விளக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விளக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பரிணாமமும் தமிழும் -2

   பகுதி-1ல் பிரபஞ்சத்தின் ஆரம்ப நிலை தத்துவம்(பரபிரம்மம்) எவ்வாறு 3 தன்மையுள்ள (குணங்கள்) தத்துவங்களாக உருமாற்றம் அடைந்தன என்று விளக்கப்பட்டது. இப்பகுதியில் மாயை, விஷ்ணு, பிரம்மா, ருத்ரன், மனிதர்கள், பஞ்ச பூதங்கள் மற்றும் முக்தி எனும் தத்துவங்கள் எவ்வாறு குணங்களால் பகுக்க படுகின்றன என்பது விளக்கப்பெறும்.

இந்த அகண்ட பரிபூரண சச்சிதாநந்தப் பிரமத்தினிடத்திலே (புருடனிடத்துச் சாமர்த்திய ரூபசக்தி போலப் பிரமதின்கண் அனாதிசித்தமாயிருக்கிற மூலப்பிரகிருதியென்னுஞ் சத்திக்குச் சுத்திரஜிதத்தை உபமானமாகச் சொன்னது அநிர்வசனியத் தன்மையென்னும் பொருள் தோன்ற என்க). சுத்தியில் ரஜிதம்போல் மூலப்பிரகிருதியுயென்னும் ஒரு சத்தி உண்டு. அந்த மூலப்பிரகிருதியும் விகிர்த குணமாகிய முக்குணத்தோடு கூடியுருக்கும் அந்தப் பிரகிருதியின் சத்துவ குணத்தை மாயையென்றும், சர்வக்ஞவுபாதியென்றும், ஈசுரகாரண சரீரமென்றுஞ் சொல்லப்படும். இந்த மாயையினிடத்திலே நிர்மல சலப்பிரதிபிம்பம் போலப் பிரமம் சுலட்சணமாகப் பிரதிபிம்பிக்கும். இந்தப் பிரதிபிம்ப சைதன்னியத்தைச் சர்வக்ஞனாகிய ஈசுரனென்று சொல்லப்படும்.

   ப்ரம்மம் சத் சித் ஆனந்தம் என பரிபூரணமாக நிறைந்து இருந்தது.  இத்தத்துவத்திற்கு மூல பிரகிருதி எனும் சக்தி உண்டு. மூலபிரகிருதி முக்குணங்களை கொண்டு உள்ளதால், ப்ரகிருதியின் சத்துவகுணம் மாயை [6] (சர்வக்ஞவுபாதி, ஈசுரகாரண சரீரம்) என்று அழைக்கபடும். மாயையில் மறைபொருளாக பிரம்மம் பிரதிபளிக்கும். இத்தத்துவம் ஈசுவரன் (கடவுள்) என்று அறியபடும்.

 

இந்தச் சத்துவகுண மாயையினிடத்திலே சத்துவத்தில் சத்துவம், சத்துவத்தில் ரஜஸு, சத்துவத்தில் தமஸு என மூன்று குணங்கள் உண்டு. இவைகளில் சத்துவத்தில் சத்துவம் பிரதானமாகும்போது அதில் பிரதிபிம்பித்த ஈசுரன் ஜகத்தை இரக்ஷிக்கையினால் விஷ்ணு வென்றும், சத்துவத்தில் ரஜஸு பிரதானமாகும்போது அதில் பிரதிபிம்பித்த ஈசுரன் ஜகத்தை சிருஷ்டிக்கையினால் பிரமாவென்றும், சத்துவத்தில் தமஸு பிரதானமாகும்போது அதில் பிரதிபிம்பித்த ஈசுரன் ஜகத்தை உபசம்மாரம் பண்ணுகையினால் உருத்திரனென்றும் சொல்லப்படுவன். இப்படி மூலப் பிரகிருதியின் சத்துவகுண கற்பனை சொல்லப்பட்டது.

மாயை என்பது சத்துவ குணம் கொண்டது. இச்சத்துவ குணத்தில் மூன்று விதமான படி நிலைகள் உள்ளன.

  1. மாயையின் பிரபஞ்சத்தை நிலை பெற செய்யும் தன்மை விஷ்ணு (சத்துவத்தில் சத்துவம் ) என்றும் [6.1],
  2. படைக்கும் தன்மை (சத்துவத்தில் ரஜஸு) பிரமா என்றும் [6.2], 
  3. மறு உருவாக்கும் தன்மை (சத்துவத்தில் தமஸு)  ருத்ரன்[6.3] என்றும் பெயர் பெறும்.

 

இனி மூலப்பிரகிருதியின் இரஜோகுணம் அநேகரூபமாய்ப்பிரிந்து அவித்தைகளென்றும், ஜீவகாரண சரீரங்களென்றும் ஒன்றற்கொன்று தாரதம்மியமாகச் சொல்லப்படும். இந்த அவஸ்தைகளிடத்திலும் மலின சலப் பிரதி பிம்பம் போலப் பிரமசைதன்னியம் பிரதிபிம்பிக்கும். இந்தப் பிரதிபிம்ப சைதன்னியங்களை கிஞ்சிக்ஞரென்றும், சீவ சிதாபாசரென்றும், பிராக்ஞரென்றும் சொல்லப்படும். இந்த அவித்தைகளிடத்திலேயும் ரஜஸில் சத்துவம், ரஜசில் ரஜசு, ரஜசில் தமசு என மூன்று குணங்கள் உண்டு. இரஜஸில் சத்துவம் பிரதானமாகும்போது அதில் பிரதிபிம்பித்த சிதாபாசன் தத்துவக்ஞான நிஷ்டனாவன். இரஜஸில் ரஜசு பிரதானமாகும்போது அதில் பிரதிபிம்பித்த சிதாபாசன் காமக்குரோதபரனாய்க் கர்மநிஷ்டனாவன் இரஜஸில் தமசு பிரதானமாகும்போது அதில் பிரதிபிம்பித்த சிதாபாசன் சோம்பல் நித்திரை மயக்கம் ஆகிய இவைகளை யடைவன். இப்படி மூலப் பிரகிருதியின் இரஜோகுண கற்பனை சொல்லப்பட்டது.

   மூலப்பிரகிருதியின் இரஜோகுணம் பல்வேறு தத்துவங்களாக பிரிந்து அவித்தை, ஜீவ காரண சரீரம் [7] என்றும் பிரிக்க படுகின்றன. இத்தத்துவத்தின் பிம்பமான சைதன்யம்(படைப்புகள்) கிஞ்சிக்ஞர், சீவ சிதாபாசர், பிராக்ஞர் என்று பெயர் பெரும். இந்த ரஜோ குணத்தில் மூன்று விதமான படி நிலைகள் உள்ளன.

  1. ”ரஜஸில் சத்துவம்” குணம் கொண்ட படைப்புகள் தத்துவம், ஞான நிஷ்டம் போன்ற தன்மைகள் பெறும் [7.1].
  2. ”இரஜஸில் ரஜசு” குணம் கொண்ட படைப்புகள் காமம், குரோதம், கர்மம்  போன்ற தன்மைகள் பெறும் [7.2].
  3. ”ரஜஸில் தமசு” குணம் கொண்ட படைப்புகள் சோம்பல், நித்திரை, மயக்கம் போன்ற தன்மைகள் பெறும் [7.3].

 

இனி மூலப்பிரகிருதியின் தமோ குணத்திற்கு ஆவரணம், விக்ஷேபம் என இரண்டு சத்திகள் உண்டு. இவ்விரண்டில் ஆவரணசத்தியானது தத்துவ ஞானியையும் ஈசுரனையுந் தவிர மற்றைச் சீவருக்கெல்லாம் சரீரத்திரயம், சிதாபாசன், சாக்ஷி சைதன்னியம் என்னு மிவைகளின் ஒன்றற்கொன்றுள்ள பேதம் தெரியவொட்டாமல் மறைக்கும். இதனால் மறைக்கப்பட்ட சீவர் இருபத்தொன்பது தத்துவங்களையும் ஒருமைப்பாடாக நானென்று அபிமானிப்பர். இந்த அபிமானத்தை அகங்காரக் கிரந்தியென்றும், சம்சாரபந்தமென்று சொல்லப்படும். சற்குரு கடாக்ஷத்தினாலே இந்த ஆவரணம் நீங்கி இருபத்தொன்பது தத்துவங்களின் ஒன்றற்கொன்றுள்ள பேதந் தெரிகின்றதே முத்தி. இப்படி ஆவரண சத்தியின் காரியஞ் சொல்லப்பட்டது.

இனி விக்ஷேபசத்தியினின்றும் சத்தகன் மாத்திரையான ஆகாசம் தோன்றிற்று. ஆகாசத்தினின்றும் பரிசதன் மாத்திரையான வாயு தோன்றிற்று. வாயுவினின்றும் ரூபதன்மாத்திரையான அக்கினி தோன்றிற்று, அக்கினியினின்றும் ரஸதன் மாத்திரையான அப்பு தோன்றிற்று, அப்புவினின்றும் கந்தகன் மாத்திரையான பிருதிவி தோன்றிற்று. இந்த சூக்ஷும பஞ்சபூதத்திற்குக் காரணமாயிருக்கின்ற விக்ஷேப சத்தியினிடத்திலே தமஸில் சத்துவம், தமஸில் ரஜஸு, தமஸில் தமஸு என்னுமிவை அற்பங் கருவாக விருந்தபடியால் அதன் காரியமாகிய இந்தத் தன்மாத்திரைகளான பஞ்சபூதங்களும் முக்குணங்களுடனே பிறந்தன. இந்தப் பஞ்சபூதங்கட்குத் தன் மாத்திரைகளென்றும், அபஞ்சீகிருத பூதங்களென்றும், சூக்ஷுமபூதங்களென்றும், முக்குண பூதங்களென்றும் சாஸ்திரங்களில் நாமஞ் சொல்லப்படும்.

 

மூலப்பிரகிருதியின் தமோ குணத்திற்கு ஆவரணம், விக்ஷேபம் என இரண்டு சத்திகள் உண்டு.

1. ஆவரணம் [8]

   ஆவரண சக்தியானது எல்லா சீவர்களுக்கும் (கடவுளையும், முக்தியடைந்தவர்களையும் தவிர) தன்மையாக உள்ளது. இத்தன்மை மூலபொருள், சாட்சி, விளைவு இவற்றிற்கிடையேயான வித்தியாசம் தெரிய விடாமல் மறைக்கும். இதனால் மறைக்கப்பட்ட மனிதர்கள் இருபத்தொன்பது தத்துவங்களையும் ஒருமைப்பாடாக “நான்” என்று கற்பனை செய்து கொள்வர். இதற்கு அகங்கார கிரந்தி என்றும் சம்சார பந்தம் என்றும் சொல்ல படும்.

   முக்தி என்பது இந்த 29 தத்துவங்களுக்கு இடையேயான வித்தியாசம் தெரிவது.

 

2. விக்ஷேபம் [9]

   அடிப்படை இயற்கையான பஞ்ச பூதங்களின் பரிணாம வளர்ச்சி விளக்க பெறும். ஆகாயம் => வாயு => அக்னி => அப்பு => நிலம். பஞ்ச பூதங்கள் விக்ஷேபம்(முல பிரகிருதியின் தமோ குணம்- தமஸில் சத்துவம், தமஸில் ரஜஸு, தமஸில் தமஸு) இருந்து பிறந்ததால், பஞ்ச பூதங்களும் முக்குணங்களுடன் உள்ளன.  பஞ்ச பூதங்களுக்கு தன் மாத்திரைகள், அபஞ்சீகிருத பூதங்கள், சூக்ஷுமபூதங்கள், முக்குண பூதங்கள் என்று வேறு பெயர்களும் உள்ளன.

 

[தொடரும்]

காந்தியின் மீது கல்லெறிதல்

சமீபத்தில் படித்தவைகளில் காந்தி ஒரே விதமான கருத்து மத ரீதியாக முற்றிலும் எதிர் நிலைகளில் இருப்பவர்களால் பரப்ப பட்டது.

”காந்தி சாதியை ஆதரித்தார். அவர் ஒர் சாதி வெறியர்”

இதே விதமான குற்றசாட்டு பாரதியாரை நோக்கியும் வீசப்படுகிறது.

 

இவர்களின் மீது வீசப்படும் குற்றசாட்டுகளுக்கு ஆதாரமாக காட்டபடுவது இவர்கள் பயன்படுத்திய வர்ணாசிரமம் என்ற வார்த்தைகளின் அடிப்படையில். ஆனால் வர்ணாசிரமம் எனும் சொல் பழைய நூட்களில் முற்றிலும் வேறான நிலையில் பயன்படுத்த பட்டது. இப்போதைய சாதி எனும் பொருளில் அல்ல. கீதையை அதன் உண்மையான பொருளில் வாசிப்பவர்களுக்கு மனு நீதியில் சொல்லப்பட்ட திரிக்கபட்ட வர்ணாசிரமத்தில் உள்ள  முரண் வெளிப்படையாக தெரியும்.

 

    • கீதையில் விளக்கப்படும் வர்ணாசிரமம் வேறு இப்போதய சாதி வேறு . (மனு நீதி முதற் கொண்டு)
    • குலத்தொழிலும், பிறப்பின் அடிப்படையிலான சாதியும் ஒழிக்க பட வேண்டும்.
    • வேலையை வைத்து உயர்வு தாழ்வு கற்பித்தலும் ஒழிய வேண்டும்.

      http://sabaritamil.blogspot.com/2009/11/blog-post.html

 

ஆனால் சாதி என்பது குலத்தொழிலின் அடிப்படையில் சில சமூகத்தினரை இழிபொருளாக பார்க்கபடும் நிலை வந்ததுமே சமூகத்தை முழுமையாக கேடு கெட்ட நிலைக்கே கொண்டு சென்றது.


DSC02078//காந்தியின் ஆரம்பகால எண்ணங்கள் இவை. வருணப்பிரிவு என்பது சமூகத்தில் ஓர் ஒழுங்கை உருவாக்கும்பொருட்டு இயல்பாக பரிணாமம் அடைந்துவந்த ஒன்று.//

//1931ல் காந்தி எழுதினார் ” நான் நவீன அர்த்தத்தில் சாதி அமைப்பில் நம்பிக்கை கொள்ளவில்லை. அது ஒரு சமூகத்தீங்கு, முன்னேற்றத்துக்கு தடை. மனிதர்கள் நடுவே உள்ள எவ்வகையான ஏற்றதாழ்வுகளையும் நான் நம்பவில்லை. நாமெல்லாம் மூற்றிலும் சமம். சமத்துவம் என்பது ஆன்மாவிலே ஒழிய உடல்களில் அல்ல….புறவயமாக தெரியும் //


//சாதியை அழிப்பதற்கு மிகச்சிறந்த மிகவேகமான தடையற்ற வழி என்னவென்றால் சீர்திருத்தவாதிகள் அதை தங்களிடமிருந்தே தொடங்குவதுதான். தேவையென்றால் அதற்காக அவர்கள் சமூகத்தின் புறக்கணிப்பைக்கூட ஏற்றுக்கொள்ளவேண்டும் .மாற்றம் படிபப்டியாக ஆனால் உறுதியாக நிகழும்”
சொன்னதை தானே செய்வதற்கும் காந்தி தயாரானார். மார்க் லிண்ட்லே கோராவுக்கும் காந்திக்கும் இடையேயான உறவைச் சுட்டிக்காட்டுகிறார். பிறப்பால் பிராமணரான கோரா தன் சாதியை துறந்தார்.அதற்காக அவர் வேலையை விட்டு துரத்தப்பட்டார். தலித் மக்கள் நடுவே சேவைசெய்த கோராவை 1944 ல் காந்தி தன் ஆசிரமத்துக்கு அழைத்து தன்னுடன் வைத்துக்கொண்டார்.//


//1945 ல் காந்தி எழுதினார். ”பெண்ணுக்கு எந்த தகுதி இருந்தாலும் திருமணம் ஒரே சாதிக்குள் என்றால் என் ஆசீர்வாதத்தை தயவுசெய்து கோராதீர்கள். அவள் வேறு சாதி என்றால் மட்டுமே நான் என் ஆசீர்வாதத்தை அனுப்புவேன்”//


//இனிமேல் கவனியுங்கள், காந்தியை அவதூறுசெய்து வெளியிடப்படும் எந்த ஒரு ஆய்வேட்டுக்கு அல்லது நூலுக்குப் பின்னாலும் ஓர் அயல்நாட்டு பல்கலைக் கழகம் இருக்கும். அல்லது ஏதேனும் ஒரு கிறித்தவ மதப்பரப்பு நிறுவனத்தின் நிதியுதவி இருக்கும்.//

--http://www.jeyamohan.in/?p=4103

 

[படம்: பிப்ரவரி 23, 1946 அன்று தாழ்த்தப்பட்டவர்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டபோது, முதல்முறையாக காந்தி அக்கோவிலுக்குள் செல்லும்காட்சி.
http://jssekar.blogspot.com/2009/08/blog-post_23.html]

 

சாதியின் இன்றைய நிலை

    • மக்களிடையே உருவாக்க படும் பரம்பரை பெருமை எனும் மந்தை குணமே இன்றைய சாதி நிலமைக்கு முதற் காரணமாக இருக்கிறது.
      • பரம்பரை பரம்பரையாக சிறுமை படுத்த பட்ட மக்கள், தங்களுக்கு அடிமையாக இருப்பதையே விரும்பும் தன் முனைப்பு
      • தங்களுடைய  தன் இன மக்கள் ”நாடாண்ட வம்சம்”, “கட்டியாண்ட வம்சம்” என்று போலி பெருமிதங்களின் மூலம் ஏற்றி விடப்படும் சாதி வெறி
    • பொருளாதார தேவைகள்
      • சில மக்களை அறியாமையில் ஆழ்த்தி அடிமை பணிகளில் ஈடுபடுத்தி பொருளாதார ரீதியாக சுரண்டுவது
      • பொருளாதார ரீதியாக முன்னேறிய தன் சாதி மக்களிடம் கிடைக்கும் பொருளாதார பலன்கள் எனும் நம்பிக்கை
    • திரிக்கப்பட்ட மத நம்பிக்கைகள்

      http://sabaritamil.blogspot.com/2010/04/blog-post.html

 

21ம் நூற்றாண்டில் சங்கங்கள் இல்லாத சாதியே இல்லை எனும் நிலைமை உருவாகி விட்டது, சாதி ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்பட்ட மிகப்பெரும் பின்னடைவு. ஒரு திறந்த சவால் என்னிடமிருந்து இன்றைய சாதி சங்க தலைவர்களில்,

  1. எத்தணை பேர் மனு நீதியை கேள்வி பட்டிருக்கிறார்கள்? (மனு நீதியின் மக்களை வகைப்படுத்தல் திரிக்கபட்டது)
  2. எத்தணை பேர் அந்நூட்களை பார்த்து இருக்கிறார்கள் ?
  3. எத்தணை பேர் அதன் பொருள் உணர்ந்து இருக்கிறார்கள்?
  4. எத்தணை பேர் அதனை ஏற்று கொள்கிறார்கள் ? (ஏனெனில் அதில் தவறாக கூறப்பட்ட பிரிவு மக்கள் கூட சாதி வெறியில் முன்னணியில் இருக்கின்றனர் !!!)

 

திரிக்கப்பட்ட வர்ணாசிரமம் மட்டுமே சாதிக்கான காரணமாக இருப்பது 21ம் நூற்றாண்டில் காலாவதியாகி விட்டது. பொருளாதார ரீதியான காரணம் பூதாகரமாக இருக்கிறது.  நோய்க்கான காரணம் ஒன்றாக இருக்க நாம் தவறான சிகிச்சை செய்து வருகிறோம் என்பதே சாதி சங்கங்கள் பெருகி இருக்கிறது என்பதற்கான காரணங்கள்.

 

காந்தியும், பாரதியும் குறை சொல்லும் முன்னர் அவர்களின் வாழ்க்கை, வாழ்ந்த சூழலையாவது தெரிந்து கொள்வதே அடிப்படை நேர்மை. இல்லையெனில் நாம் கூறும் கருத்துக்கள் நம்மை கோமாளியாகவே காட்டும்.

சாதி இல்லாத தமிழினம் !! (சாதியமும், சுயவஞ்சகமும்)

சமீபத்தில் சாதியை தமிழினத்திலிருந்து முற்றிலுமாக நீக்கும் அதி முக்கிய கண்டு பிடிப்பு வலையுலகில் நடந்திருக்கிறது.  இக்கண்டுபிடிப்பின் படி தமிழர்களிடம் சாதி இல்லை என்பதை கீழ் காணும் வகையில் சுலபமாக  நிறுவ முடியும்.

 

      1. சாதி இந்து மதத்தில் உள்ளது
      2. சாதி ஜீன் வழி பரம்பரை பரம்பரையாக வருகிறது
      3. தமிழர்கள் இந்துக்கள் அல்ல & பார்ப்பனர்கள் தமிழர்கள் அல்ல
      4. எனவே ஜீன் வழி பார்பனர்கள் சாதி வெறி பிடித்தவர்கள். என் ஜீன் வழி நான் சாதி வெறி பிடித்தவன் இல்லை (கூடவே என் பரம்பரை மக்களும் சாதி வெறி பிடித்தவர்கள் இல்லை! எப்பூடி ??)

 

ஆகவே சாதி ஒழிப்பு செய்ய சுலபமான வழி நான் ஒரு இந்து இல்லை என உரக்க கூவி கொண்டே சரஸ்வதி மந்திரம் சொல்வது தான். நீங்கள் சைவம், வைணவ, இஸ்லாமிய அல்லது கிறிஸ்தவ மதங்களில் ஒருவர் ஆகிவிடுவீர்கள் உங்களுடைய பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குறிய ஜீன் தொடர்பு உடனடியாக அறுக்க பட்டு உடனடியாக சுய பாவ மன்னிப்பு வழங்கப்படும். உங்கள் முன்னோர்கள் செய்த சாதிய விசத்திற்குரிய குற்ற உணர்வை கூட நீங்கள் எளிமையாக விட்டு விடலாம்.

 

சாதியத்தின் நவீன முகங்கள்

மக்களிடம் மாட்டி கொண்ட திருடர்கள் ஒருவருக்கொருவர் குற்றம் கூறி தான் யோக்கியவான் என்று நிரூபிக்க முயல்வது போல், இன்றைய சூழ்நிலையில்  ”பார்ப்பனீயம்” & ”உயர் சாதியம்” என்பவர்கள் அடித்து கொள்வது கீழ் தரமானது. பார்பணியம் என்று கூவுபவர்களில் சிலர் மற்ற உயர் சாதியினராய் இருப்பதிலும் அவர்கள் தங்களை முற்போக்காளர்களாக காட்டி கொள்ள முனைவதிலும் உள்ள குரூரம் சாதாரணமானதல்ல.

இன்றைய தினத்தில் சாதியத்தை எதிர்க்க காரணம் ஒரு குறிப்பிட்ட சந்ததியினரை அறியாமையில் ஆழ்த்தி, உழைப்பை சுரண்டி கொழுக்கும் திருட்டு சமூகத்தின் காட்டு மிராண்டித்தனம் தானே ? இன்று சாக்கடை சுத்தம் செய்யும் நண்பரின் உழைப்பை வேண்டாத மத, சாதி அமைப்புகள் எவை ?

வேறு இன காரர்களுக்கு தனி பாத்திரங்களை தரும், அவர்கள் உணவருந்தியபின் இடத்தை சுத்தம் செய்யும் முட்டாள்கள் இருக்கும் நாட்டில் தான், தன் சொந்த கிராம மக்களை தன் வீட்டிற்கு உள்ளே வரக்கூட அனுமதிக்காத மேல்(?) இன ஈனப்பிறவிகளும் இருக்கின்றன.

எந்த மனிதனும் ஆரிய பவனிற்கு சென்று உணவருந்த முடிகிற இக்காலத்தில் தான், மக்கள் தன் சொந்த கிராமத்திலுள்ள உணவகத்தின் அருகில் கூட செல்ல இயல முடியாத நிலை உள்ளது.

காதலை பயன்படுத்தி தன் இனத்தை பெருக செய்யும் இனப்பெருக்க ஜந்துக்கள் இருக்கும் நாட்டில் தான், காதலர்கள் தேடி பிடித்து கொல்லும் காட்டு மிராண்டிகளும் இருக்கின்றனர்.

உட்பிரிவுடன் கூடிய இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்த கூடிய சூழ்நிலையில் தானே அடித்தட்டு மக்களிடையே கூட ஒற்றுமை உள்ளது ? 90 வயது பெரியவரும் 9 வயது சிறுவனின் முன் செருப்பை தூக்கி கொண்டு நடப்பதும் அச்சிறுவன் அம்முதியவரை “வாடா முனியா” என்று அழைப்பதும் எந்த இனம் ?

எனவே என் ஜீன் உயர்ந்தது என்று கூறும் யோக்கியம் எந்த வெங்காயத்திற்கும் கிடையாது.

 

சுயவஞ்சகம்

சாதியம் தவறானது அதை முன்னோர்கள் செய்தனர் என்பது சரி. அதனால் குற்ற உணர்வு கொள்வது வரை சரி தான். அக்குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட தாங்கள் யோக்கியவான்கள் என்பதை காண்பிக்க ”சாதி என்பது பார்ப்பனியம் மட்டும்” எனும் பிரச்சாரம் நடந்தால் அது தன்னை தானே ஏமாற்றி கொள்ளும் சுயவஞ்சகம் தான்  அது தமிழினத்தை மீண்டும் ஒரு சாதிய படுகுழியிலேயே தள்ளும்.

 

உங்களுக்கு உண்மையிலேயே குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட மனசாட்சியுடன் சிந்தித்தால்

  1. உங்கள் மனதிலிருந்து உம்முடைய பரம்பரையின் உயர்வு நவிர்ச்சி மனப்பான்மையை தூக்கி எறியுங்கள்
  2. மனிதர்களிடையே உயர்ந்தவன் என்பதும் தாழ்ந்தவன் என்பது பிறப்பின் வழி இல்லையென உங்களுடைய குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்கள்.
  3. முடிந்தவரை ஒடுக்கபட்டவர்களுக்கு உறுதுணையாயிருங்கள்

இவைதான் தமிழினத்திலிருந்து சாதியை ஒழிய செய்யும்; ”பார்ப்பனிய கொள்கை” பரப்புதல் அல்ல

 

இப்பதிவின் மூலம் சாதியை பார்ப்பணீயம் என்று பிரச்சாரம் செய்பவர்களும், நான் இந்த சாதியை சேர்ந்த மேலானவன் என்று அடையாளம் காட்டுபவர்களுக்கும் கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

 

இப்படிக்கு,

தனக்கு கீழே சிலரை வைத்து மிருக குணத்தையும், தனக்கு மேலே சிலரை உயர்த்தி அடிமை புத்தியையும் காட்டி கொண்டிருந்த கோடிக்கணக்கான தமிழர் பரம்பரையின் ஒரு ஜீன்

 

[குறிப்பு: இத்தகைய சிந்தணைகள் சில மாதங்களாகவே சிந்தையில் இருந்தது தான். சமீபத்திய வலையுலக நிகழ்வுகள் எரிச்சலை கிளப்பி பதிவை வெளியிட தூண்டியது]

ஹூசைன் X நிர்வாணம் X வியாபாரம்

கலை என்பது கடவுளுக்கும் கலைஞனுக்குமான கூட்டு பணி, கலைஞன் குறைவாக  ஈடுபடும் அளவிற்கு நல்லது ~அன்ரே கிட்

Art is a collaboration between God and the artist, and the less the artist does the better.  ~André Gide

 

சமீபத்தில் எம் எப் ஹீசைனின் தனிப்பட்ட வாழ்க்கையினால் மறுபடியும்அவரது ஓவியங்கள் பதிவர்களிடம் விவாத பொருளாகி இருக்கிறது. வலைப்பதிவுகளில் மிகப்பிரபலமான கலைஞர்களான எழுத்தாளர் திரு. ஜெயமோகனும், மன நல மருத்துவர் திரு. ருத்ரனும் தங்களது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இருவரின் பதிவுகளையும் படித்து வரும் எனக்கு, எழுத்தாளரான திரு. ஜெயமோகன் ஒரு ஓவியரின் பார்வையில் சரஸ்வதியின் படத்தை கலை கண்ணோடத்தோடு பார்க்கும் படி வாசகர்களை அறிவுறுத்தியதும், ஓவியரான திரு ருத்ரன் ”ஸ்ரீமாதா” விளக்கமளித்து இது இந்திய மதங்களின் வழிகாட்டுதல் அல்ல என்று அறிவுறுத்தியதும் ஒரு மாற்று அனுபவமாக இருந்தது.

 

பொதுவாக வெவ்வேறு கருத்துக்களை கொண்டிருப்பவர்களாக இருந்தாலும் பதிவுகளின் சாராம்சம் கடை நிலை வாசகனான என்னை போன்றவர்களுக்கு கீழ் வரும் கருத்துக்களை அறிவுறுத்துவதாக கருதுகிறேன்.

  1. இந்து மதம் அல்லது இந்திய மதம் என்பது தன் தெய்வங்களை நிர்வாணமாக வரைய அனுமதி அளிக்கிறது.
  2. ஒரு ஓவியனுக்கு தன்னுடைய படைப்பை தான் விரும்பிய வகையில் படைக்க கருத்து சுதந்திரம் இருக்கிறது.

 

கீழ்வரும் படங்களை பாருங்கள் இவை இரண்டுமே அரை நிர்வாண படங்கள் தாம். இவ்விரண்டு படங்களும் ஒரே விதமான விளைவுகளையா பார்வையாளர்களுக்கு அளிக்கின்றன ?

 

bagavaty_967 fw7hg9

 

 

  1. தெய்வங்களின் நிர்வாண உருவகங்கள் பெண்களை உயர்வு படுத்துவதாகவும், வழிப்பாட்டுகுறியதாகவும் இருந்தன. அல்லது குறைந்த பட்சம் உடல் / உடலுறவின் அழகியலை வெளிப்படுத்தவதாக கூட இருந்தன. ஆனால் ஹூசைன் வரையும் படங்கள் அவர் வணங்க தக்கதாகவோ அழகியல் வெளிப்பாடாகவோ உள்ளனவா? நீரில் மூழ்கி கொண்டிருக்கும்; முகமும், கழுத்துமில்லாத சரஸ்வதியின் மூலம்  அவர் விமர்சனங்களை அல்லவா முன் வைக்கிறார் ? (அவரது மேலும் சில படங்கள் பற்றி என்ன சொல்வதென்று தெரியவில்லை ?! அவை என்னை பொருத்த அளவில் இப்போது இருக்கும் சூழலில் வெளியிடுவதற்கு தகுதியானவை அல்ல)
  2. மதங்களிலுள்ள ஓட்டைகளை அவர் விமர்சனம் செய்ய துணிந்ததை வரவேற்கிறேன். ஆனால் அவர் தன் மதத்தின் கருத்துக்களில் இருந்தல்லவா ஆரம்பித்து இருக்க வேண்டும்? இதை தானே சீர்திருத்த வாதிகளான காந்தி, அம்பேத்கார், ஈவேரா முதலானோர் முன்வைத்தனர் ?  பிற மதத்தினரை புண் படுத்தி தன் மதத்தை முன் நிறுத்தும் மனம் எந்த விதமான பகுத்தறிவினால் ஆனதென விளங்கி கொள்ள முடியவில்லை.

 

--- *** ---

ஒவ்வொரு கலைஞனும் தன் தூரிகைகளை தன்னுடைய ஆன்மாவில் நிரப்பி தன் சுய இயல்பை தன் படங்களில் வரைகிறான். -ஹென்றி வார்ட் பீச்சர்.

Every artist dips his brush in his own soul, and paints his own nature into his pictures.  ~Henry Ward Beecher

 

இப்பதிவு  மதங்கள் பற்றியது மட்டுமள்ள திரு. ஹுசைன் பற்றியது கூட தான். அப்படியே கீழே உள்ள படங்களையும் பாருங்கள். இப்பதிவிற்காக தேடிய போது அவரின் மேலும் சில ஓவியங்கள் கிடைத்தன. இவைகளை எப்படி கலை கண்ணோட்டத்தோடு பார்ப்பதென்று புரியவில்லை ?

 

husain_hw_exhibition_announcement_m hansuperman

 

  1. தன்னுடைய கண்காட்சிக்கு வரும்படி அழைக்க கடவுள் உருவத்தை பயன்படுத்திய வியாபார தந்திரம்? அஞ்சா நெஞ்சர்களின் தேர்தல் நேர கடவுள் உருவ போஸ்கள் ஞாபகத்திற்கு வந்தால் அவர் பொறுப்பல்ல :)
  2. சூப்பர் மேன் பனியன், ஜெட்டியுடன் அனுமன். கடவுள்களின் உருவ பொம்மை பொறித்த பொருள்களுக்கு அமெரிக்காவில் அமோக கிராக்கி.  அமெரிக்க சந்தையில் ஓவியங்கள் விலை போக வேண்டாமா என்ன ? (இப்போதெல்லாம் உள்ளாடையுடன் கூடிய கலைப்படைப்பு என்றாலே ஒரு எழுத்தாளரின் ஞாபகம் தான் வருகிறது ;)

 

எனக்கென்னவோ அவருடைய வாழ்க்கை குறிப்பு, தன்னுடைய வியாபார திறமையின் மூலமும்,எதிர் மறையான புகழின் மூலம் வளர்ச்சியடைந்த ஒரு மனிதர்; தன்னுடைய சுய லாபத்திற்காக சொந்த நாட்டு மக்களிடம் நீங்காத பிளவை ஏற்படுத்தி விட்டு; அவர்களையும் கைவிட்டு தான் விரும்பிய சொர்க்க புரியில் வாழ போவதை போன்ற அனுபவத்தை தான் ஏற்படுத்துகிறது.

குறிப்பு:

திரு ருத்ரன், திரு ஜெயமோகன் வலைப்பதிவுகளில் அவர்களுக்கு எதிராக நிகழ்ந்த தனிமனித தாக்குதல்களுக்கு என்னுடைய எதிர்ப்பை இங்கு பதிவு செய்கிறேன். மதம் குறித்த கருத்துக்களில் மிகவும் இறுக்கமான நிலை நிலவும் இப்போதைய தமிழ் வலைப்பதிவு சூழ்நிலை கருத்து பரிமாற்ற விவாதங்களில் பங்கேற்பது குறித்த நீண்ட மன போராட்டத்தை என்னுள் ஏற்படுத்தியது. இருந்த போதும் மாற்றங்களுக்கான ஆரம்ப விதையாக சிறு நிகழ்வு கூட இருக்கலாம் அல்லவா?

நித்யாவும் & அரசும், சாருவும் & குருவும்

நித்யா

nimages
வாயென்று சொல்லி மனமொன்று சிந்தித்து
நீயொன்று செய்யல் உறுதி நெடுந்தகாய்
நீயென்றிங் குன்னைத் தெளிவன் தெளிந்தபின்
பேயென்றிங் கென்னைப் பிறர்தெளி யாரே

--திருமந்திரம்: ஆறாம் தந்திரம் - 13(அபக்குவன்) பாடல் -4

யாதொரு செயலிலும் `மனம், மொழி உடல்` என்னும் மூன்றும் ஒருவழிப்பட நிற்றல் வேண்டுமன்றி, அவை தனித்தனி வேறு வேறு வழிப்பட நிற்றல் கூடாது.அவ்வாறுபட நிற்பின், உன்னை யான், `பக்குவம் வாயாத இழிமகன்` என்று உறுதி யாகக் கொண்டு விலக்குவேன். ஆனால், உணர்விலாதோர் என்னைப் வெகுளியால் பேய்த்தன்மை எய்தியவன் என இகழ்வர்.

 

(திருமந்திரம் சுமார் 1500 ஆண்டுகள் முற்பட்டது. அபக்குவன் -பக்குவமற்றவன்)

 

அரசு

emblem images

பஞ்சத் துரோகத்திப் பாதகர் தம்மை
யஞ்சச் சமயத்தோர் வேந்தன் அருந்தண்டம்
விஞ்சச்செய் திப்புவி வேறே விடாவிடிற்
பஞ்சத்து ளாய்புவி முற்றும்பா ழாகுமே

--திருமந்திரம்: ஆறாம் தந்திரம் - 13(அபக்குவன்) பாடல் -5

பஞ்சமா பாதகத்தோடு ஓத்த, வாயொன்று சொல்ல, மனம் ஒன்று சிந்திக்க, மெய்யொன்று செய்தலாகிய இப் பாதகத்தைச் செய்வோரையும் அரசன் அவ்வமையம் பார்த்து யாவரும் அஞ்சும்படி பொறுத்தற்கரிய தண்டனையை மிகச் செய்து திருத்தாவிடின், அவனது நாடு பஞ்சத்துட்பட்டு வருந்திப் பின் உருவும் அழிந்துவிடும்.

 

சாரு

charu images

குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்
குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக்
குருடுங் குருடுங் குழிவிழு மாறே

--திருமந்திரம்: ஆறாம் தந்திரம் - 13(அபக்குவன்) பாடல் -1

குருடான இருவர் தமக்குள் கண்ணாமூச்சு விளையாடி, இருவரும் பாழுங் குழியில் விழுந்தாற் போலப், பக்குவம் இல்லாத சிலர் தமது அறியாமையைப் போக்கும் ஆற்றலுடைய நல்ல குருவைக் கொள்ளாமல், போலிக் குருவைக் குருவாகக் கொண்டால் இருவரும் துன்பத்தில் வீழ்ந்து அழுந்துவார்கள்.

 

குரு

shiva n38902941472_1623

பாசத்தைக் காட்டியே கட்டுப் பறித்திட்டு
நேசத்த காயம் விடுவித்து நேர்நேரே
கூசற்ற முத்தியிற் கூட்டலால் நாட்டகத்
தாசற்ற சற்குரு அப்பர மாமே.

--திருமந்திரம்: ஆறாம் தந்திரம் - 1(சிவகுரு தரிசனம்) பாடல் -2

 

உயிர்ச் சார்பும் பொருட் சார்புமாகிய மன இயல்பைத் தெளிவித்து, அவற்றுக்கு இடையேயான கட்டினை அறுத்து, உடற்பற்றிலிருந்து ஆன்மாவை விடுவி்த்து, இகழ்ச்சிக்கு நாணுதல் இல்லாத முத்தி நிலையை பெறச் செய்தலால், யாவராலும் போற்றப்படுகின்ற அப்பரமமே சற்குரு.

 

இன்றைய சாதியம் மத அடிப்படையிலானதா? - 2

இப்பதிவு எழுத தூண்டிய  பழமைபேசி பதிவிற்கு நன்றிகள். சாதி பற்றிய முந்தய பதிவையும் பார்த்து விடுங்கள்.

இப்பதிவில் சில முக்கிய விசயங்களை விவாதிக்கலாம் என்று உள்ளேன்.

 

  1. இன்று தமிழகத்தில் சாதி பெயரால் மக்கள் கொடுமை படுத்த படுவது நகரத்திலா ? கிராமத்திலா ?
  2. சமீப காலங்களில் சில பிரிவு மக்கள் தமிழகத்தின் தனி பகுதிகளில் கொடுமை படுத்த படுவது மத ரீதியானதா? பொருளாதார ரீதியிலா?

 

இன்றைய சாதியின் நிலை

எப்போதுமே சாதி என்பது பொருளாதார ரீதியானது தான். விவாசயத்தை மட்டுமே பெரிதும் நம்பி வாழும் அனைத்து கிராம நண்பர்களுக்கும் இது தெரியும். ஒரு கிராமத்தில் அதிக நிலம் வைத்திருப்பவர்கள் மட்டுமே ஆதிக்க சாதியினர். (உதாரணமாக கொங்கு பகுதியில் கவுண்டர், திருநெல்வேலியில் தேவர் இப்படி.) மற்ற பிரிவினர் இவர்களை நம்பியே வாழ வேண்டும். கூலி தொழிலாளிகளும், கீழ் நிலை தொழிலாளிகளும் மிக மோசமாக நடத்த படுகின்றனர்.

 

கிராமங்களில் தொழில் வாய்ப்புகளும் மிகக்குறைவு. எனவே ஒரு பிரிவு மக்கள் இன்னொரு தொழிலை ஆரம்பிக்கும் போது போட்டியாக இல்லாமல் பொறாமையாக மாறி மிகப்பெரிய கலவரங்களில் முடிகிறது. எனவே குறிப்பிட்ட சந்ததியினர் குறிப்பிட்ட தொழில் மட்டுமே செய்ய வேண்டுமென வற்புறுத்த படுகின்றனர். (சாதி வலியுறுத்த படுகிறது)

 

தொழில் வளர்ச்சி அதிகமாக உள்ள நகரங்களில் (சென்னை, கோயம்பத்தூர், திருப்பூர், சேலம், ஈரோடு) போன்ற நகரங்களில்  (மற்ற பகுதிகளை ஒப்பிட) சாதி வெறி குறைவாக உள்ளதையும், வாய்ப்புக்கள் குறைவாக உள்ள (மதுரை, திருநெல்வேலி) போன்ற நகரங்களில் சாதி பதற்றம் அதிகமாக உள்ளதையும் சுட்டி காட்ட விரும்புகிறேன்.

 

 

மத அடிப்படையில் ஏதேனும் ஆதாரம் உண்டா எனில் அதுவும் கிடையாது. (முந்தய பதிவு பார்க்க). இன்றைய சாதிக்கு மனு தர்மம் எனும் கூச்சல் பொய்யே தவிர வேறொன்றும் இல்லை. எந்த ஆதிக்க சாதியினர் மனு தர்மத்தை படித்து விட்டு அதனால் தான் சாதி இருக்க வேண்டும் என்று கூறுகிறார் ? அதே போல மதமாற்றம் செய்யப்பட்ட மக்களும் சாதி கொடுமையிலிருந்து தப்பி விட்டார்களா ? இல்லை எனும் பதிலே கிடைக்கிறது !!! அங்கேயும் அதே கொடுமை.

 

திராவிடர் கழகங்களும் சாதி ஒழிப்பு வேலை செய்யாமல் மற்ற பிரிவு மக்களை தூண்டி விட்டதால் தான் இன்று தமிழர்கள் கூறு பட்டு கிடக்கின்றனர். ஏகப்பட்ட சாதி சங்கங்கள் உருவாகி இருக்கின்றன. அவற்றை வைத்து ஓயாமல் சாதி அரசியலும் நடைபெறுகிறது. இல்லக்கில்லாமல் அம்பு எய்வதால் தான் சாதி ஒழிப்பு நடைபெறவே இல்லை. மாறாக சாதி சங்கங்கள் பெருகி உள்ளன. மராட்டியர்களும், கன்னடர்களும் போன்ற பிற மாநிலத்தவர் மொழியால் ஒன்று படும் போது தமிழர்கள் ஒன்று பட முடியாமல் செய்வது இது போன்ற அமைப்புகள் தான். இவ்வகை பிரிவினை ஏற்படுத்தியதற்கு திராவிட கழங்களே முழு பொறுப்பு ஏற்றாக வேண்டும்.

 

சாதி ஒழிய என்ன செய்ய வெண்டும் ?

  1. கிராமங்களில் தொழில் வளர்ச்சி அதிகரிக்க பட வேண்டும்.
  2. அனைத்து பிரிவு மக்களுக்கும் சமமான முறையில் கல்வி வாய்ப்பும், வேலை வாய்ப்பும் வழங்க பட வேண்டும்,
  3. முதலில் அனைத்து சா(ச)தி சங்ககளும் கலைக்க பட வேண்டும். (மேல் தட்டு பிரிவினர் என கூறி கொள்பவரும், கீழ் தட்டு பிரிவினர் என கூறி கொள்பவரும்)
  4. ஒவ்வொரு பிரிவினரும் மற்ற பிரிவினரின் போட்டியையும் ஏற்று கொள்ள பழக வேண்டும்.

 

இவை இல்லாமல் சாதி ஒழிப்பு சாத்தியமாகாது.

தமிழுக்கு வந்த சோதணையும், கிரகங்களும்

[சென்ற இடுகையிலுள்ள விவாதத்தின் தொடர்ச்சியாக கருதலாம்]

இப்போதெல்லாம் பழந்தமிழர் பயன்படுத்திய எல்லா விடயங்களையும் குறை சொன்னால் தான் பகுத்தறிவு வாதி என எளிதாக நிருவலாம் எனும் நினைக்க கூடிய கொடிய வைரஸ் தமிழர்கள் மத்தியில் பரவி வருகிறது. அவற்றில் ஒன்று தான் ”கிரகம்/கோள்” எனும் சொற்களின் பொருட்கள்

வார்த்தைகளின் சிதைவுகள்

தமிழில் நொடி, வினாடி எனும் வார்த்தைகள் சிதைக்கப்பட்ட விதத்தை வைத்து இதனை விளக்கலாம்.

1. பழங்காலத்தில் தமிழில் நொடி, வினாடி எனும் வார்த்தைகள் முற்றிலும் வேறான விதத்தில் பயன்பட்டு வத்தது. வினாடி இன்றைய SI அளவு முறையில் 2 நிமிடங்களுக்கும் அதிகமானது.
2. ஆங்கிலேயர்களின் வருகைக்கு பின் Second எனும் அளவு முறை நடைமுறைக்கு வந்தது.
3. Second என்பதை தமிழ் படுத்த முயன்ற அறிவு ஜீவிகள் புதிய வார்த்தை கண்டு பிடிக்காமல் ஏற்கனவே இருந்த வினாடி என்ற வார்த்தையை பயன்படுத்தினர்.
4. இன்று பெருமபாலோனோர் பழந்தமிழில் வேறு அர்த்தம் இருந்தது என்று கூட தெரியாமல் உள்ளனர்.
5. நம் குழந்தைகள் எதிர்காலத்தில் நினைக்கும்: "பழந்தமிழர்கள் முட்டாள்கள் 1 வினாடிக்கு 2 நிமிடங்களாம் ?" !!!

இப்படி தான் ஆகிவிட்டது கிரகங்கள் எனும் வார்த்தையின் அர்த்தமும்

1. பழங்காலத்தில் தமிழில் கிரகம் எனும் வார்த்தை வானியல் பொருட்கள் அனைத்தையும் குறிக்கும் பொருளில் பயன்பட்டு வத்தது. எனவே தான் சூரியன், சந்திரன் அனைத்தும் கிரகம் என்றனர்.
2. ஆங்கிலேயர்களின் வருகைக்கு பின் அறிவியலில் planet எனும் பொருட்களை என்பதை தமிழ் படுத்த முயன்ற அறிவு ஜீவிகள் புதிய வார்த்தை கண்டு பிடிக்காமல் ஏற்கனவே இருந்த கிரகம் என்ற வார்த்தையை பயன்படுத்தினர்.
3. இன்று பெருமபாலோனோர் பழந்தமிழில் வேறு அர்த்தம் இருந்தது என்று கூட தெரியாமல் சோதிடம் தவறு என உளறி கொண்டுள்ளனர்.

பிறகு சாயாகிரகங்கள் - ராகு, கேது பற்றிய விளக்கங்களை அடுத்த இடுகையில் பார்க்கலாம். இது மிக எளிமையான விடயம். “சாயா” என்பதன் அர்த்தம் என்ன என்பதை புரிந்து கொண்டாலே விளக்கங்கள் கிடைத்து விடும். பின்னூட்டத்தில் விளக்குவதின் மூலம் என்னுடைய நேரத்தை நீங்கள் மிச்சபடுத்தலாம்.

 

நன்றி: http://www.thinnai.com/?module=displaystory&story_id=20609085&format=print&edition_id=20060908

2 கண்ணிமை - 1 நொடி

2 கைநொடி - 1 மாத்திரை

2 மாத்திரை - 1 குரு

2 குரு - 1 உயிர்

2 உயிர் - 1சணிகம்

12 சணிகம் - 1 விநாடி

60 விநாடி - 1நாழிகை

2 1/2 நாழிகை - 1 ஒரை

3 3/4 நாழிகை - 1 முகூர்த்தம்

2 முகூர்த்தம் - 1 சாமம்

4 சாமம் - 1 பொழுது

2 பொழுது - 1 நாள்