தாந்திரிகம், காந்தி, காமம்- விளக்கங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

 

தங்களுடைய காந்தியும் காமமும் பற்றிய கட்டுரைகள் படித்தேன். இந்த கட்டுரைகளுக்கு சில நண்பர்களின் எதிர் வினைகள் மிக மன வேதனையை ஏற்படுத்தியது.  தியானம், மனவலிமை, பிரம்மச்சரியம், புலனடக்கம் பற்றிய தவறான பரப்புரைகள் மூலம் விளக்கங்கள் குறைவான  இன்றைய காலகட்டத்தில் உள்ளோம் . அந்நண்பர்கள் புரிந்து கொண்டது இவ்வாறு தான் என எண்ணுகிறேன்.


1. தாந்திரீகம் உடலுறவை ஊக்க படுத்த கூடியது
2. காந்தி தனது பேத்தியுடன் உடலுறவு கொண்டார்
3. பிரேமானந்தாவை போன்ற போலி சாமியார்

 

எனக்கு தெரிந்த வகையில் விளக்க முற்படுகிறேன். உண்மை என்ன என்பதை மேலும் தாங்கள் விளக்க வேண்டுகிறேன்.

இந்நிகழ்ச்சியில் ஈடுபடும் போது காந்தி ஒரு பிரம்மச்சாரி என்பதையும், உடலுறவை முற்றிலும் தவிர்த்தவர் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன். தியானம் & தாந்திரிகம் பற்றிய புரிதல் இல்லாமல் இந்நிகழ்வை எதிர்க்கும் நண்பர்களுக்கு விளக்க வேண்டி ஒரு உதாரணம் தர விரும்புகிறேன்.

 

  • தாந்திரீகத்தில் ஒரு வழி எல்லா பெண்களையும் தாயாக காணுதல். அதன் மூலம் உடலிச்சையை அகற்றுதல். (தாந்திரிகத்தில் மேலும் பல வழிகள் உள்ளன. காந்தி கடைபிடித்தது அவை அல்ல. அவை இங்கே பொருந்தி வரக் கூடியவை அல்ல.)
  • ஒரு மனிதன் தன் தாயின் உடலை முழு நிர்வாணமாக காண நேர்ந்தால் அது உடலிச்சையை தூண்டுமா ? அல்லது தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துமா ? அல்லது பக்தியுடன் தொழ தோன்றுமா ?
  • காந்தியின் தாயார் உயிருடன் இருந்திருந்தால் தன் தாயுடனும் இதே வகையான சோதனையை மேற் கொண்டிருப்பார். உண்மையில் மற்ற பெண்களிலும் தாயையே கண்டார் என்பது தான் இங்கு அடிப்படையே

 

மேலும் மேற்கண்ட நிகழ்வை சரியான வகையில் புரிந்து கொண்டால், 

  1. தாந்திரிகம் எனபது ஒரு கருவி. அது உடலுறவை இயற்கையின் ஒரு பகுதி என தியானத்தின் கருவியாக உபயோக படுத்துகிறது. உடலுறவை வளர்ப்பதும் இல்லை. எதிர்ப்பதும் இல்லை. தாழ்வு மனப்பான்மை கொள்வதும் இல்லை. 
  2. காந்தி ஈடுபடுத்தி கொண்டது அக்னி பரிட்சை கூட இல்லை. நெருப்பாற்றில் நீந்துவது. தனது பேத்தியுடன் இவ்வாறு இருந்தது (ஆடையின்றி தாயின் அரவணைப்பில் இருந்தது போல) உடலுறவிற்காக இல்லை. காந்தி என்பதே ஒரு உடல் இல்லை. உடலை துறந்தவன் என்பதை உணர்த்துவதற்கு ஏற்படுத்திய வழி.
  3. காந்தி ஒரு மகாத்மா 

என்பது யாவரும் ஒப்பு கொள்வர்.

 

தாந்திரிகம் என்பது மேல் நிலை தியானம். அது தியானம் பற்றி அடிப்படை கூட அறியாத பொது மக்களுக்கு அறிவிக்க படுதல் இது போன்ற எதிர்மறையான எண்ணங்களையே ஏற்படுத்தும். எனவே தான் இந்நிகழ்வுகள் பெரும்பான்மை மக்களுக்கு அறிவிக்க படுவதில்லை. தாந்திரிகத்தில் விருப்பப்படுபவர்கள் மட்டுமே அறிந்து கொண்டுள்ளனர்.

காந்தியின் மேல் சுமத்தபடும் அரசியல் குற்றசாட்டு    இதில் ஈடுபடுத்த பட்ட பெண்கள் பாலியல் ரீதியாக சுரண்ட பட்டனர் என்பது. இவ்வகை குற்றசாட்டுகளுக்கு வரலாற்று அறிவு பெற்ற நீங்கள் விளக்குவதே சிறப்பானதாக இருக்கும்.

காந்தியின் ஆசிரமத்தில் பிரம்மச்சரியமும், தாந்திரிகமும் பயிற்றுவிக்க பட்டதா ? இதில் ஈடுபடுத்த பட்ட பெண்கள் தாந்திரிகம் பற்றிய அடிப்படை அறிவு பெற்றவர்களா ?

 

தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்.

நன்றி
சபரிநாதன் அர்த்தநாரி.

பழந்தமிழ் அறிவியல் (http://www.tamilscience.co.cc/)

இன்றைய சாதியம் மத அடிப்படையிலானதா? - 2

இப்பதிவு எழுத தூண்டிய  பழமைபேசி பதிவிற்கு நன்றிகள். சாதி பற்றிய முந்தய பதிவையும் பார்த்து விடுங்கள்.

இப்பதிவில் சில முக்கிய விசயங்களை விவாதிக்கலாம் என்று உள்ளேன்.

 

  1. இன்று தமிழகத்தில் சாதி பெயரால் மக்கள் கொடுமை படுத்த படுவது நகரத்திலா ? கிராமத்திலா ?
  2. சமீப காலங்களில் சில பிரிவு மக்கள் தமிழகத்தின் தனி பகுதிகளில் கொடுமை படுத்த படுவது மத ரீதியானதா? பொருளாதார ரீதியிலா?

 

இன்றைய சாதியின் நிலை

எப்போதுமே சாதி என்பது பொருளாதார ரீதியானது தான். விவாசயத்தை மட்டுமே பெரிதும் நம்பி வாழும் அனைத்து கிராம நண்பர்களுக்கும் இது தெரியும். ஒரு கிராமத்தில் அதிக நிலம் வைத்திருப்பவர்கள் மட்டுமே ஆதிக்க சாதியினர். (உதாரணமாக கொங்கு பகுதியில் கவுண்டர், திருநெல்வேலியில் தேவர் இப்படி.) மற்ற பிரிவினர் இவர்களை நம்பியே வாழ வேண்டும். கூலி தொழிலாளிகளும், கீழ் நிலை தொழிலாளிகளும் மிக மோசமாக நடத்த படுகின்றனர்.

 

கிராமங்களில் தொழில் வாய்ப்புகளும் மிகக்குறைவு. எனவே ஒரு பிரிவு மக்கள் இன்னொரு தொழிலை ஆரம்பிக்கும் போது போட்டியாக இல்லாமல் பொறாமையாக மாறி மிகப்பெரிய கலவரங்களில் முடிகிறது. எனவே குறிப்பிட்ட சந்ததியினர் குறிப்பிட்ட தொழில் மட்டுமே செய்ய வேண்டுமென வற்புறுத்த படுகின்றனர். (சாதி வலியுறுத்த படுகிறது)

 

தொழில் வளர்ச்சி அதிகமாக உள்ள நகரங்களில் (சென்னை, கோயம்பத்தூர், திருப்பூர், சேலம், ஈரோடு) போன்ற நகரங்களில்  (மற்ற பகுதிகளை ஒப்பிட) சாதி வெறி குறைவாக உள்ளதையும், வாய்ப்புக்கள் குறைவாக உள்ள (மதுரை, திருநெல்வேலி) போன்ற நகரங்களில் சாதி பதற்றம் அதிகமாக உள்ளதையும் சுட்டி காட்ட விரும்புகிறேன்.

 

 

மத அடிப்படையில் ஏதேனும் ஆதாரம் உண்டா எனில் அதுவும் கிடையாது. (முந்தய பதிவு பார்க்க). இன்றைய சாதிக்கு மனு தர்மம் எனும் கூச்சல் பொய்யே தவிர வேறொன்றும் இல்லை. எந்த ஆதிக்க சாதியினர் மனு தர்மத்தை படித்து விட்டு அதனால் தான் சாதி இருக்க வேண்டும் என்று கூறுகிறார் ? அதே போல மதமாற்றம் செய்யப்பட்ட மக்களும் சாதி கொடுமையிலிருந்து தப்பி விட்டார்களா ? இல்லை எனும் பதிலே கிடைக்கிறது !!! அங்கேயும் அதே கொடுமை.

 

திராவிடர் கழகங்களும் சாதி ஒழிப்பு வேலை செய்யாமல் மற்ற பிரிவு மக்களை தூண்டி விட்டதால் தான் இன்று தமிழர்கள் கூறு பட்டு கிடக்கின்றனர். ஏகப்பட்ட சாதி சங்கங்கள் உருவாகி இருக்கின்றன. அவற்றை வைத்து ஓயாமல் சாதி அரசியலும் நடைபெறுகிறது. இல்லக்கில்லாமல் அம்பு எய்வதால் தான் சாதி ஒழிப்பு நடைபெறவே இல்லை. மாறாக சாதி சங்கங்கள் பெருகி உள்ளன. மராட்டியர்களும், கன்னடர்களும் போன்ற பிற மாநிலத்தவர் மொழியால் ஒன்று படும் போது தமிழர்கள் ஒன்று பட முடியாமல் செய்வது இது போன்ற அமைப்புகள் தான். இவ்வகை பிரிவினை ஏற்படுத்தியதற்கு திராவிட கழங்களே முழு பொறுப்பு ஏற்றாக வேண்டும்.

 

சாதி ஒழிய என்ன செய்ய வெண்டும் ?

  1. கிராமங்களில் தொழில் வளர்ச்சி அதிகரிக்க பட வேண்டும்.
  2. அனைத்து பிரிவு மக்களுக்கும் சமமான முறையில் கல்வி வாய்ப்பும், வேலை வாய்ப்பும் வழங்க பட வேண்டும்,
  3. முதலில் அனைத்து சா(ச)தி சங்ககளும் கலைக்க பட வேண்டும். (மேல் தட்டு பிரிவினர் என கூறி கொள்பவரும், கீழ் தட்டு பிரிவினர் என கூறி கொள்பவரும்)
  4. ஒவ்வொரு பிரிவினரும் மற்ற பிரிவினரின் போட்டியையும் ஏற்று கொள்ள பழக வேண்டும்.

 

இவை இல்லாமல் சாதி ஒழிப்பு சாத்தியமாகாது.

சாதி இழிவு முறைமை தேவையா ?

வெளிப்படையான விவாதத்திற்கு தயார். சாதி உண்டு என்பவர்களிடமும் சரி. வர்ணம் தவறு என்பவர்களிடமும் சரி.
இன்றைய தினங்களில் வலைப்பதிவுகளில் வெளிப்படும் சாதி ரீதியான கருத்துக்கள் நாம் இன்னும் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருப்பது போன்ற வருத்தத்தை ஏற்படுத்துகின்றன. இப்போது சாதி அழிக்கபட வேண்டும் என் நினைப்போரும் பார்பனியம் என்று எழுதுவதும் நான் ஒரு பார்ப்பனர் என்று தங்களை கூறி கொள்வோரும் பயத்தையே ஏற்படுத்துகின்றனர். பிரிவுகள் எல்ல மதத்திலும் உள்ளன. இஸ்லாம், கிறிஸ்தவம், பௌத்தம் உட்பட. இவர்களுக்குள்ளும் ஒரு பிரிவினர் மற்ற பிரிவினரை ஏற்காத மன நிலையும் உள்ளது. சில சமயங்கள் வன்முறையும் நடக்கின்றன.
ஆனால் இந்தியர்களிடம் உள்ள சாதி எனும் விசத்தை கழுவினால், நம் நாட்டில் 70% மக்கள் (70 கோடி மக்கள்) எழுச்சி பெறுவார்கள். சரி மத ரீதியான விளக்கம் என்பதை பகவத் கீதையில் பார்ப்போம். [கவனிக்க இது கீதையை பற்றி பல ஞானிகள் முன்னமே எழுதிய கருத்துக்களின் அடிப்படையில்  என் தனிப்பட்ட புரிதல் மற்றும் செயல்முறை ஆகும்]

கீதை ”நான்கு வருணம் என் ஆக்கம். இயல்பு செயல் ஆகியவற்றின் அடிப்படையில் பகுக்கப்பட்டது” [ சதுர் வர்ணம் மயா சிருஷ்டம் குணகர்ம விபாகஸ ] என்று வகுத்துரைக்கிறது.

  • சத்வ குணம் [செம்மைத்தன்மை] கொண்டவர்கள் பிராமணர்கள் என்றும்

  • ராஜஸ குணம் [ செயலூக்கம்] கொண்டவர்கள் ஷத்ரியர்கள் என்றும்

  • தாமஸகுணம் [ ஒடுங்கும்தன்மை] கொண்டவர்கள் சூத்திரர்கள் என்றும்

  • ராஜஸ தாமஸ குணங்களின் கலவை வைசியர்கள் என்றெல்லாம் இந்நூல்களில் நாம் காண்கிறோம்.
கீதை சொல்வது இதை தான்:

  1. எவன் உண்மையை சத்தியத்தை, புதிய கண்டுபிடிப்புகளை மக்களுக்கு அறிவிக்கிறானோ அவனே பிராமணன்.

  2. எவன் மக்களை காக்க இராணுவ வீரனாகவோ, காவல் துறையிலோ, அரசிலோ வாழ்க்கையை அர்பணிக்கிறாணோ அவனே சத்ரியன்.

  3. எவன் எல்லா பொருள்களும் எல்லா மக்களுக்கும் கிடைக்க பாடுபடுகிறானோ அவனே வைசியன்.

  4. எவன் தன் உதிரத்தை வியர்வையாக சிந்தி மக்களுக்கு உழைக்கிறானோ அவனே சூத்ரன்.

    உண்மையில் இவர்களுக்குள் ஏற்ற தாழ்வு என்பதே கிடையாது. (இவர்கள் எந்த நாடாலும், மதமானாலும், இப்போது கூறப்படும் சாதியானாலும்). கவனிக்க: பஞ்சமர்கள் எனும் பிரிவே ஆரம்பத்தில் இல்லை என்பது வெளிப்படை.  மோசடியாக ஒரு பிரிவை சேர்த்தது எப்படி ? அவர்களின் உழைப்பு சுரண்டப்பட்டது எப்படி ?
பகவத் கீதையின் அடிப்படையில் உதாரணமாக  காட்ட வெண்டுமானால் பிரம்மத்தை (அறிவை, உண்மையை, சத்தியத்தை) வெளிப்படுத்தும் ஐன்ஸ்டீன், அப்துல் கலாம், அண்ணாதுரை போன்ற அறிவாளிகள் தான் பிராமணர்கள். தன் மக்களை காக்க போரில் ஈடுபட்ட இந்திய வீரர்களானாலும் சரி, ஈராக்கிய வீரர்களானுலும் சரி, அமெரிக்க வீரர்களானலும் சரி (ஜார்ஜ் வாசிங்டன், காந்தி, மண்டேலா) சத்ரியர்கள் தான்.
[கவனிக்க: பகவத் கீதையில் மதம் என்ற வார்த்தையே இல்லை. இந்த இந்திய மக்களுக்கானது மட்டும் எனவும் இல்லை. அனைத்து மனிதர்களுக்குமாகவே வழங்கப்பட்டது.]
வர்ணமும் சாதியும் அடிக்கடியும் குழப்பிக்கொள்ளப்படும் கருத்துக்களாகும். சாதி, பிறப்பு அடிப்படையில் அமைந்தது; வர்ணமோ தொழிலை அடிப்படையாகக் கொண்டது. பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சாதிகளை வர்ணத்தில் வகைப்படுத்தும்போது, வர்ணமும் பிறப்பை அடிப்படையாகக் கொண்டதாகத் தோன்றுகிறதே தவிர, தன்னளவில் அது பிறப்பை அடிப்படையாகக் கொண்டதல்ல.
இதை தவிர ”என் தந்தை இவர், என் பிறப்பால் எனக்கு இது வந்தது” எனக் கூறுபவர்கள் அறியாதவர்கள் என்பதோடு மட்டுமல்லாமல் பகவத் கீதையையே மாற்றுபவர்கள். பகவத் கீதை தத்துவம் இன்றும் ஒவ்வொரு நாட்டிலும் நடைமுறையில் உள்ளது. 

  1. அறிவியல் அறிஞர்கள் (பௌதீக, மனோ)-பிராமணர்கள்,

  2. வீரர்கள் & ஆட்சியர்கள் (இராணுவம்,உள்துறை)-சத்ரியர்கள்,

  3. தொழிலதிபர்கள்-வணிகர்,

  4. உழைப்பாளிகள்-சூத்ரர்
எனவே ஒவ்வொரு நாட்டிலும் படி நிலை உள்ளது.
பகவத் கீதையில் சொல்லப்பட்டு இருப்பது என்ன ? ஒருவனின் பிறக்கும் போதே இருக்கும் மனநிலைக்கு ஏற்பவே தொழிலை ஏற்படுத்தி கொள்கிறார்கள். எனவே செயல்களின் அடிப்படையில் வர்ணம் கற்பிக்க பட வேண்டும் என்பது தானே ? இதைக் குழைத்து முன்னோர்களின் அடிப்படையில் சாதியை அமைத்தது தானே மிகப்பெரிய தவறு ? இது தானே இன்று இத்தர்மமே அழியக்கூடிய நிலையில் இருப்பதற்கு காரணம்? இன்றைய் சூழ்நிலையில் இத்தர்மம் இரு தாக்குதல்களை எதிர் நோக்குகிறது.

  1. கண்மூடி தனமாக வெறும் உயிரற்ற சடங்குகளை பின்பற்றி மதத்தின் பெயராலேயே அதை அழிப்போர்.

  2. குருட்டுதனமான சடங்குகளை வைத்து அதன் பின் உள்ள அறிவியலையும் பகுத்தறிவின் பெயரால் ஏற்க மறுப்போர்.
இவ்விருவகை பிரிவினரால் இந்தியர்களுக்கு எவ்வகை நட்டமும் இல்லை. ஆனால் இந்தியர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னே கண்டுபிடித்த  அற்புதமான செயல்முறைகளை உலகத்தினர் இழந்து விடுவர். அவ்வளவு தான்.

நண்பர்களே பின்னூட்ட மட்டறுப்பு நீக்கபட்டுள்ளது. கருத்துக்கள் பரிமாறுவதற்கு முன் தயவு செய்து பகவத் கீதை, வர்ணம், சாதி என்பவை பற்றி தயவு செய்து தேடி படித்து கொள்ளுங்கள். ஏனெனில் நம் மனமாகிய கோப்பை ஏற்கனவே நிரம்பி இருந்தால் அவற்றில் பகிரவதற்கு ஏதுமில்லை.

கீதையை எப்படிப் படிப்பது ? ஏன் ? -ஜெயமோகன்
கீதையை எப்படிப் படிப்பது ? ஏன் ? -பகுதி 2-ஜெயமோகன்

இந்திய அறிவியலின் உலக கொடை

[விவாதங்களின் தொடர்ச்சி 1, 2]

கிரகணம் போன்ற அரிய சோதிட அறிவியல் கண்டுபிடிப்புகள் கடவுள் நேரடியாக வந்து சோதிடர்களுக்கு உபதேசம் செய்து விட்டு போனதில்லை. சோதிடம் கற்று கொள்ளும் ஒவ்வொருவரும், விமர்சிப்பவர்களும் உண்மைகளை அறிய அதன் அடிப்படை அறிவியல் மூலாதாரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் சொல்லும் விடயங்கள் மூட நம்பிக்கைகளை தவிர வேறெதயும் தரப்போவது இல்லை.

zero,  π = 3.1416, ட்ரிக்னாமெண்ட்ரி (sin, cos etc), square and cubic roots, புவி சுழற்சி,  கிரகணங்கள், கிரகங்கள் சூரிய சக்தியை எதிரொளிப்பது இவற்றை கண்டுபிடித்தது யார் ? இவர்களாலேயே சோதிடமும் வடிவமைக்க பட்டது.

With Kala-kriya Aryabhata turned to astronomy—in particular, treating planetary motion along the ecliptic. The topics include definitions of various units of time, eccentric and epicyclic models of planetary motion (see Hipparchus for earlier Greek models), planetary longitude corrections for different terrestrial locations, and a theory of “lords of the hours and days” (an astrological concept used for determining propitious times for action).

ஆர்யபட்டா, Bhāskara II கண்டுபிடித்த, பயன்படுத்திய கணித, அறிவியலின் தொகுப்பை பார்த்தால் உண்மையில் அதிர்ந்து போய் விடுவீர்கள். எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு

 

பாஸ்கரரின் சூத்திரம்

image

In English, the multiples of 1000 are termed as thousand, million, billion, trillion, quadrillion etc. These terms were named recently in English, but Bhaskaracharya gave the terms for Numbers in multiples of ten, which are as follows:

Eka (1), dasha (10), shata (100), sahastra (1000),
ayuta (10000), laksha (100000), prayuta (10^6 = million), koti (10^7),
arbuda (10^8), abja (10^9=billion), kharva (10^10), nikharva (10^11),
mahapadma (10^12=trillion), Shankh (10^12), Jaladhi (10^14),
antya (10^15=quadrillion), Madhya (10^16) and parardha (10^17).

 

நன்றிகள் (References)

ஆர்யபட்டா -http://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE

பிரம்மகுப்தர் - http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D

Bhāskara II - http://en.wikipedia.org/wiki/Bh%C4%81skara_II,
http://scientistsinformation.blogspot.com/2009/09/bhaskara-ii-1114-1185.html

 

சகோதரி Mrs. The Analyst போன்றோருக்காக,

"Aryabhata I." Encyclopædia Britannica. 2009. Encyclopædia Britannica Online. 30 Oct. 2009 <http://www.britannica.com/EBchecked/topic/37461/Aryabhata-I>.

"Brahmagupta." Encyclopædia Britannica. 2009. Encyclopædia Britannica Online. 30 Oct. 2009 <http://www.britannica.com/EBchecked/topic/77073/Brahmagupta>.

"Bhāskara II." Encyclopædia Britannica. 2009. Encyclopædia Britannica Online. 30 Oct. 2009 <http://www.britannica.com/EBchecked/topic/64067/Bhaskara-II>.

 

மேலும் பல விடயங்களை தெரிந்து கொள்ள தூண்டிய சகோதரி Mrs. The Analyst, தருமி ஆகியோரின் கேள்விகளுக்கு நன்றி.

தமிழுக்கு வந்த சோதணையும், கிரகங்களும்

[சென்ற இடுகையிலுள்ள விவாதத்தின் தொடர்ச்சியாக கருதலாம்]

இப்போதெல்லாம் பழந்தமிழர் பயன்படுத்திய எல்லா விடயங்களையும் குறை சொன்னால் தான் பகுத்தறிவு வாதி என எளிதாக நிருவலாம் எனும் நினைக்க கூடிய கொடிய வைரஸ் தமிழர்கள் மத்தியில் பரவி வருகிறது. அவற்றில் ஒன்று தான் ”கிரகம்/கோள்” எனும் சொற்களின் பொருட்கள்

வார்த்தைகளின் சிதைவுகள்

தமிழில் நொடி, வினாடி எனும் வார்த்தைகள் சிதைக்கப்பட்ட விதத்தை வைத்து இதனை விளக்கலாம்.

1. பழங்காலத்தில் தமிழில் நொடி, வினாடி எனும் வார்த்தைகள் முற்றிலும் வேறான விதத்தில் பயன்பட்டு வத்தது. வினாடி இன்றைய SI அளவு முறையில் 2 நிமிடங்களுக்கும் அதிகமானது.
2. ஆங்கிலேயர்களின் வருகைக்கு பின் Second எனும் அளவு முறை நடைமுறைக்கு வந்தது.
3. Second என்பதை தமிழ் படுத்த முயன்ற அறிவு ஜீவிகள் புதிய வார்த்தை கண்டு பிடிக்காமல் ஏற்கனவே இருந்த வினாடி என்ற வார்த்தையை பயன்படுத்தினர்.
4. இன்று பெருமபாலோனோர் பழந்தமிழில் வேறு அர்த்தம் இருந்தது என்று கூட தெரியாமல் உள்ளனர்.
5. நம் குழந்தைகள் எதிர்காலத்தில் நினைக்கும்: "பழந்தமிழர்கள் முட்டாள்கள் 1 வினாடிக்கு 2 நிமிடங்களாம் ?" !!!

இப்படி தான் ஆகிவிட்டது கிரகங்கள் எனும் வார்த்தையின் அர்த்தமும்

1. பழங்காலத்தில் தமிழில் கிரகம் எனும் வார்த்தை வானியல் பொருட்கள் அனைத்தையும் குறிக்கும் பொருளில் பயன்பட்டு வத்தது. எனவே தான் சூரியன், சந்திரன் அனைத்தும் கிரகம் என்றனர்.
2. ஆங்கிலேயர்களின் வருகைக்கு பின் அறிவியலில் planet எனும் பொருட்களை என்பதை தமிழ் படுத்த முயன்ற அறிவு ஜீவிகள் புதிய வார்த்தை கண்டு பிடிக்காமல் ஏற்கனவே இருந்த கிரகம் என்ற வார்த்தையை பயன்படுத்தினர்.
3. இன்று பெருமபாலோனோர் பழந்தமிழில் வேறு அர்த்தம் இருந்தது என்று கூட தெரியாமல் சோதிடம் தவறு என உளறி கொண்டுள்ளனர்.

பிறகு சாயாகிரகங்கள் - ராகு, கேது பற்றிய விளக்கங்களை அடுத்த இடுகையில் பார்க்கலாம். இது மிக எளிமையான விடயம். “சாயா” என்பதன் அர்த்தம் என்ன என்பதை புரிந்து கொண்டாலே விளக்கங்கள் கிடைத்து விடும். பின்னூட்டத்தில் விளக்குவதின் மூலம் என்னுடைய நேரத்தை நீங்கள் மிச்சபடுத்தலாம்.

 

நன்றி: http://www.thinnai.com/?module=displaystory&story_id=20609085&format=print&edition_id=20060908

2 கண்ணிமை - 1 நொடி

2 கைநொடி - 1 மாத்திரை

2 மாத்திரை - 1 குரு

2 குரு - 1 உயிர்

2 உயிர் - 1சணிகம்

12 சணிகம் - 1 விநாடி

60 விநாடி - 1நாழிகை

2 1/2 நாழிகை - 1 ஒரை

3 3/4 நாழிகை - 1 முகூர்த்தம்

2 முகூர்த்தம் - 1 சாமம்

4 சாமம் - 1 பொழுது

2 பொழுது - 1 நாள்

திருமண சாதக பொருத்தம் மூட நம்பிக்கையா ? (match making)

[எதிர்வினை: இவ்விடுகைக்கு காரணமான தோழி தீபாவின் இடுகையை பார்வையிடவும்]

ஜாதகம் தவறல்ல. ஜாதகம் பார்க்கும் முறை தான் தவறு. ஒரு சிலர் சுய வைத்தியம் செய்வது போல சுய ஜாதக பொருத்தம் பார்க்கிறார்கள். இது மிக மிக தவறு.

இரண்டாவது ஜாதகம் பற்றிய மூட நம்பிக்கைகள்

1. 10 பொருத்தம் மட்டும் பார்ப்பது.
2. சில நட்சத்திரங்களை தாங்களாகவே ஒதுக்குவது.
3. செவ்வாய் தோசம், நாக தோசம் பற்றிய விதிவிலக்குகளை நிராகரிப்பது (தோசம் இல்லை என ஒத்து கொள்ள மறுப்பது)

 

பத்து பொருத்தம்

எவ்வளவு ஜாதக ஆராய்ச்சியாளர்கள் சொன்னாலும் சரி மக்கள் 10 பொருத்தம் மட்டுமே பார்க்கிறார்கள். ஆண் மற்றும் பெண் ஜாதகத்தை ஒன்றினைத்து பார்க்க மாட்டேன் என்கிறார்கள். உண்மையில் 10 பொருத்தங்கள் மட்டுமே பார்ப்பது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்பது சாதக அறிஞர்களுக்கு நன்றாக தெரியும்,
10 பொருத்தம் என்பது நட்சத்திரங்களை பொருத்தி பார்ப்பது. உதாரணமாக ஒருவர் புனர்பூசம் நட்சத்திரம் எனில் அவருக்கு மீதமுள்ள 5 நட்சத்திரங்கள் பொருந்தி வருகிறது.

http://www.chennaiiq.com/astrology/marriage_match_by_star_tamil.asp

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது உலகத்தில் உள்ள அனைவருமே 27 நட்சத்திரங்களில் ஒன்று தான். எனவே  600 கோடி * 5 / 27  = 111 கோடி பேர் பொருந்தி வருவர். இது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் ?

 

எப்படி பார்க்க வேண்டும் ?

சாதக பொருத்தம் பார்ப்பது என்பது தனிப்பட்ட முறையில் குறிப்பிட்ட ஆண் பெண் சாதகம் பார்ப்பது மட்டுமே. இதற்கு முன்னோட்டம் மட்டுமே 10 பொருத்தம்.  மேலை நாடுகளில் உள்ளது போல ஆணும் பெண்ணும் ஒன்றினைந்து சில காலம் தங்கி விட்டு பின் திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் நம் கலாசாரத்திற்கு ஒத்து வரகூடியது அல்ல. எனவே இம்மாதிரியான தருணங்களில் ஜாதகம் ஒரு அருமையான கருவியாக அமையும். உண்மையில் ஜாதகம் பார்ப்பதில் கீழ் காணும் சில விடயங்களை கணிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?

1. ஆண் உண்மையில் ஆண்மை உடையவரா ?
2. ஆண் / பெண் ஒருபால் உறவில் ஆர்வம் உள்ளவரா?
3. ஆண் / பெண் திருமணத்தில் ஆர்வம் உள்ளதா?
4. பெண் உண்மையில் குழந்தை பெரும் அளவு கருப்ப பை உடையவரா ?
5. ஆணிற்கும் பெண்ணிற்குமான உடலுறவு எப்படி பட்டது (செக்ஸ் ஒத்துழைப்பு) ?
6. ஆண் பெண் மனப்பொருத்தம் எப்படி பட்டது ?
7. ஆண் பெண் எதிர் கால வாழ்க்கை எப்படி செல்லும் ?


ஆனால் எந்த சோதிடராவது ஒரு ஆண் ஆண்மையற்றவர் என கூறி சாதகத்தை நிராகரித்ததை கேள்வி பட்டது உண்டா ? இம்மாதிரியான விசயங்களை வெளியிடுவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. எனவே வேறு விதமாக கூறுவர். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


என்னுடைய இரு நண்பர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பே காதல் திருமணம் தான் நடக்கும் என்று நான் கணித்து கூறியது இன்று மிகச்சரியாக நடந்துள்ளது. சோதிடம் என்பது நம் முன்னோர்களின் ஒளிவிளக்கு. அதை நாம் தான் சரியான முறையில் பயன்படுத்தி உண்மை சோதியாக மாற்ற வேண்டும்.

காதலர்களின் ஏகாந்த தனிமை-கவிதை(Dating)

[காதலர்களின் ஏகாந்த தனிமை. மூல ஒளிப்பதிவு காணவும்.]

நிஜமாக நான் தானா? இங்கு உன் இடம் உள்ளேனா?
இதன் பெயர் தான் காதலா? ஏதோ விந்தையை பார்க்கின்றேன்
எவரோ எங்கோ நுழைந்து எல்லாம் செய்கின்றாரா?
பின்னால் பின்னால் வந்து என்னை தள்ளுகின்றாரா?

ஹரேஹரே ஹரேஹரே ராமா !
இங்கே எங்கே வந்தது இத்துணிவு
எவ்வளவு உஷாராக இருந்ததே இம்மனது ஏம்மா ?   [2 தடவை]

[நிஜமாக]

இவ்வயதினில் ஒவ்வொர் கணமும் ஒவ்வோர் வசந்தம்
என்மனதுக்கு ஒவ்வோர் க்‌ஷணமும் நீயே பிரபஞ்சம்
சமுத்திரமாய் அனுதினமும் பொங்கும் சந்தோசம்

அருகினில் சென்று கரங்களை கோர்த்து நடந்திட்ட தூரம் எவ்வளவு உண்டே
களைப்போ இன்றி கடந்திட்ட காலம் இவ்வளவு என நம்புவமோ ?

[நிஜமாக]

என் கனவு இங்கே நிஜமாக நிற்கின்றதே
என் பழமை இங்கே வெட்கமதை தருகின்றதே
உன் அருகாமை உல்லாசத்தை கொடுக்கின்றதே
கன்னத்தின் அருகே சென்றிற்ற உதடு நம் பரவசம் தொடங்கட்டுமே
பகலே எனினும் வின்மீனெல்லாம் உதயம் காணட்டுமே

[நிஜமாக]

[ஹரேஹரே 2 தடவை]

இக்கவிதை தெலுங்கு பாடல்(http://www.youtube.com/watch?v=xA0sSwB3wyU) ஒன்றின் மொழி பெயர்ப்பு / தழுவல். உங்களது கருத்துக்களையும், மொழிபெயர்ப்பில் உள்ள குறைகளையும் சுட்டி காட்டவும்.

ஒரு தலை காதல் கவிதை (Feel My Love - காதலை உணர்வாயா)

என் அன்பில் கோபம் காணே என் அன்பில் துவேஷம் காணே
என் அன்பில் சாபம் காணே அன்பே Feel My Love
என் அன்பின் அளவை காணே என் அன்பின் ஆழம்  காணே
என் அன்பின் வேகம் காணே அழகே Feel My Love
என் அன்பின் மௌனம் காணே என் அன்பின் அர்த்தம் காணே
என் அன்பின் சூன்யம் காணே மறுப்போ வெறுப்போ ஏதோ Feel My Love

[என் அன்பில்]

 

நான் அளிக்கும் கடிதமெல்லாம் கிழித்தெறிந்து Feel My Love
நான் வழங்கும் பூவையெல்லாம் கீழெறிந்து Feel My Love
நான் எழுதும் கவிதையெல்லாம் பரிகசித்து Feel My Love
நான் செய்யும் சேஷ்டையெல்லாம் சீ யென்று Feel My Love

நீ என்னை விரும்பவில்லை என் மீது அன்புமில்லை
நீ என்னை நினைப்பதில்லை  என் பேச்சோ பிடிப்பதில்லை 
நீ இல்லை இல்லை என்ற போதும் எந்தன் அன்பில் நிஜமுண்டு Feel My Love

 

வெறுப்பாக முறைத்தாலும் விழியாலே Feel My Love
சினமாகி சுட்டாலும் நாவார Feel My Love
கசடென கடந்தாலும் காலாலே Feel My Love
விட்டு விலகி செல்லும் தடங்களிலே Feel My Love

வெறுப்பதிலே சோர்வடைந்தால், முறைப்பதிலே தளர்வடைந்தால்,
தடங்களிலே முடிவிருந்தால், சுடுவதிலே வலு இழந்தால்,  
இதற்கும் மேலே இதயம் என்று உனக்கொன்றிருந்தால் Feel My Love

 

இக்கவிதை தெலுங்கு பாடல்(http://www.youtube.com/watch?v=udl5Q-RJl5U) ஒன்றின் மொழி பெயர்ப்பு / தழுவல். உங்களது கருத்துக்களையும், மொழிபெயர்ப்பில் உள்ள குறைகளையும் சுட்டி காட்டவும்.

ஹாலிவுட் இசையில் தமிழ் பாடல் (AR Rahman debuts)

 

இசையமைப்பாளர் AR ரஹ்மான் இசையமைப்பில் உருவாகி இருக்கும் முதல் ஹாலிவுட் படம் Couple’s Retreat. இதில் ஒரு தமிழ் பாடல் இடம் பெற்றுள்ளது.

இப்பாடலை கேட்க http://www.couplesretreatsoundtrack.com/ எனும் இணைய தளத்தில் Kuru Kuru Kan (Tamil) எனும் பாடலை தெரிவு செய்யவும். இப்பாடலின் மூலம் தமிழ் பாடலை Hollywood தரத்திலான இசையில் கேட்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

பாடல் வரிகள் (நண்பர் Murali பின்னூட்டத்திற்கு பிறகு)

Kuru Kuru | AR Rahman (Tamil Lyrics with English Translation) | Listen

Thanks to Tina & http://www.rahmanism.com/2009/09/couples-retreat-lyrics-translation.html

Kuru kuru kangalilele. .. (With her teasing eyes)
Enai aval vendraale... (she won me)
Kuru kuru kangalilele. .. (With her teasing eyes)
Enai aval vendraale.. (she won me)

Itho Itho aval enai patham parkiraal... (hmmmmhmmmm) (now now, she takes on me)
Itho Itho aval enai patham parkiraal... (hmmmmhmmmm) (now now, she takes on me)

Siru siru pennilave.. (Will the girl like a small moon become my partner?)
En thunai avaalo..
Siru siru pennilave.. (Will the girl like a small moon satisfy my hunger?)
En pasi theerpalo..

Itho itho aval enai patham parkiral ...(hmmmmhmmmm) (now now, she takes on me)
Itho itho aval enai patham parkiral ...(hmmmmhmmmm) (now now, she takes on me)

 

இப்படத்திற்கான பாடல்களை இலண்டனிலும் லாஸ் ஏஞ்சல்சிலும் மூன்று மாதங்கள் வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இப்படம் யோகா + காமெடி + காதல் பற்றிய கதையை சொல்கிறது.

இந்த ஆல்பத்திலுள்ள சஜ்னா (when you cry I cry with you.. ) எனும் பாடலும் நன்றாக உள்ளது.

Couple’s Retreat Tracklist

  1. Na Na
  2. Kuru Kuru Kan (Tamil)
  3. Jason & Synthia Suite
  4. Sajna
  5. Tour of the Villas
  6. Meeting Marcel
  7. Itinerary
  8. Undress
  9. Sharks
  10. Luau by John O Brien
  11. Salvadore
  12. Intervention
  13. The Waterfall
  14. Animal Spirits
  15. Jason & Synthia Piano Theme

நன்றி AR ரஹ்மான் 

AR-Rahman_oscar_performance.jpg

Thanks: http://www.extramirchi.com/hotcelebs/ar_rahman/ar-rahmans-hollywood-debut-movie-couples-retreat/

புதிய பொன்னுலகம் அழைத்தால்

[தலைவியின் காதல் சுற்றத்தாரால் புரிந்து கொள்ளப் படாத போது தலைவனுக்கான அழைப்பு. மூல ஒளிப்பதிவு காணவும்.]

 

நீயெனவும் நானெனவும் வேறுவெறி  ல்லையே

                   செப்பினாலும் கேட்பரோ ஒருவரேனும்

நானே உன் நிழலல்லவா நீயே என் நிஜமல்லவா

                   ஒப்பு கொள்வரோ எப்போ தேனும்

விழிகள் மறை க்கின்ற சொப்(ப)னம், இப்போ தெதிரான நிஜமாய் தெரிந்தால்

அடக்க முடியாத அன்பு புதிய பொன் உலகாக அழைத்தால்

 

 

தடையை தாண்டி இதயம் சேர்ந்து மனதை எழுப்பிய உதயமே

வயதை காட்டி வணக்கம் கூறி பழக்கமாகிய காதலே

இது உண்மையே மறு ஜென்மமே இது புரியுமா இனியும் உன் மாயமா ?

[நீயெனவே ...]

வார்த்தை எனது; லயம் உனது; பாடலாகி வா பிரி யமே

போர் எனது வீரம் உனது எனை வெல்ல வா என்வீரனே

நீயே முடி வல்லவா உனை சேரவா? எனை காண வா என்னை சேர வா

[நீயெனவே ...]

 

இக்கவிதை தெலுங்கு பாடல்(http://www.youtube.com/watch?v=6_JUt73Q8mY) ஒன்றின் மொழி பெயர்ப்பு / தழுவல். உங்களது கருத்துக்களையும், மொழிபெயர்ப்பில் உள்ள குறைகளையும் சுட்டி காட்டவும்.

நீ

காதலில் வெற்றியடைந்த காதலன் பாடும் பாடல்

 

நீயும் உன் சிரிப்பும் போதுமம்மா எந்நாளும்

          எவரும் என் நினைவில் வராரம்மா

நீயும் உன் அன்பும் போதுமம்மா என் கண்ணே

           இந்த ஜென்மம் வரமே ஆகுமம்மா

 

 

என்னுடைய உயிர் நீயே

நான் கண்ட கலை நீயே

என் பாடல் ஸ்ருதி நீயே

என் அன்பு கதை நீயே

என்நாளும் பெருகும் என் ஆனந்தமும் நீயேதான்

 

உன்னுடன் சொர்க்கமும் நிஜமே

உன்னுடன் ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம்

உன்னுடன் ஒவ்வொரு குரலும் திவ்ய சங்கீதம்

 

உன்னுடனே நான் முழுமை அடைவேன்

உன்னுடனே ஒவ்வொரு பொழுதும் சொர்க்கம்

உன்னுடனே  வாழ்வின் ஒவ்வொரு கணமும் சந்தோசம்

 

 

[இக்கவிதை தெலுங்கு பாடல் ஒன்றின் மொழி பெயர்ப்பு / தழுவல்.

மொழிபெயர்ப்பில் உள்ள குறைகள் என்னையே சாரும். சுட்டி காட்டவும்]

வீடியோ பதிவுகளை வெளியிட தேவைப்படும் இலவச மென் பொருள்கள்

வீடியோ பதிவுகளை வெளியிட தேவைப்படும் பொருள்கள் பற்றிய இடுகை

 தமிழில் வீடியோ பதிவுகள் குறித்த முந்தய இடுகை

 

மென் பொருள்கள் இணைப்புகள்

வீடியோக்களை எடிட் செய்ய

விரிச்சுவல்டப்-

VirtualDub is a video capture/processing utility for 32-bit and 64-bit Windows platforms (98/ME/NT4/2000/XP/Vista/7), licensed under the GNU General Public License (GPL).

ஏவிஐடிமல்டிபிளக்சர்

Avidemux is a free open-source program designed for multi-purpose video editing and processing.

 

வீடியோ வகையை மாற்ற

ப்ரிஸ்ம்

Prism Video Converter Software (Convert AVI, MP4, WMV, MOV, MPEG, FLV and other video file formats)

Prism is one of the most stable and comprehensive multi format video converters available, is very easy to use and is completely free.

 

அனைத்து வீடியோ & ஒலி கோப்புகளையும் இயக்க  

கே கொடக்

The K-Lite Codec Pack is a collection of  codecs and tools. Codecs and DirectShow filters are needed for encoding and decoding audio and video formats.

 

Vlog

 

 

நண்பர்களே என்னுடைய இப்பதிவு முயற்சி ஆரம்ப நிலையிலேயே உள்ளது. எனவே இப்பதிவில் தொழில் நுட்ப கோளாறுகள் இருந்தாலும், வீடியோ பதிவை மேம்படுத்த வழிகள் இருந்தாலும் தயங்காமல் தெரிய படுத்த வேண்டுகிறேன்.

தமிழில் வீடியோ பதிவுகள் (Vlog) -1

 

சமீபத்தில் ஒரு நல்ல ஆங்கில வீடியோ பதிவை காண நேர்ந்தது.  தமிழிலும் பல நல்ல சமூக மற்றும் பொழுது போக்கு  வீடியோ இடுகைகள் உருவாக வேண்டும் என்பது என் ஆவல். உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன.

பட நேரம் 1:25 (1400kb, 13 நொடிகள் [1mbps] 01:45 நிமிடங்கள்[128kbps])

 

பின்குறிப்பு ;-)

பிரபல பதிவர்கள் வால்பையன், பழமைபேசி, ப்ரியா, அமித்து அம்மா இவர்களுக்கான அழைப்பு. 

பட நேரம் 1:43 (1700kb, 15 நொடிகள் [1mbps], 2:07 நிமிடங்கள்[128kbps])

 

நண்பர்களே இப்பதிவு என்னுடைய முதற் முயற்சியாகும். எனவே இப்பதிவில் தொழில் நுட்ப கோளாறுகள் இருந்தாலும், வீடியோ பதிவை மேம்படுத்த வழிகள் இருந்தாலும் தயங்காமல் தெரிய படுத்த வேண்டுகிறேன்.

நம் நுண்கலைகளை நாமே அழிப்பதா ?

 

இடுகையை இட காரணம்

ஊர்சுற்றி

சுனாமி எச்சரிக்கை, அறிவியல், சோதிடம் : பகுத்தறிவு ? : எதிர்வினை

 

  நம்முடைய இந்திய துணை கண்டம் பல  நுண்கலைகளை கொண்டிருந்தது என்பதையும், (அழியாத ஓவியங்கள், சிற்ப கலை, கட்டிட கலை, மூலிகைகள், சித்த மருத்துவ முறைகள்) அவற்றில் பெரும்பான்மையானவை நுட்பங்கள் கால போக்கில் அழிந்து போய்விட்டன என்பது மறுக்க முடியாத உண்மைகள்.

  இது போலவே சோதிடம் என்பது இன்னும் வளர்ந்து வரும் ஒரு நுண் கலை என்பதையும், ஆயிரக்கணக்கான வருடங்களாக பல மாற்றங்களை ஏற்று கொண்டு இருக்கிறது என நிரூபிக்க முடியும். இன்னும் வளர்ந்து கொண்டு தான் இருக்கும்.

சமீபத்திய பூகம்பம் பற்றிய விவாதத்தில் நான் இவ்வாறு குறிப்பிட்டு இருந்தேன்.

சோதிடம் என்பது என்ன?

சோதிடம் என்பது வானியல் சூழ்நிலை மாற்றங்களுக்கும், புவியில் ஏற்படும் மாற்றங்களுக்கும் இடையே உள்ள தொடர்பினை புள்ளி விவர அடிப்படையில் ஆராய்வதாகும்.

  அதற்கு நண்பர் ஊர் சுற்றி அவர் அறிந்த வகையில் அப்படி கேள்விபட்டதில்லை என்கிறார். ஆனால் சோதிடம் அடிப்படை அறிந்த ஆரம்ப நிலை மாணவர் கூட இதை ஒப்பு கொள்வார். உதாரணமாக எந்த ஒரு மாணவரும் குறைந்தது 100 சாதக அமைப்புகளையும், அந்த சாதகர்களின் விவரங்களையும் ஒரு ஆராய்ச்சி மாணவரை போல ஆராய வேண்டும். இதன் பிறகு தான் ”ஓரளவாவது சோதிடம் சொல்வது என்பது என்ன” என்பதை ஓரளவாவது நாம் அறிந்து கொள்ள முடியும்.

  இதையே திரு. சுப்பையா வாத்தியாரும் ஒரு பாடத்தில் அறிவுருத்தி இருந்தார்.

 

மல்லார்ந்து படுத்து நாமே நம் மீதே உமிழ்வதா?

  இதை நேரடியாக  மறுத்து கூற முடியாமல் அதில் ஒரு சில மோசடியாளர்கள் தவறாக கடை பிடிப்பதை சுட்டி காட்டுகிறார்கள். சோதிட மோசடியாளர்களை கண்டியுங்கள். சோதிடத்தை அல்ல.

  சுகப்பிரசவம் ஆகும் நிலைகளை கூட சில மோசடி மருத்துவர்கள் வேண்டுமென்றே அறுவை சிகிச்சை செய்கிறார்களே அதனால் மருத்துவம் என்பதே பொய் என்று கூற முடியுமா ? (எவ்வளவோ நல்லுள்ளம் கொண்ட மருத்துவர்கள் இருக்கிறார்களே ?)

  எனவே எவரோ சொல்கிறார்கள், என்னவோ கேள்வி பட்டேன் என்று தவறான கருத்துக்களை பரப்பி நலிந்து கொண்டிருக்கும் கலைகளை் அழித்து விடாதீர்கள்.

  சோதிட நிலைகள் தவறென்று தெரிந்தால், அதனை கற்று கொண்டு அதை திருத்துங்கள். (இவ்வாறு கடந்த சில வருடங்களில் செய்து அதை செம்மை செய்தவர்கள் ஏராளம்).

புதிய உத்திகள்

 

(KP System of Astrology)

The Krishnamurthy Paddhati (KP Astrology) was devised by learned astrologer KS Krishnamurthi who introduced many insights to improve the accuracy of astrological predictions. He gave importance to the Nakshatra and worked on finer subdivisions of time to create the Krishnamurthy System which has now become the fastest growing astrology methodology.

K-S-Krishnamurthy

'Krishnamurthi Paddhathi' of astrology is the product of 40 years of research by the founder Late Prof. K.S. Krishnamurthi. Prof. K.S.Krishnamurthi was born on 1st November 1908 at Thiruvaiyaru, Tanjore district. He later moved to Madras ie Chennai. KSK passed away in March 1972. (source http://astropskp.com/)

சென்ற நூற்றாண்டு அறிஞர்

Dr. B. V. Raman - Vedic Astrologer

Dr.B.V.Raman, Editor-in-chief of 'The Astrological Magazine' and a World Renowned Astrologer.

Dr. Raman spent his whole life in the study of relations between cosmic and terrestrial phenomena. He was able to demonstrate by his writings and predictions made through The Astrological Magazine and other media that the astrological theory of cosmic influences affecting human life is essentially correct. Through a number of books, lectures and research papers, Dr. Raman influenced the educated public and made them astrology-conscious. His special fields of research were Hindu astronomy, astro-psychology, weather and political forecasts, disease diagnosis, natural calamities, management and other areas in relation to celestial phenomena.

 

திரு. சுப்பையா வாத்தியார்

subbaiah

SP.VR. SUBBIAH Coimbatore, Tamil Nadu, India நம்ப வாத்தியார்.
 

திரு. சுவாமி ஓம்கார்- Workshop on Stellar Astrology (கே.பி முறை)

Workshop on Stellar Astrology
Conducting a Workshop on Stellar Astrology- An Internal View on Astrology (KP system). This is unique opportunity of learning Krishnamurthy Paddhati, which is an advance system of astrology.

 

வாழ்த்துக்கள்!

நன்றி!!

சுனாமி எச்சரிக்கை, அறிவியல், சோதிடம் : பகுத்தறிவு ? : எதிர்வினை

 

முதலில் சுனாமி எச்சரிக்கை, பூகம்பத்தகவலை தந்து உதவிய நண்பர் ஊர்சுற்றிக்கு நன்றி ;-)

மேலும்

Chennai Earth Quake

Japan Earth Quake

நண்பர் பூகம்பக தகவலை தவறான முறையில் புரிந்து கொண்டிருக்கிறார். முதலில் ஒவ்வொரு அமாவாசையும் சூரியனும், சந்திரனும் ஒரே நேர்கோட்டில் வரும். ஒவ்வொரு பௌர்ணமியும் எதிர் எதிர் திசையில் வரும். ஆனால் இது சூரிய கிரகணத்தில் இருந்து வேறுபட்டது ஆகும்.

சரியான தகவல்: அறிவியல்

புதிது:** Natural Disasters, Prof. Stephen A. Nelson, Tulane University. இவர் ஒரு அறிவியல் அறிஞர். சந்திரனின் சஞ்சாரத்திற்கும், கடல் நீரோட்டத்திற்கும் இடையே உள்ள தொடர்பினை பற்றி எழுதி உள்ளார்.

hightides 

சோதிடம் என்பது என்ன?

சோதிடம் என்பது வானியல் சூழ்நிலை மாற்றங்களுக்கும், புவியில் ஏற்படும் மாற்றங்களுக்கும் இடையே உள்ள தொடர்பினை புள்ளி விவர அடிப்படையில் ஆராய்வதாகும்.

நவீன சோதிட அறிவியல்

ஒரு கணிணி அறிவியல் அறிஞர் புள்ளி விவர அடிப்படையில் மிகத்துல்லியமக கணித்த தற்போதய நில நடுக்கம். (நன்றாக கவனியுங்கள் இவர் அறிவியல் அறிஞர் கிடையாது. வானவியலுக்கும், சம்பவங்களுக்கும் இருக்கும் தொடர்பை வைத்து கணித்தார் அவ்வளவு தான்)

இது மிகச்சரியாக இப்போது நடந்துள்ளது. இது தான் Hi-Tech சோதிடம்.

Eclipse & Earthquake Simulator 

by Britton LaRoche · 01/07/2009  http://www.garagegames.com/community/blog/view/15946/7

japan.eclipse.results

The results show 100% accuracy on the original prediction with significant earthquakes in all 3 circles between July 22nd and July 28th. Follow up results indicate a trend where the magnitude of the quakes are increasing. A new theory proposed on July 28th explains this and predicts larger quakes in these circles before August 25th.


The new lunar tectonic weakening theory is proving out to be correct. This theory correctly predicted the 7.1 and 6.1 earthquakes in Japan on August 9th and 10th. The theory also indicates the worst may still be to come between August 17th and August 25th with the next lunar perigee. See page 8 for details. Page 8 - Updates to prediction - Why we will have more 7+ quakes before August 25th

எனவே கோள்களின் சஞ்சாரத்திற்கும், புவியில் ஏற்படும் மாற்றங்களுங்களுக்கும் இடையே உள்ள சம்பந்தம் அறிவியல் பூர்ணமாகவும் சரி, சோதிட பூர்வமாகவும் சரி நிரூபிக்க பட்டுள்ளது.

 

நண்பருக்கு விளையாட்டாக சில கேள்விகள் :

1. அமாவாசையும், பௌர்ணமியும் 28 நாள்களுக்கு ஒரு முறை ஏற்படுகிறது. ஆனால் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் என்பதும் வருடம் ஒரு முறை மட்டும் நிகழ்கிறது. இது ஏன் ?

2.  அமாவாசையில் கடலில் அலைகள் அதிகமாவது போல, பௌர்ணமியில் குறைவாக வேண்டுமே? ஆனால்  பௌர்ணமியிலும் அதிகமாகிறதே ஏன் ? (அமாவாசையில் பைத்தியம் அதிகமாவது போல, பௌர்ணமியில் குணமாக/குறைவாக வேண்டுமே? ஆனால்  பௌர்ணமியிலும் அதிகமாகிறதே ஏன் ?)

 

பகுத்தறிவையும்- அறைகுறை அறிவையும் சேர்த்து குழப்பி ஒரு சூப்பர் சிலர் குருமாவாக பைத்தியகோடிகளுக்கும் வாசகர்களுக்கும் தந்துகொண்டிருக்கிறார்கள் . நண்பரும் அந்த வரிசையில் சேர வேண்டாமென கேட்டு கொள்கிறேன்.

எதற்கெடுத்தாலும் பகுத்தறிவு, மத எதிர்ப்பு, சோதிட எதிர்ப்பு என்று ஆரம்பிக்காதீர்கள். உண்மையிலேயே அவ்விசயம் உண்மை தானா, மக்களுக்கு நன்மை பயக்குமா ? என்று மட்டும் சிந்திக்கும் படி கேட்டு கொள்கிறேன்.

வாழ்த்துக்கள்!!

உங்களை உணர 10 நிமிடங்கள் செலவளிக்க தயாரா - 2 ?

வால் பையனின் தியானம் பற்றிய கேள்விக்கான பதிலும் சிந்தணைகளின் விளக்கமும். மூல இடுகை. http://shanthru.blogspot.com/2009/08/blog-post_11.html

முதல் பகுதி: உங்களை உணர 10 நிமிடங்கள் செலவளிக்க தயாரா ?

”உங்களுக்கு தோன்றிய உணர்வுகளில் எவ்வித கேள்விகள் / சந்தேகம் இருந்தாலும் பகிர்ந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தாராளமாக தெரிய படுத்தலாம்.“ என வெளியிட்டு இருந்தேன்.

பதிவை பார்வையிட்ட 250 பேரில் ஒருவர் கூட தங்கள் அனுபவத்தை வெளியிட முன்வரவில்லை. ஆனால் இது நான் எதிர் பார்த்தது தான் எனவே தான் ”விருப்பமுள்ளவர்கள்” என்று கூறினேன். ஏனெனில் இது உங்கள் ஆழ்மனதிலுருந்த பல சிந்தணைகளை வெளி கொணர்ந்து இருக்கும். அவை பெரும்பாலும் மிக அந்தரங்கமானவையால் வெளியிடுவது சிரமமே.

உங்கள் சிந்தணைகளின் படி நிலைகள்

medi1

நிலை 1:  (முதன் முறையாக செய்பவர்களுக்கு மட்டும்)

இத்தியானம் ஒரு கேலிகூத்தை போல உணர்வீர்கள். இது ஒரு முட்டாள்தனம். 10 நிமிடங்களும் வீண் தான் இதற்கு பதிலாக ஒரு உருப்படியான வேலை செய்யலாம் என மனம் சொல்லும். நீங்கள் உங்களுக்குள் சொல்லி கொள்வீர்கள் ஒரு முறை செய்து தான் பார்க்கலாமே என்று.

நிலை 2: (நிகழ்காலத்தை சிந்தித்தல்)

நீங்கள் தியானத்தில் அமர்வதற்கு முன் 1 மணி நேரத்தில் நடைபெற்ற செயல்கள் உங்கள் ஞாபகத்திற்கு வரும். இது உங்களை பாதித்த செயல், அல்லது அறை, உடை, உடமைகள் பற்றியதாக இருக்கலாம்.

இப்படியாக சிந்தணைகள் பின்னோக்கி போய் கொண்டிருக்கும். அதாவது முன் தினம், கடந்த வாரம் என்று.

நிலை 3: ( அவமானங்கள், அபிலாசைகள், ஏக்கங்கள், திட்டங்கள்)

இப்படியாக கடந்த காலத்தை பற்றிய எண்னங்களுடன் ’நீ’ங்கள் போராடிய பிறகு, உங்கள் மனம், நீங்கள் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத ஒரு சம்பவத்தில் வந்து நிற்கும். இது உங்கள் மன நிலையை பொருத்து இனிமையானதாகவோ, துன்பமான சம்பவமாகவோ இருக்கலாம்.

அந்த சம்பவத்தை  எவ்வாறு நீடிக்க செய்யலாம் (அ) மாற்றி அமைக்கலாம் என மனம் திட்டம் தீட்ட ஆரம்பிக்கும். இந்த வகையான மனிதர்களை உபயோகிக்கலாம்; இந்த அளவு பணம், காலம் செலவு செய்யலாம் என்பது போல.

நிலை 4: (சிந்தணை நின்று போதல்)

medi3

(இந்த நிலை எல்லோரும் ஒரே முயற்சியில் அடைய முடியும் என சொல்ல இயலாது)

இப்போது நீங்கள் சிந்திக்க ஏதுமில்லை என்று ஒரு கால கட்டம் வரும். நீங்கள் மிகுந்த சோர்வாக உணர்வீர்கள். தூக்கம் உங்களை தழுவும். வாழ்வில் என்றும் நீங்கள் காணாத அளவிற்கு சுகம் தருவதாக இருக்கும்.

 

சரி இவற்றை செய்வதால் என்ன பயன் ?

இது தான் உங்களுக்கான கேள்வி என கொள்ளலாம். இத்தியானத்தை 2 / 3 நாட்கள் தொடர்ந்து செய்தவர்கள் தாராளமாக தம் அனுபவத்தை  மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் ;-) இதில் நீங்கள் கவனிக்க வேண்டிய குறிப்பு இது தான். ”உங்களது மனம் சூப்பர் கணினியின் வேகத்திலிருந்து இமயமலையின் ஆழ்ந்த அமைதிக்கு செல்வது”

நண்பர் Jawarlal

“சிந்தனையைத் தொடர்ந்து கொண்டே இருங்கள், நாளா வட்டத்தில் மனம் நிச்சலனமாகி விடும் என்றுதான் எல்லாரும் சொல்கிறார்கள். மணிக் கணக்கானாலும் மனசு ஓயாதிருப்பதுதான் பல வருஷங்களாக என் பிரச்சினை!”

என குறிப்பிட்டு இருந்தார். இது ஒரு பொதுவான பிரச்சிணை தான்.

நான் குறிப்பிட்டு இருந்தது போல உங்களது சிந்தணைகளை தாளில் குறிப்பிடுவது மிக மிக முக்கியமான விடயம். உங்களுக்கு தோன்றும் சிந்தணைகள் ஒரே விடயத்தை பற்றியதெனில் அதை சரி செய்ய / தீர்க்க வேண்டியது அவசியம் என தெரிகிறது.

உங்களை உணர 10 நிமிடங்கள் செலவளிக்க தயாரா ?

 

வால் பையனின் தியானம் பற்றிய கேள்விக்கான பதில். மூல இடுகை. http://shanthru.blogspot.com/2009/08/blog-post_11.html

கேள்வி :

//தியானம் என்பது இப்படி தான் செய்யனும் என்று சொல்வதை தான் ஏற்றுகொள்ள மாட்டேன் என்றேன்!
நான் செய்வதே தியானம் என்ற போதே தெரியவில்லையா!?//

பதில்:

தியானம் என்பது பற்றி விளக்கம் அளிக்க விரும்புகிறேன். தியானம் என்பது மன அறிவியல் ஆகும். இதை நம்மால் நிரூபிக்க முடியும். வால்பையனுக்கு நான் தியானத்தை நடைமுறையிலேயே உணர்த்த முடியும். உங்களை நீங்களே உணர 10 நிமிடங்கள் செலவளிக்க தயாரா ?

ஏனெனில் பிறவியிலுருந்தே கண்களை மூடி கொண்டு இருப்பவருக்கு முழு நிலவின் அருமையை விளக்குவது அவருக்கும், விளக்குபவருக்கும் துன்பம் தரும் செயல் அல்லவா?எளிமையான வழி: கண்களை திறவுங்கள். முழு நிலவு தாமாகவே தெரியும்.

அதுபோலவே தியானம் செய்யுங்கள். அந்நேரத்திற்கும், மற்ற நேரத்திற்குமான வித்தியாசம் தாமாகவே தெரியும்.

ramanar

இரமணர் சொல்கிறார். “ஒருவன் கடவுளை தேட வேண்டிய அவசியமே இல்லை. ‘நான்’ என்பது என்ன என்பது பற்றி அறிந்தாலே போதும். மற்ற ஆன்மீக / உண்மை தேடல்களுக்கான எல்லா பதில்களும் கிடைத்து விடும்”

நான் என்பது என்ன (உடலா / மனமா / உயிரா) ?

[பகுத்தறிவு வாதிகளுக்கு இப்போதே ஒரு கேள்வி உதயமாகி இருக்கும்? மனம், உயிர் என்பது பொய் என கீழ் கண்டவற்றை செய்யுங்கள் உங்களுக்கே உண்மை தெரியும்]

  1. ஒரு அலாரம் டைப் செட்டரில் 10 நிமிடங்கள் அமைப்பை ஏற்படுத்தவும்
  2. நீங்கள் ஒரு தனி அறையில் (அ) தனிமையில் தளர்வாக, வசதியாக (உடம்பை சிரமப்படுத்தாத அளவிற்கு) அமருங்கள் / படுத்து கொள்ளுங்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கும் அறை உங்களுடைய உடல், உடமைகள் பற்றி நீங்கள் பொருட்படுத்தாத அளவிற்கு இருக்க வேண்டும்.
  3. உங்கள் கண்களை மூடுங்கள்.
            இப்போது உங்கள் மனம் மிக மிக வேகமாக சூப்பர் கணினியை போல சிந்தணைகள் செய்யும்.
  4. இப்போது சில சிந்தணைகள் தோன்றும். அவற்றை பின் தொடருங்கள்.
  5. எந்த சிந்தணையையும் தடை செய்யாதீர்கள். (இதுவே மிக மிக முக்கியம்) எவ்வளவு தூய எண்ணங்களானுலும், தீய சிந்தணைகளானுலும் சரியே
  6. இவ்வாறு செய்யும் போது தூக்கம் வரும். தயவு செய்து தூங்க மட்டும் வேண்டாம் ;-)
  7. நடுவில் கண் விழிக்க நேர்ந்தால் கவலை பட வேண்டாம். இவ்வாறு எவ்வளவு நேரம் இருக்க முடிந்தது என்பதை  குறிப்பெடுத்து கொள்ளவும். மறுபடியும் முயற்சி செய்யவும்.
  8. கண்களை மூடிக்கொண்டு இருந்த போது  உங்களுக்கு தோன்றிய எண்ணங்களையும்,
    இத்தியானத்திற்கு பிறகு 15 நிமிடங்களுக்கு நீங்கள் செய்த செயல்களையும் வரிசை கிரமமாக ஒரு பேப்பரில் குறிப்பெடுத்து கொள்ளவும்.

இவ்வளவு தான் முதற் கட்ட தியானம். உங்களுக்கு தோன்றிய உணர்வுகளில் குறைந்த பட்சம் 3 படி நிலைகள் உள்ளன. அதை இத்தியானம் செய்பவர்களுக்கு தாமாகவே தெரியும்.

 

இம்முதற் கட்ட நிலையை செய்தவர்களுக்கு தாமாகவே பல சந்தேகங்கள் தீர்ந்து விடும்.    உங்களுக்கு தோன்றிய உணர்வுகளில் எவ்வித கேள்விகள் / சந்தேகம் இருந்தாலும் பகிர்ந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தாராளமாக தெரிய படுத்தலாம்.

வாழ்த்துக்கள்.

வலையுலக சாதிய பன்னாடைகள்

சாதி தேவை இல்லை என வலைப்பதிவில் எழுதும் போதே சாதியை வைத்தும் அதை ஒழிக்க போகிறேன் என்றும் வலையுலக கழிவறை கடையை திறந்து வியாபாரம் செய்யும் சில அறிவிஜீவிகளுக்கு சொறிந்து விட்டது போலாகும் என்பது தெரிந்தது தான். சகோ. பழமைபேசிக்கு நடந்த தனி மனித தாக்குதலுக்கு பிறகு தான்  நான் சாதி இல்லை எனும் பதிவுகளையே போட்டேன்.
ஊசியைச் சல்லடை சொல்கிறது, உன்னுடைய வாயில் ஒரு ஓட்டை! (பழமைபேசி)
சாதி இழிவு முறைமை தேவையா ?
இன்றைய சாதியம் மத அடிப்படையிலானதா? - 2

சாதி - த்தூ! (பால முருகன்)

சாதியும் தனிமனித தாக்குதலும்(பால முருகன்)


இந்த முற்போக்கு சைக்கோக்களுக்கு சாதியம் எல்லா தளத்திலும் இருந்து கொண்டே இருக்க வேண்டும். ஏனெனில் அப்போது தானே அதை ஒழிக்க இந்த பன்னாடைகளின் தேவை நமக்கு இருந்து கொண்டே இருக்கும். ஏதாவது ஒரு தளத்தில் இல்லையெனில் தாமாகவே உருவாக்கியும் விடுவர். ”முன்னதாக வந்து முன் வரிசையில் இருந்த குறிப்பிட்ட சாதியினரை எழ வைத்த முற்போக்கு பன்னாடை” எனும் பட்டம் கூட எதிர்காலத்தில் அவர்களுக்கு கிடைக்கலாம்!! (இந்த பிழைப்பிற்கு ?)
 
மனிதனை மனிதனாக பாருங்கள் என்று பார்க்க சொன்னால் சில பிறவிகளுக்கு ஏன் புரிய மாட்டேன் என்கிறது?  அடுத்தவன் சட்டையையும் ஜட்டியையும் கழட்டி அவன் என்ன மதம் என்ன சாதி என்று பார்க்கும் காட்டு மிராண்டி தனம் எப்போது ஒழியும் ? பிரிவினையின் இன்னோரு முகம் எனக்கு   நேற்று காட்டியது. “அவரவர் தளத்தில் என்ன வேண்டுமானாலும் எழுதலாம்” என திருவாய் மலர்ந்தருளிய பதிவர், அவருடைய ஞான திருஷ்டியின் மூலம் என்னுடைய சாதியை கண்டறிந்து உள்ளார்.
சாத்திதூ என்று முதலில் பின்னூட்டமிட்டு துப்பியவர் தன் ஜாதிக்காக வால்பிடிப்பவர் என்பதை அவர் வலைபதிவில் கண்டுகொள்ளலாம்.

என்னுடைய சாதி எது என உங்களுக்கு எப்படி தெரியும் அமலன்? என்னுடைய சாதியை/இனத்தை உங்களை போல என் பெயரில் கூட நான் வைத்து கொள்ளவில்லையே ? முற்போக்கு யோக்கிய சிகாமணிகளின் இலட்சணம் இப்படி தான் இருக்கும் :)

இவருக்கு இருக்கும் ஞான திருஷ்டியை முன்வைத்து இந்திய அரசாங்கம் சாதி சான்றிதழ் இல்லாமல் திரியும் கோடிக்கணக்கான குறவர் குறத்தியர் போன்ற நாடோடிகளுக்கு சாதி சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்கிறேன். தவறாக கூறுவதற்கு அரசாங்கம் டின் கட்டினால் நான் பொறுப்பல்ல ;) அவருடைய கணிப்பின் நம்பகத்தன்மையெல்லாம் எப்படி பட்டதாக இருக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம் :).
இன்றைய தினத்தில் நாம் சாதியம் வலிந்து திணிக்கபடுவதை எதிர்க்காவிட்டால் (எந்த இனவகை மக்களிடமும் சரி) வலைப்பதிவுலகம் சாதி நாற்றம் வீசும் இடமாக ஆகிவிடும் என்பதை அவரது பின்னூட்டம் நிரூபிக்கிறது.

இந்தியாவின் வளமையான எதிர்காலம்

[குறிப்பு: இவ்விடுகை ஒரு தொடர்பதிவு ஆகும்; முந்தைய இடுகைகள்

 

எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது!

  நாட்டின் இப்போதைய சூழல் (09/2009 வரை) எப்படி இருக்கும் என்று பார்த்தோம்.

  1. வரும் பொது தேர்தலில் எந்த கூட்டணிக்கும் இறுதி பெரும்பான்மை கிடைக்காமல் இந்தியாவில் அரசியல் குழப்ப நிலை ஏற்படும்.
  2. உலக பொருளாதார குழப்ப சுமை இறுதியாக பட்ஜெட் வடிவில் ஏழை மக்களுக்கு வந்து சேரும்.
  3. மத தலைவர்களுக்கும், மத ஒற்றுமைக்கும் அச்சுருத்தல் ஏற்படும்.

ஆனால் அதிர்ஷ்ட வசமாக இத்தகைய நிலை தற்காலிகமானது தான்.

மாறுதலுக்கான காலகட்டங்கள் (09/2009 முதல் 09/2015 வரை)

  செப்டம்பரில் சூரிய திசை ஆரம்பிக்க போவதால் இது முதல் கடினமான காலம் அகன்று படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும். 2010 அண்டு முதல் கடுமையான ஆட்சியாளர் ஒருவர் ஆட்சிக்கு வருவார்.

  ஆனால் சுக்கிர திசை முடிய போவதால், கடந்த காலங்களில் இருந்த அளவிற்கு பொருளாதர வசதிகளும், கட்டுபாடற்ற சுதந்திரமும் இருக்காது.  அரசியல் வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், ஊடங்களுக்கும் மற்றும் மக்களுக்கும் உள்ள கட்டுபாடற்ற சுதந்திரத்தின் விளைவுகளை தான் அனுபவித்து கொண்டு இருக்கிறோமே ?! எனவே இதுவும் நல்லது தான்.

கவனிக்க பட வேண்டிய தருணம்: சூரிய திசை ராகு புத்தி (10/2010 முதல் 09/2011 வரை)

    ஒவ்வொரு ராகு திசை நடந்த போதும் இந்தியா சகிக்க முடியாத பல்வேறு கொடுமைகளுக்கும் போர்களுக்கும் உட்படுத்த பட்டதை எப்போதும் பார்த்து உள்ளோம். இக்காலகட்டத்திலும் இந்தியா மீது ஒரு நாடு படையெடுக்கும். ஆனால் எப்போதும் போல இறுதி வெற்றி இந்தியாவிற்கு தான் :-)).

இந்தியாவின் கடந்த கால வெற்றி பாதைகள்

  1. சனி திசை 08/1965 வரைnehru
    1. 1950 அனைத்து மக்களுக்குமான சம உரிமை குடியரசு: புதன் புத்தி
    2. 1956ல் மொழி வாரி மாகாணங்கள்: சுக்ர புத்தி
    3. 1964வரை நேருவின் சோஷலிஸ பொருளதார நிர்வாகம்
  2. புதன் திசை: திருமதி. இந்திரா காந்திindira
    1. பசுமை புரட்சி- உணவு உற்பத்தியில் தன்னிறைவு: (1965 புதன் புத்தி)
    2. பங்களாதேஷ் போர் வெற்றி: (16 December 1971 சூரிய புத்தி)
    3. 20 ஆண்டு கால ரஷ்ய கூட்டணி உடன்படிக்கை: (1974 செவ்வாய் புத்தி),
    4. இந்தியாவின் முதல் அணு குண்டு தயாரிப்பு 1974
  3. சுக்ர திசை vajpayee(குரு புத்தி, சனி புத்தி)
    1. திரு.வாஜ்பாய் அரசு(1998-2004)
      1. தகவல் தொழில் நுட்ப பலம்,
      2. தொலைதொடர்பு துறை வளர்ச்சி,
      3. அணுகுண்டு சோதணை வெற்றி May 11, 13, 1998
      4. கார்கில் போர் வெற்றி  June 1999
      5. உள் நாட்டு கட்டமைப்பு தங்க நாற்கர திட்டம்
    2. வானவியல் ஆராய்ச்சிkalam1
      1. செயற்கை கோள்கள்
      2. சந்திராயன் திட்டம்

சோதிட விதி: ஒரு ஜாதகருக்கு திரேகோனாதிபதிகள்(1,5,9) தங்களது திசையில் நல்ல பலன்கள் தருவார்கள் என்பது மிக சரியாக பொருந்துகிறது  அல்லவா? (இந்தியாவிற்கு சுக்ரன் -1, புதன் -5, சனி-9 அதிபதிகள்)

பொற்காலம்

   09/2015 முதல் 04/2022 வரை சந்திர திசை நடைபெறும் போது பொற்காலமாக திகழும். இது வரை நடைபெற்ற வளர்ச்சிகளை மிஞ்சும் வகையில் இக்காலகட்டத்திலிருந்து இந்தியாவிற்கு அருமையான காலம் துவங்கும். இந்தியா எல்லா துறைகளிலும் வேகமான வளர்ச்சி பெறும். 2020லிருந்து உலக வல்லரசுகளில் ஒன்றாக திகழும்.

இத்தொடர் இடுகைகள் உங்களுக்கு கிரகங்கள் எவ்வாறு ஒரு நாட்டின் நிலமையை கூட எவ்வாறு எடுத்துரைக்கும் என விளக்கி இருக்கும் என நம்புகிறேன். சோதிடம் பற்றி மேலும் பல விளக்கங்களுக்கு SP.VR. SUBBIAH போன்ற சோதிட அறிஞர்களின் பதிவுகளை படிப்பதும், அணுகுவதும் நலம்.

வாழ்க பாரதம்!

முடிவுற்றது.

கடமையை செய் பலனை எதிர்பாராதே என்பது சரியா ?

  krishna1 நண்பர் இளவரசி ”கடமையை செய் பலனை எதிர்பாராதே” என்ற கீதையின் முக்கிய பகுதிக்கு ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பி இருந்தார். இதே கேள்வியை பலரும் கேட்டு கொண்டுள்ளனர். இப்பதிலை இவ்வனைவருக்கும் தரக்கூடிய வாய்ப்பாக கருதுகிறேன்.

  “ஒருவன் புலுக்கமாக இருக்கிறது என்று விசிறி வீசிக்கொண்டிருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம், அவன் விசிறி வீசுவது என்பது கடமை காற்று வருவது அதனுடைய பலன்,ஆகவே பலனை எதிர்பார்த்துதான் ஒருவன் தன் கடமையை செய்கிறான்

  ”கடமையை செய் பலனை எதிர்பாராதே” என்ற பதம் பலரால் தவறாக புரிந்து கொள்ள பட்டுள்ளது. பகவான்  கடமை என்பதை இது போன்ற சிறு விடயங்களுக்கு சொல்லவில்லை. இங்கு கடமை என்பதை (essential actions) தான் குறிப்பிடுகிறார், சிலர் நினைப்பது போல் வேலையை(basic tasks) அல்ல.  அதேபோல பலன் என்பது தன் சொந்த ஆதாயங்களை, புலன் நிகர்ச்சியை(self interest) தான் குறிப்பிடுகிறார்; விளைவு(result) என்பதை குறிக்கவில்லை.

  ஒருவன் தன் அடிப்படை கடமையை செய்வதற்கு கூட அதன் மூலம் தனக்கு ஒரு இன்பம், சுகம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறானது என்று குறிப்பிடுகிறார். ஒரு சிறு உதாரணமாக சிறு குழந்தைகளை பெற்றோர் காப்பாற்றுவதும், வயதான பெற்றோரை குழந்தைகள் காப்பாற்றுவதும் என்பதும் கடமை அதில் ஒரு பலனை எதிர்பார்ப்பது தவறானது அல்லவா?

  இரண்டாவது பலனை எதிர்பார்க்காதே என்ற சொல்லாடலுக்கு பலன் கிடைக்காது என்றோ, செய்வதற்கு முன் முறைபடுத்தாதே (plan) என்றோ பொருள் அல்ல. இந்த செயலை செய்வதனால் எனக்கு இந்த பலன் தான் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தான் தவறானது என்று குறிப்பிடுகிறார்.

  திருமணம் என்பதை உடலின்பத்திற்காக என்ற நோக்கத்திற்காக மட்டும் ஒருவன்/ஒருத்தி அக்கடமையை செய்தால் அவன் மிகுந்த ஏமாற்றம் அடைவான்/ள் என்பது சந்தேகமில்லை. எதிர்பாராத பல பக்க விளைவுகளையும் (குடும்பம், குழந்தைகள்) சந்திக்க வேண்டியிருக்கும் (இது நகைச்சுவைக்காக :-)) )

netaji1 அதே போல தான் பலருக்கும் பல உதவிகள் செய்திருந்தாலும் ஒருவரும் தன்னை கண்டு கொள்ளவில்லை என்று கவலை படுபவர்களை அதிகம் பார்த்திருப்போம். பிறருக்கு உதவி செய்வதில் கூட பலனை எதிர்பாராதீர்கள் என்று பகவான் கற்பிக்கிறார். பாரதியார், வ.உ.சி., சிவா, பகத்சிங், நேதாஜி போன்றோர்களை நினைத்து பாருங்கள்: இவர்களே உதாரண புருஷர்கள். இவர்கள் உயிரோடு இருக்கும் வரை தங்களுக்கு  ஏதேனும் சுய பலனை (ஆதாயங்களை) எதிர்பார்த்திருப்பார்களா ?

ஒருவன் அடிமையாக இருப்பதற்கு மறுப்பது என்பது கூட ஒரு கடமை தான் (தனக்கு தானே செய்து கொள்வது). எனவே தான் தன் சொந்த புலன் ஆதாயங்களை கருதாது மேற்கூறிய தலைவர்கள் பாடுபட்டனர்.

இந்தியாவின் ஜாதகமும், நிகழ்கால சூழ்நிலைகளும்: சோதிட ஆதாரங்கள்-2

 

[குறிப்பு: இவ்விடுகை ஒரு தொடர்பதிவு ஆகும், முதல் இடுகைக்கு இங்கு செல்லவும்]

குரு பெயர்ச்சி என்பது என்ன?

விஞ்ஞான ரீதியாக குரு (Jupiter) கிரகம் 6.12.08 அன்று பகல் 11.15 மணிக்கு, பூமிக்கு 270 டிகிரியிலுருந்து 271 டிகிரிக்கு மாறியது. தமிழில் பூமியின் 230 முதல் 270 பாகைக்கு வில்-தனுசு என்றும், 270 முதல் 300 பாகைக்கு சுறா-மகரம் என்றும் பெயர். சோதிடத்தில் இதையே சோதிடத்தில் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு  குருபகவான் பெயர்ச்சியடைந்தார் என்று கூறுவர். 

 

குரு பெயர்ச்சியின் விளைவுகள் எப்படி இருக்கும்?

குரு பெயர்ச்சியின் ஒரு மாதத்திற்கு முன்பே அதற்கான பலன்கள் பூமிக்கு கிடைத்து விடும் என்பது சோதிட விதியானதால் நாம் 6.11.2008 நாளிலிருந்து கிடைக்கும் பலன்களை கணக்கில் கொள்ள வேண்டும். சமீபத்திய குரு பெயர்ச்சி உலகிற்கு மிக முக்கியமான கிரகமான குரு சாதகமாக இல்லாத சூழ்நிலையை இப்போது உலகிற்கு  ஏற்பட்டுள்ள மிகப்பெரிய நெருக்கடிகள் தெளிவாக காட்டுகிறது. 

  1. உலக பொருளாதார நெருக்கடியின் உச்ச நிலை (ஆயில் விலை, ஆட்டோ நிறுவனங்கள் சரிவு-நவம்பர் 2008)
  2. காசா பகுதியில் தீவிரமடைந்துள்ள போர் (டிசம்பர் 2008)
  3. இலங்கையில் தீவிரமடைந்துள்ள போர் (நவம்பர் 2008)

இந்தியாவில்,

  1. பாகிஸ்தான் பயஙகரவாதிகளினால் மத சம நிலைக்கு எற்பட்டுள்ள அச்சுருத்தல் (நவம்பர் 2008)
  2. சத்யம் நிறுவனத்தால் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள தலைகுனிவு (ஜனவரி 2009)

 

குரு உலகிற்கு எவ்வெவற்றை அளிக்கிறார்?

இப்போது குரு நீச நிலையில் உள்ளார். நீச நிலை என்பது பலம் குறைந்துள்ளதையும், எதிர் மறையான பலன்களையும் குறிக்கிறது. எனவே உலகில் கீழ்கண்ட விடயங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

”தங்கம், பைனான்ஸ், அரசியல், மதம், மதம் சார்ந்த நிறுவனங்கள், தேவஸ்தானங்கள், வடகிழக்குத் திசை, நீதிமன்றம், கரூவூலம், புஷ்பராகம், மத தலைவர்கள், சான்றோர், புராணம், வேதம், சேவை நிறுவனங்கள், ஆட்சி மொழி, அரசு தரும் வீட்டு வசதி, காசாளர், கண்டக்டர், முன்யோசனையுடன் திட்டமிட்டு செயல்படுதல்.”

இந்தியா பிறந்த ஜாதகத்தின் படியும் இப்போது சாதகமான நிலையில்லை. சுக்கிர திசையில் கேது புத்தி: 06/2008 முதல் 08/2009 வரை, ஏழரையாண்டு சனி வேறு 09/2009 வரை நடக்கிறது.

ஏழரை சனி -3: 07/2002 முதல் 09/2009 முடிய

  1. July 11, 2006 மும்பை குண்டு வெடிப்பு
  2. 2007ல் 6 பயங்கரவாத தாக்குதல்கள்
  3. 2008ல் 10 பயங்கரவாத தாக்குதல்கள்
  4. திறமையற்ற அரசு நிர்வாகம்

இவ்வருடத்தில் பின்வருபவை ஏற்பட வாய்ப்பு உள்ளதை எடுத்து காட்டுகிறது.

  1. நாட்டில் அரசியல் நிலையற்ற தன்மையும் குழப்பங்களும் ஏற்படும். வரும் தேர்தலில் மக்கள் கட்சி பாகுபாடின்றி  தூய தலைவர்களை தேர்ந்தெடுக்க முயற்சி செய்ய வேண்டும்.
  2. நாட்டின் நிதி நிலைமை- நிதி நிறுவனங்கள், நிதி சந்தைகள் பாதிக்கப்படும்.  மக்கள் தக்களது சேமிப்பை அதிகப்படுத்த வேண்டும். புதிய கடன்களை அறவே தவிர்க்க வேண்டும்.
  3. பட்ஜெட் மக்களை வாட்டி வதைக்கும்- ஏழை மக்கள் மேலும் கடும் வரிச்சுமையினால் பாதிக்கப்படுவர். மக்கள் ஆதிக்க மனநிலையை விட்டு பொருளாதார சம நிலைக்கு பாடுபட வேண்டும்.
  4. மததலைவர்கள் உயிருக்கும்  மத நிறுவனங்களுக்கும் ஊறு ஏற்படும். மத நல்லினக்கம் பாதிக்கப்படும். மக்கள் ஒற்றுமையுடன் இருந்து பிளவு படுத்துபவர்களை ஒதுக்கி தள்ள வேண்டும்.

ஆனால் இத்தகைய நிலை தற்காலிகமானது தான். 29.08.2009 முதல் கடினமான காலம் அகன்று படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும்.

தொடரும்...

[அடுத்த பாகத்தில்: இந்தியாவின் வளமையான எதிர்காலம்]

 

இந்தியாவின் ஜாதகமும், வரலாறும்: சோதிட ஆதாரங்கள்

சோதிடத்தை பற்றி அன்மைய காலங்களில் பெரும் விவாதக்கள் நடந்து கொண்டுள்ளது நாம் எல்லோரும் அறிந்ததே. இவ்விவாதங்களில் ஒரு நண்பர் சோதிடத்தின் பயன் என்ன என்பதை அறிவியல் பூர்ணமாக நடைமுறையில் உணர்த்த முடியுமா என கேள்வி எழுப்பி இருந்தார். இக்கேள்வியிலும் நியாயம் உள்ளது. சோதிடத்தின் அடிப்படைகளை அறிந்து கொண்டுள்ள ஒருவன் என்பதால் என் சிற்றறிவிற்கு எட்டியவரை விளக்க முயல்கிறேன். 

சோதிடத்தின் பயன் என்ன?

சோதிடம் என்பது உங்களது வாழ்க்கையின் அத்தனை வருங்கால நிகழ்ச்சிகளையும் படம் பார்ப்பது போன்று காட்டாது. இது ஒரு கை விளக்கின் உதவியின் வழியே தொலைதூர பாதையை பார்ப்பது போன்றது தான். இது கண் பார்வை அற்றவருக்கு கைத்தடி கொடுக்கும் பலனை கண்டிப்பாக கொடுக்கிறது.

சோதிடம் பார்ப்பது பற்றிய அடிப்படை புரிந்துணர்வு இல்லாததே பெரும்பாலான பிரச்சினைகளுக்கு காரணமென நினைக்கிறேன். வளர்ப்பதற்கு ஆடு வாங்கலாமா? கோழி வாங்கலாமா? என்பதை பார்ப்பவர்களை கூட அறிந்திருக்கிறேன். மனிதர்கள் இயல்பாகவே எதிர்காலத்தின் இயல்புகளை அறிய இயலாதவர்களாக உள்ளனர். வருங்காலத்தை கணிக்க இயலாத சாதரண மானுடர்களுக்கு ஆறுதல் தந்து மனத்துயர் துடைக்கும் கருவியாக தான் சோதிடம் உள்ளது.

சோதிடம் என்பது வானியலையும், கணிதத்தையும் அடிப்படையாக கொண்டது. ஒரு செயலை அறிவியல் பூர்ணமாக நிரூபிக்க அக்கணிதத்தை யார் செய்தாலும், எந்த சூழ்நிலையில் செய்தாலும் ஒரே பலன்களை தான் தர வேண்டும்  என்பது அடிப்படை விதி. கீழ்கண்ட கணிதங்களை வாக்கிய பஞ்சாங்கத்தின் படி செய்து பாருங்கள். இதில் குறிப்பிட்ட கிரக அமைப்புகள், கால நேரங்கள், தசாபுத்திகள் துல்லியமானதாக இருக்கும். (It's consistent) இவற்றிலிருந்து சோதிடத்தின் பலனை நடைமுறையில் நாம் உணரலாம்.

இந்தியாவின் நிலை என்ன ?

 india chart

பிறந்த இடம்: டெல்லி
ஜென்ம நட்சத்திரம்: பூசம்
லக்கினம் ரிஷபம்
பிறந்த மகா திசை இருப்பு: சனி மகா திசையில் - 18 வருடங்கள்- 0 மாதங்கள்-14 நாட்கள்: 29.08.1965 வரை

புதன் திசை 17-00-00: 29.08.1982 வரை
கேது திசை 7-00-00: 29.08.1989 வரை

சுக்கிர திசை 20-00-00: 29.08.2009 வரை

இப்போது சுக்கிர திசையில் கேது புத்தி: 06/2008 - 08/2009

 

சுதந்தரமடைந்த போது நிலை என்ன?

இதில் லக்னத்தில் (Asc) ராகு(Ra) இருப்பதையும், 6ல் குரு(Ju) இருப்பதையும், 7ல் கேது(Ke) இருப்பதையும் குறித்து கொள்ளுங்கள். இந்தியா சுதந்திரமடைந்த போது முழு பிரசவமாக இல்லாமல்,  பல கூறுகளாகவும் (இந்தியா, பாகிஸ்தான் (,பங்களாதேஷ்), இலங்கை, நேபாளம், பூடான், பர்மா) அவற்றிற்கிடையே பிரச்சிணைகளையும் பிரித்தாணியர் விட்டு சென்றதையும், நாட்டின் பஞ்ச நிலையையும் தெளிவாக காட்டுகின்றன.

ராகு கிரகமும், சனி கிரகமும் நம் நாட்டின் சூழ்நிலைகளை எந்த  அளவிற்கு எடுத்து காட்டியுள்ளன என்று பார்ப்போம்.

 

ஏழரை சனி -1: 1947 முதல் 09/1950 வரை

இந்தியா பிறக்கும் போதே அதற்கு ஏழரை சனி பிடித்திருந்தது கூர்ந்து நோக்க தக்கது.

  1. பிரித்தாணியரின் இன, மத  பிரித்தாளும் சதியால் கோடிக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.
  2. பாகிஸ்தானுடன் காஷ்மீர் போரையும் தந்தது. மூன்றில் ஒரு பங்கு நிலம் பாகிஸ்தான் வசம் போனது.

சனி திசை ராகு புத்தி: 04/1960 முதல் 02/1963 வரை

1962 சீன யுத்தம் தோல்வி

அஷ்டம சனி -1: 01/1964 முதல் 12/1966 முடிய

  1. May 27, 1964 பிரதமர் நேரு இறப்பு
  2. 1965 இரண்டாவது காஷ்மீர் போர் இந்தியாவிற்கு பிரயோசனமின்றியும் எவ்வித முடிவுமின்றியும் முடிந்தது.

ஏழரை சனி -2: 06/1973 முதல் 06/1980 முடிய

  1. புதன் திசை ராகு புத்தி: 02/1975 முதல் 09/1977 வரை: 1975-1977 எமர்ஜென்சி
  2. 1977 ஜனதா பார்ட்டி அரசு, இந்திரா கைது, அரசியல் நிரந்திரமின்மை, அரசு கவிழ்வு

கேது திசை சனி புத்தி: 07/1987 முதல் 09/1988 வரை

10/1987-1990: இலங்கை யுத்த தோல்வி

அஷ்டம சனி -2: 03/1993 முதல் 02/1996 முடிய

  1. 12 March 1993 - Series of 13 bombs go off killing 257 (சுதந்திர இந்தியாவில் பயங்கரவாதம் ஆரம்பம் )
  2. 1995ல் அப்போதைய பஞ்சாப் முதல்வர் Mr.Beant Singh பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்.

சுக்ர திசை ராகு புத்தி: 10/1996 to 10/1999

  1. February 14, 1998 கோயம்பத்தூர் குண்டு வெடிப்பு (தென்னிந்தியாவில் பயங்கரவாதம் ஆரம்பம்)
  2. June 1999  கார்கில் போர்: இந்திய பகுதிகள் பாகிஸ்தானால் ஆக்கிரமிப்பு

தொடரும்...

[அடுத்த பாகம்: இந்தியாவும், நிகழ்கால சூழ்நிலைகளும்]

இப்பதிவு பற்றி...

வணக்கம் நண்பர்களே!

DSC00773 4என் பெயர் சபரிநாதன். நான் ஒரு கணிப்பொறி வல்லுனர்.

இயல்பாகவே தமிழர்களுக்கு இருக்கும் கலாசார பெருமையின் பால், இப்பதிவு எழுத நேர்ந்தது. நம்முடைய தொன்மையான நாகரீகம் பல அறிவியல் மற்றும் நுண்கலைகளை பெற்று இருந்தது.

    1. இரசவாதம் (Chemistry)
    2. மனோதத்துவம் (Psychology)
    3. சித்த மருத்துவம் (Indian medicine)
    4. சோதிடம் (Indian astronomy)
    5. சிற்பகலை
    6. ஓவியகலை

இவை பல நூற்றாண்டுகள் பழைமையானவை. இக்காலத்திற்கு ஏற்றவாறு புது கருத்துக்கள்/மாற்றங்கள் செய்ய பட வேண்டியவை என்பவற்றில் மாற்று கருத்து இல்லை.

ஆனால் இன்று இவற்றில் பெரும்பான்மை பலவித காரணங்களால் அழியக்கூடிய நிலையில் உள்ளன. இவற்றின் சிறப்புக்களை எனக்கு தெரிந்த வகையில் எடுத்துரைப்பதே இப்பதிவின் நோக்கம் ஆகும்.

இப்பதிவு குறித்து கருத்துக்களையும், விமர்சனங்களையும் தவறாமல் எழுதுங்கள்.

நன்றி!