கூடங்குளம்

மின்சார உற்பத்தி முக்கியமான இக்கால கட்டத்தில் கூடங்குளம் அணு மின் நிலையம் பற்றிய ஜெயமோகனின் கட்டுரைகள் முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் சில பகுதிகளுடன் இணையத்தில் உள்ள சில் ஆதாரங்களையும் இதனுடன் இணைத்துள்ளேன்

நன்றி


இன்றைய சூழலில் அணுமின்நிலையம் அன்றி வேறு என்ன வழி இருக்கிறது?

நாம் பயன்படுத்தும் மின்சாரத்தை ஒப்பிட இழக்கும் மின்சாரம் அதிகம். இவ்விரண்டையும் சமாளித்தாலே இந்தியாவின் மின்தட்டுப்பாடு பெருமளவுக்கு நீங்கிவிடும் என்பதே நடைமுறை உண்மை.
இந்தியாவின் மின்சாரத்துறையில் மிகப்பெரிய சிக்கலே மின்கடத்தும்போது ஏற்படும் இழப்புதான். உலகிலேயே மின்கடத்தல் இழப்பு மிக அதிகமாக உள்ள தேசம் இந்தியாதான் என உலக ஆற்றல் கழகம் [World Resources Institute] கூறுகிறது. உலக அளவில் அதிகசராசரி என்பது 7 சதவீதம். இந்தியாவில் இது 30 முதல் 40 சதவீதம் வரை. பல இடங்களில் 60 சதவீதம் வரை

இன்னொன்று இந்தியாவில் மின் திருட்டு விகிதம் உலகிலேயே மிக அதிகம். இந்திய அரசு அறிக்கையின்படி அது 42 சதவீதம் வரை.

ஆதாரங்கள்
http://news.bbc.co.uk/2/hi/business/4802248.stm
http://news.bbc.co.uk/2/hi/business/4802248.stm
http://www.thehindubusinessline.in/2005/12/03/stories/2005120303300900.htm
http://industrytracker.wordpress.com/2010/08/26/td-losses-in-india-aggravate-the-power-problem/
http://cleantechindia.wordpress.com/2008/07/16/indias-electricity-transmission-and-distribution-losses/

 அணு உலைகளால் ஏற்படும் செலவீனங்கள்

அணு உலைகளை அமைப்பது நாட்டின் ராணுவ ரகசியங்களுடன் கலந்துள்ளது என்பதனால் அதன் கணக்குகள் எப்போதுமே ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. ஆகவே அவற்றில் உள்ள ஊழல்கள் வெளியே வருவதில்லை.

இந்தியாவின் எந்த அணு உலையும் அதன் முழுத் திறனுடன் தொடர்ந்து செயல்பட்டதில்லை. அவை உருவாக்கிய மின்சாரத்துக்கு அவற்றுக்கான செலவினங்களை வட்டியுடன் சேர்த்து கணக்கிட்டு விலை போட்டால் இந்தியாவில் உற்பத்தியாகும் நீர் மின்சாரத்தின் ஐம்பது  மடங்கு விலை ஆகும் என சொல்கிறார்கள்.


இந்தத் தொகை [ கூடங்குளம்] இருந்தால் போதும் இந்தியாவில் கால்வாசி மின்கடத்திகளை நவீனப்படுத்திவிடமுடியும். கூடங்குளம் நமக்கு அளிக்கும் மின்சாரத்தை விட இருபது மடங்கு மின்சாரத்தை சேமிக்கமுடியும். அதை நம் அரசுகள் செய்வதில்லை.



கூடங்குளம் அணுஉலையின் மோசமான நிலை
புக்குஷிமா அணுஉலை கூடங்குளம் அணுஉலையை விடப் பலமடங்கு ’பாதுகாப்பா’னது. மக்கள் இல்லாத இடத்தில் அமைக்கப்பட்டது. ஆனால் கூடங்குளம் மக்கள் நெருக்கம் மிக்க கடற்கரையில் உள்ளது. அதே அளவுக்கு அபாய வாய்ப்புள்ள நிலநடுக்கப்பாதையில் உள்ளது.

1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் நாள் அன்றைய சோவியத் ஒன்றியத்தின் உக்ரேனிலுள்ள செர்னோபில் நகரத்தில் இருந்த அணு உலை விபத்துக்குப்பின்னர் அந்த சூத்திரம் கொண்ட எல்லா அணு உலைகளையும் மூட ருஷ்யா முடிவெடுத்தபோது அதில் ஒன்றை இந்தியாவுக்கு பலகோடி ரூபாய் விலைக்கு விற்றது.

2004ல் நடந்த சுனாமியின்போது கூடங்குளத்தில் பெரும்பாலான கட்டுமானங்கள் பாதிப்படைந்தன. ஆகவேதான் இந்த அணுஉலையின் கட்டுமானங்கள் இவ்வளவு தாமதமாயின. பலபகுதிகளை மீண்டும் கட்டினார்கள் என்பது செயல்பாட்டாளர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆகவே அணு உலைகள் என்பவை இந்தியா போன்ற நாட்டுக்குத் தேவை இல்லை. அவை இந்நாட்டின் செல்வத்தை வளர்ந்த நாடுகள் கொள்ளையடிக்கும் வழிகள் மட்டுமே. அவற்றின் ஆபத்து மட்டுமே நமக்கு எஞ்சுகிறது.


இந்திய அரசின் மோசமான அணு உலை கொள்கைகள் 

இந்திய அரசின் அணு உலை கொள்கைகள் மோசமாக இருப்பதாக அணு மின்சாரத்தை ஆதரிக்கும் இணைய தளமே கருத்து கூறி இருக்கிறது. http://world-nuclear.org/info/inf53.html
On 10 September 2008 the government assured the USA that India "shall take all steps necessary to adhere to the Convention on Supplementary Compensation (CSC)". Under existing Indian legislation, foreign suppliers may face unlimited liability, which prevents them from taking insurance cover, though contracts for Kudankulam 1&2 exclude this supplier liability.

However, after compensation has been paid by the operator (or its insurers), the bill allows the operator to have legal recourse to the supplier for up to 80 years after the plant starts up if the "nuclear incident has resulted as a consequence of an act of supplier or his employee, which includes supply of equipment or material with patent or latent defects of (or?) sub-standard services." This clause giving recourse to the supplier for an operational plant is contrary to international conventions.


மூன்றாம் இந்திய விடுதலை போர்

யார் இந்த அன்னா ? anna

அன்னா ஒரு 71 வயது காந்தியவாதி இளைஞர். ஒரு முன்னாள் இராணுவ வீரர். தற்போது இலஞ்ச ஒழிப்பு சட்ட மசோதாவை நிறைவேற்ற கோரி சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கிறார்.

புதிதாக எங்கிருந்து வந்தார் ? இவரது சாதணைகள் என்ன ?

இவர் பல வருடங்களாகவே ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார். 2000ம் வருடம் மஹாராஷ்டிர அரசுக்கு எதிராக போராடி தகவல் அறியும் உரிமை சட்டத்தை மாநில அளவில் எற்படுத்தினார். அது பிறகு இந்தியா முழுவதும் அமுல் படுத்த பட்டது Right to Information Act 2005 (RTI).

மேலும் விவரங்களுக்கு :

http://www.annahazare.org/anticorruption-movement.html

http://en.wikipedia.org/wiki/Anna_Hazare

 

போராட்டத்தின் பின்புலம் என்ன?

அன்னா இலஞ்சத்தை கட்டுபடுத்த கூடிய சட்ட வடிவத்தை இந்தியாவில் அமுல் படுத்த முயற்சிக்கிறார். ஆனால் எப்போதும் போல இலஞ்சவாதிகள் அதை நீர்த்து போக செய்ய, அச்சட்டத்தில் ஓட்டைகளை திணிக்க முயற்சி செய்கின்றனர். 2010ல் சரத்பவார் போன்ற ஊழல் அரசியல்வாதிகள் சேர்ந்து ஒரு முடமான சட்டத்தை வடிவமாக்கினர். அவற்றின் வித்தியாசங்கள் பின்வருமாறு:

அன்னா கேட்பது ”மக்களிடம் இருந்து தாமாகவே புகாரை பதிவு சேய்து, அவற்றை விசாரித்து, தண்டனையும் அளிக்கும், தன்னிச்சையாக செயல்பட கூடிய அமைப்பு.  CBIன் இலஞ்ச ஒழிப்பு பிரிவு அரசியல் வாதிகளின் கைப்பிடியில் இல்லாமல் இவ்வமைப்பின் கீழ் இருக்கும்.

இலஞ்சவாதிகள் தர நிணைப்பது புகாரை ஏற்க முடியாத, விசாரணை செய்ய இயலாத, தன்னிச்சையாக செயல் பட இயலாத ஒரு முடமான அமைப்பு. இவ்வமைப்பு போலிசுக்கு கூட கட்டளை பிறப்பிக்க இயலாது.

 

Draft Lokpal Bill 2010 (ஊழல்வாதிகளின் தரப்பு)

Jan Lokpal Bill (அன்னாவின் தரப்பு)

Lokpal will have no power to initiate suo moto action or receive complaints of corruption from the general public. It can only probe complaints forwarded by LS Speaker or RS Chairman.

Lokpal will have powers to initiate suo moto action or receive complaints of corruption from the general public.

Lokpal will only be an Advisory Body. Its part is only limited to forwarding its report to the "Competent Authority"

Lokpal will be much more than an Advisory Body. It should be granted powers to initiate Prosecution against anyone found guilty.

Lokpal will not have any police powers. It can not register FIRs or proceed with criminal investigations.

Lokpal will have police powers. To say that it will be able to register FIRs.

CBI and Lokpal will have no connection with each other.

Lokpal and anti corruption wing of CBI will be one Independent body.

Punishment for corruption will be minimum 6 months and maximum up-to 7 years.

The punishment should be minimum 7 years and maximum up-to life imprisonment.

 

Lokpal will not be a monopoly for particular area

 

மூன்றாம் இந்திய விடுதலை போர்

கஞ்சிக்கு வழியில்லாதோர் பெரும்பாண்மையாக இருக்கும் நாட்டில் இலட்சம் கோடிகளில் ஊழல் நடைபெறுவது, இலஞ்சத்திற்கும், சுரண்டலுக்கும், அடக்குமுறைக்கும் எதிரான போராட்டங்களே இந்தியாவின் மூன்றாவது சுதந்திர போராக இருக்கப்போவதை உறுதி செய்கிறது.

 

கிரிக்கெட்டில் மட்டுமே தேசபக்தியா ?

மக்களாகிய நாம் அலட்சிய படுத்த இது ஒன்றும் 3 மணி நேர உண்ணாவிரத போராட்ட நாடகம் அல்ல. அவரது போராட்டம் இன்றுடன் 4வது நாளாக தொடர்கிறது. தன்னால் 10 நாட்கள் வரை தாக்கு பிடிக்க முடியும் என அறிவித்துள்ளார்.

அன்னாவின் இச்சட்டம் நடைமுறைபடுத்த பட்டால் இலஞ்சம் பெருமளவு குறையும் என்பது வெளிப்படையான உண்மை. இச்செய்தி அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டியது முக்கியம். குறைந்த பட்சம் ஒரு 71 வயது இளைஞர் நமக்காக தன் உயிரை பணயம் வைத்து போராட்டம் செய்கிறார் என்பதை தெரிந்து வைத்திருப்பதாவது நம் குறைந்த பட்ச கடமை ஆகும்.

கிரிக்கெட்டை பற்றி எங்கும் எப்போதும் விவாதிக்கும் நண்பர்கள், இலஞ்ச ஒழிப்பு மசோதா பற்றியும் அலுவலகம், வீடு முதலான அனைத்து தளங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி தன் தேசபக்தியை வெளிப்படுத்தலாம்.

 

காந்தியை கோட்சேவால் மட்டுமல்ல, நம் அலட்சியத்தாலேயே இழந்து விட நேரிடுகிறது !!

 

GpmIndia Against Corruption

We have designed a Jan Lokpal Bill which has strong measures to bring all corrupt people to book.Our fight is to force politicians to implement this powerful bill as an act in the parliament. Learn More