இந்திய வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்திய வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

விக்கி லீக்ஸில் இந்தியா தொடர்பான புது தகவல்கள்

விக்கி லீக்ஸ் “தி க்ளோபல் இண்டெலிஜென்ஸ்” எனும் தனியார் உலக புலனாய்வு அமைப்பின் ஈமெயில்களை 2012லேயே வெளியிட்டிருக்கிறது. இவ்வமைப்பு யுஸ் மட்டுமல்லாது பல பன்னாட்டு நிறுவன அமைப்புகளுக்கும் புலனாய்வு செய்து வந்துள்ளது.

முக்கியமாக பாகிஸ்தான், இந்தியா இடையிலான பல இராணுவ, பயங்கரவாத இரகசியங்களும் வெளிவந்துள்ளன. இது குறித்து எந்த பத்திரிக்கையும் செய்தி வெளியிடாதது ஆச்சரியமே ! இவற்றை கீழ்கண்ட இணைய தளத்தில் பார்வையிடலாம்.http://search.wikileaks.org/gifiles/?viewemailid=1688492
//On Monday February 27th, 2012, WikiLeaks began publishing The Global Intelligence Files, over five million e-mails from the Texas headquartered "global intelligence" company Stratfor. The e-mails date between July 2004 and late December 2011. //

//They reveal the inner workings of a company that fronts as an intelligence publisher, but provides confidential intelligence services to large corporations, such as Bhopal's Dow Chemical Co., Lockheed Martin, Northrop Grumman, Raytheon and government agencies, including the US Department of Homeland Security, the US Marines and the US Defence Intelligence Agency. The emails show Stratfor's web of informers, pay-off structure, payment laundering techniques and psychological methods.//


போபால் போராட்டகாரர்களை வேவு பார்த்ததற்கான செய்தி
//Stratfor, the US intelligence analysis firm, was hired by Dow Chemical to spy on activists protesting against the 1984 Bhopal gas leak, revealed WikiLeaks on Monday.//


குறிப்பாக பாகிஸ்தானின் அணுகுண்டுகள் பற்றிய விவாதம் முக்கியமானதாக கருத படுகிறது.
On 5/17/2011 11:50 AM, Kamran Bokhari wrote: They are obsessed with the idea that U.S. is out to de-nuclearizethem. So this will be the most heavily guarded secret in thecountry.

On 5/17/2011 11:33 AM, Fred Burton wrote: Yes But, we don't know know where the nukes are located on any givenday. The Pakis have not disclosed that data since 9-12-01. 

On 5/17/2011 10:31 AM, Chris Farnham wrote: Do we know how many they have? Without that knowledge asking where they are is useless. From: "Fred Burton" To: "Secure List" Sent: Wednesday, 18 May, 2011 1:15:25 AMSubject: Paki Nukes

Unless the Pakis disclose the locations of their nukes, wewill keepthem in a headlock on aid. We have no idea where they are.

பின்லேடனின் உடல் கடலுக்குள் எறியப்படவில்லை எனும் விவாதம்

//An email involving a Stratfor analyst stated that it had been determined that up to 12 officials in Pakistan's Inter-Services Intelligence (ISI) agency knew of Osama bin-Laden's safe house.[10] Another email indicated that Stratfor Vice President Fred Burton had knowledge of the killing of bin Laden, and that the body was not dumped at sea, but rather sent to Dover Air Force Base in the United States.[11] This further fueled doubts about the US Government's account of the killings.[12]//

இந்திய நகரங்களில் நிலங்களின் விலைகள் கருப்பு பணம் கொண்டு ஊதி பெருக்க பட்டுள்ளதாக வர்ணித்தல்
//The real estate sector is extremely overblown. Prices rose more than 400percent in some cases, but half of this is black money. It will take a fewyears at least for the real estate market to really see an effect becauseright now it cant be leveraged. Only when growth really starts to slow andppl are unable to cover these investments will we see the real estatemarket get hit (this is very true. property prices have skyrocketed inIndia and most of this is from black money)//

இந்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டியை தகவல் மூலமாக வர்ணித்தல்
//I need some time to talk to my contacts -- that would include JS (PAI) and JS (Americas), JS (Europe) in the MEA. I will also be tapping my contacts in Indian int agencies for this. One crucial contact I would be exploring is my good friend for 12 years, Jaipal Reddy, union minister for petroleum and natural gas. //

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ க்கு எதிரான புலானாய்வு போர் என வர்ணித்தல் 
//This Mail is from september 2011 and it is about the CIA and the ISI (Pakistan military Intelligence Agency = Inter-Services Intelligence) in Pakistan and it is about the opressing power of the USA in that country. Stratfor Member comments on this Insight View are like: “I find it more interesting that the Agency has declared an internal intelligence war on ISI” and more on that below on the EMail: “Nobody is trusted.” furthermore they say the “CIA” is using “Moscow Rules.” against Pakistan and the ISI.//

//There was a conversation that Islamabad facilitated in the UAE betweenDC and the Haqqanis but then these guys turned around and engaged in aseries of attacks. But the Pakistanis aren’t willing to take actionagainst them. Spoke with Mullen who told me he has been lied to by hisPak counterparts.

On the Pakistani side, the problem is that they deeply mistrust theAmericans and suspect that the U.S. is going behind its back andcutting its own deals with the insurgents. Look at how Tayyeb Agha ismissing after the revelations that the U.S. was dealing with him toreach Mullah Omar. I am getting the sense that the United States hasdecided to coerce Pakistan into compliance.//

இந்திய வல்லரசு கனவு கேள்விகுறி என விமர்சனம்
//If India cannot effectively shape the course of events in its own "immediate neighborhood," how can it credibly lay claim to its great power aspirations at home or abroad?//

பனிப்போருக்கு பின்னான இந்திய இராஜாங்க உறவு மேலாண்மை குறித்த பாராட்டு
//'Neat Balancing Act' Between Russia, US//The India-US defence relationship has progressed slowly in view of theweight of the past marred by sanctions, technology denials, targeting ofIndia's strategic programmes, arming of Pakistan etc.//

இந்திய முஸ்லிம் சகோதரர்கள் கல்வியில் பின் தங்கி இருப்பதற்கு காந்தி காரணமா ?


இந்திய முஸ்லிம்கள் கல்வியை புறக்கணித்ததற்கு/பின் தங்கியதற்கு, சுதந்திர போராட்டத்தின் போது  காந்தியின் பேச்சை கேட்டதனால் தான் என்று சமீபத்தில் புதிய தலைமுறை தொலைகாட்சியில் பொய் பேசிய மததலைவருக்கு இக்கட்டுரை சமர்ப்பணம். 


பாகிஸ்தானிய பத்திரிக்கையில் வெளியானது இந்த கட்டுரை. இதை எழுதியவர் பாகிஸ்தானிய யுனிவர்சிட்டியில் இயற்பியல் பேராசிரியராக பணியாற்றுகிறார். //The writer retired as professor of physics from Quaid-e-Azam University, Islamabad//

அக்பருக்கு பிறகு வந்த கால கட்டத்தில்,  200 வருடத்திற்கு முன்பே, அறிவியல்/பகுத்தறிவிற்கு எதிராக முக்கிய  மத தலைவர்களால்விதிக்கப்பட்ட பத்வாக்களால் எவ்வாறு கணிதம், அறிவியல் பாடங்கள் புறக்கணிக்க பட்டன, மத போதணைகள் மட்டும் கற்பிக்க பட்டன என்று விளக்குகிறார்.

பாகிஸ்தானிய பிரிவினையின் பிதாமகர்களான (சையித், இக்பால் எனும் இருவரையும் ஒப்புவமை செய்து பிற்போக்கான இக்பால் என்பவர் எவ்வாறு முன்னிலை படுத்த படுகிறார், அதனால் எவ்வாறு முஸ்லிம்கள் கல்வியினமையால் அவதி படுகின்றனர் என்று விவரிக்கிறார்.



இதை வெளியிடுவதற்கு காரணம் பெரும்பாண்மை இந்திய முஸ்லிம் சகோதரர்கள் தங்களின் பிற்போக்கிற்கு உண்மையான காரணமான மத வெறியர்களை அடையாளம் கண்டு புறக்கணித்து அறிவியல் படித்து அறிவு பூர்ணமாக சிந்திக்க வேண்டும் எனும் ஆவலே.



//It was a difficult enterprise to take on. The period after the end of Emperor Akbar’s reign had been one of unbroken anti-science and anti-rationalist conservatism. Some 200 years before Sir Syed, Sheikh Ahmed Sirhindi and other influential religious figures had issued fatwas against mathematics and the secular sciences, and demanded that the education of Muslims be limited to religious books. Initially Sir Syed was also inclined to this point of view but, following his gradual transformation during the 1850s, he rejected this view and challenged his contemporaries.


In Tahzib-ul-Akhlaq, he writes: “Yes, if the Mussulman be a true warrior and thinks his religion correct, then let him come fearlessly to the battleground and do unto Western knowledge and modern research what his forefathers did to Greek philosophy. Only then shall our religious books be of any real use. Mere parroting and praising ourselves will not do.” (“Apnay moon mian mithoo kahney say koee faida nahin”)



In his mind, the way forward was clear: Indian Muslims must learn the English language, practice the scientific method, accept that physical phenomena are explainable by physics only, and support British imperial rule against the rule of Mughals (who had by then sunk into decadence and depravity). This last piece of advice made him a target of bitter ridicule by secular nationalists such as Jamaluddin Afghani.//


//In the battle for Pakistan’s soul, Sir Syed’s rational approach ultimately lost out and the Allama’s call on emotive reasoning won. Iqbal said what people wanted to hear — and his genius lay in crafting it with beautifully chosen words. Unfortunately, his prescriptions for reconstructing society cannot help us in digging ourselves out of a hole.//

சாதி இழிவு முறைமை தேவையா ?

வெளிப்படையான விவாதத்திற்கு தயார். சாதி உண்டு என்பவர்களிடமும் சரி. வர்ணம் தவறு என்பவர்களிடமும் சரி.
இன்றைய தினங்களில் வலைப்பதிவுகளில் வெளிப்படும் சாதி ரீதியான கருத்துக்கள் நாம் இன்னும் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருப்பது போன்ற வருத்தத்தை ஏற்படுத்துகின்றன. இப்போது சாதி அழிக்கபட வேண்டும் என் நினைப்போரும் பார்பனியம் என்று எழுதுவதும் நான் ஒரு பார்ப்பனர் என்று தங்களை கூறி கொள்வோரும் பயத்தையே ஏற்படுத்துகின்றனர். பிரிவுகள் எல்ல மதத்திலும் உள்ளன. இஸ்லாம், கிறிஸ்தவம், பௌத்தம் உட்பட. இவர்களுக்குள்ளும் ஒரு பிரிவினர் மற்ற பிரிவினரை ஏற்காத மன நிலையும் உள்ளது. சில சமயங்கள் வன்முறையும் நடக்கின்றன.
ஆனால் இந்தியர்களிடம் உள்ள சாதி எனும் விசத்தை கழுவினால், நம் நாட்டில் 70% மக்கள் (70 கோடி மக்கள்) எழுச்சி பெறுவார்கள். சரி மத ரீதியான விளக்கம் என்பதை பகவத் கீதையில் பார்ப்போம். [கவனிக்க இது கீதையை பற்றி பல ஞானிகள் முன்னமே எழுதிய கருத்துக்களின் அடிப்படையில்  என் தனிப்பட்ட புரிதல் மற்றும் செயல்முறை ஆகும்]

கீதை ”நான்கு வருணம் என் ஆக்கம். இயல்பு செயல் ஆகியவற்றின் அடிப்படையில் பகுக்கப்பட்டது” [ சதுர் வர்ணம் மயா சிருஷ்டம் குணகர்ம விபாகஸ ] என்று வகுத்துரைக்கிறது.

  • சத்வ குணம் [செம்மைத்தன்மை] கொண்டவர்கள் பிராமணர்கள் என்றும்

  • ராஜஸ குணம் [ செயலூக்கம்] கொண்டவர்கள் ஷத்ரியர்கள் என்றும்

  • தாமஸகுணம் [ ஒடுங்கும்தன்மை] கொண்டவர்கள் சூத்திரர்கள் என்றும்

  • ராஜஸ தாமஸ குணங்களின் கலவை வைசியர்கள் என்றெல்லாம் இந்நூல்களில் நாம் காண்கிறோம்.
கீதை சொல்வது இதை தான்:

  1. எவன் உண்மையை சத்தியத்தை, புதிய கண்டுபிடிப்புகளை மக்களுக்கு அறிவிக்கிறானோ அவனே பிராமணன்.

  2. எவன் மக்களை காக்க இராணுவ வீரனாகவோ, காவல் துறையிலோ, அரசிலோ வாழ்க்கையை அர்பணிக்கிறாணோ அவனே சத்ரியன்.

  3. எவன் எல்லா பொருள்களும் எல்லா மக்களுக்கும் கிடைக்க பாடுபடுகிறானோ அவனே வைசியன்.

  4. எவன் தன் உதிரத்தை வியர்வையாக சிந்தி மக்களுக்கு உழைக்கிறானோ அவனே சூத்ரன்.

    உண்மையில் இவர்களுக்குள் ஏற்ற தாழ்வு என்பதே கிடையாது. (இவர்கள் எந்த நாடாலும், மதமானாலும், இப்போது கூறப்படும் சாதியானாலும்). கவனிக்க: பஞ்சமர்கள் எனும் பிரிவே ஆரம்பத்தில் இல்லை என்பது வெளிப்படை.  மோசடியாக ஒரு பிரிவை சேர்த்தது எப்படி ? அவர்களின் உழைப்பு சுரண்டப்பட்டது எப்படி ?
பகவத் கீதையின் அடிப்படையில் உதாரணமாக  காட்ட வெண்டுமானால் பிரம்மத்தை (அறிவை, உண்மையை, சத்தியத்தை) வெளிப்படுத்தும் ஐன்ஸ்டீன், அப்துல் கலாம், அண்ணாதுரை போன்ற அறிவாளிகள் தான் பிராமணர்கள். தன் மக்களை காக்க போரில் ஈடுபட்ட இந்திய வீரர்களானாலும் சரி, ஈராக்கிய வீரர்களானுலும் சரி, அமெரிக்க வீரர்களானலும் சரி (ஜார்ஜ் வாசிங்டன், காந்தி, மண்டேலா) சத்ரியர்கள் தான்.
[கவனிக்க: பகவத் கீதையில் மதம் என்ற வார்த்தையே இல்லை. இந்த இந்திய மக்களுக்கானது மட்டும் எனவும் இல்லை. அனைத்து மனிதர்களுக்குமாகவே வழங்கப்பட்டது.]
வர்ணமும் சாதியும் அடிக்கடியும் குழப்பிக்கொள்ளப்படும் கருத்துக்களாகும். சாதி, பிறப்பு அடிப்படையில் அமைந்தது; வர்ணமோ தொழிலை அடிப்படையாகக் கொண்டது. பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சாதிகளை வர்ணத்தில் வகைப்படுத்தும்போது, வர்ணமும் பிறப்பை அடிப்படையாகக் கொண்டதாகத் தோன்றுகிறதே தவிர, தன்னளவில் அது பிறப்பை அடிப்படையாகக் கொண்டதல்ல.
இதை தவிர ”என் தந்தை இவர், என் பிறப்பால் எனக்கு இது வந்தது” எனக் கூறுபவர்கள் அறியாதவர்கள் என்பதோடு மட்டுமல்லாமல் பகவத் கீதையையே மாற்றுபவர்கள். பகவத் கீதை தத்துவம் இன்றும் ஒவ்வொரு நாட்டிலும் நடைமுறையில் உள்ளது. 

  1. அறிவியல் அறிஞர்கள் (பௌதீக, மனோ)-பிராமணர்கள்,

  2. வீரர்கள் & ஆட்சியர்கள் (இராணுவம்,உள்துறை)-சத்ரியர்கள்,

  3. தொழிலதிபர்கள்-வணிகர்,

  4. உழைப்பாளிகள்-சூத்ரர்
எனவே ஒவ்வொரு நாட்டிலும் படி நிலை உள்ளது.
பகவத் கீதையில் சொல்லப்பட்டு இருப்பது என்ன ? ஒருவனின் பிறக்கும் போதே இருக்கும் மனநிலைக்கு ஏற்பவே தொழிலை ஏற்படுத்தி கொள்கிறார்கள். எனவே செயல்களின் அடிப்படையில் வர்ணம் கற்பிக்க பட வேண்டும் என்பது தானே ? இதைக் குழைத்து முன்னோர்களின் அடிப்படையில் சாதியை அமைத்தது தானே மிகப்பெரிய தவறு ? இது தானே இன்று இத்தர்மமே அழியக்கூடிய நிலையில் இருப்பதற்கு காரணம்? இன்றைய் சூழ்நிலையில் இத்தர்மம் இரு தாக்குதல்களை எதிர் நோக்குகிறது.

  1. கண்மூடி தனமாக வெறும் உயிரற்ற சடங்குகளை பின்பற்றி மதத்தின் பெயராலேயே அதை அழிப்போர்.

  2. குருட்டுதனமான சடங்குகளை வைத்து அதன் பின் உள்ள அறிவியலையும் பகுத்தறிவின் பெயரால் ஏற்க மறுப்போர்.
இவ்விருவகை பிரிவினரால் இந்தியர்களுக்கு எவ்வகை நட்டமும் இல்லை. ஆனால் இந்தியர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னே கண்டுபிடித்த  அற்புதமான செயல்முறைகளை உலகத்தினர் இழந்து விடுவர். அவ்வளவு தான்.

நண்பர்களே பின்னூட்ட மட்டறுப்பு நீக்கபட்டுள்ளது. கருத்துக்கள் பரிமாறுவதற்கு முன் தயவு செய்து பகவத் கீதை, வர்ணம், சாதி என்பவை பற்றி தயவு செய்து தேடி படித்து கொள்ளுங்கள். ஏனெனில் நம் மனமாகிய கோப்பை ஏற்கனவே நிரம்பி இருந்தால் அவற்றில் பகிரவதற்கு ஏதுமில்லை.

கீதையை எப்படிப் படிப்பது ? ஏன் ? -ஜெயமோகன்
கீதையை எப்படிப் படிப்பது ? ஏன் ? -பகுதி 2-ஜெயமோகன்

இந்திய அறிவியலின் உலக கொடை

[விவாதங்களின் தொடர்ச்சி 1, 2]

கிரகணம் போன்ற அரிய சோதிட அறிவியல் கண்டுபிடிப்புகள் கடவுள் நேரடியாக வந்து சோதிடர்களுக்கு உபதேசம் செய்து விட்டு போனதில்லை. சோதிடம் கற்று கொள்ளும் ஒவ்வொருவரும், விமர்சிப்பவர்களும் உண்மைகளை அறிய அதன் அடிப்படை அறிவியல் மூலாதாரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் சொல்லும் விடயங்கள் மூட நம்பிக்கைகளை தவிர வேறெதயும் தரப்போவது இல்லை.

zero,  π = 3.1416, ட்ரிக்னாமெண்ட்ரி (sin, cos etc), square and cubic roots, புவி சுழற்சி,  கிரகணங்கள், கிரகங்கள் சூரிய சக்தியை எதிரொளிப்பது இவற்றை கண்டுபிடித்தது யார் ? இவர்களாலேயே சோதிடமும் வடிவமைக்க பட்டது.

With Kala-kriya Aryabhata turned to astronomy—in particular, treating planetary motion along the ecliptic. The topics include definitions of various units of time, eccentric and epicyclic models of planetary motion (see Hipparchus for earlier Greek models), planetary longitude corrections for different terrestrial locations, and a theory of “lords of the hours and days” (an astrological concept used for determining propitious times for action).

ஆர்யபட்டா, Bhāskara II கண்டுபிடித்த, பயன்படுத்திய கணித, அறிவியலின் தொகுப்பை பார்த்தால் உண்மையில் அதிர்ந்து போய் விடுவீர்கள். எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு

 

பாஸ்கரரின் சூத்திரம்

image

In English, the multiples of 1000 are termed as thousand, million, billion, trillion, quadrillion etc. These terms were named recently in English, but Bhaskaracharya gave the terms for Numbers in multiples of ten, which are as follows:

Eka (1), dasha (10), shata (100), sahastra (1000),
ayuta (10000), laksha (100000), prayuta (10^6 = million), koti (10^7),
arbuda (10^8), abja (10^9=billion), kharva (10^10), nikharva (10^11),
mahapadma (10^12=trillion), Shankh (10^12), Jaladhi (10^14),
antya (10^15=quadrillion), Madhya (10^16) and parardha (10^17).

 

நன்றிகள் (References)

ஆர்யபட்டா -http://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE

பிரம்மகுப்தர் - http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D

Bhāskara II - http://en.wikipedia.org/wiki/Bh%C4%81skara_II,
http://scientistsinformation.blogspot.com/2009/09/bhaskara-ii-1114-1185.html

 

சகோதரி Mrs. The Analyst போன்றோருக்காக,

"Aryabhata I." Encyclopædia Britannica. 2009. Encyclopædia Britannica Online. 30 Oct. 2009 <http://www.britannica.com/EBchecked/topic/37461/Aryabhata-I>.

"Brahmagupta." Encyclopædia Britannica. 2009. Encyclopædia Britannica Online. 30 Oct. 2009 <http://www.britannica.com/EBchecked/topic/77073/Brahmagupta>.

"Bhāskara II." Encyclopædia Britannica. 2009. Encyclopædia Britannica Online. 30 Oct. 2009 <http://www.britannica.com/EBchecked/topic/64067/Bhaskara-II>.

 

மேலும் பல விடயங்களை தெரிந்து கொள்ள தூண்டிய சகோதரி Mrs. The Analyst, தருமி ஆகியோரின் கேள்விகளுக்கு நன்றி.

இந்தியாவின் வளமையான எதிர்காலம்

[குறிப்பு: இவ்விடுகை ஒரு தொடர்பதிவு ஆகும்; முந்தைய இடுகைகள்

 

எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது!

  நாட்டின் இப்போதைய சூழல் (09/2009 வரை) எப்படி இருக்கும் என்று பார்த்தோம்.

  1. வரும் பொது தேர்தலில் எந்த கூட்டணிக்கும் இறுதி பெரும்பான்மை கிடைக்காமல் இந்தியாவில் அரசியல் குழப்ப நிலை ஏற்படும்.
  2. உலக பொருளாதார குழப்ப சுமை இறுதியாக பட்ஜெட் வடிவில் ஏழை மக்களுக்கு வந்து சேரும்.
  3. மத தலைவர்களுக்கும், மத ஒற்றுமைக்கும் அச்சுருத்தல் ஏற்படும்.

ஆனால் அதிர்ஷ்ட வசமாக இத்தகைய நிலை தற்காலிகமானது தான்.

மாறுதலுக்கான காலகட்டங்கள் (09/2009 முதல் 09/2015 வரை)

  செப்டம்பரில் சூரிய திசை ஆரம்பிக்க போவதால் இது முதல் கடினமான காலம் அகன்று படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும். 2010 அண்டு முதல் கடுமையான ஆட்சியாளர் ஒருவர் ஆட்சிக்கு வருவார்.

  ஆனால் சுக்கிர திசை முடிய போவதால், கடந்த காலங்களில் இருந்த அளவிற்கு பொருளாதர வசதிகளும், கட்டுபாடற்ற சுதந்திரமும் இருக்காது.  அரசியல் வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், ஊடங்களுக்கும் மற்றும் மக்களுக்கும் உள்ள கட்டுபாடற்ற சுதந்திரத்தின் விளைவுகளை தான் அனுபவித்து கொண்டு இருக்கிறோமே ?! எனவே இதுவும் நல்லது தான்.

கவனிக்க பட வேண்டிய தருணம்: சூரிய திசை ராகு புத்தி (10/2010 முதல் 09/2011 வரை)

    ஒவ்வொரு ராகு திசை நடந்த போதும் இந்தியா சகிக்க முடியாத பல்வேறு கொடுமைகளுக்கும் போர்களுக்கும் உட்படுத்த பட்டதை எப்போதும் பார்த்து உள்ளோம். இக்காலகட்டத்திலும் இந்தியா மீது ஒரு நாடு படையெடுக்கும். ஆனால் எப்போதும் போல இறுதி வெற்றி இந்தியாவிற்கு தான் :-)).

இந்தியாவின் கடந்த கால வெற்றி பாதைகள்

  1. சனி திசை 08/1965 வரைnehru
    1. 1950 அனைத்து மக்களுக்குமான சம உரிமை குடியரசு: புதன் புத்தி
    2. 1956ல் மொழி வாரி மாகாணங்கள்: சுக்ர புத்தி
    3. 1964வரை நேருவின் சோஷலிஸ பொருளதார நிர்வாகம்
  2. புதன் திசை: திருமதி. இந்திரா காந்திindira
    1. பசுமை புரட்சி- உணவு உற்பத்தியில் தன்னிறைவு: (1965 புதன் புத்தி)
    2. பங்களாதேஷ் போர் வெற்றி: (16 December 1971 சூரிய புத்தி)
    3. 20 ஆண்டு கால ரஷ்ய கூட்டணி உடன்படிக்கை: (1974 செவ்வாய் புத்தி),
    4. இந்தியாவின் முதல் அணு குண்டு தயாரிப்பு 1974
  3. சுக்ர திசை vajpayee(குரு புத்தி, சனி புத்தி)
    1. திரு.வாஜ்பாய் அரசு(1998-2004)
      1. தகவல் தொழில் நுட்ப பலம்,
      2. தொலைதொடர்பு துறை வளர்ச்சி,
      3. அணுகுண்டு சோதணை வெற்றி May 11, 13, 1998
      4. கார்கில் போர் வெற்றி  June 1999
      5. உள் நாட்டு கட்டமைப்பு தங்க நாற்கர திட்டம்
    2. வானவியல் ஆராய்ச்சிkalam1
      1. செயற்கை கோள்கள்
      2. சந்திராயன் திட்டம்

சோதிட விதி: ஒரு ஜாதகருக்கு திரேகோனாதிபதிகள்(1,5,9) தங்களது திசையில் நல்ல பலன்கள் தருவார்கள் என்பது மிக சரியாக பொருந்துகிறது  அல்லவா? (இந்தியாவிற்கு சுக்ரன் -1, புதன் -5, சனி-9 அதிபதிகள்)

பொற்காலம்

   09/2015 முதல் 04/2022 வரை சந்திர திசை நடைபெறும் போது பொற்காலமாக திகழும். இது வரை நடைபெற்ற வளர்ச்சிகளை மிஞ்சும் வகையில் இக்காலகட்டத்திலிருந்து இந்தியாவிற்கு அருமையான காலம் துவங்கும். இந்தியா எல்லா துறைகளிலும் வேகமான வளர்ச்சி பெறும். 2020லிருந்து உலக வல்லரசுகளில் ஒன்றாக திகழும்.

இத்தொடர் இடுகைகள் உங்களுக்கு கிரகங்கள் எவ்வாறு ஒரு நாட்டின் நிலமையை கூட எவ்வாறு எடுத்துரைக்கும் என விளக்கி இருக்கும் என நம்புகிறேன். சோதிடம் பற்றி மேலும் பல விளக்கங்களுக்கு SP.VR. SUBBIAH போன்ற சோதிட அறிஞர்களின் பதிவுகளை படிப்பதும், அணுகுவதும் நலம்.

வாழ்க பாரதம்!

முடிவுற்றது.

கடமையை செய் பலனை எதிர்பாராதே என்பது சரியா ?

  krishna1 நண்பர் இளவரசி ”கடமையை செய் பலனை எதிர்பாராதே” என்ற கீதையின் முக்கிய பகுதிக்கு ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பி இருந்தார். இதே கேள்வியை பலரும் கேட்டு கொண்டுள்ளனர். இப்பதிலை இவ்வனைவருக்கும் தரக்கூடிய வாய்ப்பாக கருதுகிறேன்.

  “ஒருவன் புலுக்கமாக இருக்கிறது என்று விசிறி வீசிக்கொண்டிருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம், அவன் விசிறி வீசுவது என்பது கடமை காற்று வருவது அதனுடைய பலன்,ஆகவே பலனை எதிர்பார்த்துதான் ஒருவன் தன் கடமையை செய்கிறான்

  ”கடமையை செய் பலனை எதிர்பாராதே” என்ற பதம் பலரால் தவறாக புரிந்து கொள்ள பட்டுள்ளது. பகவான்  கடமை என்பதை இது போன்ற சிறு விடயங்களுக்கு சொல்லவில்லை. இங்கு கடமை என்பதை (essential actions) தான் குறிப்பிடுகிறார், சிலர் நினைப்பது போல் வேலையை(basic tasks) அல்ல.  அதேபோல பலன் என்பது தன் சொந்த ஆதாயங்களை, புலன் நிகர்ச்சியை(self interest) தான் குறிப்பிடுகிறார்; விளைவு(result) என்பதை குறிக்கவில்லை.

  ஒருவன் தன் அடிப்படை கடமையை செய்வதற்கு கூட அதன் மூலம் தனக்கு ஒரு இன்பம், சுகம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறானது என்று குறிப்பிடுகிறார். ஒரு சிறு உதாரணமாக சிறு குழந்தைகளை பெற்றோர் காப்பாற்றுவதும், வயதான பெற்றோரை குழந்தைகள் காப்பாற்றுவதும் என்பதும் கடமை அதில் ஒரு பலனை எதிர்பார்ப்பது தவறானது அல்லவா?

  இரண்டாவது பலனை எதிர்பார்க்காதே என்ற சொல்லாடலுக்கு பலன் கிடைக்காது என்றோ, செய்வதற்கு முன் முறைபடுத்தாதே (plan) என்றோ பொருள் அல்ல. இந்த செயலை செய்வதனால் எனக்கு இந்த பலன் தான் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தான் தவறானது என்று குறிப்பிடுகிறார்.

  திருமணம் என்பதை உடலின்பத்திற்காக என்ற நோக்கத்திற்காக மட்டும் ஒருவன்/ஒருத்தி அக்கடமையை செய்தால் அவன் மிகுந்த ஏமாற்றம் அடைவான்/ள் என்பது சந்தேகமில்லை. எதிர்பாராத பல பக்க விளைவுகளையும் (குடும்பம், குழந்தைகள்) சந்திக்க வேண்டியிருக்கும் (இது நகைச்சுவைக்காக :-)) )

netaji1 அதே போல தான் பலருக்கும் பல உதவிகள் செய்திருந்தாலும் ஒருவரும் தன்னை கண்டு கொள்ளவில்லை என்று கவலை படுபவர்களை அதிகம் பார்த்திருப்போம். பிறருக்கு உதவி செய்வதில் கூட பலனை எதிர்பாராதீர்கள் என்று பகவான் கற்பிக்கிறார். பாரதியார், வ.உ.சி., சிவா, பகத்சிங், நேதாஜி போன்றோர்களை நினைத்து பாருங்கள்: இவர்களே உதாரண புருஷர்கள். இவர்கள் உயிரோடு இருக்கும் வரை தங்களுக்கு  ஏதேனும் சுய பலனை (ஆதாயங்களை) எதிர்பார்த்திருப்பார்களா ?

ஒருவன் அடிமையாக இருப்பதற்கு மறுப்பது என்பது கூட ஒரு கடமை தான் (தனக்கு தானே செய்து கொள்வது). எனவே தான் தன் சொந்த புலன் ஆதாயங்களை கருதாது மேற்கூறிய தலைவர்கள் பாடுபட்டனர்.

இந்தியாவின் ஜாதகமும், நிகழ்கால சூழ்நிலைகளும்: சோதிட ஆதாரங்கள்-2

 

[குறிப்பு: இவ்விடுகை ஒரு தொடர்பதிவு ஆகும், முதல் இடுகைக்கு இங்கு செல்லவும்]

குரு பெயர்ச்சி என்பது என்ன?

விஞ்ஞான ரீதியாக குரு (Jupiter) கிரகம் 6.12.08 அன்று பகல் 11.15 மணிக்கு, பூமிக்கு 270 டிகிரியிலுருந்து 271 டிகிரிக்கு மாறியது. தமிழில் பூமியின் 230 முதல் 270 பாகைக்கு வில்-தனுசு என்றும், 270 முதல் 300 பாகைக்கு சுறா-மகரம் என்றும் பெயர். சோதிடத்தில் இதையே சோதிடத்தில் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு  குருபகவான் பெயர்ச்சியடைந்தார் என்று கூறுவர். 

 

குரு பெயர்ச்சியின் விளைவுகள் எப்படி இருக்கும்?

குரு பெயர்ச்சியின் ஒரு மாதத்திற்கு முன்பே அதற்கான பலன்கள் பூமிக்கு கிடைத்து விடும் என்பது சோதிட விதியானதால் நாம் 6.11.2008 நாளிலிருந்து கிடைக்கும் பலன்களை கணக்கில் கொள்ள வேண்டும். சமீபத்திய குரு பெயர்ச்சி உலகிற்கு மிக முக்கியமான கிரகமான குரு சாதகமாக இல்லாத சூழ்நிலையை இப்போது உலகிற்கு  ஏற்பட்டுள்ள மிகப்பெரிய நெருக்கடிகள் தெளிவாக காட்டுகிறது. 

  1. உலக பொருளாதார நெருக்கடியின் உச்ச நிலை (ஆயில் விலை, ஆட்டோ நிறுவனங்கள் சரிவு-நவம்பர் 2008)
  2. காசா பகுதியில் தீவிரமடைந்துள்ள போர் (டிசம்பர் 2008)
  3. இலங்கையில் தீவிரமடைந்துள்ள போர் (நவம்பர் 2008)

இந்தியாவில்,

  1. பாகிஸ்தான் பயஙகரவாதிகளினால் மத சம நிலைக்கு எற்பட்டுள்ள அச்சுருத்தல் (நவம்பர் 2008)
  2. சத்யம் நிறுவனத்தால் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள தலைகுனிவு (ஜனவரி 2009)

 

குரு உலகிற்கு எவ்வெவற்றை அளிக்கிறார்?

இப்போது குரு நீச நிலையில் உள்ளார். நீச நிலை என்பது பலம் குறைந்துள்ளதையும், எதிர் மறையான பலன்களையும் குறிக்கிறது. எனவே உலகில் கீழ்கண்ட விடயங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

”தங்கம், பைனான்ஸ், அரசியல், மதம், மதம் சார்ந்த நிறுவனங்கள், தேவஸ்தானங்கள், வடகிழக்குத் திசை, நீதிமன்றம், கரூவூலம், புஷ்பராகம், மத தலைவர்கள், சான்றோர், புராணம், வேதம், சேவை நிறுவனங்கள், ஆட்சி மொழி, அரசு தரும் வீட்டு வசதி, காசாளர், கண்டக்டர், முன்யோசனையுடன் திட்டமிட்டு செயல்படுதல்.”

இந்தியா பிறந்த ஜாதகத்தின் படியும் இப்போது சாதகமான நிலையில்லை. சுக்கிர திசையில் கேது புத்தி: 06/2008 முதல் 08/2009 வரை, ஏழரையாண்டு சனி வேறு 09/2009 வரை நடக்கிறது.

ஏழரை சனி -3: 07/2002 முதல் 09/2009 முடிய

  1. July 11, 2006 மும்பை குண்டு வெடிப்பு
  2. 2007ல் 6 பயங்கரவாத தாக்குதல்கள்
  3. 2008ல் 10 பயங்கரவாத தாக்குதல்கள்
  4. திறமையற்ற அரசு நிர்வாகம்

இவ்வருடத்தில் பின்வருபவை ஏற்பட வாய்ப்பு உள்ளதை எடுத்து காட்டுகிறது.

  1. நாட்டில் அரசியல் நிலையற்ற தன்மையும் குழப்பங்களும் ஏற்படும். வரும் தேர்தலில் மக்கள் கட்சி பாகுபாடின்றி  தூய தலைவர்களை தேர்ந்தெடுக்க முயற்சி செய்ய வேண்டும்.
  2. நாட்டின் நிதி நிலைமை- நிதி நிறுவனங்கள், நிதி சந்தைகள் பாதிக்கப்படும்.  மக்கள் தக்களது சேமிப்பை அதிகப்படுத்த வேண்டும். புதிய கடன்களை அறவே தவிர்க்க வேண்டும்.
  3. பட்ஜெட் மக்களை வாட்டி வதைக்கும்- ஏழை மக்கள் மேலும் கடும் வரிச்சுமையினால் பாதிக்கப்படுவர். மக்கள் ஆதிக்க மனநிலையை விட்டு பொருளாதார சம நிலைக்கு பாடுபட வேண்டும்.
  4. மததலைவர்கள் உயிருக்கும்  மத நிறுவனங்களுக்கும் ஊறு ஏற்படும். மத நல்லினக்கம் பாதிக்கப்படும். மக்கள் ஒற்றுமையுடன் இருந்து பிளவு படுத்துபவர்களை ஒதுக்கி தள்ள வேண்டும்.

ஆனால் இத்தகைய நிலை தற்காலிகமானது தான். 29.08.2009 முதல் கடினமான காலம் அகன்று படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும்.

தொடரும்...

[அடுத்த பாகத்தில்: இந்தியாவின் வளமையான எதிர்காலம்]

 

இந்தியாவின் ஜாதகமும், வரலாறும்: சோதிட ஆதாரங்கள்

சோதிடத்தை பற்றி அன்மைய காலங்களில் பெரும் விவாதக்கள் நடந்து கொண்டுள்ளது நாம் எல்லோரும் அறிந்ததே. இவ்விவாதங்களில் ஒரு நண்பர் சோதிடத்தின் பயன் என்ன என்பதை அறிவியல் பூர்ணமாக நடைமுறையில் உணர்த்த முடியுமா என கேள்வி எழுப்பி இருந்தார். இக்கேள்வியிலும் நியாயம் உள்ளது. சோதிடத்தின் அடிப்படைகளை அறிந்து கொண்டுள்ள ஒருவன் என்பதால் என் சிற்றறிவிற்கு எட்டியவரை விளக்க முயல்கிறேன். 

சோதிடத்தின் பயன் என்ன?

சோதிடம் என்பது உங்களது வாழ்க்கையின் அத்தனை வருங்கால நிகழ்ச்சிகளையும் படம் பார்ப்பது போன்று காட்டாது. இது ஒரு கை விளக்கின் உதவியின் வழியே தொலைதூர பாதையை பார்ப்பது போன்றது தான். இது கண் பார்வை அற்றவருக்கு கைத்தடி கொடுக்கும் பலனை கண்டிப்பாக கொடுக்கிறது.

சோதிடம் பார்ப்பது பற்றிய அடிப்படை புரிந்துணர்வு இல்லாததே பெரும்பாலான பிரச்சினைகளுக்கு காரணமென நினைக்கிறேன். வளர்ப்பதற்கு ஆடு வாங்கலாமா? கோழி வாங்கலாமா? என்பதை பார்ப்பவர்களை கூட அறிந்திருக்கிறேன். மனிதர்கள் இயல்பாகவே எதிர்காலத்தின் இயல்புகளை அறிய இயலாதவர்களாக உள்ளனர். வருங்காலத்தை கணிக்க இயலாத சாதரண மானுடர்களுக்கு ஆறுதல் தந்து மனத்துயர் துடைக்கும் கருவியாக தான் சோதிடம் உள்ளது.

சோதிடம் என்பது வானியலையும், கணிதத்தையும் அடிப்படையாக கொண்டது. ஒரு செயலை அறிவியல் பூர்ணமாக நிரூபிக்க அக்கணிதத்தை யார் செய்தாலும், எந்த சூழ்நிலையில் செய்தாலும் ஒரே பலன்களை தான் தர வேண்டும்  என்பது அடிப்படை விதி. கீழ்கண்ட கணிதங்களை வாக்கிய பஞ்சாங்கத்தின் படி செய்து பாருங்கள். இதில் குறிப்பிட்ட கிரக அமைப்புகள், கால நேரங்கள், தசாபுத்திகள் துல்லியமானதாக இருக்கும். (It's consistent) இவற்றிலிருந்து சோதிடத்தின் பலனை நடைமுறையில் நாம் உணரலாம்.

இந்தியாவின் நிலை என்ன ?

 india chart

பிறந்த இடம்: டெல்லி
ஜென்ம நட்சத்திரம்: பூசம்
லக்கினம் ரிஷபம்
பிறந்த மகா திசை இருப்பு: சனி மகா திசையில் - 18 வருடங்கள்- 0 மாதங்கள்-14 நாட்கள்: 29.08.1965 வரை

புதன் திசை 17-00-00: 29.08.1982 வரை
கேது திசை 7-00-00: 29.08.1989 வரை

சுக்கிர திசை 20-00-00: 29.08.2009 வரை

இப்போது சுக்கிர திசையில் கேது புத்தி: 06/2008 - 08/2009

 

சுதந்தரமடைந்த போது நிலை என்ன?

இதில் லக்னத்தில் (Asc) ராகு(Ra) இருப்பதையும், 6ல் குரு(Ju) இருப்பதையும், 7ல் கேது(Ke) இருப்பதையும் குறித்து கொள்ளுங்கள். இந்தியா சுதந்திரமடைந்த போது முழு பிரசவமாக இல்லாமல்,  பல கூறுகளாகவும் (இந்தியா, பாகிஸ்தான் (,பங்களாதேஷ்), இலங்கை, நேபாளம், பூடான், பர்மா) அவற்றிற்கிடையே பிரச்சிணைகளையும் பிரித்தாணியர் விட்டு சென்றதையும், நாட்டின் பஞ்ச நிலையையும் தெளிவாக காட்டுகின்றன.

ராகு கிரகமும், சனி கிரகமும் நம் நாட்டின் சூழ்நிலைகளை எந்த  அளவிற்கு எடுத்து காட்டியுள்ளன என்று பார்ப்போம்.

 

ஏழரை சனி -1: 1947 முதல் 09/1950 வரை

இந்தியா பிறக்கும் போதே அதற்கு ஏழரை சனி பிடித்திருந்தது கூர்ந்து நோக்க தக்கது.

  1. பிரித்தாணியரின் இன, மத  பிரித்தாளும் சதியால் கோடிக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.
  2. பாகிஸ்தானுடன் காஷ்மீர் போரையும் தந்தது. மூன்றில் ஒரு பங்கு நிலம் பாகிஸ்தான் வசம் போனது.

சனி திசை ராகு புத்தி: 04/1960 முதல் 02/1963 வரை

1962 சீன யுத்தம் தோல்வி

அஷ்டம சனி -1: 01/1964 முதல் 12/1966 முடிய

  1. May 27, 1964 பிரதமர் நேரு இறப்பு
  2. 1965 இரண்டாவது காஷ்மீர் போர் இந்தியாவிற்கு பிரயோசனமின்றியும் எவ்வித முடிவுமின்றியும் முடிந்தது.

ஏழரை சனி -2: 06/1973 முதல் 06/1980 முடிய

  1. புதன் திசை ராகு புத்தி: 02/1975 முதல் 09/1977 வரை: 1975-1977 எமர்ஜென்சி
  2. 1977 ஜனதா பார்ட்டி அரசு, இந்திரா கைது, அரசியல் நிரந்திரமின்மை, அரசு கவிழ்வு

கேது திசை சனி புத்தி: 07/1987 முதல் 09/1988 வரை

10/1987-1990: இலங்கை யுத்த தோல்வி

அஷ்டம சனி -2: 03/1993 முதல் 02/1996 முடிய

  1. 12 March 1993 - Series of 13 bombs go off killing 257 (சுதந்திர இந்தியாவில் பயங்கரவாதம் ஆரம்பம் )
  2. 1995ல் அப்போதைய பஞ்சாப் முதல்வர் Mr.Beant Singh பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்.

சுக்ர திசை ராகு புத்தி: 10/1996 to 10/1999

  1. February 14, 1998 கோயம்பத்தூர் குண்டு வெடிப்பு (தென்னிந்தியாவில் பயங்கரவாதம் ஆரம்பம்)
  2. June 1999  கார்கில் போர்: இந்திய பகுதிகள் பாகிஸ்தானால் ஆக்கிரமிப்பு

தொடரும்...

[அடுத்த பாகம்: இந்தியாவும், நிகழ்கால சூழ்நிலைகளும்]