சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ரஜினியும் தமிழ் அடையாளமும் (எந்திரன் – 3 Updated)

முந்தைய பகுதிகள்

ரஜினியும் தமிழ் அடையாளமும் (எந்திரன் –1)
எந்திரன் – 2 [கான்களுக்கு Robot phobia: சும்மா அதிருதுல்ல :)]

ரஜினி தமிழ் பட உலகிற்கும் இந்திய சினிமாவிற்கும்  செய்தது என்ன ?

எந்திரன் தமிழ், ஆங்கில, இந்தி பட உலகம் என்று தனித்தனியாக இயங்கி வந்த சினிமா துறைகளை, ஒரு உலகமயமாக்க பட்ட ஒரே துறையாக மாற்றி உள்ளது. உலகமெங்கும் உள்ள தொழில் நுட்ப கலைஞர்கள் ஒன்று கூடி ஒரு படத்தில் இணைந்து செயல் படுவதற்கான வழிமுறைகளின் சிறந்த ஆரம்ப கட்டமாக உள்ளது.

 

தமிழ் பட உலகம் என்று ஒன்று இருப்பதே ரஜினி படம் வரும் போது தான் பரவலான அந்நிய மொழி பேசும் மக்களுக்கு தெரிய வருகிறது.

  • முத்து படம் ஜப்பானில் நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தியது. முதன் முறையாக ஜப்பானிஸுக்கு மொழி பெயர்க்க பட்ட தமிழ் படம் எந்திரன் தான்.
  • சந்திரமுகி, சிவாஜி போன்றவை தெலுங்கில் தமிழ் படங்களுக்கு வலுவான மார்க்கெட் ஏற்படுத்தி கொடுத்தன.
  • எந்திரனுக்கு இப்போது வட இந்தியாவில் நல்ல அறிமுகம் கிடைத்துள்ளது.

கோடிக்கணக்கான ரூபாய் பணத்தில் மட்ட ரகமான படம் எடுத்து, மோசமான படத்தையும் கொடுத்து, தயாரிப்பாளரையும் நட்ட படுத்தி, துறையையும் முடங்க செய்பவர்கள் ரஜினியை விமர்சிக்க என்ன யோக்கியதை இருக்கிறது ?

 

வெள்ளைகாரர்கள் சூப்பர் ஹீரோ வேடத்தில் நடிக்கும் போது வாயை மூடிக்கொண்டு ரசிப்பவர்கள் ஓர் இந்தியர் நடித்தால் நக்கல் செய்வது அடிமை தனத்தையும், நிற வெறியையும் தவிர எதை காட்டுகிறது ?

 

1. Reshaping global film industry

Tu_22406 Endhiran cleverly blends Eastern talent with Western expertise to co-create a seamless viewing experience that no single region could have concocted on its own, say Dr Simone Ahuja and Navi Radjou.

By 2020, the global creative industry will be organised, and operate, as polycentric innovation networks in which all hubs operate in parity and creative ideas seamlessly flow from one hub to another -- very similar to how the high-tech sector operates today.
http://business.rediff.com/slide-show/2010/oct/01/slide-show-1-special-how-india-is-reshaping-global-film-industry.htm

2. For the first time, a movie from India will be dubbed in Japanese.

http://sify.com/finance/Rajini-fells-all-records-with-sci-fi-entertainer-Endhiran-imagegallery-others-kkdldrjaghh.html

3. Existance of Tamil Film industry

http://www.behindwoods.com/features/visitors-1/endhiran-us-08-10-10.html 

People who live outside of South India (rest of India and the world at large) know that an industry called the Tamil Film industry exists only when Superstar Rajinikanth releases a film.

Since 1999, Rajini has acted in 5 full length feature films (Kuselan was a cameo) and four of them have gone on to re-write box office history and take Tamil Cinema and Indian Cinema to unchartered territories. 

4. ”The arrival and the subsequent success of Robot has changed equations in the industry."

Rajinikanth beats the Khans  http://www.behindwoods.com/features/visitors-1/endhiran-us-08-10-10.html

SRK’s status as the man who had the biggest opening weekend collections in the US for an Indian movie came to an end when Endhiran entered the land… When taking into account both Endhiran and Robot, the film’s opening weekend collections in the US were US$ 2,001,788 from 100 screens giving it a per screen collection of US$ 20,017. 

Do you think SRK or Amir Khan or Salman Khan can ever in their wildest imaginations have the dubbed Tamil version of one of their films emerge as a winner in even Tamil Nadu let alone the US box office? Never!

5. Undisputed Hero

Trade analyst Taran Adarsh - “Robot has put him on an unmatchable level. His demand is growing both in North India and internationally.”

It’s not just multiplexes that are raking in the moolah. Vishek Chauhan, owner of Roopbani theatre in Purnia, Bihar, insists that both the classes and the masses seem to love the actor in his latest avatar. “We’ve never witnessed something like this earlier. The shows remain full even on Mondays.”
http://www.hindustantimes.com/Rajinikanth-beats-the-Khans/H1-Article1-608663.aspx 

Robot is repeating the success story like never before. “It’s not Batman or Superman, no blonde-haired, white-skinned super hero saving the world… he is our very own Chitti — one we can all relate to,” says film critic Anupama Chopra.
http://www.hindustantimes.com/Rajinikanth-beats-the-Khans/H1-Article1-608663.aspx

சும்மா அதிருதுல்ல :) தொடரும்…

எந்திரன் – 2 [கான்களுக்கு Robot phobia: சும்மா அதிருதுல்ல :)]

ரஜினியும் தமிழ் பட உலகமும் எவ்வாறெல்லாம் தவறாக கேவலப்படுத்த பட்டனர் என்பதை முதல் பகுதியில் பார்த்தோம். இந்தி பட பிரமுகர்கள் நிறுவ முயன்றது கீழ் கண்டவற்றை தான்.

  1. தமிழ் பட உலகம் என்பது தொழில் நுட்ப ரீதியாக பின்னடைந்த நிறுவனங்களை கொண்டுள்ளது.
  2. பிராந்திய மொழியான தமிழில் தேசத்தை கவரும் பிரம்மாண்ட படம் எடுக்க இயலாது.
  3. ரஜினி போன்ற தென்னிந்திய நடிகர்கள் நடிக்கவே தெரியாத, முட்டாள் தனமான சைகைகளை மட்டுமே கொண்டு படம் அளிப்பவர்கள்.

 

விமர்சனங்கள் அவர்களுக்கே ஆப்பாக மாறியது எப்படி ?

இதற்கு ரஜினியின் தரப்பில் அப்போது எந்த எதிர்வினையும் நிகழ்த்த படாதது மிகப்பெரிய ஆச்சர்யம் அளித்தது. ரஜினி தன் எதிர் வினையை பேச்சில் காட்டாமல் தன் அடுத்த படமான எந்திரன் மூலமாக தந்துள்ளார். எந்திரன் நிறூபித்து காட்டி உள்ளது இவை தான்.

  1. தமிழ் பட உலகமானது இந்தியாவின் தலை சிறந்த தொழில் நுட்பத்தையும் கலைஞர்களையும் கொண்டுள்ளது. இன்றைய தேதியில் சினிமாவின் எல்லா தொழில் நுட்ப துறைகளிலும் தென் இந்திய கலைஞர்கள் இந்தி கலைஞர்களை விஞ்சியுள்ளனர். சிறந்த இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், ஒலி கோப்பாளர், நடன இயக்குனர், சண்டை இயக்குனர் மற்றும் நகைச்சுவை கலைஞர் வரை மிகச்சிறப்பானவர்கள் இங்கேயே உள்ளனர்.
  2. எந்திரனின் இந்தி பதிப்பின் மூலம் இந்தி பட உலகிற்கு புத்துணர்ச்சி கிடைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இன்றைய தேதியில் பிகார், குஜராத், பஞ்சாப் என இந்தியாவின் அணைத்து பகுதிகளில் வெற்றிகரமாக ஓடிக்கோண்டிருக்கும் படம் எந்திரன் தான்.
    Do you think SRK or Amir Khan or Salman Khan can ever in their wildest imaginations have the dubbed Tamil version of one of their films
    emerge as a winner in even Tamil Nadu let alone the US box office? Never!
    http://www.behindwoods.com/features/visitors-1/endhiran-us-08-10-10.html
  3. படத்திற்கேற்ப தன்னை மாற்றி கொள்ள இயலும் என்பதை ரஜினி காட்டி உள்ளார். ஆரம்ப பாடல் காட்சி இல்லாத, ரோபோவிற்கு பயப்படக்கூடிய, தன்னுடைய படத்தில் சாதாரண மனிதருக்கு பயப்படும் வேடத்தில் சராசரி விஞ்ஞானியாகவும் தன்முணைப்பு  இல்லாமல் தன்னால் நடிக்க இயலும் என்பதையும் ரஜினி காட்டி உள்ளார்.

    Black Sheep காட்சி ஒன்று போதும் ரஜினியின் நடிப்பு திறமையை புரிந்து கொள்ள. அதே காட்சியில் MGR, சிவாஜி, கமல் என மூவரையும் இமிடேட் செய்து நடித்ததை எத்தணை பேர் கவனித்தார்கள் என்று தெரியவில்லை.

    ரஜினியின் வழக்கமான மசாலா படமாக இது அமையும், எல்லோரும் சேர்ந்து அசிங்க படுத்தாலாம் என்று நிணைத்தவர்களின் நிணைப்பிற்கு ஆப்பு வைத்துள்ளார்.

 

சவால்

இந்த படத்தில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விசயம் “இது முழுக்க முழுக்க தமிழ் பட உலகில் சென்னையை மையமாக கொண்டு தயாரான இந்திய படம். இந்தி சினிமா உலகிற்கு எந்திரனில் நேரடி சம்பந்தமில்லை. எந்திரன் இந்தி சினிமா உலகிற்கு விடுக்கப்பட்டுள்ள வெளிப்படையான சவால்.”

 

எந்திரனும் ரஜினியும், சாருக்கானையும், ஹிரித்திக் ரோசைனையும் படுத்தும் பாடு :)

Rajni_thumb57கீழ்காணும் செய்திகளெல்லாம் எப்போதும் வெளிவரும் கிசு கிசு செய்திகள் போன்று மிகைப்படுத்த பட்டவை அல்ல. சம்பந்த பட்டவர்களிடம் நேரடியாகவே பேட்டி எடுத்து வெளியிட்டுள்ளனர். “Robot SRK” என்று Google Search செய்து பாருங்கள் உண்மை தெரியும். http://www.google.co.in/search?q=robot+SRK&qscrl=1

 

இப்போது இவ்விரு நடிகர்களும் எவ்வாறு எந்திரனை விட சிறப்பாக  படம் செய்வது என இரவேல்லாம் தூங்காமால் ரூம் போட்டு யோசித்து வருகிறார்கள்.

ஹிரித்திக் ரோசைன் ரோபோவின் தொழில் நுட்பங்களுடன் போட்டி போட முடியாமல் தன்னுடைய அடுத்த படமான் கிரிஷ் – 2 வின் படப்பிடிப்பையே தள்ளி வைத்துள்ளார்.

 

King Kong SRK (எழுத்து பிழை அல்ல)

http://entertainment.oneindia.in/tamil/exclusive/2010/rajinikanth-endhiran-shahrukh-ra-one-071010.html

According to reports, King Khan, director Anubhav Sinha, sound engineer Resul Pookutty had a lengthy meeting at SRK's house on last Sunday. They had a brainstorming session, discussing about the movie, especially about the quality of the film and its climax.

Hrithik Roshan

http://timesofindia.indiatimes.com/entertainment/bollywood/news-interviews/SRK-Hrithiks-Robot-phobia/articleshow/6711037.cms

Rajnikanth starrer Robot pushed the panic buttons in Shah Rukh Khan's office. It is now doing the same in Rakesh Roshan's office.

We then asked him if Krrish 2 was taking time since he wanted to raise it to the highest standards possible. To this he replied, "No, not correct. I might start Krrish; wait for the announcement."

http://timesofindia.indiatimes.com/entertainment/bollywood/news-interviews/Hrithik-wants-to-beat-Rajnikanth/articleshow/6672271.cms

Hrithik Roshan is neck deep in meetings with his father, Rakesh Roshan's team of writers. Now everyone knows that scripts involving Indian super-heroes will need plenty of brain-storming, espe-cially after Rajnikanth's latest film. The SFX and the canvas of the Rajni-Ash bilingual is making Bollywood nervous. All those dealing with super-heroes in their projects know they will have to take things to the next level if they want to surpass what Rajni Sir has already done.

 

வயித்தெரிச்சல் பார்ட்டிகளுக்கு இன்னும் எரிய [BBC Review]

    1. Smart lines, diabolical characters, high-voltage action and impressive special effects make this a promising Indian popcorn movie.
    2. The movie is also the product of an industry which is fast becoming globalised, despite its unique brand of cinema.
    3. As so often, Rajinikanth steals the show.
      http://www.bbc.co.uk/news/world-south-asia-11498630

எந்திரன் அணைத்து வசூல் சாதணைகளையும் முறியடித்த விவரம் [Rs 117cr in just 7 days, 'Robot' Rajini smashes all records]

http://timesofindia.indiatimes.com/india/Rs-117cr-in-just-7-days-Robot-Rajini-smashes-all-records/articleshow/6716660.cms

The Hindi version of the film Robot too has done a business of nearly Rs 30 crore in the first week. Amod Mehra said, ''Robot has broken all the norms of a dubbed film. I don't remember any dubbed film crossing even the one crore mark."

[ இன்னும் வரும்…;) ]

ரஜினியும் தமிழ் அடையாளமும் (எந்திரன் –1)

ரஜினி தமிழ் சினிமா உலகிற்கு என்ன செய்தார் ?

aishwarya-rai-robot-06 தங்களை அறிவு ஜீவிகளாக கருதி கொள்ளும் விமர்சகர்கள் ரஜினி பட வெளியீட்டின் போதும் எழுப்பும் கேள்வி ரஜினி தமிழ் பட உலகிற்கு என்ன செய்தார் என்பதே.

இவ்வினாவிற்கு விடை அளிக்கும் முன்பு தமிழ் பட உலகை பற்றியும், தமிழர்களை பற்றியும் வட நாட்டிலும், வெளி உலகிற்கும், எந்திரன் படத்திற்கு முன் பரப்பபட்டிருந்த அறிமுகம் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

 

 

எந்திரனுக்கு முன் – 1

தமிழ் என்பது ஒரு பிராந்திய மொழி. அசிங்கமான திராவிட உருவத்தையும், தமிழர்களின் ஆழமான சினிமா அறிவின்மையையும் அடையாளமாக கொண்டிருப்பதால் தான் ரஜினிக்கு புகழடைந்திருக்கிறார்.

கருப்பு மந்தை கூட்டத்தின் முட்டாள்தனத்தை சமாளிக்கும் வார்த்தை தான் போனமேனன்.

- மனு ஜோசப், பத்திரிக்கையாளர். (பெயரை கொண்டு இவர் எந்த மாகாண அறிவாளி என எளிதில் புரிந்து கொண்டிருக்கலாம்.)

Tamil is merely a regional language once spoken by Rekha. And they decide that his fame is a consequence of his reassuring Dravidian ugliness, and of the deep cinematic insanity of Tamilians. This is rubbish.

There was something intellectual in calibrating the folly of the dark masses and renaming it ‘phenomenon’.

Manu Joseph http://www.openthemagazine.com/article/voices/the-revenge-of-rajnikanth

 

எந்திரனுக்கு முன் – 2

ரஜினிகாந்த் இந்தி பட உலகின் ஏழை(?) சகோதரியான தமிழ் பட உட உலகின் நடிகர்.

இந்திய தளங்கள் ரஜினிகாந்த்தை பொதுவாக ஜோக்கரை போல சித்தரித்து நகைச்சுவை எழுதுவது வழக்கம்.

பைத்தியத்தனமான அறிமுக பாடலும், சைகைகளும், டிஸ்யும் டிஸ்யும் குத்துக்களும் இல்லாதது ரஜினிகாந்த் படமே அல்ல.

He works in the Tamil film industry, Bollywood's poorer Southern cousin, best-known for its ace cinematographers and gritty crime dramas.

Indian message boards are alight with Rajinikanth jokes, the equivalent of Chuck Norris jokes. ("Rajinikanth was bitten by a cobra. After four days of intense suffering, the snake died.") Onscreen, when Rajinikanth points his finger, it's accompanied by the sound of a whip cracking.

A Rajinikanth movie without his "SUPERSTAR Rajinikanth!" billing, without his crazy-making opening number, without his fingers pointing like whips, without the world's most complicated plot, without the dshoom dshoom of him punching giant thugs into exploding electrical lines—that's just not a Rajinikanth movie at all.

- Grady Hendrix http://www.slate.com/id/2267820/

 

என்ன காரணம் ?

இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விசயம் தமிழர்களை பற்றிய இத்தகைய தவறான அறிமுகம் ஏற்பட்டது ஒன்றும் தற்செயலானது அல்ல. இவை சாருக்கான் போன்ற இந்தி சினிமா பிரமுகர்களால் திட்டம் போட்டு நிறைவேற்றப்பட்டது.

ஓம் சாந்தி ஓம்

சாரூக்கானின் Om Shanti Om படத்தில் ஆரம்பித்தது இது. சங்கர் சாரூக்கானை Robot படத்திலிருந்து நிராகரித்து வெளியேற்றிய பிறகு தமிழர்களை பற்றிய தவறான தகவல்கள் அவரின் அடிவருடி ஊடகங்கள் வழியாக டிவி நாடகங்கள், சினிமாங்கள், பத்திரிக்கைகள் மூலம் பரப்ப பட்டது. (உதாரணத்திற்கு மேற்குறிய செய்திகளே போதும். மேற்கூறியவை சரியாக படம் வெளியாவதறகு சில நாட்களுக்கு முன் வெளியிட்டு விளம்பரப்படுத்த பட்டன.)

இது, இந்தி மட்டுமே இந்தியாவின் அடையாளம், இந்தி சினிமா மட்டும் இந்திய சினிமாவின் அடையாளம் என அறியப்பட செய்யும் கலாசார படையெடுப்பு. அவ்வாறு நிறுவப்பட்டால் தான் ஆயிரக்கணக்கான கோடிகள் மதிப்புள்ள இந்திய சினிமா உலகை மும்பை தாதாக்கள் மூலம் குறிப்பிட்ட சிலர் மட்டும் சுரண்ட இயலும்.

இந்த அறிமுகங்கள் எவ்வாறு அவர்களுக்கே ஆப்படிக்க பட்டது என்பதை ஆதாரங்களுடன் அடுத்தடுத்த பகுதிகளில் காணலாம்.

பிரிவு துயரம் – பத்மஸ்ரீ வாலியின் வைரவரிகள்

காதலன் தன் பிரிவு துயரை தன் கண்மணிக்கு தெரியப்படுத்தும் ஒரு அருமையான பாடல், சமீபத்தில் இசை வெளியீடு நடைபெற்ற ‘சிக்கு புக்கு’ படத்தில் கேட்க நேர்ந்தது.

 

பத்மஸ்ரீ வாலி அவர்கள் முதல் வரியின் கவித்துவ உவமையிலிருந்தே மனம் கவர்கிறார். சூபி இசையில் அமைந்த தமிழ் காதல் பாடல் ஒரு வித்தியாசமான அனுபவம் அளிக்கிறது. இசையமைப்பாளர் பாடகர்களின் மொழி உச்சரிப்பை மெருகூட்டி இருந்தால் இன்னும் கூட சிறப்பாக இருந்திருக்கும்.

 

பாடல்: தூரல் நின்றாலும்

பாடல் வரிகள்: பத்மஸ்ரீ வாலி

பாடகர்கள்: ஹரிஹரன், வடாலி சகோதரர்கள்

இசை: ஹரிஹரன் & லெஸ்லி

 

உன்னை, உன்னிடம் தந்து விட்டேன்

நீ, என்னை என்னிடம் தந்து விடு

போதும், போதும், எனை போக விடு

கண்மணி எனை போக விடு

கண்மணி கண்மணி

தூரல் நின்றாலும், சாரல் நின்றாலும் ஈரம் மண்ணிலே!

    தூர சென்றாலும், தொலைவில் நின்றாலும் எண்ணம் உன்னிலே!

இரவில் தூங்காத இமைகள் ஓரம் நீயே நிற்கிறாய்!

    எனது தூக்கத்தை நீதான் வாங்கி எங்கே விற்கிறாய் ?!

தூரல் நின்றாலும், சாரல் நின்றாலும் ஈரம் மண்ணிலே!

    தூர சென்றாலும், தொலைவில் நின்றாலும் எண்ணம் உன்னிலே!

உயிரே உயிரே

 

உன்னை கேட்காமல் என்னை கேட்காமல் காதல் உண்டானதே! [ எனை போக விடு கண்மணி]

    விழிகள் என்கின்ற வாசல் வழியாக காதல் உள் சென்றதே !!

இனியும் உன் பெயரை என் நெஞ்சோடு ஒட்டி வைப்பதா ?

    எனது பொருள் அல்ல நீதான் என்று எட்டி வைப்பதா ?!

 

விடைகள் இல்ல வினாக்கள் தானடி

 

தூரல் நின்றாலும், சாரல் நின்றாலும் ஈரம் மண்ணிலே!

    தூர சென்றாலும், தொலைவில் நின்றாலும் எண்ணம் உன்னிலே!

இரவில் தூங்காத இமைகள் ஓரம் நீயே நிற்கிறாய்!

    எனது தூக்கத்தை நீதான் வாங்கி எங்கே விற்கிறாய் ?!

தூரல் நின்றாலும், சாரல் நின்றாலும் ஈரம் மண்ணிலே!

 

Thanks: http://tamilyrics.wordpress.com/2010/09/11/thooral-nindralum-chikku-bukku-lyrics/

Unnai unnidam thanthu vitten
nee ennai ennidam thanthu vidu
podhum podhum enai poga vidu

kanmani enai poga vidu
kanmani kanmani

thooral nindralum saaral nindraalum eeram mannile
dhoora sendralum tholaivil nindralum ennam unnile

iravil thoongatha imaigal oram neeye nirkiraai
enadhu thookkathai neethaan vaangi engey virkiraai

thooral nindralum saaral nindraalum eeram mannile
dhoora sendralum tholaivil nindralum ennam unnile

uyire uyire

unnai ketkamal ennai ketkamal kadhal undanathey

enai poga vidu kanmani

vizhigal engindra vaasal vazhiyaga kadhal ulsendrathey

iniyum un perai en nenjodu otti vaipadhaa

enadhu porul alla neethaan endru etti vaippadha

vidaigal illa vinakkal thaanadi

thooral nindralum saaral nindraalum eeram mannile
dhoora sendralum tholaivil nindralum ennam unnile

iravil thoongatha imaigal oram neeye nirkiraai
enadhu thookkathai neethaan vaangi engey virkiraai

thooral nindralum saaral nindraalum eeram mannile

 

Thanks http://blog.mp3hava.com/download-mp3-sogns-chikku-bukku-chikku-bukku-songs-wallpapers-photos-images-posters-gallery-trailer-blog-mp3hava-com/2010

Cast : Arya, Shriya, Preetika Rao (Sister of Bollywood Actress Amrita Rao)
Camera : R.B. Gurudev
Dialogues written by : S. Ramakrishnan
Lyrics : Padmashree Valee, Pa. Vijay
Music : Hariharan and Leslie
Choreographers : Rekha Chinni Prakash and Dinesh
Director: Manikandan
Producer: Metro Films

பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

பரஸ்பர மொழியறியாத இரு காதலர்கள் தங்கள் உணர்வுகளை பரிமாறி கொண்டு அன்பில் திளைக்கும் தருணம் இது. திரு. கண்ணதாசனுக்கு பிறகு கவிதைகளுக்காக அதிகம் விரும்பி கேட்கும் பாடல்களை எழுதும்  கவிஞர் சந்தேகமின்றி திரு. நா.முத்துக்குமார் தான்.

 

திரை படம் : மதராசபட்டிணம்
வரிகள் : நா.முத்துக்குமார்
இசை : G. V. பிரகாஷ்
பாடியவர்கள்: GV பிரகாஷ், ரூப்குமார், ஹரிணி, அண்ட்ரியா


 


[தான தொ தனன,தான தொ தனன]


Male: பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே,
பார்த்ததாரும் இல்லையே
Female: புலரும் காலை பொழுதை
முழுமதியும் பிரிந்து போவதில்லையே

Male: நேற்றுவரை நேரம் போக வில்லையே,
உனதருகே நேரம் போதவில்லையே

Female: எதுவும் பேசவில்லையே,இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே…இது எதுவோ?......!
Male: இரவும் விடியவில்லையே, அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே பூந்தளிரே......!
[தான தொ தனன,தான தொ தனன]

Male: வார்த்தை தேவையில்லை, வாழும் காலம் வரை,
பாவை பார்வை மொழி பேசுமே!
Female: நேற்று தேவையில்லை, நாளை தேவையில்லை,
இன்று இந்த நொடி போதுமே!
Male: வேரின்றி விதையின்றி விண்தூவும் மழையின்றி
இது என்ன இவன் தோட்டம் பூப்பூக்குதே?
Female: வாளின்றி, போரின்றி, வலியின்றி, யுத்தமின்றி
இது என்ன இவனுக்குள் என்னை வெல்லுதே?
Male: இதயம் முழுதும் இருக்கும் இந்த  தயக்கம்,
எங்கு கொண்டு நிறுத்தும்
Female: இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்,
அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்
Male: பூந்தளிரே ……


Female:
Oh where would I be without this joy inside of me?
It makes me want to come alive; it makes me want to fly into the sky!
Oh where would I be if I didn’t have you next to me?
Oh where would I be? Oh where, oh where?


Male: எந்த மேகம் இது? எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈர மழை தூவுதே!
Female: எந்த உறவு இது? எதுவும் புரியவில்லை
என்றபோதும் இது நீளுதே!
Male: யாரென்று அறியாமல், பேர்கூட தெரியாமல்,
இவளோடு ஒரு சொந்தம் உருவானாதே!
Female: ஏனென்று கேட்காமல்,தடுத்தாலும் நிற்காமல்
இவன் போகும் வழியெங்கும் மனம் போகுதே!
Male: பாதை முடிந்த பிறகும், இந்த உலகில்
பயணம் முடிவதில்லையே
Female: காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும்,
இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே!
Male/Female: இது எதுவோ!
[தான தொ தனன,தான தொ தனன]


Female: பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனே
பார்த்ததாரும் இல்லையே
Female: புலரும் காலை பொழுதை
முழுமதியும் பிரிந்து போவதில்லையே
Male: நேற்றுவரை நேரம் போக வில்லையே,
உனதருகே நேரம் போதவில்லையே
Female: எதுவும் பேசவில்லையே, இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே …என்ன புதுமை?

Female/Male: இரவும் விடியவில்லையே, அது விடிந்தால் பகலும் முடியவில்லையே
Male: இது எதுவோ!!
[தான தொ தனன,தான தொ தனன]

Mass
நான் என்ற சொல் இனி வேண்டாம் !
நீ என்பதே இனி நான்தான் !
இனிமேலும் வரம் கேட்க தேவையில்லை !
இதுபோல் வேறெங்கும் சொர்கமில்லை !

 

இப்பாடலை தாமதமாக கேட்க நேர்ந்ததை முன்னிட்டு அதிகம் கேட்கிறேன் போல. (தொடர்ந்து 10 வது முறையாக!!!)

 

Thanks

http://www.tamilthunder.com/forum/showthread.php?71483-%26%232986%3B%26%233010%3B%26%232965%3B%26%233021%3B%26%232965%3B%26%232995%3B%26%233021%3B-%26%232986%3B%26%233010%3B%26%232965%3B%26%233021%3B%26%232965%3B%26%233009%3B%26%232990%3B%26%233021%3B-%96-Madharasapattinam&p=711035

http://vimalaranjan.blogspot.com/2010/07/blog-post.html

என்ன என்ன என்ன ஆகிறேன் ?… என் காதலே ?… ;)

வெளியாக இருக்கும் ”காதல் சொல்ல வந்தேன்” படத்தில் உள்ள மிகவும் பிடித்த பாடல் “என்ன என்ன என்ன ஆகிறேன் ?”. தலைவியை பார்த்து தலைவன் பாடும் பாடல். யுவன் சங்கர் ராஜா, நா. முத்துக்குமார் எப்போதும் போல அழகு செய்துள்ளனர். விஜய் ஜேசுதாசின் குரலில் பாடல் அழுத்தம் திருத்தமாக உள்ளது மிகச்சிறப்பு.

 

 

என்ன என்ன என்ன ஆகிறேன் ?
மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்
தொட்டுப்பிடித்திடும் தூரத்தில்,
பறக்கிறேன், நிலவைப்பிடிக்கிறேன்…

காதல்சிலை ஒன்று, நெஞ்சம் செய்ததே
கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே
கத்தும் கடல் அலை அமைதி ஆனதே
வெட்ட வெளியினில் காயல் நீந்துதே…

என்ன என்ன என்ன ஆகிறேன் ?
மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்

 


பார்வையில் உந்தன் யோசனை, புரிந்து சேவை யாவும் செய்வேன்
உயிருக்குள் ஒரு நூலினை, கோர்த்து உன்னை அங்கு நெய்வேன்

மண்ணில் எது சுகம் ? பெண்ணே உந்தன் முகம்
உன்னிடத்தில் என்ன கேட்கிறேன் ?
உன் காதல் போதுமே, என் ஜென்மம் தீருமே…

காதல்சிலை ஒன்று, நெஞ்சம் செய்ததே
கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே
கத்தும் கடல் அலை அமைதி ஆனதே
வெட்ட வெளியினில் காயல் நீந்துதே…

என்ன என்ன என்ன ஆகிறேன் ?
மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்

 

விதை என அன்று விழுந்தது, வளர்ந்து விருட்சமாகும் நேரம்
கனவென கண்ணில் இருந்தது, கரைந்து காதலாக மாறும்
எதை விரும்பினேன் ? அதை அடைகிறேன்

உன்னிடத்தில் என்ன கேட்கிறேன் ? 
செத்தாலும், உன் மடி, தந்தாலே நிம்மதி…

காதல்சிலை ஒன்று, நெஞ்சம் செய்ததே
கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே
கத்தும் கடல் அலை அமைதி ஆனதே
வெட்ட வெளியினில் காயல் நீந்துதே

என்ன என்ன என்ன ஆகிறேன் ?
மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்…

தொட்டுப்பிடித்திடும் தூரத்தில்,
பறக்கிறேன், நிலவைப்பிடிக்கிறேன்.

பதிவுலகிற்கு(?) உடுக்கை அடிக்க :)

யாரு வச்ச கண்ணோ தெரியல பதிவுலகமே பத்திகிட்டு எரியுது. சம்பந்த படாதவங்களையெல்லாம் சம்பந்தப்படுத்துது. எனவே அன்பு வேண்டி காதல் தெய்வத்திற்கு உடுக்கை அடிக்க வேண்டிய நிலைமை நம்முடையது.

சமீபத்தில் யுவனின் காதல் சொல்ல வந்தேன் படப்பாடல்கள் கேட்டேன். மிக நன்றாக உள்ளது. காதலை பிழிந்து சாறே எடுத்து இருக்கிறார்கள். பாடல்கள் நா.முத்துகுமார். மனிதர் அருமையாக பாடல்கள் எழுதி இருக்கிறார். அதில் மிகவும் பிடித்த பாட்டு

என்ன என்ன என்ன ஆகிறேன்
மெல்ல மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்

எனும் இதமான பாடல்.

 

இப்படத்தில் வரும் ”சாமி வருகுது” பாடல் நம்முடைய பதிவர்களுக்கான பாட்டு. கிராமிய கலைஞர்களுடன் கிராமிய இசையில் அப்படியே நம்ம் ஊர்ப்பாட்டு. பாடல் நகைச்சுவையானது என்பதால் பஜனை வடிவில் இருக்கிறது.  இப்பாடலை பாட சிதம்பரம் சிவக்குமார் பூசாரி & குழுவினரையே யுவன் பய்ன்படுத்தியுள்ளார். உடுக்கை, உறுமி, நாதஸ்வர இசையும் கலக்கல். பழைய இளையராஜா பாடல்களின் மணம் இருக்கிறது.  பல பக்தி பாடல்கள் நினைவில் வரவும் வாய்ப்பு இருக்கிறது.

 

[இப்ப தேவையான பதிவர்கள் அவரவர் இருக்கும் இருப்பிடத்திலேயே சாமியாடி பாடி கொல்லவும் ;)]

Play - Saami Varuguthu Kaathal

சாமி வருகுது காதல் சாமி வருகுது 
நான் கேட்காத வரமெல்லாம்  கொடுக்க வருகுது

சாமி வருகுது காதல் சாமி வருகுது

நீ கேட்காத வரமெல்லாம்  கொடுக்க வருகுது

Saami Varuguthu Kaathal Saami Varuguthu
Naan Kaetkatha Varamellam Kodukka Varuguthu
Saami Varuguthu Kaathal Saami Varuguthu
Nee Kaetkatha Varamellam Kodukka Varuguthu

 

ஆடி வருகுது அழகா ஆடி வருகுது

ஆடி வருகுது அழகா ஆடி வருகுது

ஏன் நெஞ்சுக்குள் அலகு குத்த ஓடிவருகுது

Aadi Varuguthu Azhagha Aadi Varuguthu
Aadi Varuguthu Azhagha Aadi Varuguthu
Ae Nenjikkul Alaku Kutha Oadivaruguthu

[சாமி வருகுது]

 

மஞ்சள் நிற ஆடை கட்டி ஓடிவருகுது

லைட்டு மஞ்சள் நிற ஆடை கட்டி ஓடிவருகுது

லைட்டு மஞ்சள் நிற ஆடை கட்டி ஓடிவருகுது

Manjal Nira Aadaikatti Oadi Varuguthu
Light’tu Manjal Nira Aadaikatti Oadi Varuguthu
Light’tu Manjal Nira Aadaikatti Oadi Varuguthu

 

ஏய் மத்தவன விட்டு என்னை நாடி வருகுது

ஏய் மத்தவன விட்டு உன்னை நாடி வருகுது

Ae Mathavana Vittu Ennai Naadi Varuguthu
Ae Mathavana Vittu Unnai Naadi Varuguthu

 

கொஞ்சி கொஞ்சி என்னை இப்போ சுத்திவருகுது

கொஞ்சி கொஞ்சி உன்னை இப்போ சுத்திவருகுது

Konji Konji Ennai Ippo Suthi Varuguthu
Konji Konji Unnai Ippo Suthi Varuguthu

 

குங்குமத்த வைக்க ஒரு நெத்தி வருகுது

நான் குங்குமத்த வைக்க ஒரு நெத்தி வருகுது

Kungumatha Vaika Oru Nethi Varuguthu
Naan Kungumatha Vaika Oru Nethi Varuguthu

[சாமி வருகுது]

 

[நாதஸ்வர ஆவர்த்தனம்]

 

உள்நெஞ்சில் உண்டியலாய் ஆட வருகுது

உள்நெஞ்சில் உண்டியலாய் ஆட வருகுது

அட உன்நடைய சில்லரையாய் போட வருகுது

அட உன்நடைய சில்லரையாய் போட வருகுது

Ul Nenjil Undiyalai Aada Varuguthu
Ul Nenjil Undiyalai Aada Varuguthu

Ada Un Nadaiya Sillaraiyai Poada Varuguthu
Ada Un Nadaiya Sillaraiyai Poada Varuguthu

 

கண்ணு ரெண்டும் காவடியை தூக்கி வருகுது

கண்ணு ரெண்டும் காவடியை தூக்கி வருகுது

போன ஜென்ம புண்ணியத்தில் பாக்கி வருகுது

என் போன ஜென்ம புண்ணியத்தில் பாக்கி வருகுது

Kannu Rendum Kaavadiyai Thookivaruguthu
Kannu Rendum Kaavadiyai Thookivaruguthu

Pona Jenmama Puniyathil Bakki Varuguthu
En Pona Jenmama Puniyathil Bakki Varuguthu

[சாமி வருகுது]

 

காதலுக்கு கை கொடுக்க பாதம் வருகுது

காதலுக்கு கை கொடுக்க பாதம் வருகுது

நான் கூழு ஊத்தி கொண்டாட காலம் வருகுது

நீ கூழு ஊத்தி கொண்டாட காலம் வருகுது

Kaathalukku Kai Kodukka Paatham Varuguthu
Aam Kaathalukku Kai Kodukka Paatham Varuguthu

Naan Koozhu Oothik Kondaada Kaalam Varuguthu
Nee Koozhu Oothik Kondaada Kaalam Varuguthu

 

தேரு வருகுது தங்க தேரு வருகுது

தேரு வருகுது தங்க தேரு வருகுது

தேரு மேல தேவரெல்லாம் ஏறி வருகுது

அந்த தேரு மேல தேவரெல்லாம் ஏறி வருகுது

Thaeru Varuguthu Thangath Thaeru Varuguthu
Thaeru Varuguthu Thangath Thaeru Varuguthu
Thaeru Maela Thaevarellam Aeri Varuguthu
Antha Thaeru Maela Thaevarellam Aeri Varuguthu

 

ஜோதி வருகுது காதல் ஜோதி வருகுது
அவ என்னோட பாதியின்னு சேதி வருகுது.

ஜோதி வருகுது காதல் ஜோதி வருகுது
அவ என்னோட பாதியின்னு சேதி வருகுது.

Jothi Varuguthu Kaathal Jothi Varuguthu
Ava Ennoda Paathiyinu Saethi Varuguthu
Jothi Varuguthu Kaathal Jothi Varuguthu
Ava Ennoda Paathiyinu Saethi Varuguthu

 

சாமி வருகுது காதல் சாமி வருகுது 
நீ கேட்காத வரமெல்லாம்  கொடுக்க வருகுது

நான் கேட்காத வரமெல்லாம்  கொடுக்க வருகுது

நீ கேட்காத வரமெல்லாம்  கொடுக்க வருகுது

Saami Varuguthu Kaathal Saami Varuguthu
Nee Kaetkatha Varamellam Kodukka Varuguthu
Naa Kaetkatha Varamellam Kodukka Varuguthu
Nee Kaetkatha Varamellam Kodukka Varuguthu

நன்றி: http://www.paadalvarigal.com/641/saami-varuguthu-kaadhal-solla-vandhen

அங்காடி தெரு - அடித்தட்டு மக்களின் பிம்பம்

1227005292ஒரு திரைப்படத்தினுடைய வெற்றியின் அளவுகோல் ”தன்னையும் பார்வையாளனையும் ஒன்றிணைத்து எவ்வளவு தூரம் அவனது உணர்வுகளை பகிர்ந்து கொள்கிறது” எனில் அங்காடி தெரு என்பது மிகப்பெரிய வெற்றிபடம் என்பதில் ஐயமில்லை. படத்தின் அடுத்தடுத்த காட்சிகள் அடித்தட்டு, நடுத்தர மக்களின் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளின் அடிப்படையில் அமைந்திருப்பதால் எளிமையுடன் ஒன்றி விட முடிகிறது.

 

அங்காடி தெரு படம் பார்க்கும் போது எதிர்பாராத சில நேர்மறை சிந்தணைகளை உடைய மனிதர்களை உணர முடிந்தது, படமானது சில எதிர்மறை குணாதிசயங்களை காண்பிப்பதாக பல வலையுலக விமர்சனங்கள் மூலம் படித்திருந்த போதிலும். ஒரு வேளை அதிகமாக விமர்சனங்களை படித்ததன் காரணமாக அப்படிபட்ட காட்சிகளின் மேல் ஏற்பட்ட சுவாரஸ்ய குறைபாடு காரணமாக இருக்கலாம்.

 

 

 உண்மையான ஹீரோயிசம்

  • எளிய மனிதர்களின் இனிய காதல் உணர்வில் ஆரம்பிக்கிறது படம்.
  • தான் கட்டடம் கட்டும் தொழில் செய்தாலும் தன் மகனை பொறியியல் படிக்க வைக்க நினைக்கும் தந்தை.
  • ”பொறியியல் படிக்க வைத்தாலும் என்னை என்ன ஃபாரினிலா படிக்க வைத்தாய்” என்று கேட்கும் மேல்குடி இளைஞர்கள் நிறைந்த நாட்டில் நல்ல மதிப்பெண் எடுத்தாலும் குடும்ப சூழ்நிலை கருதி அடிமை தொழிலுக்கு சென்றாவது குடும்பத்தை காக்க நினைக்கும் பொருப்பு மிக்க இளைஞன் பாத்திரம்.
  • தன் நண்பனுக்காக அவனுடன் செல்லும் விடலை தனமான ஆனால் நம் இளம் வயதில் சந்தித்த நேர்மையான நண்பர்கள்.
  • எப்படிபட்ட சூழ்நிலையில் கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முன்னேற துடிக்கும் அங்காடி தெருவின் கடின உழைப்பாளிகள்
  • வேலை வெட்டி இல்லையெனிலும் அழகான பெண்ணை பார்த்தவுடன் மயங்கி விடுவதாக காட்டும் படங்கள் மத்தியில் “அவள் அப்படி ஒன்றும் அழகில்லை” என பழகி பார்த்து ஆன்மாவை காதலிக்கும் எதார்த்த நாயகன்/நாயகி
  • ”யானை வாழும் காட்டில் தான் எறும்பும் வாழ்கிறது” என சீறும் நாயகன்
  • தன் இரு கால்களையும் இழந்து தன் எதிர்காலத்தை முழுதும் தொலைத்த நாயகியிடம் “நாம் இப்பவே கல்யாணம் செய்துக்கலாம் கனி” என்னும் ஒற்றை வாக்கியத்தில் ஒரு முழு வாழ்வின் காதலையும் வெளிப்படுத்தும் காதலன்.
  • என்றாவது முன்னேறி விடுவோம் என்பதன் அடிப்படையில் உழைத்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான தமிழர்களின் எதிர்கால நம்பிக்கை படத்தின் முடிவு

 

எந்த ஒரு கடின சூழ்நிலையையும் தங்களால் முடிந்த அளவு நேர்மையாக எதிர்க்கும் சுய மரியாதை உணர்வு தான் படத்தின் அடி நாதம். காதல் தோல்வியில் தற்கொலை, பரிட்சை தோல்வி தற்கொலை,  பஞ்சு முட்டாய் தரவில்லை என தற்கொலை முதலிய நிரம்பிய சமூகத்தில் போராடும் உணர்வை வாழ்வின் அடி நாதமாக வெளிப்படுத்தும் இயக்குனர் & கதாசிரியருக்கு வாழ்த்துக்கள்.

அவதாருக்கு ஆப்பு :)

[பின் நவீனத்துவ லாஜிக், பகுத்தறிவு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு பதிவுலக நண்பர்களிடம்  அவதார் கற்பனையாக படும் பாடு. தப்பிப்பு குறிப்பு: பதிவு முற்றிலும் கற்பனையானது. பதிவுலகின் சில குறிப்பிட்ட பதிவுகளை ஞாபகப்படுத்தினால் தற்செயலானதே ;) ]

 

பின் நவீனத்துவ லாஜிக் நண்பர்

    ஜேம்ஸ் கேமரூன் என்பவரின் வாந்தி தான் அவதார். தனியாக நாவிக்களின் உடலையே செயற்கை கருவறையில்  உருவாக்க முடியும் விஞ்ஞானிகளால் ஒரு மனிதருக்கு காலை செயல்படுத்த முடியாமல் போவதாக காட்டி இருப்பது எவ்வளவு பெரிய ஓட்டை. எனவே படம் ஆரம்பிக்கும் போதே நமக்கு தலை சுற்ற ஆரம்பித்து விடுகிறது.

    சில மணி நேரங்களிலேயே அனைத்து நாவிக்களையும் வானூர்தி மூலம் அழிக்க முடிந்த மனிதர்கள் ஆரம்ப காட்சிகளில் கவச உடை அணிந்து கனரக வாகனங்களில் செல்வதும் கோட்டை போன்ற அரண்களும் ஏற்படுத்தி கொள்வதும் ஏன்? (2 மணி நேரம் வேஸ்ட்)

    நாவிக்கள் ஆங்கிலம் பேசுவார்கள் என்று காட்டி இருப்பதை விட மிகப்பெரிய ஜோக் என்ன ? பெரிய கண்டாமிருகங்களும், சிறுத்தைகளும் உலவும் காட்டில் பெரிய சிங்கம் இல்லாதது இயக்குனரின் கற்பனை குறைபாட்டை தான் காட்டுகிறது. இப்படம் பார்த்த கருமத்தை தொலைக்க சில உயர்ந்த பதிவுகளை போட வேண்டியது தான்

    இப்படத்தில் வரும் வன்முறை காட்சிகளும், ஆடை இல்லாமல் வரும் பெண்களும் ஜேம்ஸ் ஒரு சைக்கோ என்பதை காட்டுகிறது. முழு ஆணாதிக்க படமாகிய இதை மெல்லிய பெண்கள் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். இதை போன்ற ஒரு படம் எடுப்பதற்கு பதில் Cannibal Holocaust, Caligula [நன்றி பாலா] போன்ற பின் நவீனத்துவ படங்கள் 100 எடுத்திருக்க முடியும். ஏனெனில் இப்படங்கள் மசாலா படங்கள் என்று சொல்லி விட்டே எடுக்க படுகின்றன.

[அப்பாடா இன்றைய தினத்தை ஒப்பேற்றியாகி விட்டது. நம் நண்பர்களுக்கு சேட் செய்து ஓட்டு போட சொல்ல வேண்டியது தான்]

 

பகுத்தறிவு நண்பர்

    இப்படம் நாவிக்களின் கடவுளாகிய புனித மரத்தை பற்றியது. மனிதர்களுக்கு மேலாக ஒரு சக்தி இருப்பதாகவும் அது தங்களை காப்பாற்றும் என்று நம்பும் நாவிக்கள் அழிவது பகுத்தறிவிற்கு பொருத்தமானதாக இருக்கிறது. ஆனால் கடைசியில் ஒரு மரத்தால் (கடவுளின் செயலால்) உயிர் காப்பாற்றபடும் என்று காட்டி இருப்பது எழுத்தாளரின் குடுமியை நமக்கு காட்டுகிறது.

 

    கூடுவிட்டு கூடு பாயும் செயலை காட்டி இருப்பதை விட இப்படம் என்ன பெரியதாக சாதித்து இருக்கிறது ? முழுக்க முழுக்க ஒரு இந்து பார்ப்பனிய கருத்துக்களை திணிக்கும் படமாகிய இவற்றை புறக்கணிக்க வேண்டுமென நம் தலைவர் 1935ம் வருடமே நம் புனித ஏட்டில் கூறி இருப்பதால், அவரின் 2010ம் வருடத்தில் பொருந்தி வரும் தீர்க்க தரிசனத்தை நாம் உணர வேண்டும். வாழ்க அவர் நாமம். [இதற்கு நாமே தமிழ் மணத்தில் 3 ஓட்டுகள் போட வேண்டியது தான்]

 

ஏகாதிபத்திய எதிர்ப்பு நண்பர்

    நாவிக்கள் எனும் பிற்போக்கு மக்கள் அறிவியல் அற்ற மலைகுடிகள் அறிவியலில் முன்னேறி இருக்கும் மனிதர்களுக்கு தேவையான மூலப்பொருள்களை தர மறுத்து போர் புரியும் படம் தான் இது. சிங்கூரிலும் இதை போலவே நடந்தது குறிப்பிட தக்கது. நிலம், பணம், மூல பொருள்கள் அனைத்தும் அரசுக்கு சொந்தம் எனும் மிகப்பெரிய தத்துவம் லெனின் எனும் தீர்க்க தரிசியால் உண்டாக்க பட்டது ஏன் என மக்கள் புரிந்து கொள்ளலாம்.

    நாவிக்கள் எனும் பெரும்பான்மை இன மக்கள் மனிதர்களாகிய சிறுபான்மை இன மக்களை அழித்து ஒழிப்பது தான் இந்த ஏகாதிபத்திய வாத படம். தேசிய வாதத்தினாலும், இன வாதத்தினாலும் தான் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்ல பட்டு இருப்பதை நாம் அறிவோம். மனிதர்களாகிய சிறுபான்மை மக்கள் எது செய்தாலும் அது நன்மையானது தான் எனும் நம் அறிய தத்துவம் மறந்த இயக்குனருக்கு கடும் கண்டனங்கள். (எப்போதும் போல நம் இயக்க தொண்டர்கள் திரட்டியில் பதிவு வரும் வரை ஓட்டு போட கேட்டு கொள்ள படுகிறார்கள்)

 

இப்படிக்கு,

எப்படத்திற்கும் லாஜிக் காண்போர் சங்கம்.

என்னாதிது சின்ன புள்ள தனமா கண்ணை துடை கண்ணை துடை

என்று ஆருயிர் நண்பன் கூறியும் கேட்காமல் திரும்ப அந்த கேள்வியை கேட்டான் நண்பன் X, “என்ன பார்த்து எதுக்கு மச்சான் அந்த கேள்வியை கேட்டான் ?”.

”மாப்ள, நீ செஞ்ச வேலைக்கு கேள்வி கேட்டுட்டு விட்டார்களே, இதே வேலையை உனக்கு செய்தால் நீ என்ன செய்திருப்பியோ தெரியாது”, என்றான் நண்பன்.

”மச்சான் நான் செஞ்சது தப்பா ? சொல்லு நான் செஞ்சது தப்பா ?, நம்ம்பி அவன் ஷோக்கு முன்னாடி நாளே போனேன். நான் எதிர்பார்த்த அளவிற்கு இல்லைன்னு சொல்றது தப்பா ? நாட்டுலே கருத்து சுதந்திரமே இல்லையா ? என்ன நாடு இது ? என்ன மக்கள் இவர்கள் ?”

5354_1

 

“மாப்ள நம்முடைய கருத்து சுதந்திரத்திற்கும், அடுத்தவன் கழுத்தை நெரிக்கறத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. முதல்ல நீ அதை புரிஞ்சுக்கணும்.

முதல்ல நீ செய்த விமர்சன முறை. மேலாண்மையில் ஒரு விதி இருக்கிறது. விமர்சனங்களை சாண்ட்விச் மாதிரி தரணும்னு.

அதாவது ஒன்றை பற்றி விமர்சிக்க ஆரம்பிக்கும் போது அதை பற்றிய நல்ல விசயங்கோளட ஆரம்பிக்கணும்.

நடுவில தவறு என்ன திருத்தி கொள்ளும் முறை என்ன என்பது பற்றி சொல்லணும்

கடைசியில் அவர் திருத்தி கொண்டால் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும் என்பது பற்றி.

 

    மாப்ள விடிய விடிய உட்கார்ந்து பார்த்தது சரி, அதுல பாராட்டுற அளவிற்கு ஒன்னுமே இல்லையா ? இருந்தது எனில் அதை பற்றி எங்காவது சொல்லி இருக்கிறாயா ? நீ உன்னையே கேட்டுக்க.  எல்லோரும் தான் விமர்சனம் செய்தாங்க அவன் பொதுவா கேட்ட கேள்வி உனக்கு மட்டும் உரைக்குதுண்ணா உன் மனசாட்சி உறுத்துதுண்ணு தான் அர்த்தம். இப்போதெல்லாம் வழி காட்ட வேண்டியவங்களே தனக்கு பிடிக்காத படைப்புக்களை பற்றி மூத்திரம் பெய்வேன், கிழித்து போடுவேன் என்று ஆரம்பிக்க போய் தான் நம்ப மாதிரி ஆட்கள் எல்லாம் ஆடுறோம்.

 

இரண்டாவது கருத்து சுதந்திரம்:

    நீ உன்னுடைய கடையில் உன் கருத்தை தாராளமா சொல்லு. அத யார் கேட்க போறா. இல்லை ஒரே கருத்து இருப்பவன் கடைக்கு போய் கும்மி அடி. அடுத்தவன் கடை ஒவ்வொண்ணிலும் செட்டா போய் எவனாது நல்லா சொன்னால் போதும் குதறி வைச்சிட்டு வந்தமே அதுக்கு பேர் கருத்து திணிப்பு இல்லாமல் என்ன ? அப்ப எங்க போச்சு கருத்து சுதந்திரம் ?

     நமக்குன்னு ஒரு கூட்டம் சேர்ந்தவுடனே நாம என்ன சொன்னாலும் மக்கள் தலையை ஆட்டுவாங்களான்னு யோசிக்க மறந்துட்டோம். இப்பயெல்லாம் மக்கள் முன்ன மாதிரி இல்லை. எதை எடுத்தாலும் யோசனை செய்றாங்க. எவனா இருந்தாலும் தகவல் அறியும் சட்டம் போல எதையாவது ஒன்னை கேள்வி கேட்டு கிட்டே இருக்கானுங்க.

 

    இன்னைக்கு இவன் நாளைக்கு எவனோ. நீ மாறாத வரைக்கும் உனக்கு இந்த மாதிரி கேள்விகள் வருவதை தவிர்க்க முடியாது. பார்த்துக்க”

 

----

    பொதுவாக திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதியதே இல்லை. என் பதிவை பார்த்தாலே தெரியும். நான் எழுதிய முதல் விமர்சன தொகுப்பே ஆயிரத்தில் ஒருவன் தான்.  நம்முடைய பதிவை நேர்மையான முறையில் சிலர் விமர்சனம் செய்யும் போதே நமக்கு கோபம் வந்து விடுகிறது. ஆனால் ஏகப்பட்ட சரித்திர ஆராய்ச்சிக்கு பிறகு வந்திருக்கும் ஒரு படத்தை ஒரே வார்த்தையில் வாந்தி, குப்பை, கர்மம் என்பது சரியானது தானா ?

 

    நான் முன்பு எழுதிய பதிவு கடுமையாக இருந்ததாக நண்பர்கள் சிலர் அறிவுறுத்தினர். அதற்கு தமிழ் மேல் கொண்ட பற்று தான் காரணமே ஒழிய வேறு தனிப்பட்ட காரணங்கள் இல்லை. இரண்டாவது பதிவுலகில் நான் வைத்திருக்கும் நம்பிக்கை. மீடியாக்களுக்கும், பதிவுகளுக்கும் உள்ள வித்தியாசமே கருத்து திணிப்பும், சுய விளம்பரங்களும் இல்லாமல் இருப்பது தான். இப்போதைக்கு மக்களுக்கு இருக்கும் ஒரே கருத்து சுதந்திர ஊடகம் வலைப்பதிவு ஒன்று தான். இதிலும் அரசியல் செய்வது தாங்கி கொள்ள முடியாமல் போய் விட்டது.

    சில கழகங்கள் ஆட்கள் வைத்து ஓட்டு போட்டு திரட்டிகளில் தினமும் தங்கள் கருத்துக்களை திணிப்பது தெரிந்தது தானே? இப்போது சில கார்ப்பரேட் நிறுவனங்கள் வேறு இதில் நுழைய பார்க்கின்றன. கருத்து திணிப்புக்கு ஆதரவான எந்த ஒரு செயலையும் இவ்வூடகத்தில் நாம் அணுமதிக்க கூடாது.

    என்னை பொறுத்த வரையில் ஒரு தவறு நடக்கும் போது அமைதியாக இருப்பது அந்த தவறில் பங்கேற்பது போல தான். தமிழனிற்கு சூடு சொரணை இல்லை எனும் வாதம் எழும் முன்னரே இந்த அடிப்படை கேள்விகளை கேட்கும் தைரியமாவது வளர்த்து கொள்வோமே?

 

25 வாக்குகளும் 600க்கும் மேற்பட்ட வருகைகளும் எனக்கு நம்பிக்கையையே அளித்துள்ளன. கேள்விகள் கேட்க படுவதற்கே.

 

கேள்விகளுடன் நண்பன்,

சபரிநாதன் அர்த்தநாரி.

 

[இப்பதிவும் எல்லோர்க்கும் பொதுவானது தான் நான் உள்பட

தயவு செய்து இதற்கும் யாராவது தெலுங்கு பதிவை / படம் பாருங்கள் என்று கருத்து கூற வேண்டாம் அழுதுடுவேன். :) படுதா காலி இதற்கு மேல் ஆயிரத்தில் ஒருவன் எதிர் வினை கிடையாது :) ]

நாராயணா பீத்த பதிவர்கள் தொல்லை தாங்க முடியலடா

விமர்சனங்கள் பற்றிய விமர்சனங்கள்!!!

 

வலையுலகின் பட விமர்சனங்கள் பற்றி ”உன்னை போல் ஒருவன்” வெளியீட்டின் போதே எழுத நினைத்திருந்தேன். ஆனால் ஆயிரத்தில் ஒருவனுக்கு எழும் நேர்மையற்ற விமர்சனங்கள் இதை எழுத தூண்டியது.

 

”ஆயிரத்தில் ஒருவன்” மேல் சிலருக்கு என்ன காண்டு என்று தெரியவில்லை. ஒரு வேளை வேட்டைகாரன் எனும் மாணம் கெட்ட படம் தியேட்டரில் இருந்தே ஓடி விடும் 50 நாள் கூட தாங்காது என்ற பயமோ தெரியவில்லை. என்ன எரிச்சல் என்றால் ”1. இப்படத்திற்கே போக வேண்டாம். 2. குப்பை” எனும் கேண தனமான விமர்சனங்கள் தான். படங்களை குறைந்த பட்சம் கீழ்கண்ட வாறு வகைப்படுத்துங்கள் சாமிகளா

    1. பார்த்து பாராட்ட பட வேண்டிய படங்கள் (அருமை: பசங்க போன்று)
    2. பார்த்து விட்டு விமர்சிக்க வேண்டிய படங்கள் (சிந்திக்க தூண்டுபவை: ”உன்னை போல் ஒருவன்”, “ஆயிரத்தில் ஒருவன்” போன்று)
    3. பார்த்து இரசித்து விட்டு மறந்து விட வேண்டிய படங்கள் (மசாலா: சிவாஜி, கில்லி, பில்லா போன்று)
    4. பார்க்காமலேயே புறக்கணிக்க வேண்டிய படங்கள் (மொக்கை: வேட்டைகாரன், வில்லு, ஆழ்வார் போன்று)

 

சரி விடுங்கள் ”ஆயிரத்தில் ஒருவன்”ல் மக்கள் இரசிக்க வேண்டிய விசயங்கள்.

மூல கதை

  1. 1000 வருடங்களுக்கு முட்பட்ட மக்களின் கதையை சொல்ல தேர்ந்தெடுத்திருக்கும் தைரியம்.
  2. இதன் மூலம் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற வரலாற்று புதினங்கள் பல பகுதிகளாக எடுக்க முடியும் என்ற தைரியத்தை நமக்கு கொடுத்திருப்பது
  3. தெலுங்கு படங்களின் கதை & காட்சி அமைப்பு சீன் பை சீன் காப்பி அடித்து தமிழிற்கும், (அதையும் ஒழுங்காக செய்யாமல்) தெலுங்கிற்கும் ஒரே சமயத்தில் பாதகம் செய்யாமல், தமிழர்களின் கதையை கொடுத்திருப்பது
    snapshot20100119085757

 

பார்த்தினின் உடல் மொழி செதுக்க பட்டிருக்கும் விதம்.

  1. ஒரு மறைந்திருக்கும் மன்னன் மக்களுக்கு எதும் செய்ய இயலாத நிலையில் தன் இயலாமையை நினைத்து உருகும் முதல் காட்சி
    snapshot20100119085545
  2. சிருங்கார இரசம் கொஞ்சும் பெண்ணிடம் கூட ஆவேச நடனம் இட்டு தன் மக்களிடம் தான் கொண்டுள்ள பற்றை வெளிப்படுத்தும் காட்சி
    snapshot20100119085429
  3. ஊருக்கு செல்வதாக மக்களுக்கு அறிவித்து விட்டு அவர்களின் சந்தோசத்தை பார்த்து ஆனந்த படும் காட்சியும் ஆனந்த நடனமும்

    snapshot20100119090048 

    snapshot20100119085811 
      
  4. தோல்வி உறுதி என்று தெரிந்த பின்னரும் வரும் வீரச்சிரிப்பு
  5. தன் கண் முன்னே தன் மனைவியும், மகளும் கொடுமை படுத்த படுவதை பார்த்து விட்டு மனம் ஒடியும் கடைசி காட்சி

 

  • மக்களின் பஞ்சம் சித்தரிக்க பட்டிருக்கும் விதம். பஞ்சத்தினால் மக்கள் தங்கள் அடிப்படை நாகரீகங்களை மீறும் காட்சிகள்
  • மறந்து விட்ட நம் அடிப்படை தமிழ் வரலாற்றை & உணர்ச்சியை நம் கண் முன்னே நிறுத்தி இருப்பது
  • பழம் பெரும் பாடகர் PB Srinivasன் குரலை திரையில் கேட்கும் வாய்ப்பை அளித்திருப்பது

 

[விமர்சனங்களை ஏகாம்பரங்கள் பதிவில் பார்த்து கொள்ளவும்]

 

என்னை பொறுத்த வரையில் முக்கியமான கதை இரண்டாவது பகுதியில் தான் வருகிறது. பார்த்திபன் நடிக்க வில்லை; வாழ்ந்து விட்டார். இயக்கமும் அருமை. இதை விமர்சனம் செய்த முண்டங்களுக்கு தமிழர்களை/தமிழை புரிந்து கொள்ளும் உலக அறிவு(?) இன்னும் வரவில்லை போல. நல்ல வேளை இம்மக்களை புரிந்து கொண்டு சில் சீன்களை செல்வராகவன் முன் பகுதியில் வைத்தார். இல்லாவிடில் இது போன்ற தமிழ் தற்குறிகள் மூலம் படம் தோல்வி அடைவது நிச்சயம்.

 

நம்முடைய ஆட்கள் மசாலா படங்கள் எல்லாவற்றையும் இது தமிழ் படம் எனும் ஒற்றை வரியில் தாண்டி செல்கின்றனர். (அதாவது தமிழ் படம் என்றாலே கேவலமாக இருப்பது வழக்கமாம்) ஆனால் இது போன்ற புது முயற்சிகளுக்கு ஆங்கில படத்தின் உச்ச கட்ட காட்சிகளை ஒப்புவமை செய்து தங்களது சுய சொறிதலை வெளிப்படுத்துவர். ஐயா நீங்கள் எல்லாம் தெரிந்த பீட்டர் ஏகாம்பரம் தான் ஒப்பு கொள்கிறோம். தள்ளி நில்லுங்கள் தமிழ் காற்று வரட்டும். 

 

ஒருவர் கூறுகிறார். “விசய் நடிக்கிறது உலகப்படம் அல்ல,மசாலா படம்... அதுல விசய் அம்பது அடி அல்ல, இமயமலைல இருந்து குதிச்சு கன்யாகுமரியை ரீச் பண்ணுவாரு. ஆனா தமிழ் படத்த அடுத்த கட்டத்துக்கு நகட்ரோம்னு சொல்றவங்க ஒழுங்கா படம் எடுக்கணுமா வேண்டாமா..”

 

அதாவது ஊரறிந்த ?? தொண்டர்கள் உத்தமியின் சேலை நழுவியதை பார்த்து கமெண்ட் அடிப்பது போல (வேண்டாம் நான் இதற்கு மேல் எழுதினால் இன்னும் கடுமையாகி விடும்).

 

ஆயிரத்தில் ஒருவன் - படக்கதையை எப்படி அணுகுவது ?

  1. ஒரு பெண் தன் குழந்தைக்கு கொடுக்கும் முலையில் இருந்து இரத்தம் வருவதை(பஞ்சத்தினால்) தன் மன்னனுக்கு காட்டும் சித்தரிப்பு எந்த நவீன கதையிலாவது வந்திருக்கிறதா ?
  2. Time machineல் ஏறி 1000 வருடங்கள் பின்னோக்கி பயணித்து சோழர்களிடம் செல்லுவதை போன்ற அனுபவம் வேண்டுமா?
  3. இலங்கையில் நடந்த கொடூரங்கள் உங்களுக்கு காட்சியாக விளக்கப்பட வேண்டுமா ?

- அது தான் ஆயிரத்தில் ஒருவனின் கதை.

படக்கதையை எப்படி அணுகுவது ?

இக்கதை சரித்திரத்தை தழுவி எடுக்கப்பட்ட கற்பனை கதை. சோழர்களின் வரலாறு தெரிந்திந்தால் தான் கதையையே புரிந்து கொள்ள முடியும்.

தமிழன் என்று ஒரு வீரமிக்க இனம் இருந்தது.;)  அவர்களிடம் கொள்கை பிடிப்பும், மான உணர்ச்சியும் மிகுந்து இருந்தது. அவர்கள் ஒரு கால கட்டத்தில் தெற்காசியாவின் பெரும்பான்மையான இடங்களை தங்கள் அரசின் கீழ் ஆட்சி செய்தனர். அழிந்து போன அவ்வின மக்களின் உணர்ச்சிகளை திரும்ப பெறுவதற்கான ஒரு சிறு முயற்சி தான் இப்படம்!!!!

 

தமிழகம் + ஈழம் சரித்திரம்

இராஜேந்திர சோழனின் ஆட்சியில் ஒன்றுபட்ட தமிழ் அரசாங்கம் !!! wiki: Chola's empire and influence at the height of its power (c. 1050)

250px-rajendra_map_new

 

இப்படத்தில்

நாயகன்(பார்த்திபன்) - ? (Guess)

சோழ மக்கள் - ஈழ மக்கள்

பாண்டியர்கள்- இலங்கை அரசு

பாண்டிய படை - இராணுவம்

 

படம் பார்த்த பின் வரும் சந்தேகங்களும் விளக்கங்களும்

  1. நன்றாக இருக்கிறதா ? இல்லையா ?
    கார்த்தி, ரீமா, ஆண்டிரியா விற்காக செல்பவர்கள் படத்தின் முதல் பாதியிலும், தமிழிற்காக செல்பவர்கள் இரண்டாம் பாதியிலும் தங்களது டிக்கெட் விலையின் ஒவ்வொரு பைசாவிற்கான பலனையும் அனுபவிப்பது நிச்சயம். போதுமா ?
     
  2. சோழர்கள் அவ்வளவு தூரம் செல்ல இயலுமா?
    அக்கால சோழர்கள் கடற்போரில் & பயணத்தில் வல்லவர்கள் என்பதை மேலே உள்ள படத்தை பார்த்து புரிந்து கொண்டு இருந்திருப்பீர்கள். எனவே இளவரசன் உயிர் தப்ப தொலைதூர தீவிற்கு செல்லுதல் பிரச்சினையே இல்லை.
  3. ஹெலிகாப்டர் பயணம் ஏன் முதலில் இல்லை ?
    சோழ மக்கள் அடர்ந்த குகை பகுதியில் வசிப்பதாக காண்பிக்க படுகிறது. அவர்களுடைய இருப்பிடம் கண்டு பிடிக்க மற்றவர்களுக்கு ஓலைசுவடியை தவிர வேறு வழி இல்லை. ஒருமுறை கண்டு பிடித்தவுடன் அறிவியல் யுக மனிதர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் வருதல் எளிது.
  4. கிராபிக்ஸ் மட்டம் ?
    1000  கோடி ஆங்கிலப்படம் பார்த்து விட்டு கிராபிக்ஸ் பற்றிய விமர்சனம் எழுப்புபவர்கள் தயவு செய்து 300 கோடி கூட வேண்டாம் இன்னும் 30 கோடி கொடுத்தால் போதும் செல்வராகவன் மிகச்சிறப்பாக எடுப்பார் என்பதில் ஐயமில்லை. ;)
  5. ஆபாசம் ?
    இப்படத்தை பார்க்க குடும்பத்தவர்க்கும் சொல்லுங்கள்(13 வயதிற்கு மேல்). கண்டிப்பாக ”இராணி 6 இராஜா யாரு?”ல் வருவதை விட குறைவாகவே ஆபாசமான காட்சி அமைப்புகள் உள்ளன.
     
  6. விமர்சனம் செய்ய கூடாதா ?
    தாராளாமாக இப்படத்தை விமர்சனம் செய்யுங்கள். ஆனால் தமிழர்கள் நாம் எல்லோரும் ஒரு முறை படத்தை பார்த்து விட்டு, வெற்றியடைய வைத்து விட்டு விமர்சனம் செய்யுங்கள்.

 

இப்படம் தோற்கின் தமிழ் சினிமா உலகத்தை அடுத்த பரிணாமத்திற்கு கொண்டு செல்லும் நிகழ்விற்கு பலத்த பின்னடைவு ஏற்படும் என்பதில் ஐயமில்லை. நாம் இன்னும் குருவி, வேட்டைகாரன், வில்லு, பரமசிவன், வரலாறு போன்ற மக்கள் விரும்பும் (?) படங்களை பார்க்க நேரிடும் என்பதை நினைத்து பாருங்கள்.

அண்ணன் கேபிளார் தன்னுடைய கருத்தை வேறுவிதமாக ஏற்கனவே பதிவு செய்திருந்தாலும், இப்படத்தை மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் தனி இடுகை இட கேட்டு கொள்கிறேன். சுருக்கமாக சொல்வதெனில் பார்த்திபனுக்கும், செல்வராகவனுக்கும் தமிழக விருது நிச்சயம்; தேசிய விருதுக்கு மிகபிரகாசமான வாய்ப்பு உள்ளது.

 

இன்னுமா படத்தை பார்க்க கிளம்பவில்லை ?