சோதிடம்: பிரம்மஹத்தி தோசம்

இப்பதிவு ஆன்மிக அன்பர்களுக்காக மட்டும், பிரம்மஹத்தி தோசம் தொடர்பாக இணையத்தில் இருக்கும் கீழ்கண்ட முக்கிய பதிவுகளின் தொகுப்பாகும்.
  • https://www.facebook.com/photo.php?fbid=1832203203488110&set=a.848171245224649.1073741827.100000953444539&type=3
  • https://www.facebook.com/josyam.ramu/posts/2006684396215167
  • http://www.astrosuper.com/2017/04/blog-post_59.html
  • http://moonramkonam.com/jothidam-brammahathi-dosham-parikaram/#.UdrUgTs3u5x
  • http://www.yourastrology.co.in/news/pirammagaththithosamneega-astrology.html
  • http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=11106&cat=3
  • https://www.facebook.com/316013718429497/photos/a.495522597145274.115922.316013718429497/870049253025938/?type=3
  • https://www.vikatan.com/news/spirituality/98438-what-is-the-cause-of-brahmahati-dosham-and-what-are-the-appropriate-remedies.html
  • http://www.sriagasthiyarastro.com/horoscope-signs/176/176.html
  • http://kanniii.blogspot.in/2015/09/blog-post_42.html

ஜாதக அமைப்பு

  • பிரம்மஹத்தி தோசம் பல்வேறு முறைகளில் கணிக்கப்படுகிறது.
  • முறை 1: குரு பலமிழந்து சனி பலம் பெற்று, குருவும் சனியும் 5 பாகைக்குள் இணைந்து அல்லது சம சப்த பார்வை பெறும் போது, இந்த தோஷம் உண்டாகிறது.
  • முறை 2: குருவும் சனியும், மேஷத்தில் ஒரே நக்ஷத்திர பாதத்தில் ( 3.33 பாகைக்குள் [ 3 பாகை 20 கலை])   இணையும் போது மட்டுமே ப்ரம்மஹத்தி தோஷம் ஏற்படுகிறது. மற்ற ராசிகளில் இணையும் போது அது குருசண்டாளயோகம், தோஷம் எனப்படும். 
  • முறை 3: ராகுவின் இருக்கும் ராசியில் இருந்து 5 அல்லது 9 - ம் வீட்டில் சனி, குரு சேர்க்கை ஏற்பட்டிருந்தாலும்  (அதாவது சனியும் குருவும் ஒரே பாதத்தில் அல்லது 10 டிகிரியில் இருக்கவேண்டும்) தோஷமாகும்.
  • முறை 4: பிறந்த ஜாதக ரீதியாக குரு சனி இணைந்து இருந்தாலோ, (நவ அம்சத்திலும் இணைந்து இருந்தாலும்) அல்லது வேறு எந்த தொடர்பு பெற்றிருந்தாலும் (இந்த இரு கிரகங்களுக்கும் சார பரிவர்த்தனை ஏற்பட்டாலோ (குருவின் சாரத்தில் சனியும் – சனியின் சாரத்தில் குருவும் இருத்தலும்), சப்தம பார்வை பெற்றாலோ, குரு பகவானை சனி பகவான் எங்கிருந்து நோக்கினாலும் )  பிரம்மஹத்தி தோஷமாகும்.
  • முறை 5: லக்னத்துக்கு 4 -ம் இடத்தில் அசுப கிரகங்கள் இருந்து, 6, 8, 12 -ம் இடங்களில் சுபர்கள் இருந்தாலும்,  5, 9 - ம் வீடுகளுக்கு  அதிபதிகளாக அசுப கிரகங்கள் இருந்தாலும், அவர்களுடன் சேர்ந்து இருந்தாலும், அசுபர் வீட்டில் இருந்தாலும் இந்த தோஷம் அவர்களுக்கு உள்ளதென அறியலாம்.
  • சூட்சுமம்

  • குருவின் பலம் அதிகம் இருந்து, சனி குருவுடன் இணையும் போதோ அல்லது சம சப்த பார்வை பெறும் போதோ, சனியின் அசுப தன்மை குறைந்து சுப தன்மை அடையும். அதே நேரத்தில் குருவின் பலம் சிறிது குறையும். இதில் இருந்து அறியும் சூட்சுமம் என்னவென்றால் முன்னோர்கள் செய்த பூர்வ பலன்களின் (குரு) பலம், முன்னோர்களின் கர்ம பலன்களை (சனி) விட பலம் பெற்று, சனி தரும் அசுப பலன்களை குறைகிறது என்பதே சூட்சுமம்.
    இதனால் ஜாதகன் நினைத்த அனைத்தும் கடவுள் அருளால் கிடைக்க பெற்று, நல்ல நிலையில் இருக்க வைக்கிறது.
  • இங்கே சனி பலம் அதிகமாகி குரு பலம் குறையும் போது பிரம்ம ஹத்தி தோஷம் என்ற பூர்வபல குறைபாடு ஏற்படுகிறது. இதனால் கர்ம பலம் அதிகமாகி, குரு பலம் குறைகிறது. இதுவே பிரம்ம ஹத்தி தோஷம்.
    ஆனால் இந்த தோஷம் மிக அரிதாகவே ஜாதகத்தில் காணலாம். ஏனெனில் குரு அவ்வளவு சீக்கிரம் பலமிலப்பதில்லை.

காரணங்கள்

'ஹத்தி' என்றால் 'மாய்த்தல்' என்று பொருள். ஹத்தியில் பல வகைகள் உண்டு.
இதன்படி அறிந்தோ, அறியாமலோ எதையேனும் மாய்ப்பதால் ஏற்படும் தோஷம் பிரம்ம ஹத்தி தோஷம். இதே போன்று போரில் ஒருவரைக் கொன்று விட்டால் வீரஹத்தி தோஷம் என்றும், கருவைக் கலைத்தால் ப்ரூணஹத்தி தோஷம் என்றும் சாஸ்திரம் கூறுகிறது. ராவணன் சிறந்த சிவபக்தன். வீணை வாசிப்பதில் வல்லமை படைத்தவன். அதுவும் சாம கானம் பாடுவதற்கு அவனுக்கு நிகராக எவருமில்லை. இதனை ‘சாயை’ என்பார்கள். சாயை என்பது ஒளியை குறிக்கும். ஒளி போன்ற பெருமை வாய்ந்த குணங்களை குறிப்பிடும் ‘சாயை’ பெற்ற ராவணனைக் கொன்றதால், ‘சாயாஹத்தி தோஷம்’ ராமரை பற்றிக்கொண்டது.
மானுடர்களுக்குப் பல்வகைகளில் ஏற்படும் ஹத்தி தோஷங்கள் - 'ஹத்தி மூலை அல்லது அத்தி மூலை' - என்பதாய் அவரவர் உடலில் ஒரு மூலையில் பதிந்திருக்கும். தக்க பரிகார, பிராயச் சித்தங்கள் மூலம், இத்தகைய ஹத்தி (மூலை) தோஷங்களை அகற்றிட வேண்டும்.
'ஹத்தி மூலையே' வழக்கில் அத்தி மூலை என்றாயிற்று. ஜாதகத்தில், தோஷங்களை இத்தகைய 'அத்தி மூலைக் கோணம்' வகுப்பு மூலமாய் அறிவர்.
பிரம்மஹத்தி தோஷத்திலும் கூட - பகல் நேர ஹத்தி தோஷம், இரவு நேர ஹத்தி தோஷம் - என்ற காலவகை நுட்பம் உண்டு


உலகில் படைக்கப்பட்ட உயிர்கள் எல்லாம் இறைவனால் (பிரம்மனால்) படைக்கப்பட்டதுதான்.அந்த உயிர்களுக்கு யார் தீங்கு விளைவித்தாலும்,அந்த உயிரின் மனதை நோகடித்தாலும்,நம்பிக்கை துரோகம் செய்தாலும் அதனால் நமக்கு ஏற்படும் தோசம் பிரம்மஹத்தி தோசமாகும்.  முன்னோர்கள் செய்த தோஷம் அவர்கள் சந்ததியினரைத் தொடர்ந்து வரும்.
  • ஒரு உயிரை வதைத்த பாவத்தை அல்லது அதற்கு தவறானமுறையில் வழிகாட்டியாக இருக்கும் பாவமே, பிரம்ம ஹத்தி தோஷம். 
  • எக்காரணத்திற்காகவும் உயிர்களை கொல்லும் பொழுது இந்த பிரம்மஹத்தி தோசம் பற்றுகிறது. இத்தோசமானது பெரும் பாவமாகவும், தலைமுறைகளை கடந்தும் இப்பாவம் தொடர்வதாகவும் கூறப்படுகிறது. [2]
  • இரு விதமான ஆன்மீக சக்திகளின் ஐக்கிய அனுபூதிதான் சந்தான ப்ராப்தி எனும் பிள்ளைப் பேறாய்க் கனிகின்றது. ஒரு பறவை முட்டை இடுவதும், மீன் குஞ்சு பொறிப்பதும், மனிதனுக்குக் குழந்தை பிறப்பதும் அனைத்துமே திவ்யமான புண்யவாழீ அனுபூதிகள் தாம். இந்நிலையிலே, கருக்கலைப்பு துaதிருஷ்ட வசமாய் நிகழுமாயின், இந்த அதர்மச் சம்பவமானது, உயிர் வதையாவதால், பெரும் பாவச் செயலோடு, பிரம்மஹத்தி தோஷமாயும் கூட்டி வருகின்றது.
  • குறிப்பாக நன்றி மறப்பதால்தான்  இந்த தோஷம் ஏற்படுகிறது.
  • *அடுத்தவர் மனதை நோகடிப்பது.
  • தாய்க்கு உணவளிக்காமல் விரட்டி அடிப்பது
  • *வாக்கு கொடுத்து ஏமாற்றுதல்.
  • உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வது
  • பண மோசடி செய்தலும், ஊரை அடித்து உலையில் போடுதலும் பிரம்மஹத்தி தோஷமாக வெளிப்படும்.
  • *பலரின் உழைப்பை உறிஞ்சி,அதற்குரிய சம்பளம் தராமல் இருப்பது.
  • *பெண்களை நயவஞ்சகமாக ஏமாற்றுவது. பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறேன் என வாக்குகொடுத்து, அவளை அனுபத்து, திருமணம் செய்யாமல் இருத்தல்
  • பிறரின் வாழ்க்கைத்துணையுடன் முறையற்ற உறவு கொள்ளுதலும், கர்ப்பிணிப் பெண்ணை வற்புறுத்தி உடலுறவு கொள்ளுதலும்,
  • கணவனை மனைவி உறவுக்கு அழைத்து சம்மதிக்காவிட்டாலும்,மனைவியின் குறிப்பறிந்து அவரின் தேவையை நிவர்த்தி செய்யாமல் செய்யாமல் இருந்தால் பிரம்மஹத்தி தோசம்.
  • குருவை உதாசீனப்படுத்துவது, குருவுக்கு தட்சிணை தராமல் இருப்பது குருவின் கொள்கை பிடிக்காமல் தானே குருவாக மாறுவது
  • பசுவைக் கொல்வது, வெள்ளிக்கிழமைகளில் நல்ல பாம்பைக் கொன்றுவிடுவது
  • சென்ற பிறவிகளில், ஆலயத்தை தகர்த்தல், சாமி சிலையை திருடுதல்
இந்த செயல்கள் செய்தவர்களுக்கு தோஷ்ம் பீடித்துவிடும்.

பிரம்மஹத்தி தோஷம் என்ன செய்யும்?

  •  இந்த தோஷம் ஆண் – பெண் இருபாலருக்கும் வருவது உண்டு. தோஷங்களுக்கு ஆண் பெண் என்ற பாகுபாடு கிடையாது.
     வேலை கிடைத்தாலும் உரிய கூலி கிடைக்காது. கூலி கிடைத்தாலும் முறையான அங்கீகாரம் கிடைக்காது. இந்த நிலை ஓர் ஆண்டு இரண்டு ஆண்டுகள் அல்ல. பல ஆண்டுகள் நீடிக்கும். தொழிலில் உரிய அங்கீகாரம் கிடைக்காது. தொழிலில் திடீர் சரிவு அல்லது வீழ்ச்சி ஏற்படும்
    திருமணம் தள்ளிப்போகும் அல்லது நடக்காது
    குழந்தைப் பாக்கியம் இல்லாமல் அல்லது தாமதம்
    தீராத கடன் தொல்லை , கல்வித் தடை ,
    வருடக்கணக்கில் மனக்குழப்பம் இருக்கும், கனவுத் தொல்லைகள்
    மருத்துவத்திற்குக் கட்டுப்படாத நோய் வரும்
    தவறே செய்யாமல் தண்டனை கிடைக்கும்,
    தீராத கடனும் பகையும் உண்டாகும்.
    குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது குடும்பத்தில் நிம்மதியே இருக்காது.
இந்த தோசம் பிடித்த முக்கியமானவர்கள்.
  • *ராமபிரான்(ராவணனை கொன்றதால்)
  • *பைரவர் - பிரம்மனின் தலையை கொய்தமையால் பிரம்மஹத்தி தோசம் ஏற்பட்டது.
  • *சப்தகன்னியர் - மகிசாசுரன் எனும் அரக்கனை கொன்றமையால் பிரம்மஹத்தி தோசம் ஏற்பட்டது
  • வீரசேனன்வரகுண பாண்டியன் - பிராமணனைக் கொன்றமையால் பிரம்மஹத்தி தோசம் ஏற்பட்டது.[6]

பரிகாரம்


  • சம்பந்தப்பட்ட ஜாதகர் எந்த தசா புக்தியில் பிரம்மஹத்தி தோஷத்திற்கு ஆளானார் என்பதை முதலில் பார்க்க வேண்டும். 
  • ப்ரம்மஹத்திதோஷம் ஜாதகரை தாக்கும் காலகட்டமாக குருதசை, சனிபுக்தி காலமாகவும், சனிதசை, குருபுக்தி காலமாக கொள்ளலாம். சிலரது வாழ்க்கையில் குருதசை, சனிதசை ஆகியன வராமலே போகலாம்.
  • அல்லது வேறு முறைகளில் ஏற்ப்பட்டால். 6ஆம் அதிபதியின் தசையில் அந்த நிலை ஏற்பட்டதா? அல்லது 8க்கு உரியவனின் தசையில், 6ஆம் அதிபதியின் புக்தியில் அது நிகழ்கிறதா? என்பதைப் பொறுத்து பரிகாரம் மேற்கொள்ள வேண்டும். 
  • தோஷம் விலகவேண்டும் அவ்வளவுதானே என அப்போதைக்கென்ன, இப்போதே செய்துவிடலாம் என கொண்டு ஜாதகதோஷ பரிகாரவழிபாடுகளை நம் விருப்பத்திற்கு வளைத்துக்கொள்வது மிகத்தவறாகும். 
  • பரிகாரவழிபாடுகளின் தத்துவமே செய்த பாவங்களுக்கு மனம் திருந்தி மன்னிப்பை இறைவனிடம் கோருவது என்பதாகும். இதை நாம் உணராமல் போனோமானால் இந்து தர்ம வழிபாடுகளை வகுத்து தந்த நம் முன்னோர்களுக்கு நாம் செய்யும் துரோகமாகும். எனவே ஜாதகர் காலமறிந்து தோஷபரிகாரம் மேற்கொள்வது சிறந்த வழியாகும். இவைகள் மட்டுமல்லாமல், ஜாதகப்படி தோஷபரிகாரம் செல்லுபடியாகுமா? என்று ஆராய்வதும் முக்கியம்.
  • ஆனால் அடுத்தடுத்து பிரம்மஹத்தி தோஷம் ஏற்படாமல் அவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். பரிகாரம் இருக்கிறது என்பதால் எத்தனை முறை வேண்டுமானாலும் அதனை செய்து கொள்ளலாம் என பொருள் கொள்ளக் கூடாது. அப்படிச் செய்தால் அந்த பாவங்களுக்கு உண்டான பலனை அனுபவித்தாக நேரிடும்.
  • சிவ பெருமானை வணங்கினால் அவர் நமது கர்மவினைகளை அழிப்பார். நமது பாவங்கள் நீங்கினால் தானாகவே நமது தோஷங்களும் நீங்கி விடும். ராமபிரானும் சிவ பெருமானை வணங்கியே பிரம்மஹத்தி தோஷத்தினை போக்கிக் கொண்டார் என்பதை ராமாயணம் கூறும்.


பொதுவாக பிரம்மஹத்தி தோஷத்திற்கு பரிகாரம் மேற்கொள்ள விரும்புபவர்கள்குலதெய்வத்தை முதலில் வணங்கி விட்டுராமேஸ்வரம்காசிகயாகங்கை உள்ளிட்ட புனித ஸ்தலங்களில் நீராடிஇறைவனை வணங்கி,பிண்டங்களை அளித்தால் பலன் பெறலாம்.
  1. பிரம்மஹத்தி தோஷத்திற்க்கு பரிகாரம் என்றால் திருவிடை மருதூர்கோவிலில் பிரம்மஹத்தி தோஷ பரிகார பூஜை செய்து கோவிலின் தலைவாசல் வழியாக சென்று பின்வாசல் வழியாக வரவேண்டும் என்பது மரபு. மதுரை மன்னனுக்கு பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் இக் கோவிலின் வழியாக இம்முறையில் சென்றுவந்தபோது நீங்கியதாக கூறப்படுகிறது.  பெரும்பாலானவர்கள் சொல்வது இந்தக்கோவிலின் பரிஹார முறையைத்தான்.
    திருவிடை மருதூர் ஆலயத்தில் தோரண வாயிலின் தெற்குப்புறம் சிறிய படிக்கட்டு உள்ளது. அங்கே தேவதை போன்ற உருவம் ஒன்று தென்புறச் சுவரில் உள்ள துளை வழியாகத் தலைவிரி கோலமாக அமர்ந்து  முழங்கால் மேல்  முகத்தை வைத்துக் கொண்டு , காத்திருப்பது தான் பிரம்மஹெத்தி.
    பிரம்மஹத்தி மேடையில் உப்பு மிளகு எடுத்து பாதத்தில் போட்டு விட்டு அர்ச்சனை  செய்து விட்டுத் திரும்பிப் பார்க்காமல்,மகாலிங்க சுவாமி சன்னதி சென்று,நெய் தீபம் ஏற்றி குடும்பத்தினர் அனைவருக்கும் அர்ச்சனை செய்து விட்டு, திரும்பிப் பார்க்காமல், அம்மன் சன்னதி வழியே வெளியில் செல்ல வேண்டும். மாலை 6 மணி வரை உப்பு சம்பந்தப்பட்ட உணவு சாபிடக் கூடாது. காற்று,உப்பு,நீர் இவற்றின் தன்மைகளை உள் வாங்கும் உப்பு மிளகு காணிக்கையாக்குவதன் மூலம் ஜாதகத்தில் பிரம்மஹத்தி தோசம் உட்பட, அறியாமலேயே ஏற்பட்ட தோசங்கள் பிரம்மஹெத்தியிடம் போய் சேர்கின்றன.
    கடுமையான பிரம்மஹத்தி தோசத்திற்கு  தேவஸ்தான அலுவலகத்தில் ரூ.  500/-  செலுத்தி முறையாகப் பரிகாரங்களும் சாதாரண பிரம்மஹத்தி தோசத்திற்கு ரூ 50/- செலுத்தி, எளிய முறையில் பரிகாரங்களும் காலை 7 மணி முதல் 11 மணீக்குள் செய்து கொள்ள வேண்டும்.
    ஆலயத்திறப்பு  நேரம்:  காலை 5.00 மணி முதல் பகல் 12.30  மணி .மாலை 4.00 மணி முதல் இரவு 9.30 மணி.
    வழித்தடம்:  கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் 20கி.மீ. தொலைவில் உள்ளது
  2. பிரம்மஹத்தி தோஷத்தை அடைந்த  ஸ்ரீராமபிரான்,  பிரம்மஹத்தி தோஷத்தைக் கழிப்பதற்காக  ஒரு இடத்தை தேர்வு செய்தார்.   ராம நாதபுரம் அருகே தேவிபட்டினத்தில் ராமபிரான் கடலுக்கு அடியில் உருவாக்கிய நவக்கிரகங்களுக்கு தகுந்த வைதீகர் மூலம் பூஜைகள் செய்து கடலில் நீராடி வழிபட்டு அங்குள்ள கடலடைத்த பெருமாளை வணங்கினால் பிரம்மஹத்திதோஷம் நீங்கும் .
  3. ராமேஸ்வரம் கடலில் நீராடி அனைத்து தீர்த்தங்களிலும் குளித்து ஒரு நாள் அங்கேயே தங்கி இருந்து மறுநாள் ராமேஸ்வரம் அருகில் தனுஷ்கோடிசெல்லும் வழியில் உள்ள ஜடாமகுடேஸ்வரர் கோவிலில் உள்ள ஜடாமகுட தீர்த்தத்தில் நீராடி ஜடாமகுடேஸ்வரரை வழிபட்டு வந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.
    ஏனென்றால் ராவணனுடன் வதம் செய்து ராவணனை கொன்ற பிரம்மஹத்தி தோஷம் இத்தலத்தில்தான் ராமபிரானுக்கு நீங்கியதாக வரலாறு.
  4. தீராத நோய், தொழில்,உத்தியோக பிரச்சனை புத்திசுவதினம்இல்லாமல் இருப்பது மனநிம்மதி பாக்கியாதிபதி தோஷம் செய்யாத தவறுக்கு பழியைப் பெறுவது பரிகாரம் ராமேஸ்வரத்தில் (பௌர்ணமி / பஞ்சமியில் செய்து கொண்டால் பரிபூரண பலன் கிட்டும்) 
    பக்தர்கள் முதலில் தனுஷ்கோடி கடலில் நீராட வேண்டும். பின்னர் ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் பின்வரும் வரிசையில் நீராட வேண்டும். இந்த தீர்த்தங்களில் நீராடினால் ஏற்படும் பலனும் தரப்பட்டுள்ளது.
  5. வட நாட்டில் இருப்போர் பிரம்மஹத்தி தோசம் நீங்க இங்கு ராமேஸ்வரம்  வருகின்றனர் அது போல நாமும் பிரம்மஹத்தி தோசம் நீங்க கஷ்டப்பட்டு வட நாட்டில் தரிசனம் செய்வதுதான் தோசம் நீங்கும் முறையாகும்..அதற்கு திருவேணி சங்கமம் வழிபாடுதான் சரியான தோசம் நீங்கும் பரிகாரமாக இருக்க முடியும்.
  6.  இதைத்தவிர வேறு சில எளிதான பரிஹாரமுறைகளும் சொல்லப்படுகிறது. தேவிப்பட்டினம் செல்ல முடியாதவர்கள் கீழ்க்கண்டவாறு பரிகாரம் செய்யலாம்.
    தோஷத்தினை போக்க உகந்த நாள் அமாவாசை தினம் ஆகும். அமாவாசை தினத்தில் முன்னோர் கடனை தீர்த்த பின்பு பசுமாட்டிற்கு உணவளித்தல் வேண்டும்.
    பழமையான சிவன் கோவில்களில் அனைத்து சன்னதிகளிலும் பஞ்சக்கூட்டு எண்ணெய் கொண்டு விளக்கேற்றிவந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
    நல்லெண்ணெய்-1/2 லிட்டர்;
    விளக்கெண்ணெய்-1/2 லிட்டர்;
    நெய் 1/2 லிட்டர்;
    இலுப்பை எண்ணெய் 1/2 லிட்டர்;
    வேப்பேண்ணெய்-1/2 லிட்டர்;
    மேல்லே கூறிய ஐந்துவகை எண்ணெய் வகைகளை ஒன்றாகக் கலந்து வைத்துக்கொள்ளவேண்டும்.  இரண்டு தீபங்கள் ஏற்ற வேண்டும்அ து தவிர  கீழ்க்கண்ட இடங்களிலும் அந்த எண்ணெயை அகல் விளக்குகளில் ஊற்றி தீபம் ஏற்றவேண்டும்.
    1. பலிபீடம்;
    2. கொடிமரம்;
    3. கொடிமர நந்தி
    4.அதிகார நந்தி;
    5. வாயில் கணபதி;
    6. துவார பாலகர்;
    7.சூரியன், சந்திர பகவான்;
    8. சமயக் குரவர்கள்;
    9. சப்த கன்னிமார்கள்;
    10. கன்னிமார் அருகில் உள்ள கணபதி;
    11. வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சன்னிதி;
    12. சுர தேவர்;
    13. ஸ்வாமி  அய்யப்பனின்  சாஸ்தா பீடம்;
    14. தட்சிணாமுர்த்தி
    15. கால பைரவர்;
    16. சண்டிகேஸ்வரர்;
    17. சனீஸ்வரர்;
    18. சிவன் சன்னிதி;
    19. அம்பாள் சன்னிதி தவிர மற்ற துணை தெய்வங்கள்.மேற்கூறப்பட்டவிதமாக விளக்கேற்றிவிட்டு,  அர்ச்சனையும் செய்யவேண்டும். அர்ச்சனை செய்வது எப்படி என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த முறையில், அதாவது, சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும், வெற்றிலை பாக்கு, பழம், பூ, ஊதுவத்தி, சூடம், தேங்காய், அவரவர் விருப்பத்திற்கேற்ப ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் பூமாலை ஆகிய பொருட்களை வைத்து அர்ச்சகர் மூலம்  அர்ச்சனை செய்ய வேண்டும்.அதன் பின்னர் 9 பேருக்கு அன்னதானம் செய்ய வேண்டும். பின்னர் 9 பேருக்கு ஆடைகள் தானம் செய்ய வேண்டும். அதன் பின்பு எந்த கோவிலுக்கும் செல்லாமல் அவரவர் வீடு திரும்ப வேண்டும். இவ்வாறு 9 அமாவாசைகள் செய்ய வேண்டும்.
    இந்த தீப பரிகாரத்தை குடும்பத்தில் உள்ளவர் அனைவரும் ஒரே இடத்திலும் ஒரே நேரத்திலும் இணைந்து செய்தால், உடனே பலன் கிட்டும். இந்த பரிகாரத்தை ஒருமுறை செய்தால் போதும். பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கி, சிவபெருமான் நற்பலன்களை தொடர்ந்து வழங்கிடுவார்.
  7. செய்ய முடியாத ஏழைகளுக்கும் வழி இருக்கிறது. அமாவாசை தினத்தன்று, மாலை 5 மணிக்கு சிவன் கோவிலுக்கு சென்று, ஒன்பது சுற்றுகள் சுற்றிவந்து வணங்கிவரவேண்டும். இதுபோல ஒன்பது அமாவாசை தினங்களில் சுற்றிவந்து வணங்கினால், சிவபெருமான் அருள்பாலித்து, பிரம்மஹத்தி தோஷத்தை நீக்குவார். ஆனால், வசதிபடைத்தவர்களும், ஓரளவு வசதி படைத்தவர்களும்,  இந்த பரிகாரத்தை மேற்கொண்டால், பலன் கிடைக்காது. ஏழைகள் மட்டுமே இவ்விதம் செலவில்லாத பரிகாரத்தை செய்யலாம்.
  8. சிவபுராணத்தின் கூற்றுப்படி ஒரு முக ருத்ராட்சத்தினை கண்டாலே பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். ஆனால் நாம் காணும் ஒரு முக ருத்ராட்சம் உண்மையானதாகவும், முறைப்படி மந்திர உரு ஏற்றப்பட்டு பூசையில் வைக்கப்பட்டு பூசிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். தற்போது ஒரு முக ருத்ராட்சம் என்ற பெயரில் போலிகள் தான் விற்கப்படுகின்றன என்பதே உண்மை.
  9. சிவபுராணத்தின் கூற்றுப்படி ஆறுமுக ருத்ராட்சத்தினை அணிந்து கொண்டாலும் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். ஆனால் நாம் வாங்கி அணியும் ருத்ராட்சம் உண்மையானதாகவும், முறைப்படி மந்திர உரு ஏற்றப்பட்டு பூசையில் வைக்கப்பட்டு பூசிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். கடையில் கிடைக்கும் ஆறுமுக ருத்ராட்சத்தினை வாங்கி அப்படியே அணிதல் கூடாது.
  10. சாளக்கிராமங்களை முறைப்படி பூசித்து வந்தால் இறைவன் அருளால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். ஆனால் சாளக்கிராம வழிபாட்டு முறைகளை தகுந்த குருவினை நாடி தெரிந்து கொண்ட பின்னரே பூசித்து வர வேண்டும். சாளக்கிராமங்களில் பல வகைகள் உண்டு. அவரவருக்கு பிடித்தமான சாளக்கிராம வழிபாடு
  11. பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் தலங்கள் பல உண்டு.
    காசி
    காஞ்சிபுரம்
    திருவண்ணாமலை
    இராமேஸ்வரம்
    மதுரை
    திருவாஞ்சியம்
    பிரம்மதேசம்
    மேல்மலையனூர்
    ஆகியன முக்கியமானவை ஆகும்.

முறை 2 : திருமாலை மட்டும் வணங்குபவர்களுக்கான பரிகாரம்
  1. சிவன், பிரம்மா, விஷ்ணு மூவரும் உள்ள தலங்களுக்கு சென்று வழிபாடு நடத்த வேண்டும். இது தவிர  ஒரு பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது  அல்லது வயது முதிர்ந்த ஏழைத் தம்பதியருக்கு வீட்டில் உணவளித்து அவர்களுக்கு புதிய துணிமணிகள் வாங்கிக்கொடுத்து அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொள்ள வேண்டும்.
  2. உத்தமர்கோவில், கொடுமுடி, கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர், ஸ்ரீவாஞ்சியம் கோயில்களுக்கு புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் சென்று தோஷ நிவர்த்தி பூஜை செய்துகொள்வது நல்லது.
  3. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சென்று அங்குள்ள ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சந்நிதியில் எள்ளுச் சாதம் நைவேத்தியம் செய்து எல்லோருக்கும் கொடுத்தால் நல்ல பலன் அளிக்கும்.
  4. திருபுல்லாணி சென்று, இறந்த மூத்தோருக்கு (தகப்பனார் இல்லாதவர்கள்) பித்ருக் கடன் செய்து அதற்கு அருகே உள்ள தேவிப்பட்டினத்தில் உள்ள நவ பாஷாணத்திலான நவகிரகங்களின் வழிபாட்டை மேற்கொள்ளவேண்டும்'' இவ்வாறு அவர் கூறினார்.
முறை 3

  • அதர்மமாய் ஆட்சி புரிந்து, கோடிக் கணக்கானோரை வதைத்த அரக்கனான ராவணனை ஸ்ரீ்ராமர் மாய்த்தது அவதார தர்ம காரியம். எனினும், இலங்கைப் போரில் எண்ணற்றோர் மாய்ந்தமையால், ஸ்ரீ்ராமருக்கும் கூட பிரம்ம ஹத்தி, சாயாஹத்தி, வீரஹத்தி போன்ற தோஷங்கள் ஏற்பட்டன. மேலும், தம் பரிவாரங்களைச் சார வேண்டிய தோஷங்களையும், பொறுப்புள்ள படைத் தலைவராய் ஸ்ரீ்ராமர் தம்முள் ஏற்றுக் கொண்டார் என்றும் விளக்குவதுண்டு.
  • இத்தகைய பிரம்ம ஹத்தி, சாயாஹத்தி, வீரஹத்தி தோஷங்களைக் களைவதற்காய், ஸ்ரீ்ராமர் தம் குலகுருவின் வாக்கின்படி, ராமேஸ்வரத்தில் லிங்கப் பிரதிஷ்டை, சாயாஹத்தி தோஷம் நீங்க பட்டீஸ்வரத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை ,வீரஹத்தி தோஷம் விலக, வேதாரண்யம் (திரு மறைக்காடு) என்ற திருத்தலத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜித்தார்.
  • பிரம்ம ஹத்தி தோஷம் முற்றிலும் அகல வேண்டுமாயின், பிரம்ம லோகத்து தேவதா மூர்த்திகளின் அனு கிரகத்தையும் பெற்றாக வேண்டும். இது தோஷ வகைக்கான நிவர்த்தியை எளிதாக்கித் தருவதாம். இதனை எவ்வாறு சாதிப்பது?சாட்சாத் பிரம்ம மூர்த்தியே நிறுவிய -அடி அண்ணாமலைத் திருக்கோயிலைக் கொண்ட - திரு அண்ணாமலையில் ஆற்றும் அருணாசல கிரிவலம், இதற்குப் பெரிதும் உதவும். பிரம்ம மூர்த்தி தனித்துச் சன்னதி கொண்டருளும் தலங்கள் திருச்சி அருகே உத்தமர் கோயில், தஞ்சாவூர் அருகே கண்டியூர், திருச்சி-சிறுகனூர் அருகே உள்ள திருப்பட்டூர் போன்று ஒரு சிலவே. இவற்றில் பிரம்ம சக்தி நாட்களில், 24/36/64/108 பசு நெய் தீபங்களை ஏற்றி, கோ (பசு) பூஜை ஆற்றி வருதல் - கோஹத்தி போன்ற ஹத்தி தோஷ நிவர்த்திக்கான பிரம்ம லோகத்து மூர்திகளின் அருளைத் திரட்டித் தரும்.
  • நரகாசுரனைக் கொன்றதால், விஷ்ணுவுக்கு வீரஹத்தி தோஷம்ஏற்பட்டது. இந்த தோஷம் ஏற்பட்டால் உடலும், முகமும் களை இழந்து விடும். இதைப் போக்க என்ன வழி என, சிவபெருமானிடம் ஆலோசனை கேட்டார்.  "இந்த சம்பவம் நிகழ்ந்தது துலா மாதத்தில். இந்த மாதம் முழுவதும், சூரிய உதயத்தில் இருந்து, ஆறு நாழிகை (144 நிமிடம்) வரை, இவ்வுலகிலுள்ள, 66 கோடி தீர்த்தங்களும் காவிரியில் வாசம் செய்யும். அந்த நேரத்தில் அதில் நீராடினால் தோஷம் நீங்கும்...' என்றார். விஷ்ணுவும் அவ்வாறே நீராடி, தோஷம் நீங்கப் பெற்றார். தன் மைத்துனருடன் சிவனும் நீராட அங்கே வந்தார். சிவ விஷ்ணு தரிசனத்தை ஒரே நேரத்தில் பெற்ற மகிழ்ச்சியில், எல்லா தேவர்களும் நீராடினர்.


1.மகாலட்சுமி தீர்த்தம்: செல்வவளம்
2.சாவித்திரி தீர்த்தம்: பேச்சுத்திறன் (காயத்ரி மந்திரத்தின் உள்ளுயிராக இருக்கக்கூடிய ஜோதி வடிவமான சக்தியே சாவித்திரி. இவள் பிரம்மாவின் பத்தினி)
3.காயத்ரி தீர்த்தம்: உலகத்துக்கே நன்மை (இவளும் பிரம்மாவின் பத்தினி)
4. சரஸ்வதி தீர்த்தம்: கல்வி அபிவிருத்தி
5. சங்கு தீர்த்தம்: வாழ்க்கை வசதி அதிகரிப்பு
6. சக்கர தீர்த்தம்: மனஉறுதி பெறுதல்
7. சேது மாதவ தீர்த்தம்: தடைபட்ட பணிகள் சுலபமாக முடிதல்.
8. நள தீர்த்தம்,
9. நீல தீர்த்தம்,
10.கவய தீர்த்தம்,
11.கவாட்ச தீர்த்தம்,
12. கந்தமாதன தீர்த்தம்: எத்துறையிலும் வல்லுனர் ஆகுதல்.
13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம்,
14. கங்கா தீர்த்தம்,
15. யமுனை தீர்த்தம்,
16. கயா தீர்த்தம்,
17: சர்வ தீர்த்தம்: எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்குதல்
18. சிவ தீர்த்தம்: சகல பீடைகளும் ஒழிதல்
19. சத்யாமிர்த தீர்த்தம்: ஆயுள் விருத்தி
20. சந்திர தீர்த்தம்: கலையார்வம் பெருகுதல்
21. சூரிய தீர்த்தம்: முதன்மை ஸ்தானம் அடைதல்
22. கோடி தீர்த்தம்: முக்தி (மறுபிறவி இல்லாத நிலை)

இரண்டாவது உலகம் – செய்வினை (Schizophrenia)

நாம் நம் இளமை காலங்களில், பார்வைக்கு இதமான இயற்கை எழில்கள் அமைந்ததும், நறுமண சுகந்தம் வீசுவதாகவும், சுவை தரக்கூடிய பண்டங்களுடையதும், இனிய இன்னிசையுடன், அப்சரஸ்களுடன் சல்லாபித்து இருக்க கூடிய சொர்கத்தை மண்ணுலகில் நிறுவக்கூடிய முயற்சியை செய்கிறோம்.

முதுமை அடையும் போது அவற்றையே சொர்கத்திலும் அடையக்கூடிய முயற்சி செய்வதையே தனிமனித மற்றும் புனித கடமையாக கொண்டிருக்கிறோம். நாம் ஒவ்வொரு முறை தவறுகளை இழைக்கும்போதும் இச்சொர்கத்திற்கு நேர் எதிரான நரகத்திற்கு பயப்படுகிறோம்.

இவ்வாறான முயற்சிகளாலான வாழ்க்கையில் நம் ஆழ்மனதானது உறக்கத்தின்போதும் கனவுலகில் அதே போன்ற சொர்கங்களையும், நரகங்களையும் உருவாக்கி மகிழ்கிறது. இவ்வாறான கனவுலகில் கூட நாம் நம்முடைய சுய அடையாளத்தை இழக்காமலேயே ஜீவிக்கிறோம். நம்மில் ஒரு சதவிகிதத்தினர் (இந்தியாவில் மட்டும் 1 கோடி பேர்) இவற்றிற்கு நேர் எதிரான ஒரு இரண்டாம் உலகத்தை நேரடியாகவே அனுபவிக்கின்றனர். அவர்களின் நனவுலகை நம்முடைய கனவுலகில் நுழைந்து பார்க்கும்முயற்சியே இது.

உங்களது உலகம் தனிமையில் சோகத்தில் இருக்கும் தருணத்தில்ஆரம்பிக்கிறது. இனம் புரியாத யார் யாரோ கெட்ட கெட்ட வார்த்தைகளால் திரும்ப திரும்ப திட்டுகின்றனர். தற்கொலை செய்து கொள் என குரல் மிரட்டுகிறது. பேய், பாம்பு போன்ற பயமுறுத்தும் உருவங்கள் திரும்ப திரும்ப தோன்றுகிறது, உங்களது அந்தரங்க பகுதிகளை உங்களது விருப்பதிற்கு மாறாக பார்ப்பது & தொடுவது போன்ற செயலில் சிலர் ஈடுபடுகின்றனர். தாங்க முடியாத நாற்றமும், உண்ணும் உணவில் விசம் அல்லது மலம் போன்றவை தட்டுபடுதல் போன்ற நிகழ்வுகளும் தொடர்ந்து நடந்தால் உங்களுடைய எதிர்வினை என்ன ?

பிரச்சிணை என்னவெனில் இச்சதி செயல் புரிபவர்கள் நீங்கள் தனிமையில் இருக்கும் போது தான் அதிகம் இச்செயலில் ஈடுபடுகிறார்கள். இவற்றால் மிகக்கலவரமடையும் நீங்கள் உங்களுடன் இருக்கும் ஆத்மாத்மானவர்களுடன் இந்நிகழ்வுகளை பகிர்ந்து கொள்கிறீர்கள். உங்களால் தெளிவாக உணர முடிகிற இவற்றை, அவர்கள் ஆனால் திட்டவட்டமாக மறுக்கிறார்கள். 

குரல்களும், தோற்றங்களும் அருகில் தோன்றுவதால் இவற்றை செய்வது உங்களை தெரிந்தவர் மட்டுமே. எனவே தான் நெருங்கியவர்களும் கூட சுய ஆதாயம் கருதி உங்களை துன்புறுத்துபவர்களை காப்பாற்ற வேண்டிய அவசியம் இருக்கவே செய்கிறது என்ற முடிவிற்கு வருகிறீர்கள்.

எனவே அவர்களுக்கும், உலகத்திற்கும் நிரூபிக்க வேண்டி தடயத்தை கண்டுபிடித்து பதிவு செய்ய வேண்டிய நிர்பந்தம் உருவாகிறது.  உங்களுக்கு கேட்கும் குரல்களையும் காட்சிகளையும் பதிவு செய்ய முயற்சி செய்கிறீர்கள். அவற்றை பதிவு செய்வதில் தோல்வி அடையும் போது தான்சாதாரண மனிதர்களுக்கு அப்பாற் பட்ட ஒரு சக்தி வேலை செய்வதாக புரிந்து கொள்கிறீர்கள்.

இது நீங்கள் நேரடியாக சிலரிடம் கேட்டும் கதைகளில் படித்தும்இருக்கும் செய்வினை, வசியம், சூன்யம் ஆகியவற்றிற்கு சமமாக இருக்கிறது அல்லது படித்த நாவலில் வரும் CIA, RAW போன்ற உளவுத்துறை கையாளும் மனத்தை கட்டுபடுத்தும் தொழில்நுட்பத்திற்குஒப்பாக இருக்கிறது.

இவ்வாறு சமுதாய உறுப்பினர்கள் அணைவரும் கைவிட்டபின், மனிதனின் மிகப்பெரும் நம்பிக்கையான ஆன்மீகம் நோக்கி செல்கிறீர்கள். செய்வினைக்கு மாத கணக்கில் கோவிலில் ஹோமங்கள் செய்தோ, மசூதிகளில் தொழுகைகள் செய்தோ, சர்சுகளில் ஊழியம் செய்தோ நாட்களையும் பனத்தையும் செலவு செய்யும் போதும், மேலும் மேலும் குரல்களும், காட்சிகளும் அதிகரிக்கும் போது உங்களுடைய மிகப்பெரும் நம்பிக்கையும் சீர்குலைகிறது.

எனவே இத்தொல்லைகள் தாங்க முடியாத அளவிற்கு போகும் போது, உங்களால் முழுவதும் நம்ப பட்டவர்கள் அணைவரும் கை விட்ட பின், சட்டம் ஒன்று தான் வழியாக படுகிறது.காவல்துறையினரிடம் ஒரு குழுவோ, அமைப்போ அல்லது உங்களது வீட்டில் உள்ளவர்களோ அல்லதுஉடன் பணி புரிவர்களோ அல்லது அருகில் வசிப்பவர்களோ உங்களை கொடுமை படுத்துவதாக புகார்செய்கிறீர்கள்.

ஆனால் அவர்களோ உங்களின் புகாரை முற்றிலும் புறக்கணிக்கிறார்கள். உங்களது பேற்றோர் அல்லது பாதுகாவலரிடம் தகவல் சொல்லி உங்களை ஒப்படைக்கின்றனர். உங்களைபெற்றோரோ/வாழ்க்கை துணையோ உங்களை திமிர் பிடித்தவர் என்றும் பிடிவாதகாரர் என்றும் பட்டம் கட்டி திட்டியும்/அடித்தும் வெறுப்பை  தொடர்ந்து ஏன் விதைத்தால் வேறு என்ன தான் செய்வது ?  எல்லோரும் உங்களை நக்கலாகபார்க்க ஆரம்பிக்கும் சூழ்நிலையை சந்திக்க வேண்டியிருக்கிறது. “கிறுக்கு”, “பைத்தியம்”போன்ற வார்த்தைகள் சுற்றி உள்ளவர்கள் சம்பந்தமே இல்லாமல் பேச ஆரம்பிக்கிறார்கள்.

இப்படி உங்கள் வாழ்க்கையே நரக உலகத்திற்கு இட்டு சென்றால்இதன் முடிவு என்னவாக இருக்கும் என நிணைக்கிறீர்கள் ?

கனவுலகில் இருக்கும் நம்மால், நம் கனவை எளிதாக கலைத்து விட்டு எழுந்து விட முடிகிறது. ஆனால் உண்மையில் இம்மாதிரியான நனவுலகில் வாழும் மன பாதிப்புக்குள்ளானவர்களால் அவ்வாறு இயலுவதில்லை.

மேலே பார்த்த சூழ்நிலை ஒரு வகை எடுத்துகாட்டு மட்டுமே. இதற்கு எதிர்மாறாக, நன்றாக கலகலவென பழகும் சிலர், தீடீரென்று தங்களுடன் நன்றாக பழகியவரின்குரல், உருவத்தை கூட மறந்து போதல், யாரிடமும் பழகாமல் தங்களை ஒரு அறையினல் ஒதுக்கி கொள்ளுதல், தங்களுடைய அன்றாட கடமைகளான பல் துலக்குதல், மலம் கழித்தல் போன்றவற்றை கூட செய்ய முணையாமல் இருப்பது, என ஒவ்வொரு புலன்களையும் உணரும் திறன் மூளைக்கு மழுங்குதல்போன்றவற்றிற்கு ஆளாகக்கூடும். இது இரண்டாவது வகை.

வயிற்று வலியினால் தற்கொலை என பதியப்படும் பல வழக்குகள், செய்வினையால் குடும்பம் அழிந்தது என வருத்தப்படும் பல நிகழ்வுகள் என கூர்ந்து கவனித்துபார்த்தால், இந்நிகழ்வு உங்கள் கிராமத்தில் / பகுதியில் யாரேனும் ஒருவருக்கு நடந்ததாகதான் இருக்கும்.

செய்வினை என தவறாக கருதப்படும் ஸ்கிட்ஸோஃபிர்னியா (Schizophrenia - மனப்பித்து)

அறிகுறிகள்
1. மனப்பிரமைகள் tactile, auditory, visual, olfactory and gustatory hallucinations, ஐந்து புலன்களையும் உணர்ந்தறிவதில் உண்டாகும் பிறழ்வு( பார்வை, கேட்கும்திறன், சுவை, நுகர்தல் மற்றும் தொடு உணர்ச்சி), எடுத்துகாட்டுகளில் முதலாவது கூடுதல்உணர்வுகள் எனவும், இரண்டாவது குறை உணர்வு எனவும் கொள்ளலாம் positive and negative (or deficit) symptoms 
2. திரிபுணர்வுப்பிணி (paranoid),
3. பயங்கரமான மருட்சி (delusion) அல்லது
4. ஒழுங்கில்லாத பேச்சும், சிந்தனையும் இவற்றுடன்
5. சமூக வழக்கங்கள் மற்றும் பணி செய்யும் திறன் திரிதல்

ஆகியவை ஸ்கிட்ஸோஃபிர்னியா(மனப்பித்து) எனும் மனதின் நோயின் அறிகுறிகளாக கண்டறியப்பட்டுள்ளன.

  • சிறுவயதில் மோசமான சூழ்நிலைகளை சந்தித்து இருப்பவர்கள் (மோசமான தாய்/ தந்தை/ சகோதரர்கள்/நெருங்கிய உறவினர்கள்), வன்முறைக்கு ஆளாக்கபட்டவர்கள், பாலியல் ரீதியில் துன்புறுத்தபட்டவர்கள்,எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்கள், கடும் வறுமைக்குள்ளானவர்கள், இன துவேசத்திற்கு ஆளானவர்கள்,கொடுமையான இடங்களில் வசிப்பவர்கள் இவ்வகையில் பாதிக்கபட வாய்ப்பு அதிகம்.
  •  நகரத்தில்வாழ்பவர்களும், அதிகமாக நண்பர்களை கொண்டிராதவர்களும், எளிதாக புதியவர்களுடன் பழக தெரியாதவர்களாலும்,நம்பிக்கை துரோகத்தால் பாதிக்க பட்டவர்களுமே இவ்வகையில் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம்.
  •  இவையல்லாமல்மரபணு காரணமாக பரம்பரை(தாய், தந்தை, தாத்தா, பாட்டி) வழியிலும் இந்நோயால் பாதிக்கபடவாய்ப்பு இருக்கிறது.
  • மகப்பேற்றின்போது ஏற்படும் கோளாறுகளும் குழந்தையை இந்நோய் தாக்க காரணம்.
  •  மெதாம்ஃபெடமைன் மற்றும் கொக்கெயின் போன்ற போதை பொருள்களும் உளப்பிணிகளுக்குக் காரணமாகும் என்று அறியப்பட்டுள்ளது. மது, கஞ்சா போன்றவையும் , தவறான மருந்து உட்கொள்தலும் இந்நோய் உருவாக காரணமாக அமையலாம்.


ஆண்களிலும் பெண்களிலும் ஸ்கிசோஃப்ரினியாசம அளவிலேயே ஏற்படுகிறது; இதன் ஆரம்ப கட்டம் ஆண்களில் 20-28 வயதிலும் பெண்களில் 26-32 வயதிலுமாக உள்ளது. குழந்தைப் பருவத்தில் ஏற்படுவது என்பது அரிதானது, அதைப்போலவே நடுத்தர வயது மற்றும் முதிர்ந்த வயதுஆகியவற்றிலும்இது அரிதானது.

மேலும் இந்த நோய் சாதி, மத, இன வேறுபாடுகளை கடந்து யாரை வேண்டுமானாலும் தாக்க கூடும். உதாரணமாக இராமானுஜம் (இவர் ஈரோட்டு சீனிவாசன் இராமானுஜம் அல்ல சென்னைகாரர்) எனும் மிகப்பெரிய இந்திய கணித மேதை இந்நோயினால் பாதிக்கப்பட்டு, சரியாக மருத்துவம்செய்யப்படாத காரணத்தால், இந்நோய் தொல்லை தாங்க முடியாமல், தனது 37 வயதிலேயே அதிகப்படியானமருந்துகள் உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நோயிற்கு மருந்துகளும், திட்டமிட்ட மருத்துவமுறைகளும் உள்ளன என்பதும், இந்நோயை வெற்றி கொண்டு வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்தவர்களும்இருக்கிறார்கள் என்பது தான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய விசயம்.

இந்நோயால் பாதிக்கப்பட்டும் அதிலிருந்து மீண்டு வந்து 1994 வருடத்திற்கான பொருளாதாரத்திற்கான நோபல்பரிசு பெற்றவர் யு.எஸ் கணித மேதை திரு.ஜான் நேஷ் John Forbes Nash Jr . இவரை பற்றிய "எ ப்யூட்டி ஃபுல் மைன்ட்” ஸ்கிட்ஸோஃபிர்னியா பற்றி சரியாக சித்தரிக்கும் மிக அருமையான படம் (2001 வருடத்திற்கான ஆஸ்கார்விருது பெற்றது)

Schizophrenia நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்து குடும்ப உதவியினால் வாழ்க்கையையும் அமைத்து கொண்டு பல முக்கிய தமிழ் படைப்புகள் எழுதிய தமிழ் எழுத்தாளர் கோபி கிருஷ்ணன் முக்கியமானவர்.

இந்தியர்களும், மனப்பித்தும்

இந்தியர்களுக்கு இவ்விசயத்தில் நேர்மறை நன்மைகளும், எதிர்மறை தீமையும் உண்டு. மிகப்பெரிய எதிர்மறை சூழ்நிலை என்னவெனில் செய்வினை, சூன்யம், வசியம், மாந்திரீகம் என்ற பெயரில் நடக்கும் தவறான வழிகாட்டல்கள் தான். படித்தவர்களும், பண்பானவர்களும்கூட இந்த முறைக்கு பலியாவதில் இருந்து தடுக்க முடிவதில்லை.

பாதிக்கபட்டவர் ஒருமுறை இவற்றை நம்ப ஆரம்பித்தால், அதிலிருந்து விடுபட்டு மனோ/மருத்துவ ரீதியான முறைக்கு கொண்டு வருவது மிகக்கடினமாகும். ஏனெனில் தங்களிடம் இப்பிரச்சிணைக்கு முழுமையான தீர்வு விரைவில் கிடைக்கும் என நம்ப வைக்கின்றனர்.
ஆனால் நோயாளிக்கு இவற்றில் தீர்வு கிடைக்காமல் கேள்வி கேட்கும்போது, மேலும் பணம் பறிப்பதற்காகவும், தன் பெயர் கெட்டு விட கூடாது என்பதற்காகவும் பாதிக்கபட்டவர்களிடம் தங்களது தோல்வியை வெளிகாட்டி கொள்ள இந்த மாந்திரீகர்கள் தயங்குவர். எனவே வித விதமான பெயரில் புதுப்புது ஹோமங்கள் செய்ய தான் முற்படுவர்.

நோயாளிகள் தங்களது பிரச்சிணையின் உண்மை நிலையை புரிந்து கொள்வதே இந்நோயை தீர்க்க முக்கியமான விசயம். அப்போது தான் மருத்துவத்தின்அவசியத்தை புரிந்து கொண்டு சரியாக கடைபிடிப்பர்.

இவ்வகை நோயாளிகள் அதிகம் பாதிக்கபடுவது தனிமையாலும், கைவிடபட்டுவிட்டோம்என்ற மனநிலையாலுமே ஆகும். இதை சரி செய்வதற்கு மாறாக வழிபாட்டு தலங்களில் விடப்படுகின்றனர். எனவே வீடுகளிலும், கோவில்களிலும், தர்காவிலும், சர்சுகளிலும் கட்டி போடப்பட்டுள்ள நோயாளிகள் மிக மோசமாக பாதிக்கபடுகின்றனர்.

அவர்களுக்கு தேவை நமது ஆதரவும், அன்பான வார்த்தைகளும் தானே ஒழிய, வழிபாடு அளிக்கும் தனிமை அல்ல என்பதை முக்கியமாகஉணர வேண்டும்.

மேற்கத்திய கலாசாரத்தைஒப்பிடும் போது இந்தியர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சாதகமான அம்சம் உதவி செய்யும் குடும்ப அமைப்பு ஆகும். சரியாகபுரிந்து கொள்ள வைக்கபட்டால் நோயால் பாதிக்க பட்டவர்களுக்கு பெற்றோரும், வாழ்க்கை துணையும்உதவி செய்யவே விரும்புகின்றனர். இது மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்திய நோயாளிகள்மிக விரைவில் குணமடையவும், குடும்ப வாழ்வை அமைத்து கொள்ளவும் உதவுகிறது.

மருத்துவம்

நோயாளிகளின் பிரச்சிணையை அவர்கள் கேட்கும் ஒலிகளையும், காட்சிகளையும் வெளிப்படுத்தும் போதே பெரும்பாலும் மற்றவர்களுக்கு தெரிவிக்க படுகிறது. இப்பிரமை என்பது பிரச்சிணையின் வெளிப்பாடு மட்டுமே. அதுவே முழுப்பிரச்சிணை அல்ல. இப்பிரமையை தீர்க்க அவை தோன்றிய மூல காரணத்தை மனதை ஆய்வு செய்து நீக்குவதன் மூலம் மட்டுமே நீக்க முடியும்.

நோயாளிகளிடம் அவர்கள் உணர்வது வெறும் மன பிரமை மட்டுமே, அவை உண்மையல்ல என்று அறிவுரைகள்/விவாதங்கள் செய்வது பலனை அளிக்காது. அது எதிர்மறை தீமைகளை மட்டுமே விளைவிக்கும். எனவே நோயாளிகள் பிரமைகளின் மூலம் படும் துன்பத்தின் ஆழத்தை அவர்களுடன் உரையாடுவதன் மூலம் முழுமையாக தெரிந்து கொள்ள முயல வேண்டும். 

இந்நோய் எவ்வளவு விரைவில் கண்டுபிடித்து கவனிக்க படுகிறதோ அவ்வளவுவிரைவில் குணமாக்க முடியும். இந்நோயை குணமாக்க மருந்துகளுடன் கூடிய கூட்டு மருத்துவம்நடைமுறைபடுத்த படுகிறது.
  • ஸ்கிசோஃப்ரினியாவுக்கான முதல் மருத்துவத் தெரிவு antipsychotic  ஆன்டிசைகோடிக் எனப்படும் உளப்பிணி எதிர் மருத்துவமாகும். இவை உளப்பிணியின் நேர்மறை அறிகுறிகளைக் குறைக்கலாம். பல உளப்பிணி எதிர்மருத்துவங்களும் அவற்றின் பிரதான விளைவை அளிக்க 7-14 நாட்கள் எடுத்துக் கொள்ளும்
  • ஸ்கிசோஃப்ரினியாசிகிச்சையில் உளவியல் மருத்துவமும் பெருமளவில் பரிந்துரைக்கப்படுவதாகவும், பயன்படுத்தப்படுவதாகவும் உள்ளது.
  •  புரிதிறன் நடத்தை சிகிச்சை(cognitive behavior therapy) குறிப்பிட்ட அறிவு திறன் அறிகுறிகளை இலக்காக கொள்வதற்கும் அவற்றுடன் தொடர்புடைய சுய மதிப்பு, சமூகத்தில்செயலாற்றும் திறன் மற்றும் உட்பார்வை ஆகியவற்றை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.
  • ஸ்கிசோஃப்ரினியா கொண்டுள்ள ஒருதனி நபருக்கான சிகிச்சையில் அவரது குடும்பம் முழுவதையும் கருத்தில் கொண்டு அளிக்கப்படும் குடும்ப சிகிச்சை அல்லது கல்வி, குறைந்த பட்சமாக அந்த இடையூடு நீண்ட காலத்திற்கானதாக இருக்கும்போது, பயனுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
யாரிடம் உதவி கேட்கலாம்?
schizophreniaக்குஎன்றே schizophrenia research and foundation of india எனும் அரசு சாரா நிறுவனம் 1984 ம் ஆண்டு  மனவியல் நிபுணர்களால் ஆரம்பிக்கப்பட்டு சென்னையை தலைமையகமாக கொண்டு இயங்கி வருகின்றது. இங்கே இலவசமாகவே மருத்துவ ஆலோசனையும் வழங்கி வருகின்றார்கள். மிக சிறந்த சேவையை முடிந்த அளவு கொடுக்கின்றார்கள்.

மருத்துவமனையில் எப்போது சேர்க்க வேண்டும்?
இந்நோய் அதிகம் பாதிக்கப்பட்ட சிலர் அபூர்வமாக சிலநேரங்களில் வன்முறையில் ஈடுபடக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது. அல்லது தற்கொலை போன்றசெயல்களிலும் ஈடுபடலாம். 

உதாரணமாக மும்பையில் தொடர் கொலைகளில் (9 பேர்) ஈடுபட்ட ராமன்ராகவ் Chronic paranoid schizophrenia நோயால்கடுமையாக பாதிக்கபட்டவர். அவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு எஞ்சிய வாழ்நாள் முழுவதும்மன நோய் மருத்துவமனையில் கழித்தார்.

மிகவும் தீவிரமான நோயாளிகளில்-அதாவது அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்து நேரும் சாத்தியமிருந்தால் அவர்களை பலவந்தமாக மருத்துவ மனையில் சேர்ப்பது அவசியமாகலாம்; இருப்பினும், இவ்வாறு மருத்துவ மனையில் சேர்க்கப்படுவதும், அங்கே தங்கியிருக்கும் கால அளவும் தற்போது குறைந்து வருகிறது.

References

அச்சில் எனது முதல் கட்டுரை : சமூக வலை தளங்களில்

தீக்கதிர் நாளிதலில் பிரதி ஞாயிறு வெளிவரும் வண்ணக்கதிர் புத்தகத்தில் 21 ஏப்ரல் 2013 இதழில் சமூக இணைய தளங்கள் : சில உண்மைகள் எனும் எனது முகப்புத்தக குறிப்பு (மொழிபெயர்ப்பு கட்டுரை) அச்சில் வெளியாகி இருக்கிறது.

இதுவே அச்சில் வெளியாகும் எனது முதல் படைப்பாகும். எனது முதல் கட்டுரையே கண்ணி தொழில்நுட்பம் தொடர்பானதாகவும், சமூகத்திற்கு  பயனளிக்கும் வகையில் இனவெறிக்கு எதிரானதாகவும் அமைந்தது தனிப்பட்ட விதத்தில் மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது. 

தீக்கதிர் & வண்ணக்கதிர் ஆசிரியர்களுக்கு நன்றிகள்.