அலசல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அலசல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஒரு பல்கலை கழகமும் அதன் நிர்வாக சீர்கேடுகளும்


எனக்கு தெரிந்து தமிழகத்திலேயே மட்டமான பல்கலை கழகம் என ஒன்று இருந்தால் அது சேலத்தில் உள்ள ஒரு (?) பல்கலை கழகமே. (சமீபத்தில் அங்கு பயிற்றுவிக்க ஒரு பட்ட படிப்பிற்கு அங்கீகாரமே கிடையாது என டி.இ.டி அறிவித்து விட்டது படித்தவர்களுக்கு ஆண்டுகள், பணம், முயற்சி, உடலுளைப்பு என அணைத்தும் பட்டை நாமம்) அதற்கு பிறகு தாராளமாக சிதம்பரத்தில் உள்ள ஒரு (??) பல்கலை கழகத்திற்கு இரண்டாம் இடம் கொடுக்கலாம். அவர்களின் வேலை செய்யும் திறன் அப்படி.

அங்கு படிப்பவர்களின் எண்ணிக்கை, வேலை செய்பவர்களின் எண்ணிக்கையும் சமம் என்று ஒருவர் கிண்டலாக சொன்னார். சரி நல்லது தானே எல்லா வேலைகளையும் உடனுக்குடன் முடியும் என நிணைத்தீர்கள் எனில் அது தான் தவறு.  அங்கு வேலை இல்லாதவர்களுக்கு அங்கு வெட்டி வேலைகள் “உருவாக்க படுகின்றன” போல. இன்னும் கணிணி மயமாக்க படாத ஒரே  பல்கலை கழகம் தமிழகத்திலேயே ”இது”வாக தான் இருக்கும். அங்கு சென்ற போது வேலை செய்பவர்கள் அணைவரும் பேப்பர் மலைகளுக்கு நடுவே உட்கார்ந்து கொண்டிருந்தனர். அந்த தகவல் களஞ்சியத்தை நிர்வகிப்பது தான் அவர்களுக்கு வேலை போல. ஒரு சிறந்த கணிணி மையம் 1 நிமிடத்தில் செய்ய கூடிய வேலைகளை 2 மாதம் செய்வது தான் அவர்களது ”சீரிய பணி”.

என் சோக கதைய கேளு தாய் குலமே :( !!

எனது நெருங்கிய உறவினர் ஒருவர் இப்பல்கலைகழகத்தில் ஒரு பட்ட படிப்பை படித்து எல்லா பரிட்சைகளிலும் தேறினார். எல்லா கட்டணங்களும் கட்டிய பிறகும் சர்டிபிகெட் வரவில்லை. உள்ளூர் பயிற்சி மையத்தை பலமுறை அணுகிய பிறகும் அவர்களிடம் தேவையான தகவல் இல்லை. முதல் 6 மாதம் ”எங்க  பல்கலை கழக வழக்கமே 6 மாதத்திற்குள் சர்டிபிகெட் கொடுப்பது தான் பொறுமையா இருங்க” எனும் பதில் பெருமிதமாக வந்தது.

பிறகு ஒவ்வொரு முறையும் சிதம்பரத்திற்கு போன் செய்து தான் விசாரிப்பார்கள். ஒரு முறை மழை அதனால் சிதம்பரத்தில் இண்டெர்நெட் வேலை செய்யவில்லை என பதில். பிறகு ஊழியர்கள் வேலை நிறுத்தம் என பதில் என ஒவ்வொரு முறையும் ஒரு சுவாரஸ்யமான, ஆனால் மட்டமான, காறி துப்ப கூடிய வகையில் ஒரு பதில்.

கடைசியாக அவர்களின் மாபெரும் தகவல் களஞ்சியத்தில் கண்டுபிடித்து 50 ரூபாய் கட்டணத்தில் நிலுவை என்று பதில் வந்தது. அது எப்படி ரூ 50 மட்டும் நிலுவை வருமாறு ஒரு பீஸ் இருக்கும் என புரியவில்லை. அதை பற்றி கேட்பதற்கும், திரும்ப பதில் வருவதற்கும் தகுந்த ஜந்துகள் இருக்கும் என நம்பிக்கையை இழந்து விட்டதால் கேள்வி ஏதுமின்றி 50 ரூ டிடி எடுத்து அனுப்பினேன்.

உடனே சர்டிபிகெட வந்திருக்குமே என நிணைத்தால் அது தான் தவறு. வழக்கமான பதில் “2 மாதத்திற்குள் கண்டிப்பாக வந்து விடும்”  என பொறுமை காக்க சொன்னார்கள். 2 மாதம் கழித்து டிசி மட்டும் வந்தது  டிகிரி சர்டிபெட் நஹி.

மறுபடியும் உள்ளூர் படிப்பு மையத்திற்கு படையெடுப்பு. மறுபடியும் தகவல் தோண்டல்கள். கடைசியாக ஒரு முடிவு செய்து ஒரு தீர்க்கமான பதில் சொன்னார்கள். “சார் எங்களுக்கு சரியா தெரியல. நீங்க நேரடியாக சிதம்பரம் போய் பாருங்க உடனேயே பிரச்சிணைகளை சரி செய்து சர்டிபிகெட் வாங்கி வந்து விடலாம்” என பெருமிதத்துடன் சொன்னார்கள்.

”நாயுக்கு வாழ்க்கை பட்டால் சேர்ந்து குலைச்சு தான் ஆகணும்” எனும் பழமொழியை நிணைவு படுத்தி கொண்டு மனதை திடப்படுத்தி கொண்டு சிதம்பரமும் சென்று பார்த்த அனுபவத்தின் போது தான் மேற்கண்ட ஒரு தெளிவான முடிவிற்கு வந்தேன்.

சரி போய் பார்த்த பிறகாவது பிரச்சிணை முடிவிற்கு வந்து விட்டது என நிணைத்தால் அது தான் இல்லை.

1. தகவல் மையத்தில் சேவைக்காக 5 பேர் உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். அதில் ஒருவர் மட்டும் காத்திருக்கும் நூற்றுகணக்கானவரை  ஒரே வரிசையில் நிற்க வைத்து சிடுசிடுப்புடன் கண்ட படி எரிந்து விழுந்து சேவை செய்வார். மற்ற அணைவரும் அவரின் சேவையை பார்த்து வியந்து கொண்டும், நாளிதழ்கலின் செய்தியை வாசித்து கொண்டும் சேவை செய்வார்கள்.

2. உண்மையில் அவரிடம் பிரச்சிணைகளை தீர்க்க தேவையான எந்த தகவலும் இருக்காது. 1, 2ம் மாடியில் இருக்கும் காகித மேலாண்மை வாதிகளிடம் தான் இருக்கும். எழுதி வாங்கிய தகவல்களை மேலேயும் கீழேயும் கொண்டு சேர்க்க ஓட மட்டும் ஒருவர் இருக்கிறார். (இத்தணைக்கும் அவர்களுக்கு நடுவே இண்டர்காம் போன் வசதி உண்டு).

3. டிசி நிர்வாகம் செய்யும் குழு வேறு, டிகிரி சான்றிதல்  நிர்வாகம் செய்யும் குழு வேறு எனவே நீங்கள் பணம் கட்டியது எங்களுக்கு தெரியவில்லை என சொல்லி உடனேயே தற்காலிக டிகிரி சான்றிதல் அளிக்க பட்டது.

4. அதன் பிறகு நடந்தது தான் உச்ச கட்ட கொடூரம். கன்சாலிடேடட் மதிப்பெண் சான்றிதழ் கேட்ட போது உங்களின் மதிப்பெண் சான்றிதல்கள் அணைத்தையும் நகல் எடுத்து தறுமாறு கேட்டனர். ஏனெனில் அவர்களிடம் ஒரு மாணவர் அதே பல்கலைகழகத்தில் எடுத்த மதிப்பெண் தகவல்கள் கூட இல்லை போல. அல்லது எடுத்து கொடுக்க துப்பு இல்லை.

5. சரி போகட்டும் என கான்வகேசன் சான்றிதழ் கேட்ட போது அந்த மனுவை நேரடியாக வாங்க கூட மறுத்து விட்டனர். ஒரு பெட்டியில் போடுங்கள் தேவையான நடவடிக்கை “உடனே” எடுக்க படும் என பெருமிதமாக பதில் வந்தது.

6. ந”ம்ப்ப்”பி பணம் கட்டிய இரசீதையும் மனுவையும் பெட்டியில் போட்டு விட்டு வந்து இரண்டு வாரமாகிறது இன்னும் சான்றிதழ்  வரவில்லை. நேற்று சிதம்பரத்திற்கு நேரடியாக தொலைபேசியில் கேட்ட போது கிடைத்த பதில் “பெட்டியில் போட்டு இரண்டு வாரம் தானே ஆகிறது சான்றிதழ் வர இரண்டு மாதம் வரை ஆகும் பொறுமையாக இருங்க” என கடுகடுப்புடன் தொடர்பு துண்டிக்க பட்டது.

சுபமஸ்து...து..து...து...

கூடுதல் தகவல்
கான்வகேசன் சான்றிதழ் பணம் கட்ட வரிசையில் நின்ற போது, 25 வயதுள்ள சில மாணவர்கள் அதே பல்கலை கழகத்தில் வேலை செய்யும் ஒரு பெண் பேராசியரை ஆபாசமாக வசை மொழியில் கிண்டல் செய்து கொண்டிருந்தனர். விசாரித்த போது அம்மாணவர்கள் Phd படிக்கிறார்களாம் (எதிர்கால பேராசிரியர்கள் ?) ஃபீஸ் செமஸ்டருக்கு 1,10,000ருபாய். :(

வாங்க சாதியை ஒழிக்கலாம் [நகைச்சுவை பதிவு]

நேற்று நடந்த விவாதத்தின் கடுமையை குறைக்கும் பொருட்டு எழுதிய பதிவு. நகைச்சுவையாகவே நண்பர்கள் எடுத்து கொள்ள வேண்டுகிறேன்.

 

பதிவுலகின் ஒரு பகுதியில்

பதிவின் கருத்து: பார்பனீயம் என்றால் என்ன என்பதற்க்கு சரியான அர்த்தம் தெரியாமல் அல்லக்கைகள் நம்மிடமே சண்டைக்கு வருகின்றன!

 

உரையாடல் 1:

[2008]

நண்பர் 1-: பார்பனியம் எனும் சொல் சிறு வயதில் பிராமணர்களை குறிக்கும் என கேள்வி பட்டிருக்கிறேன்

[2010]

நண்பர் 1: பார்பனியம் என்ற சொல் பாமர மக்களுக்கு என்ன வென்றே தெரியாது

நண்பர் 2: சரி கூகிள் ஐயா என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்

[ Results 160,000 for பார்ப்பான். சில நிமிடங்களுக்கு பிறகு]

நண்பர் 1: பார்ப்பனியம் என்பது இப்போது திராவிடிஸ்டிகளால் தவறாக பயன்படுத்த படுகிறது

நண்பர் 2: பார்ப்பனியம் என்ற சொல்லே திராவிடர் கழகத்தினர் கண்டு பிடித்தது. பார்ப்பான் என்ற சாதி சொல்லில் இருந்து உருவானது. அது அப்போதய கால கட்டத்திற்கு தான் சரி.

 

உரையாடல் 2

நண்பர் 1: இப்போது பார்ப்பான் என்பது சாதியை குறிக்காது

நண்பர் 3: ஆனால் குடுமி வெளியே தெரியும்

நண்பர் 4: ஆம் துள்ளி வந்து குதிப்பான். அரிக்கும்

 

உரையாடல் 3

நண்பர் 2: நீங்கள் பார்ப்பனியம் என்று சொல்வதால் சாதி வெறியர்களுக்கு உறைப்பதில்லை. மதம் என்பது இப்போது பெரிய விசயமில்லை. பொருளாதார சுரண்டல்கள் அதிகமுள்ளன.

நண்பர் 5: சாதி, ஜாதிய அடுக்கு, வர்ணாசிரமம், வர்ண அடுக்கு, பார்பனியம்- அப்பாடா கோர்வையா வந்துருச்சு

நண்பர் 6: வர்ணாசிரமம் பார்ப்பனர்கள் தங்கள் மதம் மூலம் கண்டுபிடித்தது எனவே சாதி வெறியர்கள் பார்ப்பனர்கள்

நண்பர் 7: ஆம். வருணாசிரம கருமாந்திரத்தை ஒழிக்க மதம் மாறுவது தீர்வே இல்லை. வருண அடுக்கில் மேலே உள்ளவர்களாக பார்பனர்கள் தங்களை அறிவித்துக் கொண்டுள்ளனர்.

 

[மீண்டும் உரையாடல் 1ஐ படியுங்கள் :))]

 

சாதியை ஒழிச்சரலாமா பாஸ் ?!

உண்மை வாழ்க்கையின் ஒரு பகுதியில்

நண்பர் 1:  நமக்கு இருக்கிற வேலை பளுவிற்கு எதற்கு இந்த வெட்டி விவாதம் அதனால் என்ன பயன் ?

நண்பர் 2: நாம் எழுதுவது யாராவது ஒருத்தர் மனதையாது யோசிக்க வைச்சா நல்லது தானே பாஸ்  நாம் மட்டும் பதிவு போட்டு சாதியை ஒழிக்க முடியுமானால் எல்லோரையும் கெஞ்சி கேட்டாவது பதிவு எழுத வைப்பேன்.

நண்பர் 1: பதிவு போட்டு சாதி ஒழியும் என்றால் ”கழுத்தில் கத்தி வைத்தாவது ஒவ்வொருத்தனையும் பதிவு எழுத வைப்பேன்”

 

நண்பர்களின் சிரிப்போலியுடன் பதிவு முடிகிறது :))

 

பூனை கண்ணை மூடி கொண்டால் அதற்கு உலகம் இருண்டு விடும் என்ற பழமொழிக்கு நல்ல விளக்கம் கிடைத்தது. உண்மையில் மிகப்பெரிய தடுமாற்றங்களே நல்ல கருத்துக்களை வெளியிட தூண்டுகோலாக அமைகிறது. அர்சுனனின் தடுமாற்றத்தின் விளைவு கண்ணன் தந்த கீதை. நேர்மையான விவாதம் நடத்த முற்பட்டால் வால் பையன்களின் தடுமாற்றமும் நல்ல விளைவுகளை ஏற்படுத்தலாம் ...

அங்காடி தெரு - அடித்தட்டு மக்களின் பிம்பம்

1227005292ஒரு திரைப்படத்தினுடைய வெற்றியின் அளவுகோல் ”தன்னையும் பார்வையாளனையும் ஒன்றிணைத்து எவ்வளவு தூரம் அவனது உணர்வுகளை பகிர்ந்து கொள்கிறது” எனில் அங்காடி தெரு என்பது மிகப்பெரிய வெற்றிபடம் என்பதில் ஐயமில்லை. படத்தின் அடுத்தடுத்த காட்சிகள் அடித்தட்டு, நடுத்தர மக்களின் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளின் அடிப்படையில் அமைந்திருப்பதால் எளிமையுடன் ஒன்றி விட முடிகிறது.

 

அங்காடி தெரு படம் பார்க்கும் போது எதிர்பாராத சில நேர்மறை சிந்தணைகளை உடைய மனிதர்களை உணர முடிந்தது, படமானது சில எதிர்மறை குணாதிசயங்களை காண்பிப்பதாக பல வலையுலக விமர்சனங்கள் மூலம் படித்திருந்த போதிலும். ஒரு வேளை அதிகமாக விமர்சனங்களை படித்ததன் காரணமாக அப்படிபட்ட காட்சிகளின் மேல் ஏற்பட்ட சுவாரஸ்ய குறைபாடு காரணமாக இருக்கலாம்.

 

 

 உண்மையான ஹீரோயிசம்

  • எளிய மனிதர்களின் இனிய காதல் உணர்வில் ஆரம்பிக்கிறது படம்.
  • தான் கட்டடம் கட்டும் தொழில் செய்தாலும் தன் மகனை பொறியியல் படிக்க வைக்க நினைக்கும் தந்தை.
  • ”பொறியியல் படிக்க வைத்தாலும் என்னை என்ன ஃபாரினிலா படிக்க வைத்தாய்” என்று கேட்கும் மேல்குடி இளைஞர்கள் நிறைந்த நாட்டில் நல்ல மதிப்பெண் எடுத்தாலும் குடும்ப சூழ்நிலை கருதி அடிமை தொழிலுக்கு சென்றாவது குடும்பத்தை காக்க நினைக்கும் பொருப்பு மிக்க இளைஞன் பாத்திரம்.
  • தன் நண்பனுக்காக அவனுடன் செல்லும் விடலை தனமான ஆனால் நம் இளம் வயதில் சந்தித்த நேர்மையான நண்பர்கள்.
  • எப்படிபட்ட சூழ்நிலையில் கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முன்னேற துடிக்கும் அங்காடி தெருவின் கடின உழைப்பாளிகள்
  • வேலை வெட்டி இல்லையெனிலும் அழகான பெண்ணை பார்த்தவுடன் மயங்கி விடுவதாக காட்டும் படங்கள் மத்தியில் “அவள் அப்படி ஒன்றும் அழகில்லை” என பழகி பார்த்து ஆன்மாவை காதலிக்கும் எதார்த்த நாயகன்/நாயகி
  • ”யானை வாழும் காட்டில் தான் எறும்பும் வாழ்கிறது” என சீறும் நாயகன்
  • தன் இரு கால்களையும் இழந்து தன் எதிர்காலத்தை முழுதும் தொலைத்த நாயகியிடம் “நாம் இப்பவே கல்யாணம் செய்துக்கலாம் கனி” என்னும் ஒற்றை வாக்கியத்தில் ஒரு முழு வாழ்வின் காதலையும் வெளிப்படுத்தும் காதலன்.
  • என்றாவது முன்னேறி விடுவோம் என்பதன் அடிப்படையில் உழைத்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான தமிழர்களின் எதிர்கால நம்பிக்கை படத்தின் முடிவு

 

எந்த ஒரு கடின சூழ்நிலையையும் தங்களால் முடிந்த அளவு நேர்மையாக எதிர்க்கும் சுய மரியாதை உணர்வு தான் படத்தின் அடி நாதம். காதல் தோல்வியில் தற்கொலை, பரிட்சை தோல்வி தற்கொலை,  பஞ்சு முட்டாய் தரவில்லை என தற்கொலை முதலிய நிரம்பிய சமூகத்தில் போராடும் உணர்வை வாழ்வின் அடி நாதமாக வெளிப்படுத்தும் இயக்குனர் & கதாசிரியருக்கு வாழ்த்துக்கள்.

சாதி இல்லாத தமிழினம் !! (சாதியமும், சுயவஞ்சகமும்)

சமீபத்தில் சாதியை தமிழினத்திலிருந்து முற்றிலுமாக நீக்கும் அதி முக்கிய கண்டு பிடிப்பு வலையுலகில் நடந்திருக்கிறது.  இக்கண்டுபிடிப்பின் படி தமிழர்களிடம் சாதி இல்லை என்பதை கீழ் காணும் வகையில் சுலபமாக  நிறுவ முடியும்.

 

      1. சாதி இந்து மதத்தில் உள்ளது
      2. சாதி ஜீன் வழி பரம்பரை பரம்பரையாக வருகிறது
      3. தமிழர்கள் இந்துக்கள் அல்ல & பார்ப்பனர்கள் தமிழர்கள் அல்ல
      4. எனவே ஜீன் வழி பார்பனர்கள் சாதி வெறி பிடித்தவர்கள். என் ஜீன் வழி நான் சாதி வெறி பிடித்தவன் இல்லை (கூடவே என் பரம்பரை மக்களும் சாதி வெறி பிடித்தவர்கள் இல்லை! எப்பூடி ??)

 

ஆகவே சாதி ஒழிப்பு செய்ய சுலபமான வழி நான் ஒரு இந்து இல்லை என உரக்க கூவி கொண்டே சரஸ்வதி மந்திரம் சொல்வது தான். நீங்கள் சைவம், வைணவ, இஸ்லாமிய அல்லது கிறிஸ்தவ மதங்களில் ஒருவர் ஆகிவிடுவீர்கள் உங்களுடைய பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குறிய ஜீன் தொடர்பு உடனடியாக அறுக்க பட்டு உடனடியாக சுய பாவ மன்னிப்பு வழங்கப்படும். உங்கள் முன்னோர்கள் செய்த சாதிய விசத்திற்குரிய குற்ற உணர்வை கூட நீங்கள் எளிமையாக விட்டு விடலாம்.

 

சாதியத்தின் நவீன முகங்கள்

மக்களிடம் மாட்டி கொண்ட திருடர்கள் ஒருவருக்கொருவர் குற்றம் கூறி தான் யோக்கியவான் என்று நிரூபிக்க முயல்வது போல், இன்றைய சூழ்நிலையில்  ”பார்ப்பனீயம்” & ”உயர் சாதியம்” என்பவர்கள் அடித்து கொள்வது கீழ் தரமானது. பார்பணியம் என்று கூவுபவர்களில் சிலர் மற்ற உயர் சாதியினராய் இருப்பதிலும் அவர்கள் தங்களை முற்போக்காளர்களாக காட்டி கொள்ள முனைவதிலும் உள்ள குரூரம் சாதாரணமானதல்ல.

இன்றைய தினத்தில் சாதியத்தை எதிர்க்க காரணம் ஒரு குறிப்பிட்ட சந்ததியினரை அறியாமையில் ஆழ்த்தி, உழைப்பை சுரண்டி கொழுக்கும் திருட்டு சமூகத்தின் காட்டு மிராண்டித்தனம் தானே ? இன்று சாக்கடை சுத்தம் செய்யும் நண்பரின் உழைப்பை வேண்டாத மத, சாதி அமைப்புகள் எவை ?

வேறு இன காரர்களுக்கு தனி பாத்திரங்களை தரும், அவர்கள் உணவருந்தியபின் இடத்தை சுத்தம் செய்யும் முட்டாள்கள் இருக்கும் நாட்டில் தான், தன் சொந்த கிராம மக்களை தன் வீட்டிற்கு உள்ளே வரக்கூட அனுமதிக்காத மேல்(?) இன ஈனப்பிறவிகளும் இருக்கின்றன.

எந்த மனிதனும் ஆரிய பவனிற்கு சென்று உணவருந்த முடிகிற இக்காலத்தில் தான், மக்கள் தன் சொந்த கிராமத்திலுள்ள உணவகத்தின் அருகில் கூட செல்ல இயல முடியாத நிலை உள்ளது.

காதலை பயன்படுத்தி தன் இனத்தை பெருக செய்யும் இனப்பெருக்க ஜந்துக்கள் இருக்கும் நாட்டில் தான், காதலர்கள் தேடி பிடித்து கொல்லும் காட்டு மிராண்டிகளும் இருக்கின்றனர்.

உட்பிரிவுடன் கூடிய இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்த கூடிய சூழ்நிலையில் தானே அடித்தட்டு மக்களிடையே கூட ஒற்றுமை உள்ளது ? 90 வயது பெரியவரும் 9 வயது சிறுவனின் முன் செருப்பை தூக்கி கொண்டு நடப்பதும் அச்சிறுவன் அம்முதியவரை “வாடா முனியா” என்று அழைப்பதும் எந்த இனம் ?

எனவே என் ஜீன் உயர்ந்தது என்று கூறும் யோக்கியம் எந்த வெங்காயத்திற்கும் கிடையாது.

 

சுயவஞ்சகம்

சாதியம் தவறானது அதை முன்னோர்கள் செய்தனர் என்பது சரி. அதனால் குற்ற உணர்வு கொள்வது வரை சரி தான். அக்குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட தாங்கள் யோக்கியவான்கள் என்பதை காண்பிக்க ”சாதி என்பது பார்ப்பனியம் மட்டும்” எனும் பிரச்சாரம் நடந்தால் அது தன்னை தானே ஏமாற்றி கொள்ளும் சுயவஞ்சகம் தான்  அது தமிழினத்தை மீண்டும் ஒரு சாதிய படுகுழியிலேயே தள்ளும்.

 

உங்களுக்கு உண்மையிலேயே குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட மனசாட்சியுடன் சிந்தித்தால்

  1. உங்கள் மனதிலிருந்து உம்முடைய பரம்பரையின் உயர்வு நவிர்ச்சி மனப்பான்மையை தூக்கி எறியுங்கள்
  2. மனிதர்களிடையே உயர்ந்தவன் என்பதும் தாழ்ந்தவன் என்பது பிறப்பின் வழி இல்லையென உங்களுடைய குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்கள்.
  3. முடிந்தவரை ஒடுக்கபட்டவர்களுக்கு உறுதுணையாயிருங்கள்

இவைதான் தமிழினத்திலிருந்து சாதியை ஒழிய செய்யும்; ”பார்ப்பனிய கொள்கை” பரப்புதல் அல்ல

 

இப்பதிவின் மூலம் சாதியை பார்ப்பணீயம் என்று பிரச்சாரம் செய்பவர்களும், நான் இந்த சாதியை சேர்ந்த மேலானவன் என்று அடையாளம் காட்டுபவர்களுக்கும் கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

 

இப்படிக்கு,

தனக்கு கீழே சிலரை வைத்து மிருக குணத்தையும், தனக்கு மேலே சிலரை உயர்த்தி அடிமை புத்தியையும் காட்டி கொண்டிருந்த கோடிக்கணக்கான தமிழர் பரம்பரையின் ஒரு ஜீன்

 

[குறிப்பு: இத்தகைய சிந்தணைகள் சில மாதங்களாகவே சிந்தையில் இருந்தது தான். சமீபத்திய வலையுலக நிகழ்வுகள் எரிச்சலை கிளப்பி பதிவை வெளியிட தூண்டியது]

ஹூசைன் X நிர்வாணம் X வியாபாரம்

கலை என்பது கடவுளுக்கும் கலைஞனுக்குமான கூட்டு பணி, கலைஞன் குறைவாக  ஈடுபடும் அளவிற்கு நல்லது ~அன்ரே கிட்

Art is a collaboration between God and the artist, and the less the artist does the better.  ~André Gide

 

சமீபத்தில் எம் எப் ஹீசைனின் தனிப்பட்ட வாழ்க்கையினால் மறுபடியும்அவரது ஓவியங்கள் பதிவர்களிடம் விவாத பொருளாகி இருக்கிறது. வலைப்பதிவுகளில் மிகப்பிரபலமான கலைஞர்களான எழுத்தாளர் திரு. ஜெயமோகனும், மன நல மருத்துவர் திரு. ருத்ரனும் தங்களது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இருவரின் பதிவுகளையும் படித்து வரும் எனக்கு, எழுத்தாளரான திரு. ஜெயமோகன் ஒரு ஓவியரின் பார்வையில் சரஸ்வதியின் படத்தை கலை கண்ணோடத்தோடு பார்க்கும் படி வாசகர்களை அறிவுறுத்தியதும், ஓவியரான திரு ருத்ரன் ”ஸ்ரீமாதா” விளக்கமளித்து இது இந்திய மதங்களின் வழிகாட்டுதல் அல்ல என்று அறிவுறுத்தியதும் ஒரு மாற்று அனுபவமாக இருந்தது.

 

பொதுவாக வெவ்வேறு கருத்துக்களை கொண்டிருப்பவர்களாக இருந்தாலும் பதிவுகளின் சாராம்சம் கடை நிலை வாசகனான என்னை போன்றவர்களுக்கு கீழ் வரும் கருத்துக்களை அறிவுறுத்துவதாக கருதுகிறேன்.

  1. இந்து மதம் அல்லது இந்திய மதம் என்பது தன் தெய்வங்களை நிர்வாணமாக வரைய அனுமதி அளிக்கிறது.
  2. ஒரு ஓவியனுக்கு தன்னுடைய படைப்பை தான் விரும்பிய வகையில் படைக்க கருத்து சுதந்திரம் இருக்கிறது.

 

கீழ்வரும் படங்களை பாருங்கள் இவை இரண்டுமே அரை நிர்வாண படங்கள் தாம். இவ்விரண்டு படங்களும் ஒரே விதமான விளைவுகளையா பார்வையாளர்களுக்கு அளிக்கின்றன ?

 

bagavaty_967 fw7hg9

 

 

  1. தெய்வங்களின் நிர்வாண உருவகங்கள் பெண்களை உயர்வு படுத்துவதாகவும், வழிப்பாட்டுகுறியதாகவும் இருந்தன. அல்லது குறைந்த பட்சம் உடல் / உடலுறவின் அழகியலை வெளிப்படுத்தவதாக கூட இருந்தன. ஆனால் ஹூசைன் வரையும் படங்கள் அவர் வணங்க தக்கதாகவோ அழகியல் வெளிப்பாடாகவோ உள்ளனவா? நீரில் மூழ்கி கொண்டிருக்கும்; முகமும், கழுத்துமில்லாத சரஸ்வதியின் மூலம்  அவர் விமர்சனங்களை அல்லவா முன் வைக்கிறார் ? (அவரது மேலும் சில படங்கள் பற்றி என்ன சொல்வதென்று தெரியவில்லை ?! அவை என்னை பொருத்த அளவில் இப்போது இருக்கும் சூழலில் வெளியிடுவதற்கு தகுதியானவை அல்ல)
  2. மதங்களிலுள்ள ஓட்டைகளை அவர் விமர்சனம் செய்ய துணிந்ததை வரவேற்கிறேன். ஆனால் அவர் தன் மதத்தின் கருத்துக்களில் இருந்தல்லவா ஆரம்பித்து இருக்க வேண்டும்? இதை தானே சீர்திருத்த வாதிகளான காந்தி, அம்பேத்கார், ஈவேரா முதலானோர் முன்வைத்தனர் ?  பிற மதத்தினரை புண் படுத்தி தன் மதத்தை முன் நிறுத்தும் மனம் எந்த விதமான பகுத்தறிவினால் ஆனதென விளங்கி கொள்ள முடியவில்லை.

 

--- *** ---

ஒவ்வொரு கலைஞனும் தன் தூரிகைகளை தன்னுடைய ஆன்மாவில் நிரப்பி தன் சுய இயல்பை தன் படங்களில் வரைகிறான். -ஹென்றி வார்ட் பீச்சர்.

Every artist dips his brush in his own soul, and paints his own nature into his pictures.  ~Henry Ward Beecher

 

இப்பதிவு  மதங்கள் பற்றியது மட்டுமள்ள திரு. ஹுசைன் பற்றியது கூட தான். அப்படியே கீழே உள்ள படங்களையும் பாருங்கள். இப்பதிவிற்காக தேடிய போது அவரின் மேலும் சில ஓவியங்கள் கிடைத்தன. இவைகளை எப்படி கலை கண்ணோட்டத்தோடு பார்ப்பதென்று புரியவில்லை ?

 

husain_hw_exhibition_announcement_m hansuperman

 

  1. தன்னுடைய கண்காட்சிக்கு வரும்படி அழைக்க கடவுள் உருவத்தை பயன்படுத்திய வியாபார தந்திரம்? அஞ்சா நெஞ்சர்களின் தேர்தல் நேர கடவுள் உருவ போஸ்கள் ஞாபகத்திற்கு வந்தால் அவர் பொறுப்பல்ல :)
  2. சூப்பர் மேன் பனியன், ஜெட்டியுடன் அனுமன். கடவுள்களின் உருவ பொம்மை பொறித்த பொருள்களுக்கு அமெரிக்காவில் அமோக கிராக்கி.  அமெரிக்க சந்தையில் ஓவியங்கள் விலை போக வேண்டாமா என்ன ? (இப்போதெல்லாம் உள்ளாடையுடன் கூடிய கலைப்படைப்பு என்றாலே ஒரு எழுத்தாளரின் ஞாபகம் தான் வருகிறது ;)

 

எனக்கென்னவோ அவருடைய வாழ்க்கை குறிப்பு, தன்னுடைய வியாபார திறமையின் மூலமும்,எதிர் மறையான புகழின் மூலம் வளர்ச்சியடைந்த ஒரு மனிதர்; தன்னுடைய சுய லாபத்திற்காக சொந்த நாட்டு மக்களிடம் நீங்காத பிளவை ஏற்படுத்தி விட்டு; அவர்களையும் கைவிட்டு தான் விரும்பிய சொர்க்க புரியில் வாழ போவதை போன்ற அனுபவத்தை தான் ஏற்படுத்துகிறது.

குறிப்பு:

திரு ருத்ரன், திரு ஜெயமோகன் வலைப்பதிவுகளில் அவர்களுக்கு எதிராக நிகழ்ந்த தனிமனித தாக்குதல்களுக்கு என்னுடைய எதிர்ப்பை இங்கு பதிவு செய்கிறேன். மதம் குறித்த கருத்துக்களில் மிகவும் இறுக்கமான நிலை நிலவும் இப்போதைய தமிழ் வலைப்பதிவு சூழ்நிலை கருத்து பரிமாற்ற விவாதங்களில் பங்கேற்பது குறித்த நீண்ட மன போராட்டத்தை என்னுள் ஏற்படுத்தியது. இருந்த போதும் மாற்றங்களுக்கான ஆரம்ப விதையாக சிறு நிகழ்வு கூட இருக்கலாம் அல்லவா?

அவதாருக்கு ஆப்பு :)

[பின் நவீனத்துவ லாஜிக், பகுத்தறிவு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு பதிவுலக நண்பர்களிடம்  அவதார் கற்பனையாக படும் பாடு. தப்பிப்பு குறிப்பு: பதிவு முற்றிலும் கற்பனையானது. பதிவுலகின் சில குறிப்பிட்ட பதிவுகளை ஞாபகப்படுத்தினால் தற்செயலானதே ;) ]

 

பின் நவீனத்துவ லாஜிக் நண்பர்

    ஜேம்ஸ் கேமரூன் என்பவரின் வாந்தி தான் அவதார். தனியாக நாவிக்களின் உடலையே செயற்கை கருவறையில்  உருவாக்க முடியும் விஞ்ஞானிகளால் ஒரு மனிதருக்கு காலை செயல்படுத்த முடியாமல் போவதாக காட்டி இருப்பது எவ்வளவு பெரிய ஓட்டை. எனவே படம் ஆரம்பிக்கும் போதே நமக்கு தலை சுற்ற ஆரம்பித்து விடுகிறது.

    சில மணி நேரங்களிலேயே அனைத்து நாவிக்களையும் வானூர்தி மூலம் அழிக்க முடிந்த மனிதர்கள் ஆரம்ப காட்சிகளில் கவச உடை அணிந்து கனரக வாகனங்களில் செல்வதும் கோட்டை போன்ற அரண்களும் ஏற்படுத்தி கொள்வதும் ஏன்? (2 மணி நேரம் வேஸ்ட்)

    நாவிக்கள் ஆங்கிலம் பேசுவார்கள் என்று காட்டி இருப்பதை விட மிகப்பெரிய ஜோக் என்ன ? பெரிய கண்டாமிருகங்களும், சிறுத்தைகளும் உலவும் காட்டில் பெரிய சிங்கம் இல்லாதது இயக்குனரின் கற்பனை குறைபாட்டை தான் காட்டுகிறது. இப்படம் பார்த்த கருமத்தை தொலைக்க சில உயர்ந்த பதிவுகளை போட வேண்டியது தான்

    இப்படத்தில் வரும் வன்முறை காட்சிகளும், ஆடை இல்லாமல் வரும் பெண்களும் ஜேம்ஸ் ஒரு சைக்கோ என்பதை காட்டுகிறது. முழு ஆணாதிக்க படமாகிய இதை மெல்லிய பெண்கள் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். இதை போன்ற ஒரு படம் எடுப்பதற்கு பதில் Cannibal Holocaust, Caligula [நன்றி பாலா] போன்ற பின் நவீனத்துவ படங்கள் 100 எடுத்திருக்க முடியும். ஏனெனில் இப்படங்கள் மசாலா படங்கள் என்று சொல்லி விட்டே எடுக்க படுகின்றன.

[அப்பாடா இன்றைய தினத்தை ஒப்பேற்றியாகி விட்டது. நம் நண்பர்களுக்கு சேட் செய்து ஓட்டு போட சொல்ல வேண்டியது தான்]

 

பகுத்தறிவு நண்பர்

    இப்படம் நாவிக்களின் கடவுளாகிய புனித மரத்தை பற்றியது. மனிதர்களுக்கு மேலாக ஒரு சக்தி இருப்பதாகவும் அது தங்களை காப்பாற்றும் என்று நம்பும் நாவிக்கள் அழிவது பகுத்தறிவிற்கு பொருத்தமானதாக இருக்கிறது. ஆனால் கடைசியில் ஒரு மரத்தால் (கடவுளின் செயலால்) உயிர் காப்பாற்றபடும் என்று காட்டி இருப்பது எழுத்தாளரின் குடுமியை நமக்கு காட்டுகிறது.

 

    கூடுவிட்டு கூடு பாயும் செயலை காட்டி இருப்பதை விட இப்படம் என்ன பெரியதாக சாதித்து இருக்கிறது ? முழுக்க முழுக்க ஒரு இந்து பார்ப்பனிய கருத்துக்களை திணிக்கும் படமாகிய இவற்றை புறக்கணிக்க வேண்டுமென நம் தலைவர் 1935ம் வருடமே நம் புனித ஏட்டில் கூறி இருப்பதால், அவரின் 2010ம் வருடத்தில் பொருந்தி வரும் தீர்க்க தரிசனத்தை நாம் உணர வேண்டும். வாழ்க அவர் நாமம். [இதற்கு நாமே தமிழ் மணத்தில் 3 ஓட்டுகள் போட வேண்டியது தான்]

 

ஏகாதிபத்திய எதிர்ப்பு நண்பர்

    நாவிக்கள் எனும் பிற்போக்கு மக்கள் அறிவியல் அற்ற மலைகுடிகள் அறிவியலில் முன்னேறி இருக்கும் மனிதர்களுக்கு தேவையான மூலப்பொருள்களை தர மறுத்து போர் புரியும் படம் தான் இது. சிங்கூரிலும் இதை போலவே நடந்தது குறிப்பிட தக்கது. நிலம், பணம், மூல பொருள்கள் அனைத்தும் அரசுக்கு சொந்தம் எனும் மிகப்பெரிய தத்துவம் லெனின் எனும் தீர்க்க தரிசியால் உண்டாக்க பட்டது ஏன் என மக்கள் புரிந்து கொள்ளலாம்.

    நாவிக்கள் எனும் பெரும்பான்மை இன மக்கள் மனிதர்களாகிய சிறுபான்மை இன மக்களை அழித்து ஒழிப்பது தான் இந்த ஏகாதிபத்திய வாத படம். தேசிய வாதத்தினாலும், இன வாதத்தினாலும் தான் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்ல பட்டு இருப்பதை நாம் அறிவோம். மனிதர்களாகிய சிறுபான்மை மக்கள் எது செய்தாலும் அது நன்மையானது தான் எனும் நம் அறிய தத்துவம் மறந்த இயக்குனருக்கு கடும் கண்டனங்கள். (எப்போதும் போல நம் இயக்க தொண்டர்கள் திரட்டியில் பதிவு வரும் வரை ஓட்டு போட கேட்டு கொள்ள படுகிறார்கள்)

 

இப்படிக்கு,

எப்படத்திற்கும் லாஜிக் காண்போர் சங்கம்.

என்னாதிது சின்ன புள்ள தனமா கண்ணை துடை கண்ணை துடை

என்று ஆருயிர் நண்பன் கூறியும் கேட்காமல் திரும்ப அந்த கேள்வியை கேட்டான் நண்பன் X, “என்ன பார்த்து எதுக்கு மச்சான் அந்த கேள்வியை கேட்டான் ?”.

”மாப்ள, நீ செஞ்ச வேலைக்கு கேள்வி கேட்டுட்டு விட்டார்களே, இதே வேலையை உனக்கு செய்தால் நீ என்ன செய்திருப்பியோ தெரியாது”, என்றான் நண்பன்.

”மச்சான் நான் செஞ்சது தப்பா ? சொல்லு நான் செஞ்சது தப்பா ?, நம்ம்பி அவன் ஷோக்கு முன்னாடி நாளே போனேன். நான் எதிர்பார்த்த அளவிற்கு இல்லைன்னு சொல்றது தப்பா ? நாட்டுலே கருத்து சுதந்திரமே இல்லையா ? என்ன நாடு இது ? என்ன மக்கள் இவர்கள் ?”

5354_1

 

“மாப்ள நம்முடைய கருத்து சுதந்திரத்திற்கும், அடுத்தவன் கழுத்தை நெரிக்கறத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. முதல்ல நீ அதை புரிஞ்சுக்கணும்.

முதல்ல நீ செய்த விமர்சன முறை. மேலாண்மையில் ஒரு விதி இருக்கிறது. விமர்சனங்களை சாண்ட்விச் மாதிரி தரணும்னு.

அதாவது ஒன்றை பற்றி விமர்சிக்க ஆரம்பிக்கும் போது அதை பற்றிய நல்ல விசயங்கோளட ஆரம்பிக்கணும்.

நடுவில தவறு என்ன திருத்தி கொள்ளும் முறை என்ன என்பது பற்றி சொல்லணும்

கடைசியில் அவர் திருத்தி கொண்டால் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும் என்பது பற்றி.

 

    மாப்ள விடிய விடிய உட்கார்ந்து பார்த்தது சரி, அதுல பாராட்டுற அளவிற்கு ஒன்னுமே இல்லையா ? இருந்தது எனில் அதை பற்றி எங்காவது சொல்லி இருக்கிறாயா ? நீ உன்னையே கேட்டுக்க.  எல்லோரும் தான் விமர்சனம் செய்தாங்க அவன் பொதுவா கேட்ட கேள்வி உனக்கு மட்டும் உரைக்குதுண்ணா உன் மனசாட்சி உறுத்துதுண்ணு தான் அர்த்தம். இப்போதெல்லாம் வழி காட்ட வேண்டியவங்களே தனக்கு பிடிக்காத படைப்புக்களை பற்றி மூத்திரம் பெய்வேன், கிழித்து போடுவேன் என்று ஆரம்பிக்க போய் தான் நம்ப மாதிரி ஆட்கள் எல்லாம் ஆடுறோம்.

 

இரண்டாவது கருத்து சுதந்திரம்:

    நீ உன்னுடைய கடையில் உன் கருத்தை தாராளமா சொல்லு. அத யார் கேட்க போறா. இல்லை ஒரே கருத்து இருப்பவன் கடைக்கு போய் கும்மி அடி. அடுத்தவன் கடை ஒவ்வொண்ணிலும் செட்டா போய் எவனாது நல்லா சொன்னால் போதும் குதறி வைச்சிட்டு வந்தமே அதுக்கு பேர் கருத்து திணிப்பு இல்லாமல் என்ன ? அப்ப எங்க போச்சு கருத்து சுதந்திரம் ?

     நமக்குன்னு ஒரு கூட்டம் சேர்ந்தவுடனே நாம என்ன சொன்னாலும் மக்கள் தலையை ஆட்டுவாங்களான்னு யோசிக்க மறந்துட்டோம். இப்பயெல்லாம் மக்கள் முன்ன மாதிரி இல்லை. எதை எடுத்தாலும் யோசனை செய்றாங்க. எவனா இருந்தாலும் தகவல் அறியும் சட்டம் போல எதையாவது ஒன்னை கேள்வி கேட்டு கிட்டே இருக்கானுங்க.

 

    இன்னைக்கு இவன் நாளைக்கு எவனோ. நீ மாறாத வரைக்கும் உனக்கு இந்த மாதிரி கேள்விகள் வருவதை தவிர்க்க முடியாது. பார்த்துக்க”

 

----

    பொதுவாக திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதியதே இல்லை. என் பதிவை பார்த்தாலே தெரியும். நான் எழுதிய முதல் விமர்சன தொகுப்பே ஆயிரத்தில் ஒருவன் தான்.  நம்முடைய பதிவை நேர்மையான முறையில் சிலர் விமர்சனம் செய்யும் போதே நமக்கு கோபம் வந்து விடுகிறது. ஆனால் ஏகப்பட்ட சரித்திர ஆராய்ச்சிக்கு பிறகு வந்திருக்கும் ஒரு படத்தை ஒரே வார்த்தையில் வாந்தி, குப்பை, கர்மம் என்பது சரியானது தானா ?

 

    நான் முன்பு எழுதிய பதிவு கடுமையாக இருந்ததாக நண்பர்கள் சிலர் அறிவுறுத்தினர். அதற்கு தமிழ் மேல் கொண்ட பற்று தான் காரணமே ஒழிய வேறு தனிப்பட்ட காரணங்கள் இல்லை. இரண்டாவது பதிவுலகில் நான் வைத்திருக்கும் நம்பிக்கை. மீடியாக்களுக்கும், பதிவுகளுக்கும் உள்ள வித்தியாசமே கருத்து திணிப்பும், சுய விளம்பரங்களும் இல்லாமல் இருப்பது தான். இப்போதைக்கு மக்களுக்கு இருக்கும் ஒரே கருத்து சுதந்திர ஊடகம் வலைப்பதிவு ஒன்று தான். இதிலும் அரசியல் செய்வது தாங்கி கொள்ள முடியாமல் போய் விட்டது.

    சில கழகங்கள் ஆட்கள் வைத்து ஓட்டு போட்டு திரட்டிகளில் தினமும் தங்கள் கருத்துக்களை திணிப்பது தெரிந்தது தானே? இப்போது சில கார்ப்பரேட் நிறுவனங்கள் வேறு இதில் நுழைய பார்க்கின்றன. கருத்து திணிப்புக்கு ஆதரவான எந்த ஒரு செயலையும் இவ்வூடகத்தில் நாம் அணுமதிக்க கூடாது.

    என்னை பொறுத்த வரையில் ஒரு தவறு நடக்கும் போது அமைதியாக இருப்பது அந்த தவறில் பங்கேற்பது போல தான். தமிழனிற்கு சூடு சொரணை இல்லை எனும் வாதம் எழும் முன்னரே இந்த அடிப்படை கேள்விகளை கேட்கும் தைரியமாவது வளர்த்து கொள்வோமே?

 

25 வாக்குகளும் 600க்கும் மேற்பட்ட வருகைகளும் எனக்கு நம்பிக்கையையே அளித்துள்ளன. கேள்விகள் கேட்க படுவதற்கே.

 

கேள்விகளுடன் நண்பன்,

சபரிநாதன் அர்த்தநாரி.

 

[இப்பதிவும் எல்லோர்க்கும் பொதுவானது தான் நான் உள்பட

தயவு செய்து இதற்கும் யாராவது தெலுங்கு பதிவை / படம் பாருங்கள் என்று கருத்து கூற வேண்டாம் அழுதுடுவேன். :) படுதா காலி இதற்கு மேல் ஆயிரத்தில் ஒருவன் எதிர் வினை கிடையாது :) ]

நாராயணா பீத்த பதிவர்கள் தொல்லை தாங்க முடியலடா

விமர்சனங்கள் பற்றிய விமர்சனங்கள்!!!

 

வலையுலகின் பட விமர்சனங்கள் பற்றி ”உன்னை போல் ஒருவன்” வெளியீட்டின் போதே எழுத நினைத்திருந்தேன். ஆனால் ஆயிரத்தில் ஒருவனுக்கு எழும் நேர்மையற்ற விமர்சனங்கள் இதை எழுத தூண்டியது.

 

”ஆயிரத்தில் ஒருவன்” மேல் சிலருக்கு என்ன காண்டு என்று தெரியவில்லை. ஒரு வேளை வேட்டைகாரன் எனும் மாணம் கெட்ட படம் தியேட்டரில் இருந்தே ஓடி விடும் 50 நாள் கூட தாங்காது என்ற பயமோ தெரியவில்லை. என்ன எரிச்சல் என்றால் ”1. இப்படத்திற்கே போக வேண்டாம். 2. குப்பை” எனும் கேண தனமான விமர்சனங்கள் தான். படங்களை குறைந்த பட்சம் கீழ்கண்ட வாறு வகைப்படுத்துங்கள் சாமிகளா

    1. பார்த்து பாராட்ட பட வேண்டிய படங்கள் (அருமை: பசங்க போன்று)
    2. பார்த்து விட்டு விமர்சிக்க வேண்டிய படங்கள் (சிந்திக்க தூண்டுபவை: ”உன்னை போல் ஒருவன்”, “ஆயிரத்தில் ஒருவன்” போன்று)
    3. பார்த்து இரசித்து விட்டு மறந்து விட வேண்டிய படங்கள் (மசாலா: சிவாஜி, கில்லி, பில்லா போன்று)
    4. பார்க்காமலேயே புறக்கணிக்க வேண்டிய படங்கள் (மொக்கை: வேட்டைகாரன், வில்லு, ஆழ்வார் போன்று)

 

சரி விடுங்கள் ”ஆயிரத்தில் ஒருவன்”ல் மக்கள் இரசிக்க வேண்டிய விசயங்கள்.

மூல கதை

  1. 1000 வருடங்களுக்கு முட்பட்ட மக்களின் கதையை சொல்ல தேர்ந்தெடுத்திருக்கும் தைரியம்.
  2. இதன் மூலம் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற வரலாற்று புதினங்கள் பல பகுதிகளாக எடுக்க முடியும் என்ற தைரியத்தை நமக்கு கொடுத்திருப்பது
  3. தெலுங்கு படங்களின் கதை & காட்சி அமைப்பு சீன் பை சீன் காப்பி அடித்து தமிழிற்கும், (அதையும் ஒழுங்காக செய்யாமல்) தெலுங்கிற்கும் ஒரே சமயத்தில் பாதகம் செய்யாமல், தமிழர்களின் கதையை கொடுத்திருப்பது
    snapshot20100119085757

 

பார்த்தினின் உடல் மொழி செதுக்க பட்டிருக்கும் விதம்.

  1. ஒரு மறைந்திருக்கும் மன்னன் மக்களுக்கு எதும் செய்ய இயலாத நிலையில் தன் இயலாமையை நினைத்து உருகும் முதல் காட்சி
    snapshot20100119085545
  2. சிருங்கார இரசம் கொஞ்சும் பெண்ணிடம் கூட ஆவேச நடனம் இட்டு தன் மக்களிடம் தான் கொண்டுள்ள பற்றை வெளிப்படுத்தும் காட்சி
    snapshot20100119085429
  3. ஊருக்கு செல்வதாக மக்களுக்கு அறிவித்து விட்டு அவர்களின் சந்தோசத்தை பார்த்து ஆனந்த படும் காட்சியும் ஆனந்த நடனமும்

    snapshot20100119090048 

    snapshot20100119085811 
      
  4. தோல்வி உறுதி என்று தெரிந்த பின்னரும் வரும் வீரச்சிரிப்பு
  5. தன் கண் முன்னே தன் மனைவியும், மகளும் கொடுமை படுத்த படுவதை பார்த்து விட்டு மனம் ஒடியும் கடைசி காட்சி

 

  • மக்களின் பஞ்சம் சித்தரிக்க பட்டிருக்கும் விதம். பஞ்சத்தினால் மக்கள் தங்கள் அடிப்படை நாகரீகங்களை மீறும் காட்சிகள்
  • மறந்து விட்ட நம் அடிப்படை தமிழ் வரலாற்றை & உணர்ச்சியை நம் கண் முன்னே நிறுத்தி இருப்பது
  • பழம் பெரும் பாடகர் PB Srinivasன் குரலை திரையில் கேட்கும் வாய்ப்பை அளித்திருப்பது

 

[விமர்சனங்களை ஏகாம்பரங்கள் பதிவில் பார்த்து கொள்ளவும்]

 

என்னை பொறுத்த வரையில் முக்கியமான கதை இரண்டாவது பகுதியில் தான் வருகிறது. பார்த்திபன் நடிக்க வில்லை; வாழ்ந்து விட்டார். இயக்கமும் அருமை. இதை விமர்சனம் செய்த முண்டங்களுக்கு தமிழர்களை/தமிழை புரிந்து கொள்ளும் உலக அறிவு(?) இன்னும் வரவில்லை போல. நல்ல வேளை இம்மக்களை புரிந்து கொண்டு சில் சீன்களை செல்வராகவன் முன் பகுதியில் வைத்தார். இல்லாவிடில் இது போன்ற தமிழ் தற்குறிகள் மூலம் படம் தோல்வி அடைவது நிச்சயம்.

 

நம்முடைய ஆட்கள் மசாலா படங்கள் எல்லாவற்றையும் இது தமிழ் படம் எனும் ஒற்றை வரியில் தாண்டி செல்கின்றனர். (அதாவது தமிழ் படம் என்றாலே கேவலமாக இருப்பது வழக்கமாம்) ஆனால் இது போன்ற புது முயற்சிகளுக்கு ஆங்கில படத்தின் உச்ச கட்ட காட்சிகளை ஒப்புவமை செய்து தங்களது சுய சொறிதலை வெளிப்படுத்துவர். ஐயா நீங்கள் எல்லாம் தெரிந்த பீட்டர் ஏகாம்பரம் தான் ஒப்பு கொள்கிறோம். தள்ளி நில்லுங்கள் தமிழ் காற்று வரட்டும். 

 

ஒருவர் கூறுகிறார். “விசய் நடிக்கிறது உலகப்படம் அல்ல,மசாலா படம்... அதுல விசய் அம்பது அடி அல்ல, இமயமலைல இருந்து குதிச்சு கன்யாகுமரியை ரீச் பண்ணுவாரு. ஆனா தமிழ் படத்த அடுத்த கட்டத்துக்கு நகட்ரோம்னு சொல்றவங்க ஒழுங்கா படம் எடுக்கணுமா வேண்டாமா..”

 

அதாவது ஊரறிந்த ?? தொண்டர்கள் உத்தமியின் சேலை நழுவியதை பார்த்து கமெண்ட் அடிப்பது போல (வேண்டாம் நான் இதற்கு மேல் எழுதினால் இன்னும் கடுமையாகி விடும்).

 

ஆயிரத்தில் ஒருவன் - படக்கதையை எப்படி அணுகுவது ?

  1. ஒரு பெண் தன் குழந்தைக்கு கொடுக்கும் முலையில் இருந்து இரத்தம் வருவதை(பஞ்சத்தினால்) தன் மன்னனுக்கு காட்டும் சித்தரிப்பு எந்த நவீன கதையிலாவது வந்திருக்கிறதா ?
  2. Time machineல் ஏறி 1000 வருடங்கள் பின்னோக்கி பயணித்து சோழர்களிடம் செல்லுவதை போன்ற அனுபவம் வேண்டுமா?
  3. இலங்கையில் நடந்த கொடூரங்கள் உங்களுக்கு காட்சியாக விளக்கப்பட வேண்டுமா ?

- அது தான் ஆயிரத்தில் ஒருவனின் கதை.

படக்கதையை எப்படி அணுகுவது ?

இக்கதை சரித்திரத்தை தழுவி எடுக்கப்பட்ட கற்பனை கதை. சோழர்களின் வரலாறு தெரிந்திந்தால் தான் கதையையே புரிந்து கொள்ள முடியும்.

தமிழன் என்று ஒரு வீரமிக்க இனம் இருந்தது.;)  அவர்களிடம் கொள்கை பிடிப்பும், மான உணர்ச்சியும் மிகுந்து இருந்தது. அவர்கள் ஒரு கால கட்டத்தில் தெற்காசியாவின் பெரும்பான்மையான இடங்களை தங்கள் அரசின் கீழ் ஆட்சி செய்தனர். அழிந்து போன அவ்வின மக்களின் உணர்ச்சிகளை திரும்ப பெறுவதற்கான ஒரு சிறு முயற்சி தான் இப்படம்!!!!

 

தமிழகம் + ஈழம் சரித்திரம்

இராஜேந்திர சோழனின் ஆட்சியில் ஒன்றுபட்ட தமிழ் அரசாங்கம் !!! wiki: Chola's empire and influence at the height of its power (c. 1050)

250px-rajendra_map_new

 

இப்படத்தில்

நாயகன்(பார்த்திபன்) - ? (Guess)

சோழ மக்கள் - ஈழ மக்கள்

பாண்டியர்கள்- இலங்கை அரசு

பாண்டிய படை - இராணுவம்

 

படம் பார்த்த பின் வரும் சந்தேகங்களும் விளக்கங்களும்

  1. நன்றாக இருக்கிறதா ? இல்லையா ?
    கார்த்தி, ரீமா, ஆண்டிரியா விற்காக செல்பவர்கள் படத்தின் முதல் பாதியிலும், தமிழிற்காக செல்பவர்கள் இரண்டாம் பாதியிலும் தங்களது டிக்கெட் விலையின் ஒவ்வொரு பைசாவிற்கான பலனையும் அனுபவிப்பது நிச்சயம். போதுமா ?
     
  2. சோழர்கள் அவ்வளவு தூரம் செல்ல இயலுமா?
    அக்கால சோழர்கள் கடற்போரில் & பயணத்தில் வல்லவர்கள் என்பதை மேலே உள்ள படத்தை பார்த்து புரிந்து கொண்டு இருந்திருப்பீர்கள். எனவே இளவரசன் உயிர் தப்ப தொலைதூர தீவிற்கு செல்லுதல் பிரச்சினையே இல்லை.
  3. ஹெலிகாப்டர் பயணம் ஏன் முதலில் இல்லை ?
    சோழ மக்கள் அடர்ந்த குகை பகுதியில் வசிப்பதாக காண்பிக்க படுகிறது. அவர்களுடைய இருப்பிடம் கண்டு பிடிக்க மற்றவர்களுக்கு ஓலைசுவடியை தவிர வேறு வழி இல்லை. ஒருமுறை கண்டு பிடித்தவுடன் அறிவியல் யுக மனிதர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் வருதல் எளிது.
  4. கிராபிக்ஸ் மட்டம் ?
    1000  கோடி ஆங்கிலப்படம் பார்த்து விட்டு கிராபிக்ஸ் பற்றிய விமர்சனம் எழுப்புபவர்கள் தயவு செய்து 300 கோடி கூட வேண்டாம் இன்னும் 30 கோடி கொடுத்தால் போதும் செல்வராகவன் மிகச்சிறப்பாக எடுப்பார் என்பதில் ஐயமில்லை. ;)
  5. ஆபாசம் ?
    இப்படத்தை பார்க்க குடும்பத்தவர்க்கும் சொல்லுங்கள்(13 வயதிற்கு மேல்). கண்டிப்பாக ”இராணி 6 இராஜா யாரு?”ல் வருவதை விட குறைவாகவே ஆபாசமான காட்சி அமைப்புகள் உள்ளன.
     
  6. விமர்சனம் செய்ய கூடாதா ?
    தாராளாமாக இப்படத்தை விமர்சனம் செய்யுங்கள். ஆனால் தமிழர்கள் நாம் எல்லோரும் ஒரு முறை படத்தை பார்த்து விட்டு, வெற்றியடைய வைத்து விட்டு விமர்சனம் செய்யுங்கள்.

 

இப்படம் தோற்கின் தமிழ் சினிமா உலகத்தை அடுத்த பரிணாமத்திற்கு கொண்டு செல்லும் நிகழ்விற்கு பலத்த பின்னடைவு ஏற்படும் என்பதில் ஐயமில்லை. நாம் இன்னும் குருவி, வேட்டைகாரன், வில்லு, பரமசிவன், வரலாறு போன்ற மக்கள் விரும்பும் (?) படங்களை பார்க்க நேரிடும் என்பதை நினைத்து பாருங்கள்.

அண்ணன் கேபிளார் தன்னுடைய கருத்தை வேறுவிதமாக ஏற்கனவே பதிவு செய்திருந்தாலும், இப்படத்தை மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் தனி இடுகை இட கேட்டு கொள்கிறேன். சுருக்கமாக சொல்வதெனில் பார்த்திபனுக்கும், செல்வராகவனுக்கும் தமிழக விருது நிச்சயம்; தேசிய விருதுக்கு மிகபிரகாசமான வாய்ப்பு உள்ளது.

 

இன்னுமா படத்தை பார்க்க கிளம்பவில்லை ?