தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அகஸ்திய மகரிஷி அருளிய ஆதித்ய ஹ்ருதயம் தமிழ் விளக்கம்

ஆதித்ய ஹ்ருதயம் என்பது என்ன ?

  • ஆதித்யா என்றால் சூரியன். ஆதித்ய ஹ்ருதயம் என்பது ஒருவகையான சிகிச்சை முறை மந்திரம். குறிப்பாக இதயத்திற்கும் மனதிற்கும் ஊக்கமளிக்கும் சிகிச்சைமுறை
  • உலக நாயகனான ஆதித்யனின் இருதயமாகவும் போற்றப்படுகிறது. 

ஆதித்ய ஹ்ருதய மஹா மந்திரம்

  • சூட்சுமமான பல கருத்துக்கள் அடங்கிய இந்த ஸ்தோத்திரத்தை வெவ்வேறு அறிஞர்களின் கருத்தை ஆய்ந்து தொகுத்து பகிர்ந்துள்ளேன். மந்திரங்களும், விரிவான அர்த்தங்களும் கூகிள் டாக்ஸில் இச்சுட்டியில் உள்ளது.  மந்திரம் மட்டும் இங்கே உள்ளது.
  • பாடலை இங்கே கேட்கலாம். இந்த ஆடியோவில் ஆரம்ப துதியில் இருந்து முடிவு துதி வரை முழுமையாக உள்ளது.
  • “இவனே பிரம்மா; இவனே விஷ்ணு; இவனே சிவன், ப்ரஜாபதி” (ஏஷ ப்ரஹ்மா ச விஷ்ணுஸ்ச, சிவ ஸ்கந்த:ப்ராஜாபதி) என்ற அபூர்வமான ரகசியத்தை விண்டுரைத்த அகஸ்தியர் அவனை வழிபடும் பெயர்களை ஆதித்ய ஹ்ருதயத்தில் தந்துள்ளார். சூரிய பகவானின் பல்வேறு பெயர்களின் விளக்கங்களும் தமிழிலும் ஆங்கிலத்திலும் இணைத்துள்ளேன். 

உலகின் எல்லா நாகரிகங்களும் சூரியனைக் கண்டு பிரமித்து வியப்பவை. இந்திய சமயங்களில் பெருஞ்சமயங்களாக ஆதிசங்கரரால் முறைப்படுத்தப்பட்ட ஆறு சமயங்களான சௌரம், காணபத்யம், சாக்தம், கௌமாரம், சைவம், வைஷ்ணவம் என்பவற்றுள் பகலவன் வழிபாடான சௌரம் இன்றைக்கு சைவ வைணவங்களில் கலந்துவிட்டது. சிவசூரியன் என்றும் சூரியநாராயணன் என்றும் இன்றைக்கு சூரியன் வழிபடப்படுகிறான். ஹிந்து சூரிய வழிபாட்டு முறைகளில் முக்கியமானது அகஸ்திய மகரிஷி அருளிய ஆதித்ய ஹ்ருதயம்.

இரகசியம் -1 


எல்லா வேத வரிகளும் இருவித அர்த்தங்களை கொண்டுள்ளன. 

  1. வெளிப்படையானது - சடங்குகள் சார்ந்தது, 
  2. உட்கருத்து - ஆத்ம போதத்திற்கானது
உதாரணமாக சூரியனை போற்றும் ஸப்த ஸப்தி எனும், சூரியனின் பதம் 7 குதிரைகள், 7 கதிர்கள் (VIBGYOR) மட்டும் குறிப்பதல்ல, மனித உடலில் உள்ள 7 மூலாதார சக்கரங்களையும் குறிக்கிறது.

அது போலவே,
  • அண்டத்தை படைத்து, காத்து, ஒடுக்கும் பரம்பொருள் பரமாத்மன். (மனித உடலிலும் அதுவே உள்ளது.)
  • அப்பரம்பொருளின் பிரகாச வடிவமே இவ்வுலகில் சூரியனாக வெளிப்படுகிறது. 
  • பரம்பொருளின் முழு வடிவையும் மனிதர்களால் பார்க்க இயலாததால் அகஸ்தியர் இராமரை சூரியனை வழிபட சொல்கிறார். 
  • எனவே இம்மந்திரம் சூரியனை வழிபடுவதற்கு மட்டுமல்லாமல் அதற்கு மேலும் பரமாத்மனையும் வழிபடுகிறது.
ஆயுர்வேதம் உடம்பில் முதுகு தண்டில் ஏழு சக்கரங்கள் அமைந்துள்ளதாகவும் அவை ஆன்மீக மையங்களாக செயல்படுவதாகவும் குறிப்பிடுகிறது. நவீன் ஆயுர்வேத மருத்துவர்கள் அவற்றை ஒவ்வொரு நிறத்தோடும், உறுப்போடும் தொடர்பு படுத்துகின்றனர். நிறங்களை பயன்படுத்துவதன் மூலம் குறிப்பிட்ட உறுப்பை குணப்படுத்த முயற்சி செய்கின்றனர்.

A New Age conceptualisation of the chakras of Indian body culture and their positions in the human body
ColorChakraChakra locationAlleged function
RedFirst
Muladhara
Base of the spine, முதுகு தண்டின் அடிப்பகுதிGrounding and Survival
OrangeSecond
Svadhishthana
Lower abdomen, genitals, குறிEmotions, sexuality
YellowThird
Manipura
Solar plexus, நாபிPower, ego
The “accounting mind” that categorizes everything, assesses the pluses and minuses in life
GreenFourth
Anahata
Heart, இருதயம்Love, sense of responsibility
BlueFifth
Vishuddha
Throat, தொண்டைPhysical and spiritual communication
IndigoSixth
Vishuddha
Just above the center of the brow, middle of forehead
புருவ மத்தி
Forgiveness, compassion, understanding
VioletSeventh
Sahasrara
Crown of the head, உச்சிConnection with universal energies, transmission of ideas and information

புராணம்


தனித்தன்மை மிக்கவர் சப்த ரிஷிகளில் ஒருவரான அகஸ்திய மகரிஷி. ‘வித்யா மண்டல ரிஷி’ என அவருக்கு ஒரு சிறப்பு பெயர் உண்டு. ஒருமுறை உலக நன்மைக்காகவும் அமைதிக்காகவும் அவர் அம்பாளை நோக்கி தவமியற்ற, அன்னை, அவருக்கு உலகம் உய்யும் பொருட்டு ‘ஆதித்த ஹ்ருதயத்தை’ உபதேசித்தாள்.

மகத்தான மந்திரத்தை பெற்ற அகத்தியர், தகுதி வாய்ந்த ஒருவர் மூலம் உலகிற்கு வழங்கினால், அகிலமே பயனடையும் என்று கருதினார். அவர் தேர்வு செய்தது தான் மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி.

ராவணனோடு யுத்தம் செய்தபோது சற்று அயர்ச்சியும் சோர்வும் கொண்ட ஸ்ரீராமனுக்கு, ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கும் வகையில் அகத்தியர் உபதேசித்த அற்புத ஸ்லோகம் இது.

வால்மீகியின் ஆதிகாவியம் ஸ்ரீமத் ராமாயணத்தில், யுத்த காண்டத்தில் ஆதித்ய ஹ்ருதயம் எனப்படும் நூற்றேழாவது சர்க்கம் உள்ளது.


இரகசியம் -2


ராம ராவண யுத்தம் மனித மனதிற்குள் உள்ள நல்ல மற்றும் தீய எண்ணங்களுக்கிடையேயான போராட்டம் ஆகும்.
  • ராமன் சிறந்த உள்ளத்திற்கான அடையாளம். 
  • இராவணன் என்பது பெண்களை தவறாக நடத்தும் எண்ணம்.

    தர்ம சாஸ்திரப்படி இத்தகைய பெரும் கொடிய செயல்களுக்கு தீர்வு இல்லை. தீய எண்ணங்களால் உருவாகும் செயல்களுக்கான விளைவுகளை இப்பிறவியிலேயே அனுபவிக்க நேரிடும்.

    மகிமைகள்

    ஆதித்ய ஹ்ருதயம் எவ்வளவு மகிமை பொருந்தியது என்பதை இராமாயணத்தில் காணலாம்.
    1. ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் - அது நல்வினைப்பயன்களைத் தருவது
    2. ஸர்வ சத்ரு விநாசனம் (உட்பகை, வெளிப்பகை என் அனைத்து எதிரிகளையும்  அழிக்க வல்லது)
    3. ஜயாவஹம் (வெற்றி தருவது)
    4. ஜபேத் நித்யம் - நாள்தோறும் சொல்லக்கூடியது (ஜபிக்கக்கூடியது)
    5. அக்ஷயம் - அழிவற்றது பொங்கி பெருக கூடியது. Akṣayaṁ is the most important quality of the sun.
    6. பரமம் - மிகப்பெருமை கொண்டது
    7. சிவம் - மங்களம் தருவது
    8. ஸர்வ மங்கள மாங்கல்யம் (அனைத்து நலன்களுகெல்லாம் நலன்களையும் தருவது) blessing of all blessings
    9. ஸர்வ பாப ப்ரணாஸனம் (அனைத்து பாவங்களையும் போக்குவது)
    10. சிந்தா சோக ப்ரஸமனம் (மனக்கவலைகளையும் குழப்பங்களையும் நீக்குவது)
    11. ஆயுர்வர்த்தனம் (நீண்ட ஆயுளைத் தர வல்லது)
    12. உத்தமம் - சிறந்தது

    பலன்கள்

    • மனச்சோர்வையும். நோய்களையும் தீர்த்து, உடலை வச்ரம் போல் மாற்றும். 
    • எதிரிகளின் சூழ்ச்சித் திட்டங்கள் அழிந்து விடும்.நம் மீது பகை கொண்டவர்கள் நண்பர்கள் ஆக மாறி விடுவார்கள். மூன்று வேளை பாடம் செய்தார் என்றால் – எங்கேயும் அவருக்கு தோல்வியே ஆகாது. எந்த காரியத்திலும் தோல்வியாகாது. லௌகீக-சத்ருக்களும் நாசமாகி விடுவார்கள். அதோடு ஆன்மீக மார்க்கத்தில் வரும் சத்ருக்கள் – காமம், குரோதம், இத்தியாதி – அவைகளும் நாசமாகி விடும். 
    • கிரகபீடைகள் நீங்கும். ஆபத்துக் காலங்களிலும்எந்த கஷ்ட காலத்திலும் எதற்காகவேனும் பயம் தோன்றும்போதும் இத்துதியை ஜபிக்க, மனம் புத்துணர்ச்சி பெறும், பலம் பெறும்.துன்பங்கள் தூள் தூளாகும். 
    • நினைத்த காரியம் நடந்து முடியும். தடைகள் நீங்கும். வேலை, தொழில் முதலியவற்றில் இருக்கும் சிக்கல்கள் இல்லாமலாகும்.


    ஜோதிட ரீதியான பலன்கள்

    1. இதனால் ஜாதகத்தில் சூரியனின் பலம் அதிகமாகும். சூரிய தோஷம் நீங்கும். தொழுநோய் குணமாகும்
    2. ஜாதகத்தில் பித்ரு தோஷம் உள்ளவர்கள், தந்தை ஸ்தானம் சரியில்லாதவர்கள் தினந்தோறும் பாராயணம் செய்து வந்தால் தோஷங்கள் குறையும். வாழ்க்கை முன்னேற்றம் உண்டாகும்.
    3. கண் வியாதி, கண் பார்வைக் குறைவு உள்ளிட்ட அனைத்து வியாதிகளையும் போக்கும் சூரிய மந்திரம் ஆதித்ய ஹ்ருதயம்.
    4. ஆண் புத்திர பிராப்தி கிடைக்கும்.
    5. நமது ஒவ்வொருவரின் ஜனன ஜாதகத்தில் அரசு வேலை கிடைக்கவோ அல்லது அரசாங்க ஆதரவோ இருக்க வேண்டுமானால் சூரியனின் பலம் முக்கியம் ஆகும். 
    6. அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு தங்களின் முயற்சியில் வெற்றி கிட்டும். அரசாங்க ஆதரவு உண்டாகும். அரசு வேலையைத் தரும் கிரகங்கள் ஜாதகத்தில் சரியாக அமைந்திருக்க வேண்டும்.   பலம் என்று இங்கே குறிப்பிடப்படுவது ஷட்பல நிர்ணயம் மூலம் கணிக்கப்பெறும் பலம் ஆகும்.  ஷட்பல நிர்ணயம் மட்டுமல்லாமல் தொழில் வீடான 10 வது இடத்திற்கு அரசு கிரகங்களின் பலம் இருக்க வேண்டும்.
    7. அரசு வேலைக்கு முயற்சி செய்யாமல் இருப்பவர்கள் இந்த முறையை பின்பற்றினால் மறைமுகமாக அரசாங்க ஆதரவு உண்டாகும். 
    8. அரசியலில் உள்ளவர்கள் இந்த முறையை பின்பற்றினால் அரசியலில் வெற்றியும் பதவிகளும் வந்து சேரும். 
    9. எட்டாம் இடத்தில் தோஷத்துடன் சூரியன் ஒரு ஜாதகத்தில் அமைந்திருந்தால் எதிர்கால விபரீதங்களைத் தடுக்க சூரியனின் அருள் வேண்டி சூரிய வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

    வழிமுறை

    • அதிகாலையில் எழுந்து, சுத்தமாக நீராடி இந்த சூரியனின் மகத்தான மந்திரமான ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்தால் வாழ்க்கையில் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். 
    • இந்த ஸ்லோகத்தை எந்த நேரத்திலும் சொல்லலாம். மனதில் உண்மையாக இருக்கவேண்டும்! அவ்வளவுதான்! 
    • விரதமாக இருந்து சொல்வது மேலும் பயன் தரும். 
    • நீர் நிலைகள் சூரிய சக்தியை மென்மேலும் பிரதிபலிப்பதால், அவற்றின் அருகில் இருந்து நமஸ்கரிப்பது நல்ல பலன் தரும். 
    • ஆதித்ய ஹ்ருதயம் இரண்டு தரமோ மூன்று முறையோ தினமும் பாராயணம் செய்வது தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கமாக இருந்து வருகிறது. 
    • இந்த ஸ்தோத்திரத்தை ஒரே நேரத்தில் அடுத்தடுத்து ஒன்பது முறை ஜபித்தால் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் என்பது ஓர் நம்பிக்கை. 
    • ச்ரத்தையுடன் பதினோரு முறை தொடர்ந்து சொல்பவர்களுக்கு எல்லா பாதுகாப்பும் வெற்றியும், அவரின் அருளும் கிடைக்கும்! 
    • ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்ய மிகவும் உகந்த நாள் ஞாயிற்றுக்கிழமை ஆகும். 
    • அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மற்றும் கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளில் சூரிய ஓரையில் வெட்ட வெளியிலோ அல்லது மாடியிலோ ஆதித்ய ஹ்ருதய துதியை பாராயணம் செய்ய வேண்டும். 
    • முதலில் இரண்டு தீபங்கள் ஏற்ற வேண்டும். உங்களின் குலதெய்வத்தினை வணங்கவும். பின்பு கணபதியை வணங்கவும். பின்பு இஷ்ட தெய்வத்தினை வணங்கவும். பின்பு எழுந்து நின்று சூரியபகவானுக்கு வணக்கம் தெரிவிக்க வேண்டும். பின்பு ஒரு துண்டின் மீது அமர்ந்து ஆதித்ய ஹ்ருதய துதியை 3 முறை பாராயணம் செய்யவேண்டும். 
    • இவ்வாறு 16 ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் 16 கிருத்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரம் வரும் நாட்களின் மேற்கண்ட முறையில் பாராயணம் செய்ய வேண்டும். கடைசி நாள் மட்டும் கோதுமையால் செய்த பாயசம் வைத்து பாராயணம் செய்யவும். பாயசத்தில் சர்க்கரை சேர்க்காமல் வெல்லம் சேர்க்க வேண்டும். ரசாயன முறையில் தயாரிக்கப்படும் சர்க்கரையில் எலும்புச்சாம்பல் கலக்கப்படுவதால் அது அசைவ பொருள் ஆகும். எனவே அதனை விலக்க வேண்டும். எனவே அதற்கு பதிலாக கரும்பு வெல்லமோ அல்லது பனை வெல்லமோ சேர்க்க வேண்டும்.

    வேறு வடிவிலான ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரங்கள்

    தமிழ்

    மிகவும் சக்தி வாய்ந்த மந்திரமான இதை குரு உபதேசம் பெற்று, உச்சரிப்புப் பிழைகள் இல்லாமல் அதற்கான முறையோடு கூடிப் பாராயணம் செய்தால்தான் அப்பலன்கள் கிட்டும்.

    சமஸ்கிருத்தில் படிக்க இயலாதவர்கள் தினந்தோறும் ”சூரிய வணக்கம்” செய்து கீழ்கண்ட இந்தப் பாடலை மும்முறை பாடி வந்தால் அதே நற்பலன்கள் கிட்டும்.


    ஆயிரம் கரங்கள் நீட்டி
    அணைக்கின்ற தாயே போற்றி!

    அருள் பொங்கும் முகத்தைக் காட்டி
    இருள் நீக்கும் தந்தாய் போற்றி!


    தாயினும் பரிந்து சாலச்
    சகலரை அணைப்பாய் போற்றி!

    தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம்
    துணைக்கரம் கொடுப்பாய் போற்றி!

    தூயவர் இதயம் போலத்
    துலங்கிடும் ஒளியே போற்றி!

    தூரத்தே நெருப்பை வைத்து
    சாரத்தைத் தருவாய் போற்றி!


    – கண்ணதாசன்


    பவிஷ்யோத்தர புராணம்

    இன்னொரு ஆதித்ய ஹ்ருதயம் (சற்று நீளமானது) ஸ்ரீ பவிஷ்யோத்தர புராணத்தில் ஸ்ரீ கிருஷ்ணார்ஜுன சம்வாதமாக – கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் நடக்கும் உரையாடலாக – அமைவதாகவும் குறிப்பிடபட்டுள்ளது.

    சுட்டிகள்

    இப்பதிவின் அணைத்து தகவல்களும், கீழ்கண்ட இணைப்புகளில் உள்ள கட்டுரைகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது.
    1. https://en.wikipedia.org/wiki/Adityahridayam 
    2. https://www.youtube.com/watch?v=-SakTUHIxek
    3. http://sthothramaalaa.blogspot.in
    4. http://www.manblunder.com/articlesview/aditya-hrudayam-introduction 
    5. https://www.hindugallery.com/devotional-songs/aditya-hrudayam/tamil/ 
    6. http://www.sanskritweb.net/sansdocs/aditya-hridayam.pdf 
    7. https://templesinindiainfo.com/aditya-hridayam-lyrics-in-tamil-and-english-with-meaning/ 
    8. http://stotraratna.sathyasaibababrotherhood.org/n3.htm
    9. http://rightmantra.com/?p=2646
    10. http://www.mazhalaigal.com/2010/february/20100229nbs_aditya-hrudayam.php#.Wnn5xyVuaaE 
    11. சகல வியாதிகளையும் போக்கும் சூரிய ஸ்துதிகள்
    12. ஸ்ரீ ராமரை போரில் வெற்றி பெறச் செய்த ஆதித்ய ஹ்ருதயம்
    13. சூரிய வணக்கம்
    14. ஆதித்ய ஹ்ருதயம்.
    15. https://siththanarul.blogspot.in/2011/08/ 
    16. http://aanmeegachudar.blogspot.in/2013/12/blog-post_15.html 
    17. http://temple.dinamalar.com/Slogandetails.php?id=1312 
    18. http://www.chakras.info/7-chakras/ 
    19. https://en.wikipedia.org/wiki/Chromotherapy
    20. https://docs.google.com/document/d/1fxDkseqRrSs2XqTTuSUBVvyN1hJTI5NqvwCTpC6zLVA/edit?usp=sharing

    ஒரு பல்கலை கழகமும் அதன் நிர்வாக சீர்கேடுகளும்


    எனக்கு தெரிந்து தமிழகத்திலேயே மட்டமான பல்கலை கழகம் என ஒன்று இருந்தால் அது சேலத்தில் உள்ள ஒரு (?) பல்கலை கழகமே. (சமீபத்தில் அங்கு பயிற்றுவிக்க ஒரு பட்ட படிப்பிற்கு அங்கீகாரமே கிடையாது என டி.இ.டி அறிவித்து விட்டது படித்தவர்களுக்கு ஆண்டுகள், பணம், முயற்சி, உடலுளைப்பு என அணைத்தும் பட்டை நாமம்) அதற்கு பிறகு தாராளமாக சிதம்பரத்தில் உள்ள ஒரு (??) பல்கலை கழகத்திற்கு இரண்டாம் இடம் கொடுக்கலாம். அவர்களின் வேலை செய்யும் திறன் அப்படி.

    அங்கு படிப்பவர்களின் எண்ணிக்கை, வேலை செய்பவர்களின் எண்ணிக்கையும் சமம் என்று ஒருவர் கிண்டலாக சொன்னார். சரி நல்லது தானே எல்லா வேலைகளையும் உடனுக்குடன் முடியும் என நிணைத்தீர்கள் எனில் அது தான் தவறு.  அங்கு வேலை இல்லாதவர்களுக்கு அங்கு வெட்டி வேலைகள் “உருவாக்க படுகின்றன” போல. இன்னும் கணிணி மயமாக்க படாத ஒரே  பல்கலை கழகம் தமிழகத்திலேயே ”இது”வாக தான் இருக்கும். அங்கு சென்ற போது வேலை செய்பவர்கள் அணைவரும் பேப்பர் மலைகளுக்கு நடுவே உட்கார்ந்து கொண்டிருந்தனர். அந்த தகவல் களஞ்சியத்தை நிர்வகிப்பது தான் அவர்களுக்கு வேலை போல. ஒரு சிறந்த கணிணி மையம் 1 நிமிடத்தில் செய்ய கூடிய வேலைகளை 2 மாதம் செய்வது தான் அவர்களது ”சீரிய பணி”.

    என் சோக கதைய கேளு தாய் குலமே :( !!

    எனது நெருங்கிய உறவினர் ஒருவர் இப்பல்கலைகழகத்தில் ஒரு பட்ட படிப்பை படித்து எல்லா பரிட்சைகளிலும் தேறினார். எல்லா கட்டணங்களும் கட்டிய பிறகும் சர்டிபிகெட் வரவில்லை. உள்ளூர் பயிற்சி மையத்தை பலமுறை அணுகிய பிறகும் அவர்களிடம் தேவையான தகவல் இல்லை. முதல் 6 மாதம் ”எங்க  பல்கலை கழக வழக்கமே 6 மாதத்திற்குள் சர்டிபிகெட் கொடுப்பது தான் பொறுமையா இருங்க” எனும் பதில் பெருமிதமாக வந்தது.

    பிறகு ஒவ்வொரு முறையும் சிதம்பரத்திற்கு போன் செய்து தான் விசாரிப்பார்கள். ஒரு முறை மழை அதனால் சிதம்பரத்தில் இண்டெர்நெட் வேலை செய்யவில்லை என பதில். பிறகு ஊழியர்கள் வேலை நிறுத்தம் என பதில் என ஒவ்வொரு முறையும் ஒரு சுவாரஸ்யமான, ஆனால் மட்டமான, காறி துப்ப கூடிய வகையில் ஒரு பதில்.

    கடைசியாக அவர்களின் மாபெரும் தகவல் களஞ்சியத்தில் கண்டுபிடித்து 50 ரூபாய் கட்டணத்தில் நிலுவை என்று பதில் வந்தது. அது எப்படி ரூ 50 மட்டும் நிலுவை வருமாறு ஒரு பீஸ் இருக்கும் என புரியவில்லை. அதை பற்றி கேட்பதற்கும், திரும்ப பதில் வருவதற்கும் தகுந்த ஜந்துகள் இருக்கும் என நம்பிக்கையை இழந்து விட்டதால் கேள்வி ஏதுமின்றி 50 ரூ டிடி எடுத்து அனுப்பினேன்.

    உடனே சர்டிபிகெட வந்திருக்குமே என நிணைத்தால் அது தான் தவறு. வழக்கமான பதில் “2 மாதத்திற்குள் கண்டிப்பாக வந்து விடும்”  என பொறுமை காக்க சொன்னார்கள். 2 மாதம் கழித்து டிசி மட்டும் வந்தது  டிகிரி சர்டிபெட் நஹி.

    மறுபடியும் உள்ளூர் படிப்பு மையத்திற்கு படையெடுப்பு. மறுபடியும் தகவல் தோண்டல்கள். கடைசியாக ஒரு முடிவு செய்து ஒரு தீர்க்கமான பதில் சொன்னார்கள். “சார் எங்களுக்கு சரியா தெரியல. நீங்க நேரடியாக சிதம்பரம் போய் பாருங்க உடனேயே பிரச்சிணைகளை சரி செய்து சர்டிபிகெட் வாங்கி வந்து விடலாம்” என பெருமிதத்துடன் சொன்னார்கள்.

    ”நாயுக்கு வாழ்க்கை பட்டால் சேர்ந்து குலைச்சு தான் ஆகணும்” எனும் பழமொழியை நிணைவு படுத்தி கொண்டு மனதை திடப்படுத்தி கொண்டு சிதம்பரமும் சென்று பார்த்த அனுபவத்தின் போது தான் மேற்கண்ட ஒரு தெளிவான முடிவிற்கு வந்தேன்.

    சரி போய் பார்த்த பிறகாவது பிரச்சிணை முடிவிற்கு வந்து விட்டது என நிணைத்தால் அது தான் இல்லை.

    1. தகவல் மையத்தில் சேவைக்காக 5 பேர் உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். அதில் ஒருவர் மட்டும் காத்திருக்கும் நூற்றுகணக்கானவரை  ஒரே வரிசையில் நிற்க வைத்து சிடுசிடுப்புடன் கண்ட படி எரிந்து விழுந்து சேவை செய்வார். மற்ற அணைவரும் அவரின் சேவையை பார்த்து வியந்து கொண்டும், நாளிதழ்கலின் செய்தியை வாசித்து கொண்டும் சேவை செய்வார்கள்.

    2. உண்மையில் அவரிடம் பிரச்சிணைகளை தீர்க்க தேவையான எந்த தகவலும் இருக்காது. 1, 2ம் மாடியில் இருக்கும் காகித மேலாண்மை வாதிகளிடம் தான் இருக்கும். எழுதி வாங்கிய தகவல்களை மேலேயும் கீழேயும் கொண்டு சேர்க்க ஓட மட்டும் ஒருவர் இருக்கிறார். (இத்தணைக்கும் அவர்களுக்கு நடுவே இண்டர்காம் போன் வசதி உண்டு).

    3. டிசி நிர்வாகம் செய்யும் குழு வேறு, டிகிரி சான்றிதல்  நிர்வாகம் செய்யும் குழு வேறு எனவே நீங்கள் பணம் கட்டியது எங்களுக்கு தெரியவில்லை என சொல்லி உடனேயே தற்காலிக டிகிரி சான்றிதல் அளிக்க பட்டது.

    4. அதன் பிறகு நடந்தது தான் உச்ச கட்ட கொடூரம். கன்சாலிடேடட் மதிப்பெண் சான்றிதழ் கேட்ட போது உங்களின் மதிப்பெண் சான்றிதல்கள் அணைத்தையும் நகல் எடுத்து தறுமாறு கேட்டனர். ஏனெனில் அவர்களிடம் ஒரு மாணவர் அதே பல்கலைகழகத்தில் எடுத்த மதிப்பெண் தகவல்கள் கூட இல்லை போல. அல்லது எடுத்து கொடுக்க துப்பு இல்லை.

    5. சரி போகட்டும் என கான்வகேசன் சான்றிதழ் கேட்ட போது அந்த மனுவை நேரடியாக வாங்க கூட மறுத்து விட்டனர். ஒரு பெட்டியில் போடுங்கள் தேவையான நடவடிக்கை “உடனே” எடுக்க படும் என பெருமிதமாக பதில் வந்தது.

    6. ந”ம்ப்ப்”பி பணம் கட்டிய இரசீதையும் மனுவையும் பெட்டியில் போட்டு விட்டு வந்து இரண்டு வாரமாகிறது இன்னும் சான்றிதழ்  வரவில்லை. நேற்று சிதம்பரத்திற்கு நேரடியாக தொலைபேசியில் கேட்ட போது கிடைத்த பதில் “பெட்டியில் போட்டு இரண்டு வாரம் தானே ஆகிறது சான்றிதழ் வர இரண்டு மாதம் வரை ஆகும் பொறுமையாக இருங்க” என கடுகடுப்புடன் தொடர்பு துண்டிக்க பட்டது.

    சுபமஸ்து...து..து...து...

    கூடுதல் தகவல்
    கான்வகேசன் சான்றிதழ் பணம் கட்ட வரிசையில் நின்ற போது, 25 வயதுள்ள சில மாணவர்கள் அதே பல்கலை கழகத்தில் வேலை செய்யும் ஒரு பெண் பேராசியரை ஆபாசமாக வசை மொழியில் கிண்டல் செய்து கொண்டிருந்தனர். விசாரித்த போது அம்மாணவர்கள் Phd படிக்கிறார்களாம் (எதிர்கால பேராசிரியர்கள் ?) ஃபீஸ் செமஸ்டருக்கு 1,10,000ருபாய். :(

    ரஜினியும் தமிழ் அடையாளமும் (எந்திரன் – 3 Updated)

    முந்தைய பகுதிகள்

    ரஜினியும் தமிழ் அடையாளமும் (எந்திரன் –1)
    எந்திரன் – 2 [கான்களுக்கு Robot phobia: சும்மா அதிருதுல்ல :)]

    ரஜினி தமிழ் பட உலகிற்கும் இந்திய சினிமாவிற்கும்  செய்தது என்ன ?

    எந்திரன் தமிழ், ஆங்கில, இந்தி பட உலகம் என்று தனித்தனியாக இயங்கி வந்த சினிமா துறைகளை, ஒரு உலகமயமாக்க பட்ட ஒரே துறையாக மாற்றி உள்ளது. உலகமெங்கும் உள்ள தொழில் நுட்ப கலைஞர்கள் ஒன்று கூடி ஒரு படத்தில் இணைந்து செயல் படுவதற்கான வழிமுறைகளின் சிறந்த ஆரம்ப கட்டமாக உள்ளது.

     

    தமிழ் பட உலகம் என்று ஒன்று இருப்பதே ரஜினி படம் வரும் போது தான் பரவலான அந்நிய மொழி பேசும் மக்களுக்கு தெரிய வருகிறது.

    • முத்து படம் ஜப்பானில் நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தியது. முதன் முறையாக ஜப்பானிஸுக்கு மொழி பெயர்க்க பட்ட தமிழ் படம் எந்திரன் தான்.
    • சந்திரமுகி, சிவாஜி போன்றவை தெலுங்கில் தமிழ் படங்களுக்கு வலுவான மார்க்கெட் ஏற்படுத்தி கொடுத்தன.
    • எந்திரனுக்கு இப்போது வட இந்தியாவில் நல்ல அறிமுகம் கிடைத்துள்ளது.

    கோடிக்கணக்கான ரூபாய் பணத்தில் மட்ட ரகமான படம் எடுத்து, மோசமான படத்தையும் கொடுத்து, தயாரிப்பாளரையும் நட்ட படுத்தி, துறையையும் முடங்க செய்பவர்கள் ரஜினியை விமர்சிக்க என்ன யோக்கியதை இருக்கிறது ?

     

    வெள்ளைகாரர்கள் சூப்பர் ஹீரோ வேடத்தில் நடிக்கும் போது வாயை மூடிக்கொண்டு ரசிப்பவர்கள் ஓர் இந்தியர் நடித்தால் நக்கல் செய்வது அடிமை தனத்தையும், நிற வெறியையும் தவிர எதை காட்டுகிறது ?

     

    1. Reshaping global film industry

    Tu_22406 Endhiran cleverly blends Eastern talent with Western expertise to co-create a seamless viewing experience that no single region could have concocted on its own, say Dr Simone Ahuja and Navi Radjou.

    By 2020, the global creative industry will be organised, and operate, as polycentric innovation networks in which all hubs operate in parity and creative ideas seamlessly flow from one hub to another -- very similar to how the high-tech sector operates today.
    http://business.rediff.com/slide-show/2010/oct/01/slide-show-1-special-how-india-is-reshaping-global-film-industry.htm

    2. For the first time, a movie from India will be dubbed in Japanese.

    http://sify.com/finance/Rajini-fells-all-records-with-sci-fi-entertainer-Endhiran-imagegallery-others-kkdldrjaghh.html

    3. Existance of Tamil Film industry

    http://www.behindwoods.com/features/visitors-1/endhiran-us-08-10-10.html 

    People who live outside of South India (rest of India and the world at large) know that an industry called the Tamil Film industry exists only when Superstar Rajinikanth releases a film.

    Since 1999, Rajini has acted in 5 full length feature films (Kuselan was a cameo) and four of them have gone on to re-write box office history and take Tamil Cinema and Indian Cinema to unchartered territories. 

    4. ”The arrival and the subsequent success of Robot has changed equations in the industry."

    Rajinikanth beats the Khans  http://www.behindwoods.com/features/visitors-1/endhiran-us-08-10-10.html

    SRK’s status as the man who had the biggest opening weekend collections in the US for an Indian movie came to an end when Endhiran entered the land… When taking into account both Endhiran and Robot, the film’s opening weekend collections in the US were US$ 2,001,788 from 100 screens giving it a per screen collection of US$ 20,017. 

    Do you think SRK or Amir Khan or Salman Khan can ever in their wildest imaginations have the dubbed Tamil version of one of their films emerge as a winner in even Tamil Nadu let alone the US box office? Never!

    5. Undisputed Hero

    Trade analyst Taran Adarsh - “Robot has put him on an unmatchable level. His demand is growing both in North India and internationally.”

    It’s not just multiplexes that are raking in the moolah. Vishek Chauhan, owner of Roopbani theatre in Purnia, Bihar, insists that both the classes and the masses seem to love the actor in his latest avatar. “We’ve never witnessed something like this earlier. The shows remain full even on Mondays.”
    http://www.hindustantimes.com/Rajinikanth-beats-the-Khans/H1-Article1-608663.aspx 

    Robot is repeating the success story like never before. “It’s not Batman or Superman, no blonde-haired, white-skinned super hero saving the world… he is our very own Chitti — one we can all relate to,” says film critic Anupama Chopra.
    http://www.hindustantimes.com/Rajinikanth-beats-the-Khans/H1-Article1-608663.aspx

    சும்மா அதிருதுல்ல :) தொடரும்…

    எந்திரன் – 2 [கான்களுக்கு Robot phobia: சும்மா அதிருதுல்ல :)]

    ரஜினியும் தமிழ் பட உலகமும் எவ்வாறெல்லாம் தவறாக கேவலப்படுத்த பட்டனர் என்பதை முதல் பகுதியில் பார்த்தோம். இந்தி பட பிரமுகர்கள் நிறுவ முயன்றது கீழ் கண்டவற்றை தான்.

    1. தமிழ் பட உலகம் என்பது தொழில் நுட்ப ரீதியாக பின்னடைந்த நிறுவனங்களை கொண்டுள்ளது.
    2. பிராந்திய மொழியான தமிழில் தேசத்தை கவரும் பிரம்மாண்ட படம் எடுக்க இயலாது.
    3. ரஜினி போன்ற தென்னிந்திய நடிகர்கள் நடிக்கவே தெரியாத, முட்டாள் தனமான சைகைகளை மட்டுமே கொண்டு படம் அளிப்பவர்கள்.

     

    விமர்சனங்கள் அவர்களுக்கே ஆப்பாக மாறியது எப்படி ?

    இதற்கு ரஜினியின் தரப்பில் அப்போது எந்த எதிர்வினையும் நிகழ்த்த படாதது மிகப்பெரிய ஆச்சர்யம் அளித்தது. ரஜினி தன் எதிர் வினையை பேச்சில் காட்டாமல் தன் அடுத்த படமான எந்திரன் மூலமாக தந்துள்ளார். எந்திரன் நிறூபித்து காட்டி உள்ளது இவை தான்.

    1. தமிழ் பட உலகமானது இந்தியாவின் தலை சிறந்த தொழில் நுட்பத்தையும் கலைஞர்களையும் கொண்டுள்ளது. இன்றைய தேதியில் சினிமாவின் எல்லா தொழில் நுட்ப துறைகளிலும் தென் இந்திய கலைஞர்கள் இந்தி கலைஞர்களை விஞ்சியுள்ளனர். சிறந்த இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், ஒலி கோப்பாளர், நடன இயக்குனர், சண்டை இயக்குனர் மற்றும் நகைச்சுவை கலைஞர் வரை மிகச்சிறப்பானவர்கள் இங்கேயே உள்ளனர்.
    2. எந்திரனின் இந்தி பதிப்பின் மூலம் இந்தி பட உலகிற்கு புத்துணர்ச்சி கிடைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இன்றைய தேதியில் பிகார், குஜராத், பஞ்சாப் என இந்தியாவின் அணைத்து பகுதிகளில் வெற்றிகரமாக ஓடிக்கோண்டிருக்கும் படம் எந்திரன் தான்.
      Do you think SRK or Amir Khan or Salman Khan can ever in their wildest imaginations have the dubbed Tamil version of one of their films
      emerge as a winner in even Tamil Nadu let alone the US box office? Never!
      http://www.behindwoods.com/features/visitors-1/endhiran-us-08-10-10.html
    3. படத்திற்கேற்ப தன்னை மாற்றி கொள்ள இயலும் என்பதை ரஜினி காட்டி உள்ளார். ஆரம்ப பாடல் காட்சி இல்லாத, ரோபோவிற்கு பயப்படக்கூடிய, தன்னுடைய படத்தில் சாதாரண மனிதருக்கு பயப்படும் வேடத்தில் சராசரி விஞ்ஞானியாகவும் தன்முணைப்பு  இல்லாமல் தன்னால் நடிக்க இயலும் என்பதையும் ரஜினி காட்டி உள்ளார்.

      Black Sheep காட்சி ஒன்று போதும் ரஜினியின் நடிப்பு திறமையை புரிந்து கொள்ள. அதே காட்சியில் MGR, சிவாஜி, கமல் என மூவரையும் இமிடேட் செய்து நடித்ததை எத்தணை பேர் கவனித்தார்கள் என்று தெரியவில்லை.

      ரஜினியின் வழக்கமான மசாலா படமாக இது அமையும், எல்லோரும் சேர்ந்து அசிங்க படுத்தாலாம் என்று நிணைத்தவர்களின் நிணைப்பிற்கு ஆப்பு வைத்துள்ளார்.

     

    சவால்

    இந்த படத்தில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விசயம் “இது முழுக்க முழுக்க தமிழ் பட உலகில் சென்னையை மையமாக கொண்டு தயாரான இந்திய படம். இந்தி சினிமா உலகிற்கு எந்திரனில் நேரடி சம்பந்தமில்லை. எந்திரன் இந்தி சினிமா உலகிற்கு விடுக்கப்பட்டுள்ள வெளிப்படையான சவால்.”

     

    எந்திரனும் ரஜினியும், சாருக்கானையும், ஹிரித்திக் ரோசைனையும் படுத்தும் பாடு :)

    Rajni_thumb57கீழ்காணும் செய்திகளெல்லாம் எப்போதும் வெளிவரும் கிசு கிசு செய்திகள் போன்று மிகைப்படுத்த பட்டவை அல்ல. சம்பந்த பட்டவர்களிடம் நேரடியாகவே பேட்டி எடுத்து வெளியிட்டுள்ளனர். “Robot SRK” என்று Google Search செய்து பாருங்கள் உண்மை தெரியும். http://www.google.co.in/search?q=robot+SRK&qscrl=1

     

    இப்போது இவ்விரு நடிகர்களும் எவ்வாறு எந்திரனை விட சிறப்பாக  படம் செய்வது என இரவேல்லாம் தூங்காமால் ரூம் போட்டு யோசித்து வருகிறார்கள்.

    ஹிரித்திக் ரோசைன் ரோபோவின் தொழில் நுட்பங்களுடன் போட்டி போட முடியாமல் தன்னுடைய அடுத்த படமான் கிரிஷ் – 2 வின் படப்பிடிப்பையே தள்ளி வைத்துள்ளார்.

     

    King Kong SRK (எழுத்து பிழை அல்ல)

    http://entertainment.oneindia.in/tamil/exclusive/2010/rajinikanth-endhiran-shahrukh-ra-one-071010.html

    According to reports, King Khan, director Anubhav Sinha, sound engineer Resul Pookutty had a lengthy meeting at SRK's house on last Sunday. They had a brainstorming session, discussing about the movie, especially about the quality of the film and its climax.

    Hrithik Roshan

    http://timesofindia.indiatimes.com/entertainment/bollywood/news-interviews/SRK-Hrithiks-Robot-phobia/articleshow/6711037.cms

    Rajnikanth starrer Robot pushed the panic buttons in Shah Rukh Khan's office. It is now doing the same in Rakesh Roshan's office.

    We then asked him if Krrish 2 was taking time since he wanted to raise it to the highest standards possible. To this he replied, "No, not correct. I might start Krrish; wait for the announcement."

    http://timesofindia.indiatimes.com/entertainment/bollywood/news-interviews/Hrithik-wants-to-beat-Rajnikanth/articleshow/6672271.cms

    Hrithik Roshan is neck deep in meetings with his father, Rakesh Roshan's team of writers. Now everyone knows that scripts involving Indian super-heroes will need plenty of brain-storming, espe-cially after Rajnikanth's latest film. The SFX and the canvas of the Rajni-Ash bilingual is making Bollywood nervous. All those dealing with super-heroes in their projects know they will have to take things to the next level if they want to surpass what Rajni Sir has already done.

     

    வயித்தெரிச்சல் பார்ட்டிகளுக்கு இன்னும் எரிய [BBC Review]

      1. Smart lines, diabolical characters, high-voltage action and impressive special effects make this a promising Indian popcorn movie.
      2. The movie is also the product of an industry which is fast becoming globalised, despite its unique brand of cinema.
      3. As so often, Rajinikanth steals the show.
        http://www.bbc.co.uk/news/world-south-asia-11498630

    எந்திரன் அணைத்து வசூல் சாதணைகளையும் முறியடித்த விவரம் [Rs 117cr in just 7 days, 'Robot' Rajini smashes all records]

    http://timesofindia.indiatimes.com/india/Rs-117cr-in-just-7-days-Robot-Rajini-smashes-all-records/articleshow/6716660.cms

    The Hindi version of the film Robot too has done a business of nearly Rs 30 crore in the first week. Amod Mehra said, ''Robot has broken all the norms of a dubbed film. I don't remember any dubbed film crossing even the one crore mark."

    [ இன்னும் வரும்…;) ]

    ரஜினியும் தமிழ் அடையாளமும் (எந்திரன் –1)

    ரஜினி தமிழ் சினிமா உலகிற்கு என்ன செய்தார் ?

    aishwarya-rai-robot-06 தங்களை அறிவு ஜீவிகளாக கருதி கொள்ளும் விமர்சகர்கள் ரஜினி பட வெளியீட்டின் போதும் எழுப்பும் கேள்வி ரஜினி தமிழ் பட உலகிற்கு என்ன செய்தார் என்பதே.

    இவ்வினாவிற்கு விடை அளிக்கும் முன்பு தமிழ் பட உலகை பற்றியும், தமிழர்களை பற்றியும் வட நாட்டிலும், வெளி உலகிற்கும், எந்திரன் படத்திற்கு முன் பரப்பபட்டிருந்த அறிமுகம் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

     

     

    எந்திரனுக்கு முன் – 1

    தமிழ் என்பது ஒரு பிராந்திய மொழி. அசிங்கமான திராவிட உருவத்தையும், தமிழர்களின் ஆழமான சினிமா அறிவின்மையையும் அடையாளமாக கொண்டிருப்பதால் தான் ரஜினிக்கு புகழடைந்திருக்கிறார்.

    கருப்பு மந்தை கூட்டத்தின் முட்டாள்தனத்தை சமாளிக்கும் வார்த்தை தான் போனமேனன்.

    - மனு ஜோசப், பத்திரிக்கையாளர். (பெயரை கொண்டு இவர் எந்த மாகாண அறிவாளி என எளிதில் புரிந்து கொண்டிருக்கலாம்.)

    Tamil is merely a regional language once spoken by Rekha. And they decide that his fame is a consequence of his reassuring Dravidian ugliness, and of the deep cinematic insanity of Tamilians. This is rubbish.

    There was something intellectual in calibrating the folly of the dark masses and renaming it ‘phenomenon’.

    Manu Joseph http://www.openthemagazine.com/article/voices/the-revenge-of-rajnikanth

     

    எந்திரனுக்கு முன் – 2

    ரஜினிகாந்த் இந்தி பட உலகின் ஏழை(?) சகோதரியான தமிழ் பட உட உலகின் நடிகர்.

    இந்திய தளங்கள் ரஜினிகாந்த்தை பொதுவாக ஜோக்கரை போல சித்தரித்து நகைச்சுவை எழுதுவது வழக்கம்.

    பைத்தியத்தனமான அறிமுக பாடலும், சைகைகளும், டிஸ்யும் டிஸ்யும் குத்துக்களும் இல்லாதது ரஜினிகாந்த் படமே அல்ல.

    He works in the Tamil film industry, Bollywood's poorer Southern cousin, best-known for its ace cinematographers and gritty crime dramas.

    Indian message boards are alight with Rajinikanth jokes, the equivalent of Chuck Norris jokes. ("Rajinikanth was bitten by a cobra. After four days of intense suffering, the snake died.") Onscreen, when Rajinikanth points his finger, it's accompanied by the sound of a whip cracking.

    A Rajinikanth movie without his "SUPERSTAR Rajinikanth!" billing, without his crazy-making opening number, without his fingers pointing like whips, without the world's most complicated plot, without the dshoom dshoom of him punching giant thugs into exploding electrical lines—that's just not a Rajinikanth movie at all.

    - Grady Hendrix http://www.slate.com/id/2267820/

     

    என்ன காரணம் ?

    இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விசயம் தமிழர்களை பற்றிய இத்தகைய தவறான அறிமுகம் ஏற்பட்டது ஒன்றும் தற்செயலானது அல்ல. இவை சாருக்கான் போன்ற இந்தி சினிமா பிரமுகர்களால் திட்டம் போட்டு நிறைவேற்றப்பட்டது.

    ஓம் சாந்தி ஓம்

    சாரூக்கானின் Om Shanti Om படத்தில் ஆரம்பித்தது இது. சங்கர் சாரூக்கானை Robot படத்திலிருந்து நிராகரித்து வெளியேற்றிய பிறகு தமிழர்களை பற்றிய தவறான தகவல்கள் அவரின் அடிவருடி ஊடகங்கள் வழியாக டிவி நாடகங்கள், சினிமாங்கள், பத்திரிக்கைகள் மூலம் பரப்ப பட்டது. (உதாரணத்திற்கு மேற்குறிய செய்திகளே போதும். மேற்கூறியவை சரியாக படம் வெளியாவதறகு சில நாட்களுக்கு முன் வெளியிட்டு விளம்பரப்படுத்த பட்டன.)

    இது, இந்தி மட்டுமே இந்தியாவின் அடையாளம், இந்தி சினிமா மட்டும் இந்திய சினிமாவின் அடையாளம் என அறியப்பட செய்யும் கலாசார படையெடுப்பு. அவ்வாறு நிறுவப்பட்டால் தான் ஆயிரக்கணக்கான கோடிகள் மதிப்புள்ள இந்திய சினிமா உலகை மும்பை தாதாக்கள் மூலம் குறிப்பிட்ட சிலர் மட்டும் சுரண்ட இயலும்.

    இந்த அறிமுகங்கள் எவ்வாறு அவர்களுக்கே ஆப்படிக்க பட்டது என்பதை ஆதாரங்களுடன் அடுத்தடுத்த பகுதிகளில் காணலாம்.

    பிரிவு துயரம் – பத்மஸ்ரீ வாலியின் வைரவரிகள்

    காதலன் தன் பிரிவு துயரை தன் கண்மணிக்கு தெரியப்படுத்தும் ஒரு அருமையான பாடல், சமீபத்தில் இசை வெளியீடு நடைபெற்ற ‘சிக்கு புக்கு’ படத்தில் கேட்க நேர்ந்தது.

     

    பத்மஸ்ரீ வாலி அவர்கள் முதல் வரியின் கவித்துவ உவமையிலிருந்தே மனம் கவர்கிறார். சூபி இசையில் அமைந்த தமிழ் காதல் பாடல் ஒரு வித்தியாசமான அனுபவம் அளிக்கிறது. இசையமைப்பாளர் பாடகர்களின் மொழி உச்சரிப்பை மெருகூட்டி இருந்தால் இன்னும் கூட சிறப்பாக இருந்திருக்கும்.

     

    பாடல்: தூரல் நின்றாலும்

    பாடல் வரிகள்: பத்மஸ்ரீ வாலி

    பாடகர்கள்: ஹரிஹரன், வடாலி சகோதரர்கள்

    இசை: ஹரிஹரன் & லெஸ்லி

     

    உன்னை, உன்னிடம் தந்து விட்டேன்

    நீ, என்னை என்னிடம் தந்து விடு

    போதும், போதும், எனை போக விடு

    கண்மணி எனை போக விடு

    கண்மணி கண்மணி

    தூரல் நின்றாலும், சாரல் நின்றாலும் ஈரம் மண்ணிலே!

        தூர சென்றாலும், தொலைவில் நின்றாலும் எண்ணம் உன்னிலே!

    இரவில் தூங்காத இமைகள் ஓரம் நீயே நிற்கிறாய்!

        எனது தூக்கத்தை நீதான் வாங்கி எங்கே விற்கிறாய் ?!

    தூரல் நின்றாலும், சாரல் நின்றாலும் ஈரம் மண்ணிலே!

        தூர சென்றாலும், தொலைவில் நின்றாலும் எண்ணம் உன்னிலே!

    உயிரே உயிரே

     

    உன்னை கேட்காமல் என்னை கேட்காமல் காதல் உண்டானதே! [ எனை போக விடு கண்மணி]

        விழிகள் என்கின்ற வாசல் வழியாக காதல் உள் சென்றதே !!

    இனியும் உன் பெயரை என் நெஞ்சோடு ஒட்டி வைப்பதா ?

        எனது பொருள் அல்ல நீதான் என்று எட்டி வைப்பதா ?!

     

    விடைகள் இல்ல வினாக்கள் தானடி

     

    தூரல் நின்றாலும், சாரல் நின்றாலும் ஈரம் மண்ணிலே!

        தூர சென்றாலும், தொலைவில் நின்றாலும் எண்ணம் உன்னிலே!

    இரவில் தூங்காத இமைகள் ஓரம் நீயே நிற்கிறாய்!

        எனது தூக்கத்தை நீதான் வாங்கி எங்கே விற்கிறாய் ?!

    தூரல் நின்றாலும், சாரல் நின்றாலும் ஈரம் மண்ணிலே!

     

    Thanks: http://tamilyrics.wordpress.com/2010/09/11/thooral-nindralum-chikku-bukku-lyrics/

    Unnai unnidam thanthu vitten
    nee ennai ennidam thanthu vidu
    podhum podhum enai poga vidu

    kanmani enai poga vidu
    kanmani kanmani

    thooral nindralum saaral nindraalum eeram mannile
    dhoora sendralum tholaivil nindralum ennam unnile

    iravil thoongatha imaigal oram neeye nirkiraai
    enadhu thookkathai neethaan vaangi engey virkiraai

    thooral nindralum saaral nindraalum eeram mannile
    dhoora sendralum tholaivil nindralum ennam unnile

    uyire uyire

    unnai ketkamal ennai ketkamal kadhal undanathey

    enai poga vidu kanmani

    vizhigal engindra vaasal vazhiyaga kadhal ulsendrathey

    iniyum un perai en nenjodu otti vaipadhaa

    enadhu porul alla neethaan endru etti vaippadha

    vidaigal illa vinakkal thaanadi

    thooral nindralum saaral nindraalum eeram mannile
    dhoora sendralum tholaivil nindralum ennam unnile

    iravil thoongatha imaigal oram neeye nirkiraai
    enadhu thookkathai neethaan vaangi engey virkiraai

    thooral nindralum saaral nindraalum eeram mannile

     

    Thanks http://blog.mp3hava.com/download-mp3-sogns-chikku-bukku-chikku-bukku-songs-wallpapers-photos-images-posters-gallery-trailer-blog-mp3hava-com/2010

    Cast : Arya, Shriya, Preetika Rao (Sister of Bollywood Actress Amrita Rao)
    Camera : R.B. Gurudev
    Dialogues written by : S. Ramakrishnan
    Lyrics : Padmashree Valee, Pa. Vijay
    Music : Hariharan and Leslie
    Choreographers : Rekha Chinni Prakash and Dinesh
    Director: Manikandan
    Producer: Metro Films

    பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

    பரஸ்பர மொழியறியாத இரு காதலர்கள் தங்கள் உணர்வுகளை பரிமாறி கொண்டு அன்பில் திளைக்கும் தருணம் இது. திரு. கண்ணதாசனுக்கு பிறகு கவிதைகளுக்காக அதிகம் விரும்பி கேட்கும் பாடல்களை எழுதும்  கவிஞர் சந்தேகமின்றி திரு. நா.முத்துக்குமார் தான்.

     

    திரை படம் : மதராசபட்டிணம்
    வரிகள் : நா.முத்துக்குமார்
    இசை : G. V. பிரகாஷ்
    பாடியவர்கள்: GV பிரகாஷ், ரூப்குமார், ஹரிணி, அண்ட்ரியா


     


    [தான தொ தனன,தான தொ தனன]


    Male: பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே,
    பார்த்ததாரும் இல்லையே
    Female: புலரும் காலை பொழுதை
    முழுமதியும் பிரிந்து போவதில்லையே

    Male: நேற்றுவரை நேரம் போக வில்லையே,
    உனதருகே நேரம் போதவில்லையே

    Female: எதுவும் பேசவில்லையே,இன்று ஏனோ
    எதுவும் தோன்றவில்லையே…இது எதுவோ?......!
    Male: இரவும் விடியவில்லையே, அது விடிந்தால்
    பகலும் முடியவில்லையே பூந்தளிரே......!
    [தான தொ தனன,தான தொ தனன]

    Male: வார்த்தை தேவையில்லை, வாழும் காலம் வரை,
    பாவை பார்வை மொழி பேசுமே!
    Female: நேற்று தேவையில்லை, நாளை தேவையில்லை,
    இன்று இந்த நொடி போதுமே!
    Male: வேரின்றி விதையின்றி விண்தூவும் மழையின்றி
    இது என்ன இவன் தோட்டம் பூப்பூக்குதே?
    Female: வாளின்றி, போரின்றி, வலியின்றி, யுத்தமின்றி
    இது என்ன இவனுக்குள் என்னை வெல்லுதே?
    Male: இதயம் முழுதும் இருக்கும் இந்த  தயக்கம்,
    எங்கு கொண்டு நிறுத்தும்
    Female: இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்,
    அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்
    Male: பூந்தளிரே ……


    Female:
    Oh where would I be without this joy inside of me?
    It makes me want to come alive; it makes me want to fly into the sky!
    Oh where would I be if I didn’t have you next to me?
    Oh where would I be? Oh where, oh where?


    Male: எந்த மேகம் இது? எந்தன் வாசல் வந்து
    எங்கும் ஈர மழை தூவுதே!
    Female: எந்த உறவு இது? எதுவும் புரியவில்லை
    என்றபோதும் இது நீளுதே!
    Male: யாரென்று அறியாமல், பேர்கூட தெரியாமல்,
    இவளோடு ஒரு சொந்தம் உருவானாதே!
    Female: ஏனென்று கேட்காமல்,தடுத்தாலும் நிற்காமல்
    இவன் போகும் வழியெங்கும் மனம் போகுதே!
    Male: பாதை முடிந்த பிறகும், இந்த உலகில்
    பயணம் முடிவதில்லையே
    Female: காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும்,
    இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே!
    Male/Female: இது எதுவோ!
    [தான தொ தனன,தான தொ தனன]


    Female: பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனே
    பார்த்ததாரும் இல்லையே
    Female: புலரும் காலை பொழுதை
    முழுமதியும் பிரிந்து போவதில்லையே
    Male: நேற்றுவரை நேரம் போக வில்லையே,
    உனதருகே நேரம் போதவில்லையே
    Female: எதுவும் பேசவில்லையே, இன்று ஏனோ
    எதுவும் தோன்றவில்லையே …என்ன புதுமை?

    Female/Male: இரவும் விடியவில்லையே, அது விடிந்தால் பகலும் முடியவில்லையே
    Male: இது எதுவோ!!
    [தான தொ தனன,தான தொ தனன]

    Mass
    நான் என்ற சொல் இனி வேண்டாம் !
    நீ என்பதே இனி நான்தான் !
    இனிமேலும் வரம் கேட்க தேவையில்லை !
    இதுபோல் வேறெங்கும் சொர்கமில்லை !

     

    இப்பாடலை தாமதமாக கேட்க நேர்ந்ததை முன்னிட்டு அதிகம் கேட்கிறேன் போல. (தொடர்ந்து 10 வது முறையாக!!!)

     

    Thanks

    http://www.tamilthunder.com/forum/showthread.php?71483-%26%232986%3B%26%233010%3B%26%232965%3B%26%233021%3B%26%232965%3B%26%232995%3B%26%233021%3B-%26%232986%3B%26%233010%3B%26%232965%3B%26%233021%3B%26%232965%3B%26%233009%3B%26%232990%3B%26%233021%3B-%96-Madharasapattinam&p=711035

    http://vimalaranjan.blogspot.com/2010/07/blog-post.html

    என்ன என்ன என்ன ஆகிறேன் ?… என் காதலே ?… ;)

    வெளியாக இருக்கும் ”காதல் சொல்ல வந்தேன்” படத்தில் உள்ள மிகவும் பிடித்த பாடல் “என்ன என்ன என்ன ஆகிறேன் ?”. தலைவியை பார்த்து தலைவன் பாடும் பாடல். யுவன் சங்கர் ராஜா, நா. முத்துக்குமார் எப்போதும் போல அழகு செய்துள்ளனர். விஜய் ஜேசுதாசின் குரலில் பாடல் அழுத்தம் திருத்தமாக உள்ளது மிகச்சிறப்பு.

     

     

    என்ன என்ன என்ன ஆகிறேன் ?
    மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்
    தொட்டுப்பிடித்திடும் தூரத்தில்,
    பறக்கிறேன், நிலவைப்பிடிக்கிறேன்…

    காதல்சிலை ஒன்று, நெஞ்சம் செய்ததே
    கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே
    கத்தும் கடல் அலை அமைதி ஆனதே
    வெட்ட வெளியினில் காயல் நீந்துதே…

    என்ன என்ன என்ன ஆகிறேன் ?
    மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்

     


    பார்வையில் உந்தன் யோசனை, புரிந்து சேவை யாவும் செய்வேன்
    உயிருக்குள் ஒரு நூலினை, கோர்த்து உன்னை அங்கு நெய்வேன்

    மண்ணில் எது சுகம் ? பெண்ணே உந்தன் முகம்
    உன்னிடத்தில் என்ன கேட்கிறேன் ?
    உன் காதல் போதுமே, என் ஜென்மம் தீருமே…

    காதல்சிலை ஒன்று, நெஞ்சம் செய்ததே
    கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே
    கத்தும் கடல் அலை அமைதி ஆனதே
    வெட்ட வெளியினில் காயல் நீந்துதே…

    என்ன என்ன என்ன ஆகிறேன் ?
    மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்

     

    விதை என அன்று விழுந்தது, வளர்ந்து விருட்சமாகும் நேரம்
    கனவென கண்ணில் இருந்தது, கரைந்து காதலாக மாறும்
    எதை விரும்பினேன் ? அதை அடைகிறேன்

    உன்னிடத்தில் என்ன கேட்கிறேன் ? 
    செத்தாலும், உன் மடி, தந்தாலே நிம்மதி…

    காதல்சிலை ஒன்று, நெஞ்சம் செய்ததே
    கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே
    கத்தும் கடல் அலை அமைதி ஆனதே
    வெட்ட வெளியினில் காயல் நீந்துதே

    என்ன என்ன என்ன ஆகிறேன் ?
    மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்…

    தொட்டுப்பிடித்திடும் தூரத்தில்,
    பறக்கிறேன், நிலவைப்பிடிக்கிறேன்.

    பதிவுலகிற்கு(?) உடுக்கை அடிக்க :)

    யாரு வச்ச கண்ணோ தெரியல பதிவுலகமே பத்திகிட்டு எரியுது. சம்பந்த படாதவங்களையெல்லாம் சம்பந்தப்படுத்துது. எனவே அன்பு வேண்டி காதல் தெய்வத்திற்கு உடுக்கை அடிக்க வேண்டிய நிலைமை நம்முடையது.

    சமீபத்தில் யுவனின் காதல் சொல்ல வந்தேன் படப்பாடல்கள் கேட்டேன். மிக நன்றாக உள்ளது. காதலை பிழிந்து சாறே எடுத்து இருக்கிறார்கள். பாடல்கள் நா.முத்துகுமார். மனிதர் அருமையாக பாடல்கள் எழுதி இருக்கிறார். அதில் மிகவும் பிடித்த பாட்டு

    என்ன என்ன என்ன ஆகிறேன்
    மெல்ல மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்

    எனும் இதமான பாடல்.

     

    இப்படத்தில் வரும் ”சாமி வருகுது” பாடல் நம்முடைய பதிவர்களுக்கான பாட்டு. கிராமிய கலைஞர்களுடன் கிராமிய இசையில் அப்படியே நம்ம் ஊர்ப்பாட்டு. பாடல் நகைச்சுவையானது என்பதால் பஜனை வடிவில் இருக்கிறது.  இப்பாடலை பாட சிதம்பரம் சிவக்குமார் பூசாரி & குழுவினரையே யுவன் பய்ன்படுத்தியுள்ளார். உடுக்கை, உறுமி, நாதஸ்வர இசையும் கலக்கல். பழைய இளையராஜா பாடல்களின் மணம் இருக்கிறது.  பல பக்தி பாடல்கள் நினைவில் வரவும் வாய்ப்பு இருக்கிறது.

     

    [இப்ப தேவையான பதிவர்கள் அவரவர் இருக்கும் இருப்பிடத்திலேயே சாமியாடி பாடி கொல்லவும் ;)]

    Play - Saami Varuguthu Kaathal

    சாமி வருகுது காதல் சாமி வருகுது 
    நான் கேட்காத வரமெல்லாம்  கொடுக்க வருகுது

    சாமி வருகுது காதல் சாமி வருகுது

    நீ கேட்காத வரமெல்லாம்  கொடுக்க வருகுது

    Saami Varuguthu Kaathal Saami Varuguthu
    Naan Kaetkatha Varamellam Kodukka Varuguthu
    Saami Varuguthu Kaathal Saami Varuguthu
    Nee Kaetkatha Varamellam Kodukka Varuguthu

     

    ஆடி வருகுது அழகா ஆடி வருகுது

    ஆடி வருகுது அழகா ஆடி வருகுது

    ஏன் நெஞ்சுக்குள் அலகு குத்த ஓடிவருகுது

    Aadi Varuguthu Azhagha Aadi Varuguthu
    Aadi Varuguthu Azhagha Aadi Varuguthu
    Ae Nenjikkul Alaku Kutha Oadivaruguthu

    [சாமி வருகுது]

     

    மஞ்சள் நிற ஆடை கட்டி ஓடிவருகுது

    லைட்டு மஞ்சள் நிற ஆடை கட்டி ஓடிவருகுது

    லைட்டு மஞ்சள் நிற ஆடை கட்டி ஓடிவருகுது

    Manjal Nira Aadaikatti Oadi Varuguthu
    Light’tu Manjal Nira Aadaikatti Oadi Varuguthu
    Light’tu Manjal Nira Aadaikatti Oadi Varuguthu

     

    ஏய் மத்தவன விட்டு என்னை நாடி வருகுது

    ஏய் மத்தவன விட்டு உன்னை நாடி வருகுது

    Ae Mathavana Vittu Ennai Naadi Varuguthu
    Ae Mathavana Vittu Unnai Naadi Varuguthu

     

    கொஞ்சி கொஞ்சி என்னை இப்போ சுத்திவருகுது

    கொஞ்சி கொஞ்சி உன்னை இப்போ சுத்திவருகுது

    Konji Konji Ennai Ippo Suthi Varuguthu
    Konji Konji Unnai Ippo Suthi Varuguthu

     

    குங்குமத்த வைக்க ஒரு நெத்தி வருகுது

    நான் குங்குமத்த வைக்க ஒரு நெத்தி வருகுது

    Kungumatha Vaika Oru Nethi Varuguthu
    Naan Kungumatha Vaika Oru Nethi Varuguthu

    [சாமி வருகுது]

     

    [நாதஸ்வர ஆவர்த்தனம்]

     

    உள்நெஞ்சில் உண்டியலாய் ஆட வருகுது

    உள்நெஞ்சில் உண்டியலாய் ஆட வருகுது

    அட உன்நடைய சில்லரையாய் போட வருகுது

    அட உன்நடைய சில்லரையாய் போட வருகுது

    Ul Nenjil Undiyalai Aada Varuguthu
    Ul Nenjil Undiyalai Aada Varuguthu

    Ada Un Nadaiya Sillaraiyai Poada Varuguthu
    Ada Un Nadaiya Sillaraiyai Poada Varuguthu

     

    கண்ணு ரெண்டும் காவடியை தூக்கி வருகுது

    கண்ணு ரெண்டும் காவடியை தூக்கி வருகுது

    போன ஜென்ம புண்ணியத்தில் பாக்கி வருகுது

    என் போன ஜென்ம புண்ணியத்தில் பாக்கி வருகுது

    Kannu Rendum Kaavadiyai Thookivaruguthu
    Kannu Rendum Kaavadiyai Thookivaruguthu

    Pona Jenmama Puniyathil Bakki Varuguthu
    En Pona Jenmama Puniyathil Bakki Varuguthu

    [சாமி வருகுது]

     

    காதலுக்கு கை கொடுக்க பாதம் வருகுது

    காதலுக்கு கை கொடுக்க பாதம் வருகுது

    நான் கூழு ஊத்தி கொண்டாட காலம் வருகுது

    நீ கூழு ஊத்தி கொண்டாட காலம் வருகுது

    Kaathalukku Kai Kodukka Paatham Varuguthu
    Aam Kaathalukku Kai Kodukka Paatham Varuguthu

    Naan Koozhu Oothik Kondaada Kaalam Varuguthu
    Nee Koozhu Oothik Kondaada Kaalam Varuguthu

     

    தேரு வருகுது தங்க தேரு வருகுது

    தேரு வருகுது தங்க தேரு வருகுது

    தேரு மேல தேவரெல்லாம் ஏறி வருகுது

    அந்த தேரு மேல தேவரெல்லாம் ஏறி வருகுது

    Thaeru Varuguthu Thangath Thaeru Varuguthu
    Thaeru Varuguthu Thangath Thaeru Varuguthu
    Thaeru Maela Thaevarellam Aeri Varuguthu
    Antha Thaeru Maela Thaevarellam Aeri Varuguthu

     

    ஜோதி வருகுது காதல் ஜோதி வருகுது
    அவ என்னோட பாதியின்னு சேதி வருகுது.

    ஜோதி வருகுது காதல் ஜோதி வருகுது
    அவ என்னோட பாதியின்னு சேதி வருகுது.

    Jothi Varuguthu Kaathal Jothi Varuguthu
    Ava Ennoda Paathiyinu Saethi Varuguthu
    Jothi Varuguthu Kaathal Jothi Varuguthu
    Ava Ennoda Paathiyinu Saethi Varuguthu

     

    சாமி வருகுது காதல் சாமி வருகுது 
    நீ கேட்காத வரமெல்லாம்  கொடுக்க வருகுது

    நான் கேட்காத வரமெல்லாம்  கொடுக்க வருகுது

    நீ கேட்காத வரமெல்லாம்  கொடுக்க வருகுது

    Saami Varuguthu Kaathal Saami Varuguthu
    Nee Kaetkatha Varamellam Kodukka Varuguthu
    Naa Kaetkatha Varamellam Kodukka Varuguthu
    Nee Kaetkatha Varamellam Kodukka Varuguthu

    நன்றி: http://www.paadalvarigal.com/641/saami-varuguthu-kaadhal-solla-vandhen

    சோதிடம்-7 சந்திர சுழற்சியும், ராகு( Rahu), கேது (Kethu) வின் அவசியமும்?

    ராகு( Rahu), கேது (Kethu) வின் அறிவியல் தன்மைகள்

    ராகு கேதுக்கள் பற்றி தெரிந்து கொள்ள புவி, நிலவு, ரவி பற்றி அடிப்படைகள் அவசியமானது ஆகும்.

     

    புவி சுழற்சி

    globespin  axialtiltobliquity

     

    • கோள (உருண்டை) வடிவ பூமியானது தன்னையும், சூரியனையும் கடிகார எதிர் திசையில் சுற்றுகிறது. 
    • முதல் படத்தில் உள்ளது போல் புவி ஒரு குறிப்பிட்ட அச்சை (Rotation Axis) கொண்டு சுற்றினாலும் அவ்வச்சானது சூரியனுக்கு நேராக இல்லை.
    • அச்சின் மேல்பகுதி  வட துருவம் (North Celestial Pole) எனவும் கீழ் பகுதி தென் துருவம் (South Celestial Pole) எனவும் அழைக்கப்படும். புவி அச்சை கொண்டு பூமத்திய பகுதியை ஒரு கற்பனை கோடு வரைந்தால் கிடைப்பது பூமத்திய ரேகை (Celestial Equator) எனப்படும்.
    • புவி அச்சும் பூமத்திய ரேகையும் (Rotation Axis) சூரியனுக்கு 23 டிகிரி சாய்ந்துள்ளது. இந்த சாய்வானது Axis tilt or Obliquity என்று அழைக்கப்படுகிறது.

     

    சந்திர சுழற்சி

    lunar_perturbation

    • நிலா புவியையும், புவி சூரியனையும் நீள் வட்ட பாதையில் சுற்றுகின்றன. அதாவது நிலா புவியை ஒரு குறிப்பிட்ட நாள்களில் அருகாமையில் இருக்கும். புவிக்கு நிலா மிக அருகில் இருக்கும் இடம் Perigee எனப்படும்[During perigee, the moon is at it's closest distance to the earth (about 375,200 km)]. இதே போல நிலா புவிக்கு மிக தொலைவில் இருக்கும் இடம் Apogee எனப்படும் (the moon is at it's greatest distance[about 405,800 km] from the earth)
    • நிலா ஒரு முறை புவியை சுற்ற எடுத்துக் கொள்ளும் காலம் தோராயமாக 29.5 நாள்கள். இது சினாடிக் மாதம் Synodic Month எனப்படும்
    • புவியும் சூரியனை சுற்றி வருவதால் ஒரு மாதத்தில் தோராயமாக 360 பாகையில் 12ல் ஒரு பங்கு சுற்றுகிறது.
    • எனவே நட்சத்திர மண்டல குறியீடாக கொண்ட வான் காட்சியில் அதே நட்சத்திரத்தில் தோன்ற எடுத்துக் கொள்ளும் காலம் தோராயமாக 27.3 நாள்கள். இது சைடீரியல் மாதம் Sidereal Month எனப்படும. இதை கீழுள்ள வீடியோவின் மூலம் விளங்கி கொள்ளலாம்.
     
     

     

    350px-Earth-Moon

    மேலேயுள்ள படம் கிரகணங்கள் தோன்றுவதை புரிந்து கொள்ள முக்கியமானது ஆகும். இப்படத்தில் புவிசுற்றுபாதை நீல நிறத்திலும், நிலவின் பாதை சிவப்பு நிறத்திலும் குறிக்கப்பட்டுள்ளது.

    • சந்திர சுழற்சி படத்தில் குறிப்பிட்டபடி சூரியனது பாதையில் நிலவின் பாதை இரு இடங்களில் வெட்டும்.
    • சந்திரன் எதிர்கடிகாரதிசையில் சுற்றுவதால் முதலில் வெட்டும் இடம் Ascending  Node (AN) எனவும் அதன் எதிர்பகுதி Descending Node (DN)  எனவும் அழைக்கப்படும்.
    • இப்படத்தில் குறிப்பிட்டபடி சந்திரன் புவியை சுற்றும் பாதை பூமியின் சுற்றுபாதைக்கு சிறிதளவே மாறுபடுகிறது. வித்தியாசம் 5.14 பாகை மட்டுமே.
    • எனவே சூரிய சந்திர பாதைகள் வெட்டும் புள்ளிகளில் சந்திரனும் சூரியனும்  நேராக வரும் போது மட்டுமே கிரகணங்கள் தோன்ற முடியும் என்பது உணர தக்கதே.

     

    மேலும் சில அறிவியல் துளிகள்

  • புவியின் விட்டம் (Actual diameter of the earth) ~12,756 km
  • நிலவின் விட்டம் (Actual diameter of the moon) ~3476 km
  • ரவியின் விட்டம் (Actual diameter of the sun) 1,390,000 km
  • புவி நிலவிற்கு இடையேயான தூரம் (Average distance between the earth & moon) ~384,000 km
  • புவி ரவிக்கு இடையேயான தூரம் (Average distance between the earth & sun) ~150,000,000 km
  •  

    அடுத்த பகுதி: சோதிடம்-8 கிரகணங்கள், ராகு( Rahu), கேது (Kethu) க்களால் ஏற்படுவது உண்மையா ?

    [தொடரும்]

    சோதிடம்-6 சந்திரன், ராகு( Rahu), கேது (Kethu) என்பவற்றின் அறிவியல் ஆதாரம் என்ன ?

    ராகு, கேது பார்ப்பதற்கு முன் சென்ற பகுதியின் தொடர்ச்சியாக அமாவாசை, பௌர்ணமி பற்றிய மேலும் சில அறிவியல் தன்மைகளை பார்த்து விடுவோம்.

     

    அறிவியல் உண்மைகள்

    • புவி, நிலவு ஆகியவை தன்னுடைய பாகங்களின் தோராயமாக 50% பகுதிகளில் எப்போதும் சூரிய ஒளியை பெறுகின்றன.
    • ஒவ்வொரு அமாவசையிலும் சூரியனும், மதியும் புவிக்கு ஒரே பாகையில் உள்ளன. புவியில் தெரியக்கூடிய நிலவுடைய பகுதி நிலவின் சூரியனுக்கு மறுமுனையில் அமைந்த சூரியனின் வெளிச்சம் படாத பகுதி எனவே நிலவு தெரிவதில்லை
    • அமாவசையில் சூரிய உதயமும் சந்திர உதயமும் ஒரே நேரத்தில் நடக்கும்
    • ஒவ்வொரு பௌர்ணமியிலும் சூரியனும், மதியும் புவிக்கு எதிரெதிர் பாகையில் உள்ளன. புவியில் தெரியக்கூடிய நிலவுடைய பகுதி நிலவின் சூரியனுக்கு எதிராக அமைந்த, சூரியனின் வெளிச்சம் படும் பகுதி எனவே நிலவு முழுவதும் தெரிகிறது.
    • பௌர்ணமியில் சூரிய அஸ்தமனமும் சந்திர உதயமும் ஒரே நேரத்தில் நடக்கும்.

     

    moon_phases_diagram

     

    ராகு, கேது

     

    ராகு கேது என்பவை கிரகங்கள் என்பதன் மூலம் சோதிடம் பொய் எனபதாக சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து ஆராய்வோம்.

     

    சாயா என்பதன் பொருள் என்ன ?

    நன்றாக கவனித்தால் சோதிடத்தில் ராகு, கேது என்பவை கிரகங்கள் அல்ல சாயா கிரகங்கள் என்று குறிக்க பட்டுள்ளது விளங்கும். சாயா என்பதன் தமிழ் விளக்கம் கண்களுக்கு புலனாகாத (கற்பனை - மெய்நிகர் – virtual) என்பது ஆகும். அதாவது ராகு, கேது என்பவை மெய்நிகர் கற்பனை புள்ளிகள்.

     

    ராகு, கேது இல்லாத சோதிடம் உண்டா ?

    இந்திய விஞ்ஞானியான ஆர்யபட்டர் தன்னுடைய சூரிய சித்தாந்தத்தில் ராகு, கேது என்பவை சாதாரண கிரகங்கள் அல்ல என்பதை மறுத்துள்ளார். சூரிய சித்தாந்தத்தை கொண்டு சோதிட விளக்கங்கள் வடிவமைத்த வராக மிகிரர் தன்னுடைய நூலான பிருஹத் ஜாதகம் எனும் நூலில் ஆயிரக்கணக்கான சூத்திரங்களில் ராகு, கேது என்பதை குறிப்பிடாமலேயே  சாதகம் பார்க்கும் படி வடிவைத்துள்ளார்!

    Varahmihir, the father of astrology in his famous book Brihat Jataka did not recognise Rahu and Ketu but in his another book Brihat Samhita he devoted one chapter to Rahu and Ketu and considered them not any celestial physical body like other planets but as the nodes of the Moon, ie, points of intersection of orbits of the Moon and the Earth. The north point of this intersection is called Rahu (north node) while the south point of that is called Ketu (south node). In Surya Siddhanta (an antique book on Astronomy) they are also considered as nodal points which are now known as shadowy planets. Our learned astrologers found their significant role in judging horoscope for ups and down in one’s life, these nodes have been referred to the class of planets.

    --http://www.futurepointindia.com/articles/research-articles/rahu-ketu.aspx

     

    ராகு, கேது பிற்காலத்தில் ஏன் உருவாக்கபட்டது ?

    • பூமியின் முக்கிய நிகழ்வுகளான சூரிய கிரகணமும், சந்திர கிரகணமும் இரு குறிப்பிட்ட புள்ளிகள் நிகழ்வதை கண்டறிந்தனர்.
    • இந்த கிரகணங்கள் வருடம் ஒரு முறையாவது நிகழ்வதை கண்டறிந்தனர்.
    • இந்த புள்ளிகளும் 18.6 வருடங்களுக்கு ஒருமுறை நட்சத்திர மண்டலங்களை சுற்றி வந்து புவி சுற்றை நிறைவடைவதை கண்டறிந்தனர்.
    • இந்த புள்ளிகள் ஒன்றுக்கொன்று 180பாகையில் உள்ளதை கண்டறிந்தனர்.
    • இந்த கற்பனை புள்ளிகள் கொண்டு கிரகணங்கள் நிகழ்வதை தோராயமாக கணித்தனர். 

     

    எனவே இவற்றிற்கு பெயர் கொடுக்க முனைந்த அறிஞர்கள் கற்பனையான் மெய்நிகர் புள்ளிகள் எனும் பொருள் வாய்ந்த சாயா கிரகம் என்று கூறினர்.

    rahuketu_thumb[1]

     

    அறிவியல் ரீதியான விளக்கம் என்ன ?

     lunar_perturbation

     

     

    அடுத்த பகுதியில்…

     

    [தொடரும்]

    சோதிடம்-5 பௌர்ணமி, அமாவாசை

    சூரியோதயம், சந்திரோதயம்

    சென்ற பகுதியில் கிரகங்களின் உதயம் பற்றி பார்த்தோம். இப்போது பூமியில் அடிக்கடி நிகழும் கிரக உதயங்களான சூரியோதயம் மற்றும் சந்திரோதயம் பற்றியும் இவற்றால் ஏற்படும் முக்கிய நிகழ்வுகளான  பௌர்ணமி, அமாவாசை பற்றி பார்ப்போம்.

    300px-geometry_of_a_total_solar_eclipse.svg

    அமாவாசை

    சாதாரணமாக அமாவாசை என்பது சந்திரன் வராத நாள் என்றும், பௌர்ணமி என்பது முழு நிலவு வரும் நாள் என்று நினைத்து கொண்டிருக்கிறோம். உண்மையில் அமாவசையில் சந்திரன் உதிக்கிறது. ஆனால் சூரியன் உதிக்கும் அதே நேரம் உதிக்கிறது என்பது ஆச்சரியமூட்டும் விசயம் அல்லவா ? கீழேயுள்ள இம்மாத அமாவாசை நாளன்று ஏற்படும் உதய தகவல்களை காண்க.

    சூரிய உதயம் சந்திர உதயம் காண உதவும் பக்கம் http://aa.usno.navy.mil/data/docs/RS_OneDay.php

    தமிழக நகரங்களின் பூமியின் இருப்பிடம் காண உதவும் பக்கம்  Latitude and Longitude of Important locations in Tamilnadu

     

    Sun and Moon Data for One Day

    The following information is provided for Tiruchengodu, Tamilnadu%2c Ind (longitude E77.9, latitude N11.4):

            Saturday
            12 June 2010          Universal Time + 5:30         

    SUN
            Begin civil twilight      05:31                
            Sunrise                   05:55                
            Sun transit               12:18                
            Sunset                    18:42                
            End civil twilight        19:05                

    MOON
            Moonset                   17:43 on preceding day
            Moonrise                  05:29                
            Moon transit              12:06                
            Moonset                   18:43                
            Moonrise                  06:31 on following day

    New Moon on 12 June 2010 at 16:44 (Universal Time + 5:30).

    அதாவது திருச்செங்கோட்டில் 12 தேதி சூரிய உதயம் 05:55 AM ஆனால் சந்திர உதயமும் 05:29 AM தான் நடைபெறும். எனவே சூரிய ஒளியில் சந்திரன் நமக்கு தெரிவதில்லை. சந்திரன் 18:43 PM மறைந்து விடுவதால்(அஸ்தமனமும்) நமக்கு சந்திர ஒளி இரவில் கிடைப்பதில்லை.


    பௌர்ணமி

    இதற்கு எதிர்மாறாக பௌர்ணமியில் சந்திரன் தோராயமாக சூரிய அஸ்தமனத்தின் போது உதிக்கிறது. கீழேயுள்ள இம்மாத பௌர்ணமியின் போது உதய தகவல்களை காண்க.

    Sun and Moon Data for One Day
    The following information is provided for Tiruchengodu, Tamilnadu%2c Ind (longitude E77.9, latitude N11.4):
            Saturday
            26 June 2010          Universal Time + 5:30         
    SUN
            Begin civil twilight      05:34                
            Sunrise                   05:57                
            Sun transit               12:21                
            Sunset                    18:45                
            End civil twilight        19:08                

    MOON
            Moonrise                  17:54 on preceding day
            Moon transit              23:44 on preceding day
            Moonset                   05:35                
            Moonrise                  18:46                
            Moonset                   06:29 on following day
    Full Moon on 26 June 2010 at 17:01 (Universal Time + 5:30).

     

    அதாவது திருச்செங்கோட்டில் 26 தேதி சூரிய அஸ்தமனம் 18:45 PM ஆனால் சந்திர உதயமும் 18:46PM தான் நடைபெறும். எனவே நமக்கு முழு சந்திர ஒளி இரவில் கிடைக்கும்.


    7ம் நாள் (சப்தமி) அன்று


    வளர்பிறை சப்தமி(18 ஜீன் 2010) அன்று நடுபகலில் சந்திர உதயம் ஏற்படும். தேய்பிறை சப்தமி (4 ஜுன் 2010) அன்று நடுஇரவில் சந்திர உதயம் ஏற்படும்.


    moonphasediagram.jpeg

    விளக்க குறிப்புகள்

    பூமியின் பகல் வெள்ளை நிறத்தில், இரவு கருமை நிறத்தில் உள்ளது. புவியின்  ஒரே இடம் வெவ்வேறு நிலைகளில்(உதய,அஸ்தமனம்) கொடியினால் குறிக்க பட்டுள்ளது.

    Sun and Moon Data for One Day
    The following information is provided for Tiruchengodu, Tamilnadu%2c Ind (longitude E77.9, latitude N11.4):
            Friday  
            4 June 2010           Universal Time + 5:30         

    SUN
            Begin civil twilight      05:31                
            Sunrise                   05:54                
            Sun transit               12:17                
            Sunset                    18:39                
            End civil twilight        19:02                

    MOON
            Moonrise                  23:41 on preceding day
            Moon transit              05:44                
            Moonset                   11:49                
            Moonrise                  00:17 on following day
    Phase of the Moon on 4 June:   waning gibbous with 56% of the Moon's visible disk illuminated.

    Last quarter Moon on 5 June 2010 at 03:43 (Universal Time + 5:30).


    [தொடரும்]