வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

காந்தியின் மீது கல்லெறிதல்

சமீபத்தில் படித்தவைகளில் காந்தி ஒரே விதமான கருத்து மத ரீதியாக முற்றிலும் எதிர் நிலைகளில் இருப்பவர்களால் பரப்ப பட்டது.

”காந்தி சாதியை ஆதரித்தார். அவர் ஒர் சாதி வெறியர்”

இதே விதமான குற்றசாட்டு பாரதியாரை நோக்கியும் வீசப்படுகிறது.

 

இவர்களின் மீது வீசப்படும் குற்றசாட்டுகளுக்கு ஆதாரமாக காட்டபடுவது இவர்கள் பயன்படுத்திய வர்ணாசிரமம் என்ற வார்த்தைகளின் அடிப்படையில். ஆனால் வர்ணாசிரமம் எனும் சொல் பழைய நூட்களில் முற்றிலும் வேறான நிலையில் பயன்படுத்த பட்டது. இப்போதைய சாதி எனும் பொருளில் அல்ல. கீதையை அதன் உண்மையான பொருளில் வாசிப்பவர்களுக்கு மனு நீதியில் சொல்லப்பட்ட திரிக்கபட்ட வர்ணாசிரமத்தில் உள்ள  முரண் வெளிப்படையாக தெரியும்.

 

    • கீதையில் விளக்கப்படும் வர்ணாசிரமம் வேறு இப்போதய சாதி வேறு . (மனு நீதி முதற் கொண்டு)
    • குலத்தொழிலும், பிறப்பின் அடிப்படையிலான சாதியும் ஒழிக்க பட வேண்டும்.
    • வேலையை வைத்து உயர்வு தாழ்வு கற்பித்தலும் ஒழிய வேண்டும்.

      http://sabaritamil.blogspot.com/2009/11/blog-post.html

 

ஆனால் சாதி என்பது குலத்தொழிலின் அடிப்படையில் சில சமூகத்தினரை இழிபொருளாக பார்க்கபடும் நிலை வந்ததுமே சமூகத்தை முழுமையாக கேடு கெட்ட நிலைக்கே கொண்டு சென்றது.


DSC02078//காந்தியின் ஆரம்பகால எண்ணங்கள் இவை. வருணப்பிரிவு என்பது சமூகத்தில் ஓர் ஒழுங்கை உருவாக்கும்பொருட்டு இயல்பாக பரிணாமம் அடைந்துவந்த ஒன்று.//

//1931ல் காந்தி எழுதினார் ” நான் நவீன அர்த்தத்தில் சாதி அமைப்பில் நம்பிக்கை கொள்ளவில்லை. அது ஒரு சமூகத்தீங்கு, முன்னேற்றத்துக்கு தடை. மனிதர்கள் நடுவே உள்ள எவ்வகையான ஏற்றதாழ்வுகளையும் நான் நம்பவில்லை. நாமெல்லாம் மூற்றிலும் சமம். சமத்துவம் என்பது ஆன்மாவிலே ஒழிய உடல்களில் அல்ல….புறவயமாக தெரியும் //


//சாதியை அழிப்பதற்கு மிகச்சிறந்த மிகவேகமான தடையற்ற வழி என்னவென்றால் சீர்திருத்தவாதிகள் அதை தங்களிடமிருந்தே தொடங்குவதுதான். தேவையென்றால் அதற்காக அவர்கள் சமூகத்தின் புறக்கணிப்பைக்கூட ஏற்றுக்கொள்ளவேண்டும் .மாற்றம் படிபப்டியாக ஆனால் உறுதியாக நிகழும்”
சொன்னதை தானே செய்வதற்கும் காந்தி தயாரானார். மார்க் லிண்ட்லே கோராவுக்கும் காந்திக்கும் இடையேயான உறவைச் சுட்டிக்காட்டுகிறார். பிறப்பால் பிராமணரான கோரா தன் சாதியை துறந்தார்.அதற்காக அவர் வேலையை விட்டு துரத்தப்பட்டார். தலித் மக்கள் நடுவே சேவைசெய்த கோராவை 1944 ல் காந்தி தன் ஆசிரமத்துக்கு அழைத்து தன்னுடன் வைத்துக்கொண்டார்.//


//1945 ல் காந்தி எழுதினார். ”பெண்ணுக்கு எந்த தகுதி இருந்தாலும் திருமணம் ஒரே சாதிக்குள் என்றால் என் ஆசீர்வாதத்தை தயவுசெய்து கோராதீர்கள். அவள் வேறு சாதி என்றால் மட்டுமே நான் என் ஆசீர்வாதத்தை அனுப்புவேன்”//


//இனிமேல் கவனியுங்கள், காந்தியை அவதூறுசெய்து வெளியிடப்படும் எந்த ஒரு ஆய்வேட்டுக்கு அல்லது நூலுக்குப் பின்னாலும் ஓர் அயல்நாட்டு பல்கலைக் கழகம் இருக்கும். அல்லது ஏதேனும் ஒரு கிறித்தவ மதப்பரப்பு நிறுவனத்தின் நிதியுதவி இருக்கும்.//

--http://www.jeyamohan.in/?p=4103

 

[படம்: பிப்ரவரி 23, 1946 அன்று தாழ்த்தப்பட்டவர்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டபோது, முதல்முறையாக காந்தி அக்கோவிலுக்குள் செல்லும்காட்சி.
http://jssekar.blogspot.com/2009/08/blog-post_23.html]

 

சாதியின் இன்றைய நிலை

    • மக்களிடையே உருவாக்க படும் பரம்பரை பெருமை எனும் மந்தை குணமே இன்றைய சாதி நிலமைக்கு முதற் காரணமாக இருக்கிறது.
      • பரம்பரை பரம்பரையாக சிறுமை படுத்த பட்ட மக்கள், தங்களுக்கு அடிமையாக இருப்பதையே விரும்பும் தன் முனைப்பு
      • தங்களுடைய  தன் இன மக்கள் ”நாடாண்ட வம்சம்”, “கட்டியாண்ட வம்சம்” என்று போலி பெருமிதங்களின் மூலம் ஏற்றி விடப்படும் சாதி வெறி
    • பொருளாதார தேவைகள்
      • சில மக்களை அறியாமையில் ஆழ்த்தி அடிமை பணிகளில் ஈடுபடுத்தி பொருளாதார ரீதியாக சுரண்டுவது
      • பொருளாதார ரீதியாக முன்னேறிய தன் சாதி மக்களிடம் கிடைக்கும் பொருளாதார பலன்கள் எனும் நம்பிக்கை
    • திரிக்கப்பட்ட மத நம்பிக்கைகள்

      http://sabaritamil.blogspot.com/2010/04/blog-post.html

 

21ம் நூற்றாண்டில் சங்கங்கள் இல்லாத சாதியே இல்லை எனும் நிலைமை உருவாகி விட்டது, சாதி ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்பட்ட மிகப்பெரும் பின்னடைவு. ஒரு திறந்த சவால் என்னிடமிருந்து இன்றைய சாதி சங்க தலைவர்களில்,

  1. எத்தணை பேர் மனு நீதியை கேள்வி பட்டிருக்கிறார்கள்? (மனு நீதியின் மக்களை வகைப்படுத்தல் திரிக்கபட்டது)
  2. எத்தணை பேர் அந்நூட்களை பார்த்து இருக்கிறார்கள் ?
  3. எத்தணை பேர் அதன் பொருள் உணர்ந்து இருக்கிறார்கள்?
  4. எத்தணை பேர் அதனை ஏற்று கொள்கிறார்கள் ? (ஏனெனில் அதில் தவறாக கூறப்பட்ட பிரிவு மக்கள் கூட சாதி வெறியில் முன்னணியில் இருக்கின்றனர் !!!)

 

திரிக்கப்பட்ட வர்ணாசிரமம் மட்டுமே சாதிக்கான காரணமாக இருப்பது 21ம் நூற்றாண்டில் காலாவதியாகி விட்டது. பொருளாதார ரீதியான காரணம் பூதாகரமாக இருக்கிறது.  நோய்க்கான காரணம் ஒன்றாக இருக்க நாம் தவறான சிகிச்சை செய்து வருகிறோம் என்பதே சாதி சங்கங்கள் பெருகி இருக்கிறது என்பதற்கான காரணங்கள்.

 

காந்தியும், பாரதியும் குறை சொல்லும் முன்னர் அவர்களின் வாழ்க்கை, வாழ்ந்த சூழலையாவது தெரிந்து கொள்வதே அடிப்படை நேர்மை. இல்லையெனில் நாம் கூறும் கருத்துக்கள் நம்மை கோமாளியாகவே காட்டும்.

ஆயிரத்தில் ஒருவன் - படக்கதையை எப்படி அணுகுவது ?

  1. ஒரு பெண் தன் குழந்தைக்கு கொடுக்கும் முலையில் இருந்து இரத்தம் வருவதை(பஞ்சத்தினால்) தன் மன்னனுக்கு காட்டும் சித்தரிப்பு எந்த நவீன கதையிலாவது வந்திருக்கிறதா ?
  2. Time machineல் ஏறி 1000 வருடங்கள் பின்னோக்கி பயணித்து சோழர்களிடம் செல்லுவதை போன்ற அனுபவம் வேண்டுமா?
  3. இலங்கையில் நடந்த கொடூரங்கள் உங்களுக்கு காட்சியாக விளக்கப்பட வேண்டுமா ?

- அது தான் ஆயிரத்தில் ஒருவனின் கதை.

படக்கதையை எப்படி அணுகுவது ?

இக்கதை சரித்திரத்தை தழுவி எடுக்கப்பட்ட கற்பனை கதை. சோழர்களின் வரலாறு தெரிந்திந்தால் தான் கதையையே புரிந்து கொள்ள முடியும்.

தமிழன் என்று ஒரு வீரமிக்க இனம் இருந்தது.;)  அவர்களிடம் கொள்கை பிடிப்பும், மான உணர்ச்சியும் மிகுந்து இருந்தது. அவர்கள் ஒரு கால கட்டத்தில் தெற்காசியாவின் பெரும்பான்மையான இடங்களை தங்கள் அரசின் கீழ் ஆட்சி செய்தனர். அழிந்து போன அவ்வின மக்களின் உணர்ச்சிகளை திரும்ப பெறுவதற்கான ஒரு சிறு முயற்சி தான் இப்படம்!!!!

 

தமிழகம் + ஈழம் சரித்திரம்

இராஜேந்திர சோழனின் ஆட்சியில் ஒன்றுபட்ட தமிழ் அரசாங்கம் !!! wiki: Chola's empire and influence at the height of its power (c. 1050)

250px-rajendra_map_new

 

இப்படத்தில்

நாயகன்(பார்த்திபன்) - ? (Guess)

சோழ மக்கள் - ஈழ மக்கள்

பாண்டியர்கள்- இலங்கை அரசு

பாண்டிய படை - இராணுவம்

 

படம் பார்த்த பின் வரும் சந்தேகங்களும் விளக்கங்களும்

  1. நன்றாக இருக்கிறதா ? இல்லையா ?
    கார்த்தி, ரீமா, ஆண்டிரியா விற்காக செல்பவர்கள் படத்தின் முதல் பாதியிலும், தமிழிற்காக செல்பவர்கள் இரண்டாம் பாதியிலும் தங்களது டிக்கெட் விலையின் ஒவ்வொரு பைசாவிற்கான பலனையும் அனுபவிப்பது நிச்சயம். போதுமா ?
     
  2. சோழர்கள் அவ்வளவு தூரம் செல்ல இயலுமா?
    அக்கால சோழர்கள் கடற்போரில் & பயணத்தில் வல்லவர்கள் என்பதை மேலே உள்ள படத்தை பார்த்து புரிந்து கொண்டு இருந்திருப்பீர்கள். எனவே இளவரசன் உயிர் தப்ப தொலைதூர தீவிற்கு செல்லுதல் பிரச்சினையே இல்லை.
  3. ஹெலிகாப்டர் பயணம் ஏன் முதலில் இல்லை ?
    சோழ மக்கள் அடர்ந்த குகை பகுதியில் வசிப்பதாக காண்பிக்க படுகிறது. அவர்களுடைய இருப்பிடம் கண்டு பிடிக்க மற்றவர்களுக்கு ஓலைசுவடியை தவிர வேறு வழி இல்லை. ஒருமுறை கண்டு பிடித்தவுடன் அறிவியல் யுக மனிதர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் வருதல் எளிது.
  4. கிராபிக்ஸ் மட்டம் ?
    1000  கோடி ஆங்கிலப்படம் பார்த்து விட்டு கிராபிக்ஸ் பற்றிய விமர்சனம் எழுப்புபவர்கள் தயவு செய்து 300 கோடி கூட வேண்டாம் இன்னும் 30 கோடி கொடுத்தால் போதும் செல்வராகவன் மிகச்சிறப்பாக எடுப்பார் என்பதில் ஐயமில்லை. ;)
  5. ஆபாசம் ?
    இப்படத்தை பார்க்க குடும்பத்தவர்க்கும் சொல்லுங்கள்(13 வயதிற்கு மேல்). கண்டிப்பாக ”இராணி 6 இராஜா யாரு?”ல் வருவதை விட குறைவாகவே ஆபாசமான காட்சி அமைப்புகள் உள்ளன.
     
  6. விமர்சனம் செய்ய கூடாதா ?
    தாராளாமாக இப்படத்தை விமர்சனம் செய்யுங்கள். ஆனால் தமிழர்கள் நாம் எல்லோரும் ஒரு முறை படத்தை பார்த்து விட்டு, வெற்றியடைய வைத்து விட்டு விமர்சனம் செய்யுங்கள்.

 

இப்படம் தோற்கின் தமிழ் சினிமா உலகத்தை அடுத்த பரிணாமத்திற்கு கொண்டு செல்லும் நிகழ்விற்கு பலத்த பின்னடைவு ஏற்படும் என்பதில் ஐயமில்லை. நாம் இன்னும் குருவி, வேட்டைகாரன், வில்லு, பரமசிவன், வரலாறு போன்ற மக்கள் விரும்பும் (?) படங்களை பார்க்க நேரிடும் என்பதை நினைத்து பாருங்கள்.

அண்ணன் கேபிளார் தன்னுடைய கருத்தை வேறுவிதமாக ஏற்கனவே பதிவு செய்திருந்தாலும், இப்படத்தை மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் தனி இடுகை இட கேட்டு கொள்கிறேன். சுருக்கமாக சொல்வதெனில் பார்த்திபனுக்கும், செல்வராகவனுக்கும் தமிழக விருது நிச்சயம்; தேசிய விருதுக்கு மிகபிரகாசமான வாய்ப்பு உள்ளது.

 

இன்னுமா படத்தை பார்க்க கிளம்பவில்லை ?

தாந்திரிகம், காந்தி, காமம்- விளக்கங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

 

தங்களுடைய காந்தியும் காமமும் பற்றிய கட்டுரைகள் படித்தேன். இந்த கட்டுரைகளுக்கு சில நண்பர்களின் எதிர் வினைகள் மிக மன வேதனையை ஏற்படுத்தியது.  தியானம், மனவலிமை, பிரம்மச்சரியம், புலனடக்கம் பற்றிய தவறான பரப்புரைகள் மூலம் விளக்கங்கள் குறைவான  இன்றைய காலகட்டத்தில் உள்ளோம் . அந்நண்பர்கள் புரிந்து கொண்டது இவ்வாறு தான் என எண்ணுகிறேன்.


1. தாந்திரீகம் உடலுறவை ஊக்க படுத்த கூடியது
2. காந்தி தனது பேத்தியுடன் உடலுறவு கொண்டார்
3. பிரேமானந்தாவை போன்ற போலி சாமியார்

 

எனக்கு தெரிந்த வகையில் விளக்க முற்படுகிறேன். உண்மை என்ன என்பதை மேலும் தாங்கள் விளக்க வேண்டுகிறேன்.

இந்நிகழ்ச்சியில் ஈடுபடும் போது காந்தி ஒரு பிரம்மச்சாரி என்பதையும், உடலுறவை முற்றிலும் தவிர்த்தவர் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன். தியானம் & தாந்திரிகம் பற்றிய புரிதல் இல்லாமல் இந்நிகழ்வை எதிர்க்கும் நண்பர்களுக்கு விளக்க வேண்டி ஒரு உதாரணம் தர விரும்புகிறேன்.

 

  • தாந்திரீகத்தில் ஒரு வழி எல்லா பெண்களையும் தாயாக காணுதல். அதன் மூலம் உடலிச்சையை அகற்றுதல். (தாந்திரிகத்தில் மேலும் பல வழிகள் உள்ளன. காந்தி கடைபிடித்தது அவை அல்ல. அவை இங்கே பொருந்தி வரக் கூடியவை அல்ல.)
  • ஒரு மனிதன் தன் தாயின் உடலை முழு நிர்வாணமாக காண நேர்ந்தால் அது உடலிச்சையை தூண்டுமா ? அல்லது தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துமா ? அல்லது பக்தியுடன் தொழ தோன்றுமா ?
  • காந்தியின் தாயார் உயிருடன் இருந்திருந்தால் தன் தாயுடனும் இதே வகையான சோதனையை மேற் கொண்டிருப்பார். உண்மையில் மற்ற பெண்களிலும் தாயையே கண்டார் என்பது தான் இங்கு அடிப்படையே

 

மேலும் மேற்கண்ட நிகழ்வை சரியான வகையில் புரிந்து கொண்டால், 

  1. தாந்திரிகம் எனபது ஒரு கருவி. அது உடலுறவை இயற்கையின் ஒரு பகுதி என தியானத்தின் கருவியாக உபயோக படுத்துகிறது. உடலுறவை வளர்ப்பதும் இல்லை. எதிர்ப்பதும் இல்லை. தாழ்வு மனப்பான்மை கொள்வதும் இல்லை. 
  2. காந்தி ஈடுபடுத்தி கொண்டது அக்னி பரிட்சை கூட இல்லை. நெருப்பாற்றில் நீந்துவது. தனது பேத்தியுடன் இவ்வாறு இருந்தது (ஆடையின்றி தாயின் அரவணைப்பில் இருந்தது போல) உடலுறவிற்காக இல்லை. காந்தி என்பதே ஒரு உடல் இல்லை. உடலை துறந்தவன் என்பதை உணர்த்துவதற்கு ஏற்படுத்திய வழி.
  3. காந்தி ஒரு மகாத்மா 

என்பது யாவரும் ஒப்பு கொள்வர்.

 

தாந்திரிகம் என்பது மேல் நிலை தியானம். அது தியானம் பற்றி அடிப்படை கூட அறியாத பொது மக்களுக்கு அறிவிக்க படுதல் இது போன்ற எதிர்மறையான எண்ணங்களையே ஏற்படுத்தும். எனவே தான் இந்நிகழ்வுகள் பெரும்பான்மை மக்களுக்கு அறிவிக்க படுவதில்லை. தாந்திரிகத்தில் விருப்பப்படுபவர்கள் மட்டுமே அறிந்து கொண்டுள்ளனர்.

காந்தியின் மேல் சுமத்தபடும் அரசியல் குற்றசாட்டு    இதில் ஈடுபடுத்த பட்ட பெண்கள் பாலியல் ரீதியாக சுரண்ட பட்டனர் என்பது. இவ்வகை குற்றசாட்டுகளுக்கு வரலாற்று அறிவு பெற்ற நீங்கள் விளக்குவதே சிறப்பானதாக இருக்கும்.

காந்தியின் ஆசிரமத்தில் பிரம்மச்சரியமும், தாந்திரிகமும் பயிற்றுவிக்க பட்டதா ? இதில் ஈடுபடுத்த பட்ட பெண்கள் தாந்திரிகம் பற்றிய அடிப்படை அறிவு பெற்றவர்களா ?

 

தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்.

நன்றி
சபரிநாதன் அர்த்தநாரி.

பழந்தமிழ் அறிவியல் (http://www.tamilscience.co.cc/)

இன்றைய சாதியம் மத அடிப்படையிலானதா? - 2

இப்பதிவு எழுத தூண்டிய  பழமைபேசி பதிவிற்கு நன்றிகள். சாதி பற்றிய முந்தய பதிவையும் பார்த்து விடுங்கள்.

இப்பதிவில் சில முக்கிய விசயங்களை விவாதிக்கலாம் என்று உள்ளேன்.

 

  1. இன்று தமிழகத்தில் சாதி பெயரால் மக்கள் கொடுமை படுத்த படுவது நகரத்திலா ? கிராமத்திலா ?
  2. சமீப காலங்களில் சில பிரிவு மக்கள் தமிழகத்தின் தனி பகுதிகளில் கொடுமை படுத்த படுவது மத ரீதியானதா? பொருளாதார ரீதியிலா?

 

இன்றைய சாதியின் நிலை

எப்போதுமே சாதி என்பது பொருளாதார ரீதியானது தான். விவாசயத்தை மட்டுமே பெரிதும் நம்பி வாழும் அனைத்து கிராம நண்பர்களுக்கும் இது தெரியும். ஒரு கிராமத்தில் அதிக நிலம் வைத்திருப்பவர்கள் மட்டுமே ஆதிக்க சாதியினர். (உதாரணமாக கொங்கு பகுதியில் கவுண்டர், திருநெல்வேலியில் தேவர் இப்படி.) மற்ற பிரிவினர் இவர்களை நம்பியே வாழ வேண்டும். கூலி தொழிலாளிகளும், கீழ் நிலை தொழிலாளிகளும் மிக மோசமாக நடத்த படுகின்றனர்.

 

கிராமங்களில் தொழில் வாய்ப்புகளும் மிகக்குறைவு. எனவே ஒரு பிரிவு மக்கள் இன்னொரு தொழிலை ஆரம்பிக்கும் போது போட்டியாக இல்லாமல் பொறாமையாக மாறி மிகப்பெரிய கலவரங்களில் முடிகிறது. எனவே குறிப்பிட்ட சந்ததியினர் குறிப்பிட்ட தொழில் மட்டுமே செய்ய வேண்டுமென வற்புறுத்த படுகின்றனர். (சாதி வலியுறுத்த படுகிறது)

 

தொழில் வளர்ச்சி அதிகமாக உள்ள நகரங்களில் (சென்னை, கோயம்பத்தூர், திருப்பூர், சேலம், ஈரோடு) போன்ற நகரங்களில்  (மற்ற பகுதிகளை ஒப்பிட) சாதி வெறி குறைவாக உள்ளதையும், வாய்ப்புக்கள் குறைவாக உள்ள (மதுரை, திருநெல்வேலி) போன்ற நகரங்களில் சாதி பதற்றம் அதிகமாக உள்ளதையும் சுட்டி காட்ட விரும்புகிறேன்.

 

 

மத அடிப்படையில் ஏதேனும் ஆதாரம் உண்டா எனில் அதுவும் கிடையாது. (முந்தய பதிவு பார்க்க). இன்றைய சாதிக்கு மனு தர்மம் எனும் கூச்சல் பொய்யே தவிர வேறொன்றும் இல்லை. எந்த ஆதிக்க சாதியினர் மனு தர்மத்தை படித்து விட்டு அதனால் தான் சாதி இருக்க வேண்டும் என்று கூறுகிறார் ? அதே போல மதமாற்றம் செய்யப்பட்ட மக்களும் சாதி கொடுமையிலிருந்து தப்பி விட்டார்களா ? இல்லை எனும் பதிலே கிடைக்கிறது !!! அங்கேயும் அதே கொடுமை.

 

திராவிடர் கழகங்களும் சாதி ஒழிப்பு வேலை செய்யாமல் மற்ற பிரிவு மக்களை தூண்டி விட்டதால் தான் இன்று தமிழர்கள் கூறு பட்டு கிடக்கின்றனர். ஏகப்பட்ட சாதி சங்கங்கள் உருவாகி இருக்கின்றன. அவற்றை வைத்து ஓயாமல் சாதி அரசியலும் நடைபெறுகிறது. இல்லக்கில்லாமல் அம்பு எய்வதால் தான் சாதி ஒழிப்பு நடைபெறவே இல்லை. மாறாக சாதி சங்கங்கள் பெருகி உள்ளன. மராட்டியர்களும், கன்னடர்களும் போன்ற பிற மாநிலத்தவர் மொழியால் ஒன்று படும் போது தமிழர்கள் ஒன்று பட முடியாமல் செய்வது இது போன்ற அமைப்புகள் தான். இவ்வகை பிரிவினை ஏற்படுத்தியதற்கு திராவிட கழங்களே முழு பொறுப்பு ஏற்றாக வேண்டும்.

 

சாதி ஒழிய என்ன செய்ய வெண்டும் ?

  1. கிராமங்களில் தொழில் வளர்ச்சி அதிகரிக்க பட வேண்டும்.
  2. அனைத்து பிரிவு மக்களுக்கும் சமமான முறையில் கல்வி வாய்ப்பும், வேலை வாய்ப்பும் வழங்க பட வேண்டும்,
  3. முதலில் அனைத்து சா(ச)தி சங்ககளும் கலைக்க பட வேண்டும். (மேல் தட்டு பிரிவினர் என கூறி கொள்பவரும், கீழ் தட்டு பிரிவினர் என கூறி கொள்பவரும்)
  4. ஒவ்வொரு பிரிவினரும் மற்ற பிரிவினரின் போட்டியையும் ஏற்று கொள்ள பழக வேண்டும்.

 

இவை இல்லாமல் சாதி ஒழிப்பு சாத்தியமாகாது.

இந்தியாவின் ஜாதகமும், வரலாறும்: சோதிட ஆதாரங்கள்

சோதிடத்தை பற்றி அன்மைய காலங்களில் பெரும் விவாதக்கள் நடந்து கொண்டுள்ளது நாம் எல்லோரும் அறிந்ததே. இவ்விவாதங்களில் ஒரு நண்பர் சோதிடத்தின் பயன் என்ன என்பதை அறிவியல் பூர்ணமாக நடைமுறையில் உணர்த்த முடியுமா என கேள்வி எழுப்பி இருந்தார். இக்கேள்வியிலும் நியாயம் உள்ளது. சோதிடத்தின் அடிப்படைகளை அறிந்து கொண்டுள்ள ஒருவன் என்பதால் என் சிற்றறிவிற்கு எட்டியவரை விளக்க முயல்கிறேன். 

சோதிடத்தின் பயன் என்ன?

சோதிடம் என்பது உங்களது வாழ்க்கையின் அத்தனை வருங்கால நிகழ்ச்சிகளையும் படம் பார்ப்பது போன்று காட்டாது. இது ஒரு கை விளக்கின் உதவியின் வழியே தொலைதூர பாதையை பார்ப்பது போன்றது தான். இது கண் பார்வை அற்றவருக்கு கைத்தடி கொடுக்கும் பலனை கண்டிப்பாக கொடுக்கிறது.

சோதிடம் பார்ப்பது பற்றிய அடிப்படை புரிந்துணர்வு இல்லாததே பெரும்பாலான பிரச்சினைகளுக்கு காரணமென நினைக்கிறேன். வளர்ப்பதற்கு ஆடு வாங்கலாமா? கோழி வாங்கலாமா? என்பதை பார்ப்பவர்களை கூட அறிந்திருக்கிறேன். மனிதர்கள் இயல்பாகவே எதிர்காலத்தின் இயல்புகளை அறிய இயலாதவர்களாக உள்ளனர். வருங்காலத்தை கணிக்க இயலாத சாதரண மானுடர்களுக்கு ஆறுதல் தந்து மனத்துயர் துடைக்கும் கருவியாக தான் சோதிடம் உள்ளது.

சோதிடம் என்பது வானியலையும், கணிதத்தையும் அடிப்படையாக கொண்டது. ஒரு செயலை அறிவியல் பூர்ணமாக நிரூபிக்க அக்கணிதத்தை யார் செய்தாலும், எந்த சூழ்நிலையில் செய்தாலும் ஒரே பலன்களை தான் தர வேண்டும்  என்பது அடிப்படை விதி. கீழ்கண்ட கணிதங்களை வாக்கிய பஞ்சாங்கத்தின் படி செய்து பாருங்கள். இதில் குறிப்பிட்ட கிரக அமைப்புகள், கால நேரங்கள், தசாபுத்திகள் துல்லியமானதாக இருக்கும். (It's consistent) இவற்றிலிருந்து சோதிடத்தின் பலனை நடைமுறையில் நாம் உணரலாம்.

இந்தியாவின் நிலை என்ன ?

 india chart

பிறந்த இடம்: டெல்லி
ஜென்ம நட்சத்திரம்: பூசம்
லக்கினம் ரிஷபம்
பிறந்த மகா திசை இருப்பு: சனி மகா திசையில் - 18 வருடங்கள்- 0 மாதங்கள்-14 நாட்கள்: 29.08.1965 வரை

புதன் திசை 17-00-00: 29.08.1982 வரை
கேது திசை 7-00-00: 29.08.1989 வரை

சுக்கிர திசை 20-00-00: 29.08.2009 வரை

இப்போது சுக்கிர திசையில் கேது புத்தி: 06/2008 - 08/2009

 

சுதந்தரமடைந்த போது நிலை என்ன?

இதில் லக்னத்தில் (Asc) ராகு(Ra) இருப்பதையும், 6ல் குரு(Ju) இருப்பதையும், 7ல் கேது(Ke) இருப்பதையும் குறித்து கொள்ளுங்கள். இந்தியா சுதந்திரமடைந்த போது முழு பிரசவமாக இல்லாமல்,  பல கூறுகளாகவும் (இந்தியா, பாகிஸ்தான் (,பங்களாதேஷ்), இலங்கை, நேபாளம், பூடான், பர்மா) அவற்றிற்கிடையே பிரச்சிணைகளையும் பிரித்தாணியர் விட்டு சென்றதையும், நாட்டின் பஞ்ச நிலையையும் தெளிவாக காட்டுகின்றன.

ராகு கிரகமும், சனி கிரகமும் நம் நாட்டின் சூழ்நிலைகளை எந்த  அளவிற்கு எடுத்து காட்டியுள்ளன என்று பார்ப்போம்.

 

ஏழரை சனி -1: 1947 முதல் 09/1950 வரை

இந்தியா பிறக்கும் போதே அதற்கு ஏழரை சனி பிடித்திருந்தது கூர்ந்து நோக்க தக்கது.

  1. பிரித்தாணியரின் இன, மத  பிரித்தாளும் சதியால் கோடிக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.
  2. பாகிஸ்தானுடன் காஷ்மீர் போரையும் தந்தது. மூன்றில் ஒரு பங்கு நிலம் பாகிஸ்தான் வசம் போனது.

சனி திசை ராகு புத்தி: 04/1960 முதல் 02/1963 வரை

1962 சீன யுத்தம் தோல்வி

அஷ்டம சனி -1: 01/1964 முதல் 12/1966 முடிய

  1. May 27, 1964 பிரதமர் நேரு இறப்பு
  2. 1965 இரண்டாவது காஷ்மீர் போர் இந்தியாவிற்கு பிரயோசனமின்றியும் எவ்வித முடிவுமின்றியும் முடிந்தது.

ஏழரை சனி -2: 06/1973 முதல் 06/1980 முடிய

  1. புதன் திசை ராகு புத்தி: 02/1975 முதல் 09/1977 வரை: 1975-1977 எமர்ஜென்சி
  2. 1977 ஜனதா பார்ட்டி அரசு, இந்திரா கைது, அரசியல் நிரந்திரமின்மை, அரசு கவிழ்வு

கேது திசை சனி புத்தி: 07/1987 முதல் 09/1988 வரை

10/1987-1990: இலங்கை யுத்த தோல்வி

அஷ்டம சனி -2: 03/1993 முதல் 02/1996 முடிய

  1. 12 March 1993 - Series of 13 bombs go off killing 257 (சுதந்திர இந்தியாவில் பயங்கரவாதம் ஆரம்பம் )
  2. 1995ல் அப்போதைய பஞ்சாப் முதல்வர் Mr.Beant Singh பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்.

சுக்ர திசை ராகு புத்தி: 10/1996 to 10/1999

  1. February 14, 1998 கோயம்பத்தூர் குண்டு வெடிப்பு (தென்னிந்தியாவில் பயங்கரவாதம் ஆரம்பம்)
  2. June 1999  கார்கில் போர்: இந்திய பகுதிகள் பாகிஸ்தானால் ஆக்கிரமிப்பு

தொடரும்...

[அடுத்த பாகம்: இந்தியாவும், நிகழ்கால சூழ்நிலைகளும்]