அத யார் கேட்க போறா. இல்லை ஒரே கருத்து இருப்பவன் கடைக்கு போய் கும்மி அடி. அடுத்தவன் கடை ஒவ்வொண்ணிலும் செட்டா போய் எவனாது நல்லா சொன்னால் போதும் குதறி வைச்சிட்டு வந்தமே அதுக்கு பேர் கருத்து திணிப்பு இல்லாமல் என்ன ? அப்ப எங்க போச்சு கருத்து சுதந்திரம் ?

     நமக்குன்னு ஒரு கூட்டம் சேர்ந்தவுடனே நாம என்ன சொன்னாலும் மக்கள் தலையை ஆட்டுவாங்களான்னு யோசிக்க மறந்துட்டோம். இப்பயெல்லாம் மக்கள் முன்ன மாதிரி இல்லை. எதை எடுத்தாலும் யோசனை செய்றாங்க. எவனா இருந்தாலும் தகவல் அறியும் சட்டம் போல எதையாவது ஒன்னை கேள்வி கேட்டு கிட்டே இருக்கானுங்க.

 

    இன்னைக்கு இவன் நாளைக்கு எவனோ. நீ மாறாத வரைக்கும் உனக்கு இந்த மாதிரி கேள்விகள் வருவதை தவிர்க்க முடியாது. பார்த்துக்க”

 

----

    பொதுவாக திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதியதே இல்லை. என் பதிவை பார்த்தாலே தெரியும். நான் எழுதிய முதல் விமர்சன தொகுப்பே ஆயிரத்தில் ஒருவன் தான்.  நம்முடைய பதிவை நேர்மையான முறையில் சிலர் விமர்சனம் செய்யும் போதே நமக்கு கோபம் வந்து விடுகிறது. ஆனால் ஏகப்பட்ட சரித்திர ஆராய்ச்சிக்கு பிறகு வந்திருக்கும் ஒரு படத்தை ஒரே வார்த்தையில் வாந்தி, குப்பை, கர்மம் என்பது சரியானது தானா ?

 

    நான் முன்பு எழுதிய பதிவு கடுமையாக இருந்ததாக நண்பர்கள் சிலர் அறிவுறுத்தினர். அதற்கு தமிழ் மேல் கொண்ட பற்று தான் காரணமே ஒழிய வேறு தனிப்பட்ட காரணங்கள் இல்லை. இரண்டாவது பதிவுலகில் நான் வைத்திருக்கும் நம்பிக்கை. மீடியாக்களுக்கும், பதிவுகளுக்கும் உள்ள வித்தியாசமே கருத்து திணிப்பும், சுய விளம்பரங்களும் இல்லாமல் இருப்பது தான். இப்போதைக்கு மக்களுக்கு இருக்கும் ஒரே கருத்து சுதந்திர ஊடகம் வலைப்பதிவு ஒன்று தான். இதிலும் அரசியல் செய்வது தாங்கி கொள்ள முடியாமல் போய் விட்டது.

    சில கழகங்கள் ஆட்கள் வைத்து ஓட்டு போட்டு திரட்டிகளில் தினமும் தங்கள் கருத்துக்களை திணிப்பது தெரிந்தது தானே? இப்போது சில கார்ப்பரேட் நிறுவனங்கள் வேறு இதில் நுழைய பார்க்கின்றன. கருத்து திணிப்புக்கு ஆதரவான எந்த ஒரு செயலையும் இவ்வூடகத்தில் நாம் அணுமதிக்க கூடாது.

    என்னை பொறுத்த வரையில் ஒரு தவறு நடக்கும் போது அமைதியாக இருப்பது அந்த தவறில் பங்கேற்பது போல தான். தமிழனிற்கு சூடு சொரணை இல்லை எனும் வாதம் எழும் முன்னரே இந்த அடிப்படை கேள்விகளை கேட்கும் தைரியமாவது வளர்த்து கொள்வோமே?

 

25 வாக்குகளும் 600க்கும் மேற்பட்ட வருகைகளும் எனக்கு நம்பிக்கையையே அளித்துள்ளன. கேள்விகள் கேட்க படுவதற்கே.

 

கேள்விகளுடன் நண்பன்,

சபரிநாதன் அர்த்தநாரி.

 

[இப்பதிவும் எல்லோர்க்கும் பொதுவானது தான் நான் உள்பட

தயவு செய்து இதற்கும் யாராவது தெலுங்கு பதிவை / படம் பாருங்கள் என்று கருத்து கூற வேண்டாம் அழுதுடுவேன். :) படுதா காலி இதற்கு மேல் ஆயிரத்தில் ஒருவன் எதிர் வினை கிடையாது :) ]